Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (15.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: அண்ணாமலை தற்போது தமிழக பாஜக தலைவராக இல்லை. அது அவர் கட்சிக்கு நன்மையா இழப்பா?


பதில்:
நன்மையாக ஆக்கிக் கொள்ளலாம். 2026 மாநிலத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணியில் இருப்பது பாஜக-வுக்கு நல்லது.  அதற்காக, எடப்பாடியுடன் சிரித்துக் கைகுலுக்க பாஜக பக்கம் நயினார் நாகேந்திரன் பொருத்தமானவர்.  ஸ்டாலினையும் திமுக-வையும் விமரிசனத்தில் புரட்டி எடுக்க அண்ணாமலை சரியானவர். இப்போது இரண்டும் ஜோராக நடக்கிறதே?

 

 

 

2. கேள்வி: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் எல்லாக் கட்சிகளும் தமக்கான தேர்தல் கூட்டணியை விரும்புகின்றன. சீமான் மட்டும் தனது கட்சி எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்கிறாரே, ஏன்?


பதில்: சீமான் முதல் அமைச்சராக விரும்புகிறார். ஆனால் சீமானை முதல்வர் வேட்பாளராக அங்கீகரித்து அவர் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்தப் பெரிய லெவல், மீடியம் லெவல், கட்சியும் தயார் இல்லை. அதனால் அவருக்கு நஷ்டமில்லை. அவர் பாணியில் அரட்டல் ஆவேசம் காட்டி அரசியல் செய்வதின்  பயன் அவருக்குத் தெரியும்.

 

 

 

3. கேள்வி: "சி.பி.ஐ-க்கு  மட்டும் மூணு மூளையா?" என்று சீமான் கேட்கிறாரே?


பதில்:
தமிழக போலீஸ் மாதிரி, சி.பி.ஐ-க்கும் ஒரு மூளைதான். ஆனால் தமிழக போலீசின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கை  யாரோ லாக்-அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

 

 

 

4. கேள்வி: ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தும் என்று மோடி தன்னிடம் கூறியதாக டிரம்ப் சொல்ல, "டிரம்பிடம் மோடி பயப்படுகிறார்" என்று ராகுல் காந்தி கமென்ட் செய்தது சரியா?

 
பதில்:
டிரம்ப் ஒரு அடாவடி. ராகுல் காந்தி ஒரு அசடு. எதற்கோ பயப்பட்டுப் பேசுவது, இந்த இருவரும் தான். ஆழமாக அமைதியாக இருக்கும் மோடி அல்ல.

 

 

 

5. கேள்வி: தான் ஏழு போர்களை நிறுத்தியதாகச் சொல்லி அமைதிக்கான நோபல் பரிசு கோரிய டிரம்ப்புக்கு அந்தப் பரிசு கிடைக்கவில்லையே?


பதில்:
நோபல் பரிசுக் கமிட்டியுடன் டிரம்பே புரிந்த ஒரு போரை, அந்தக் கமிட்டி சுபமாக முடித்து விட்டது.

 

 

 

6. கேள்வி: எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பைப் பார்த்து டிரம்ப், "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்க, அவரும் மைக் முன்வந்து, "டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று ஆஹா ஓஹோவென்று டிரம்பைப் புகழ்ந்திருக்கிறாரே? நாம் நிம்மதியின் உறைவிடமாக மாற வழி உண்டா?

 

பதில்: செந்தில் கவுண்டமணிக்குள் ஒரு இயல்பான அண்டர்ஸ்டான்டிங் இருக்கும். அது பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும்.

 

 

பகுதி 2 // 15.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment