|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "கிறிஸ்தவக் கொள்கைக்கும் திராவிடக் கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது.
ஏசுவைப் போல் வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ரா, அண்ணா, கருணாநிதி" என்றெல்லாம் துணை முதல்வர் உதயநிதி ஒரு கிறிஸ்துமஸ்
விழாவில் பேசி இருக்கிறாரே?
தவெக நிறுவனர் விஜய், கிறிஸ்தவர். அவர் கட்சிக்குக் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் அதிகமாகப்
போகலாம் என்று திமுக அஞ்சுகிறது. முன்பு கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காக அவர்கள்
முன்னால் சாதாரண டான்ஸ் ஆடிய உதயநிதி, இப்போது உதறல்
எடுத்து பயங்கர ராப் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுதான் விஷயம். |
|
|
2.
கேள்வி: ஸ்டாலினையும் உதயநிதியையும் அவர்கள்
முன்னாலேயே திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பொய்யாக வானளாவப் புகழ்ந்து
பேசுகிறார்கள். அது பொய் என்று அந்த இரு தலைவர்களுக்கும் புரியாதா?
|
|
|
3. கேள்வி: தவெக
கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ்,
"விஜய் இப்போது நடிகர் இல்லை. அவர் ஒரு முன்னாள் நடிகர்.
நடிப்பை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்று ஒரு
பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?
|
|
|
4. கேள்வி: திராவிடர்
கழகம் என்ற பெயரில் 'ர்' இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதில் 'ர்'
இல்லை. திமுக-வின் பெயரில் ஏன் 'ர்' இல்லை, அதனால் என்ன வேறுபாடு?
புஸ்வாணத்தில் 'ஸ்' உண்டு, பூவாணத்தில் கிடையாது. இரண்டும் பட்டாசு ரகம். ஜாக்கிரதையாகத் தள்ளி
இருப்பது நல்லது. |
|
|
5. கேள்வி: குதிரையைப்
படைத்த ஆண்டவன் வரிக்குதிரையைப் படைத்தார். கழுதையைப் படைத்த அவர் ஏன்
வரிக்கழுதையைப் படைக்கவில்லை?
|
|
|
பகுதி 28 // 21.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment