|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: பாஜக
தலைவர் வேலூர் இப்ராஹிம் ஒரு ஹிந்துக் கோவில் சுவாமி முன் நின்று "முதல்வர்
ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கிடைத்து, அவர் ஹிந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்படாமல், எல்லா
மக்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்ளும் வீடியோ
பரவுகிறது. அவர் வேண்டுதல் நிறைவேறுமா? ஒரு அரசியல் தலைவர்
ஹிந்துக்களுக்கு எதிராக மிகுந்த பாரபட்சம் காண்பித்தால், ஹிந்துக்கள் அவர் கட்சிக்கு, அதன் கூட்டணிக்
கட்சிகளுக்கு, எதிராக ஒன்றுபட்டு அந்தக் கட்சிகள்
தேர்தலில் மண்ணைக் கவ்வுமாறு ஓட்டளிப்பார்களா என்று ஹிந்துக் கடவுள் பரீட்சை
வைப்பார். இந்த எளிய பரீட்சையில் பாஸ் ஆகும் அளவுகூட ஹிந்துக்கள் தங்கள் கடமையை
உணரவில்லை என்றால், பரீட்சை வைக்கும் ஆசிரியர் சோப்ளாங்கி
மாணாக்கர்களுக்கு எப்படி உதவுவார்? |
|
|
2. கேள்வி: பஞ்சாபில்
500 கோடி ரூபாய்
கொடுப்பவர்களே முதல்வர் ஆகின்றனர் என, அம்மாநில காங்கிரஸ்
மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங்
சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் கூறி இருக்கிறார். தவிர, "இது எல்லாக் கட்சிகளிலும் நடக்கிறது. ஆனால் எந்தக் கட்சிக்கும்
கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை" என்றும் தெரிவித்திருக்கிறார். அவர்
குற்றச்சாட்டில் உண்மை இருக்குமா?
|
|
|
3. கேள்வி: திருப்பரங்குன்றம்
தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டவர், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர்.
சுவாமிநாதன். அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான பாராளுமன்றத் தீர்மானத்தின்
அறிவிப்பை இண்டி கூட்டணி எம்.பி-க்கள் பலர் திமுக எம்.பி-க்கள் தலைமையில்
மக்களவை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறார்கள். என்ன ஆகலாம்?
இன்னொன்று: அந்த
நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதும் பதவி நீக்க
நடவடிக்கையைத் திமுக உந்துதலில் இண்டி கூட்டணி முட்டாள்தனமாக முன்னெடுக்குமா?
சின்னக் குழந்தையை
மகிழ்விக்கச் சில பெரியவர்கள் நாய் மாதிரி குலைத்துக் காட்டுவார்கள்.
பார்ப்பவர்களுக்கும் சிரிப்பு வரும். சிறுபான்மையினரை மகிழ்விக்கும் எண்ணத்தில்
இண்டி கூட்டணியினர் காட்டும் வேடிக்கை இது. நாம் சிரிக்கலாம். |
|
|
4. கேள்வி: "CBI, அமலாக்கத் துறை, பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து அரசின் அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ்
கைப்பற்றிவிட்டது" என்று லோக் சாபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பேசி இருக்கிறார். உங்கள் கருத்து என்ன? கூச்சமில்லாமல் பொய்யும் பிதற்றலும் பேசியபடி அடுத்த
பிரதமராக ஆசைப்படுகிறார் ராகுல் காந்தி. அவர் கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க
வாக்காளர்கள் மத்தியில் யார் பிரசார சேவை செய்திருந்தாலும் அவர்களுக்கு ஜே! |
|
|
5. கேள்வி: ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதியிடம் கற்ற பாடம்
எது? தமிழா, உழைப்பா, கட்சி நிர்வாகமா?
|
|
|
பகுதி 24 // 10.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment