Thursday 31 December 2020

ரஜினிகாந்திடம் – ஆண்டவன் இதை சொல்வானா?

        -- ஆர்.வி.ஆர்  


ரஜினிகாந்தின் முந்தைய அறிவிப்புகளுக்கு மாறாக, அவர் அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை, அரசியலுக்கு வரப்போவதில்லை என்றாகி விட்டது. இரண்டு நாட்கள் முன்பு அவரே ஒரு  நீண்ட அறிக்கை கொடுத்து, “நான் கட்சி  ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெளிவுபடுத்தி விட்டார்.

 

ரஜினிகாந்த் 70 வயது நிரம்பியவர். மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர். மருந்துகள்  உதவியுடன் தனது உடல் நலத்தை கவனிக்க வேண்டியவர் – குறிப்பாக இப்போதைய கொரோனா தொற்று காலத்தில்.  ஆகையால் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி எண்ணத்தைக் கைவிடுவது   அவரது உடல் நலத்துக்கு நல்லதுதான். அவர் ஆரோக்கியமாக இருக்கட்டும்.

 

மூன்று வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது 67-வது வயதில், மாற்று சிறுநீரகத்துடன் இருந்தபோதே, ‘அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்’ என்று ஏன் சொன்னார் என்று ஒருவர்  கேட்கிறாரா? அப்படியானால்  ஒரு பக்கத்தில் தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு மலிவான அரசியலும் அதன் ஊழலின் உயரமும், இன்னொரு பக்கம் ரஜினிகாந்தின் நல்ல மனதும் கேள்வி கேட்பவருக்குப் புலப்படவில்லை என்று அர்த்தம்.

 

நல்லது செய்ய நமக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ, காரியம் கடைசியில் கைகூடுகிறதோ இல்லையோ, அதற்கான முதல் அடிகள் எடுத்து முயன்று பார்க்கலாம் என்று நம்மில் பலர் ஏதாவது நல்ல காரியத்தில், பெரிய காரியத்தில், இறங்குவது உண்டு. மேலே போக முடியவில்லை என்றால் எடுத்த காரியத்தை விட்டுவிடுவதும் உண்டு. ரஜினிகாந்தும் அதைத்தான் செய்து பார்த்திருக்கிறார் – அதாவது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் காரியத்தைப் பொறுத்தவரை. கட்சி தொடங்கும் எண்ணத்தை அவர் கைவிட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.  

 

ரஜினிகாந்த்-திற்கு தமிழக மக்களிடையே அபார நற்பெயர் இருக்கிறது.  அவர் நல்லவர், எளிமையானவர், நேர்மையானவர், நம்பிக்கை வைக்கத் தகுந்த தலைவர் என்று சினிமாவுக்கு அப்பாலும் அவரைப் பற்றி பொதுமக்களிடம் ஒரு இமேஜ் இருக்கிறது. இன்று தமிழகத்தில் வேறு எவருக்கும் இந்த  சிறப்பு இல்லை.

 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன், கட்சி ஆரம்பிப்பேன், என்று சொன்ன நேரத்தில் தமிழகத்தில் இரு பெரும் அரசியல் கட்சிகள் ஆளுமையில் இருந்தன, இப்போதும் அப்படி  இருக்கின்றன.   அவை திமுக மற்றும் அதிமுக. மாற்றி மாற்றி இந்த இரண்டு கட்சிகள்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசை நடத்துகின்றன. அதிமுக என்பது விபூதி-பொட்டு வைத்த திமுக, ஹிந்து மத விரோதம் இல்லாத கட்சி,  அவ்வளவுதான். மற்றபடி ஆட்சி செய்யும் “வழிமுறை”களில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை.  இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றாவது தமிழக நலனில் உண்மையான அக்கறையோடு, சுய லாபத்தைப் பெருக்காமல், லஞ்ச லாவண்யத்தைக் கட்டுப் படுத்தி நேராக ஆட்சி செய்யும் என்று ரஜினி நினைத்திருந்தால் அவர் எதற்காக புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்ல வேண்டும்? சினிமாவில் அவருக்கு இல்லாத புகழா, சம்பாதிக்காத பணமா?  

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று ஆட்சி செய்தால் தமிழ் நாட்டிற்கு வளம் சேராது, கண் காணாத இடத்திற்குத்தான் தமிழ்நாட்டின் வளம் செல்லும் - அதே சமயம் இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி ஆட்சிக்கு வரும் வல்லமை வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை, ஆனால் இந்த காலகட்டத்தில் தனக்கு இருக்கிறது, என்று ரஜினி நினைத்தார். அதனால்தான், தானே அரசியலுக்கு வருவேன், கட்சியும் தொடங்குவேன் என்று டிசம்பர் 2017-ல் அறிவித்தார்.  

 

தான் ஆரம்பிக்க நினைத்த கட்சியின் முக்கிய  நோக்கத்தைப் பற்றி ரஜினிகாந்தின் எண்ணம் இப்படித்தான் இருக்க முடியும். அதாவது, வருகின்ற 2021 சட்டசபை தேர்தலில்  திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்றான ஒரு அரசியல் சக்தியாக உருவாகி அந்த இரு கட்சிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுத்து, அரசு அமைக்கும் புதுக் கட்சியாக அது இருக்கும், தனியாகவோ ஒரு கூட்டணியாகவோ. அதுவே ஒரு நல்ல ஆரம்பம். ஆனால் அதற்கு அடுத்து 2026-ல் வரும் தேர்தலைப் பற்றி அவர் எதையும் நினைக்க முடியாது. ஏனென்றால், தான் 70 வயதில் கட்சி ஆரம்பிக்கிறோம், தனக்கு வாரிசு அரசியலிலும் நம்பிக்கை இல்லை என்பதால்,  தனது புதிய கட்சியானது காங்கிரஸ், திமுக, பா.ஜ.க. மாதிரி தனக்குப் பின்னால் தொடர்ந்து வளரும் என்று ரஜினி நினைக்க இடமில்லை. அந்தக் கட்சிகளில் ஏற்பட்ட  மாதிரி ரஜினி கட்சியில் பிற தலைவர்கள் உருவாக முடியுமா, முடிந்தாலும் அதற்கு எத்தனை வருடங்கள் ஆகும், பின்னர் 2026 தமிழக தேர்தல் சமயத்தில் ரஜினியின் உடல்நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் இப்போது ஒன்றும் கணிக்க முடியாது.

 

ரஜினிகாந்தை வைத்துத்தான் அவர் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும் – கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களை வைத்து அல்ல. ஆகையால்  2021 தேர்தலை மட்டும்தான் பிரதானமாக மனதில் வைத்து ரஜினி கட்சி ஆரம்பிக்க எண்ணி இருப்பார். அதற்காக திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக ஒரு மக்கள் அலையை தனது செல்வாக்கால் உருவாக்கி, ஒரு நேர்மையான திறமையான ஆட்சி தமிழகத்தில் 2021-ம் வருட தேர்தல் மூலமாக அமைய வேண்டும் என்பது மட்டுமே ரஜினியின் முனைப்பாக இருந்திருக்கும்.  இருந்தாலும், அதற்காக அவர் வைத்திருந்த புதிய அரசியல் கட்சி எண்ணத்தை இப்போது கைவிடும்படி நேர்ந்துவிட்டது.  

 

முடிவாக என்ன ஆகிவிட்டது? ரஜினிகாந்த் வரும் 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கட்சி அமைத்து போட்டி போடமுடியவில்லை. ஆனால் தமிழகத்தின் ஆட்சியில்  தொடர்ந்து பல வருடங்கள் அமர்ந்து மாநிலத்துக்குப் பெரும் நஷ்டத்தையும் முன்னேற்றத் தடங்கலையும் ஏற்படுத்திய பெரிய கட்சிகள் இவை இவை, அவைகள் மறுபடியும் 2021 தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற அவரது நல்ல எண்ணம் மறைந்துபோகாதே? அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் போனாலும், அவரது நல்ல அரசியல் எண்ணத்தை பெரிய அளவில் நிறைவேற்ற முடியும்.  அதற்கு அவர் வயதும், கொரோனா காலமும், கையில் கட்சி இல்லாததும் ஒரு தடை இல்லை.

 

திமுக-வையும் அதிமுக-வையும் தவிர்த்து தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி என்று பல கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் எந்தக் கட்சி தலையெடுத்து ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என்று ரஜினி நினைக்கிறாரோ, அந்தக் கட்சிக்கு அல்லது அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் நல்ல கூட்டணி இருந்தால் அதற்கு பொதுமக்கள் வாக்களிக்குமாறு  ரஜினிகாந்த் வேண்டுகோள் விடலாம். காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக,  கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது மற்ற உதிரிக் கட்சிகளுக்காக வாக்கு கேட்கும் அளவிற்கு ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல. கமல் ஹாசன் மாதிரியான குழப்பவாதியோ  சந்தர்ப்பவாதியோ அல்ல ரஜினிகாந்த்.

 

உண்மையான தேசப் பற்று, ஹிந்து மதப் பற்றுதல், பிற மதத்தவரிடம் பல்லிளிக்காத சகோதரத்துவம், வாரிசு அரசியல் தவிர்ப்பு, நேர்மையான ஆட்சித் திறன் ஆகிய குணங்கள் மிக்க பாஜக-வோடுதான் ரஜினிகாந்த் மனதளவில் உண்மையாக ஒன்ற முடியும். ஆகையால் பாஜக தனித்து நின்றால் அந்தக் கட்சிக்கோ, அது கூட்டணியாக நின்றால் அந்தக் கூட்டணிக்கோ வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம்.

 

வாக்காளர்களுக்கான தனது வேண்டுகோளை ரஜினிகாந்த் 2021 தமிழக தேர்தலுக்கான கூட்டணிகள்  முடிந்த பின்னர் அறிவிக்கலாம்.  அதற்குமுன் அவர் பலருடனும் ஆலோசனைகள் செய்யலாம். அதைப் பொறுத்து கூட்டணிகளும் இறுதிப் படும்.

 

பாஜக கண்டிப்பாக திமுக-வுடன் கூட்டணி அமைக்காது.  அதிமுக-வோடு பாஜக-வின் கூட்டணி 2021 தமிழக  தேர்தலிலும் அமையலாம். அப்படியானால், பெரியண்ணன் திமுக-வை தோற்கடிப்பதற்காக, அதிமுக-பாஜக கூட்டணியை ரஜினிகாந்த் ஆதரிப்பதும் நல்லதுதான். விஷக்கடியும் சுளுக்கும் கொண்ட  ஒரு நபர், முதலில் ஒரு மந்திரவாதியைக் கூப்பிட்டு விஷக்கடியை இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தானாக சூளுக்கை எடுத்துவிட்டுக் கொள்ளலாம்.   

 

“தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்” என்றும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.  “தேர்தலில் இந்தக் கட்சிக்கு, இந்தக் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள்”  என்று ரஜினிகாந்த் மக்களுக்கு வேண்டுகோள் வைத்தால் அது “தேர்தல் அரசியலா”? அப்படி இருக்கலாம். தனது உடல் நலத்தின் காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ஒரு பெரிய முடிவிலிருந்து ரஜினி மாறியது எப்படி சரியோ, நியாயமோ, அதை போல் மக்கள் நலன் காரணமாக வரும் சட்டசபை தேர்தலில் சரியான கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ரஜினி வேண்டுகோள் வைப்பதும் சரிதான், நியாயம்தான்.  அப்போது, “ஏன் எங்களுக்கு வேண்டுகோள் வைத்தீர்கள்?” என்று ரஜினியைப்  பார்த்து பொதுமக்கள் கேட்கப் போவதில்லை. பாதிப்படையும் கட்சிகள் விமரிசனம் செய்வார்கள் – அதற்குத்தான்  ரஜினி முன்பிருந்தே தயாரே?  

 

அகில இந்திய அளவில் ஒரு காலத்தில் காமராஜ் கிங்-மேக்கராக இருந்தார் – அது ஒரே கட்சிக்குள் நடந்தது. ரஜினிகாந்த் அந்தப் பணியை இப்போது தமிழகத்தில் செய்ய முனைய வேண்டும் – பல கட்சிகளின் போட்டியின் நடுவில்.   அவரது முயற்சி முழு வெற்றி அடைகிறதோ இல்லையோ, தமிழக அரசியலுக்கு முக்கிய பலன்களைத் தரும். அவரை வாழவைத்த தமிழகத்திற்கு அவர் செய்யும் பெரிய கைமாறு இந்த முயற்சியாகத்தான் இருக்கும்.  ஆண்டவனும் இதைத்தானே சொல்வான், ரஜினிகாந்த்?  

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2020

Thursday 12 November 2020

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ஓம் கொரோனாயா நமஹ

          -- ஆர்.வி.ஆர்

 

          ஊரெல்லாம் பரவி நம்மளை சங்கடத்துல வச்சிருக்கே கொரோனா வைரஸ், அதைப் போய் யாராவது வணங்கறேன்னு சொல்லுவாளா? இப்படி வெறும்ன கேட்டா, ‘சொல்ல மாட்டா’ன்னு நினைப்பேள். ஆனா நம்ம வாழ்க்கைக்கு உபயோகமா இந்த வைரஸ் ஒரு படிப்பினையைக் காமிக்கறதுன்னா, கொரோனாக்கு ஒரு சலாம் வைக்கறது தப்பில்லையே?   

         

          உங்களையே எடுத்துக்குங்கோ – ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். நீங்க நடமாடறேள், நன்னா தெரியறேள். இருந்தாலும் டாக்டர்லாம்  உங்க உடம்புல தீர்க்க முடியாத ஏதோ வியாதி இருக்கு. நீங்க இன்னும் அஞ்சாறு மாசம்தான் ஜீவிப்பேள்னு சொல்லிட்டா நீங்க மத்தவாள்ட இன்னும் கனிவா இருக்க ஆரம்பிப்பேள். மத்தவாளும் உங்ககிட்ட கரிசனம் காட்டுவா. அவா உங்களுக்குப் பண்ணின தப்பை நிறைய மன்னிப்பேள். நீங்க அவாளுக்கு பண்ணின தப்பை அவாளும்  மன்னிக்கத் தயாரா இருப்பா. புருஷன் பொண்டாட்டி ஒருத்தருக்கு ஒருத்தர்  இன்னும் விட்டுக் குடுப்பா.  அஞ்சாறு மாசத்துல உலகத்தை விட்டுப் போற வருத்தம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனா மனஅமைதியும் உங்களுக்குத் தானா கூடி இருக்கும் ஏன்னா எந்த மனுஷா கிட்டயும் உங்களுக்கு பிரச்சனை இருக்காது.   

 

இப்ப நிஜத்துக்கு வரலாம். நீங்க நன்னாத்தான்  இருக்கேள், டாக்டர் உங்க ஆயுசுக்கு கெடு வைக்கலைன்னே இருக்கட்டும். நீங்க மூக்கும் மாஸ்க்குமா, சோப்பும் கையுமா இருக்கேள்,  சமூக இடைவெளி பாத்து இருக்கேள்னும் வச்சுக்கலாம்.  இருந்தாலும்  கொரோனா பயத்தை விட முடியறதா, இல்லையே? இந்த கொரோனா பூதம்  நம்ம ஆயுசைப் பத்தி நமக்கே சந்தேகத்தை ஏற்படுத்திருக்கு. நம்ம சந்தேகம் இதோட நிக்கறதில்லை. ‘கொரோனாக்கு தடுப்பூசியோ மருந்தோ வந்தாலும், அது நமக்கு ஒழுங்கா வேலை செய்யுமா, நம்ம காலத்துலயே கொரோனா மாதிரி வேற சில பூதங்கள் எங்கேர்ந்து எப்ப வருமோ, நம்ம இப்ப தப்பிச்சாலும் அப்ப தப்பிக்க முடியுமா’   அப்படிங்கற கலக்கம் எல்லாருக்கும் இருக்கும்.

 

இந்த கொரோனா கலக்கத்தை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு, மனுஷா பிரச்சனை ஒண்ணைப் பாக்கலாம்.   வயத்துக்கு சாப்பாடு, தங்கறதுக்கு இடம், அதுக்கு உண்டான சம்பாத்தியம், இதெல்லாம் இருக்கறவாளையே எடுத்துக்குங்கோ. இவாள்ள,  நூத்துல தொண்ணூறு பேருக்கு பெரிய பிரச்சனை என்னன்னா பிறத்தியார்தான், வேற மனுஷாதான்.  அதுவும் ஆபீஸ்லயோ அக்கம் பக்கத்துலயோ இருக்கறவா இல்லை – அதெல்லாம் சொற்பம். வீட்டுக்கு உள்ள சேர்ந்து வாழறவா, அப்பறம் அங்க இங்க இருக்கற நெருங்கின சொந்தக்காரா சில பேர், அவாதான் பிரச்சனை. அவா பேச்சும் செயல்பாடும் இவாளுக்கு பிடிக்கலை, சகிக்கலை. அதான் பெரிய பிரச்சனை. அந்தப் பேச்சும் செயல்பாடும்  இவா கையைக் காலை கட்டிப் போடாது. அப்பக்கூட அதுதான் இவாளுக்கு பிரச்சனை, இவா நிம்மதியைக் குலைக்கறது.  இந்தப் பிரச்சனைய நிவர்த்திக்க, கொரோனா நமக்கு ஒரு கண்ணோட்டத்தைக் காமிக்கறது.  கொஞ்சம் விளக்கட்டுமா?   

   

‘நாமளே நிரந்தரம் இல்லை – அப்ப நம்ம பிரச்சினைகளும் நிரந்தரம் இல்லை’ அப்படின்னா  சரியா, சொல்லுங்கோ. பாதி சரின்னு தோண்றதா? அப்படியே வச்சுக்கலாம். அந்தப் பாதியை பிடிச்சிண்டாலே, இருக்கற நிம்மதியை நாம ரண்டு மடங்கு பண்ணிக்கலாம்.  எப்படின்னா, கொரோனா நம்ம பொடனில அடிச்சு சொல்லிருக்கு, தினமும் சொல்லிண்டிருக்கு  – நாம  நிரந்தரம் இல்லைன்னு. எங்கையோ மறைஞ்சு இருக்காமே, கொரோனா மாதிரியான வைரஸ் பூதங்கள், அதுகளும் “ஆமா ஆமா, மனுஷ வாழ்க்கை  நிரந்தரம் இல்லை”ன்னு கூவறதுகள்.  

 

நம்ம ஞானத்துல அதுவா புரிய வேண்டிய விஷயத்தை, கொரோனா பூதம் நமக்கு முன்னாடி நின்னு  சத்தம் போட்டுச் சொல்றது. அதான், “நாமளே நிரந்தரம் இல்லைன்னா நம்ம பிரச்சனைகளும் நிரந்தரம் இல்லை”.  அப்பறம் எதுக்கு வேண்டாத பிரச்சனையைக் கட்டி அழணும், வேண்டாத மனுஷாளை நினைச்சுப் பொருமணும்? அவாளை  சட்டுனு மனசுலேர்ந்து உதறிடலாம். நிம்மதியை பெரிசு பணணிக்கலாம்.   என்ன சொல்றேள்? இதெல்லாம் வெறும் தத்துவமா தெரியறதா?  சரி, வேற ரூட்டுல வரேன். பஸ் ரூட்டுதான்.  

 

நீங்களே பாத்திருப்பேள். அசௌரியமா இருந்தாலும் மூணு மணி, அஞ்சு மணி, ஏன் பத்து மணி நேர பஸ் பிரயாணத்தையும் நிறையப் பேர் பொறுமையா முடிக்கறா. அந்த அசௌரியத்தைப் பத்தி பெரிசா நினைக்காம, அதைப் பத்திக் கவலைப் படாம, ‘இது முடியப் போறது’ன்னு புரிஞ்சுண்டு பிரயாணத்தை முடிக்கறா.  அந்த மாதிரி, நமக்குப் பிரச்சனைன்னு நாம நினைக்கறோமே, அந்த மனுஷாளை மனசுலேர்ந்து – ஒரு பிரயாண அசௌரியம் மாதிரி - தள்ளி வச்சுடலாமே, எடுத்தே விட்டுடலாமே? நம்ம நிம்மதியைக் கூட்டிக்கலாமே?

 

இன்னொண்ணு. அதையும் சொல்லணும். எல்லார்கிட்டயும்  ஒரு வினோத குணம்  இருக்கு, பாத்தேளா? நம்ம வீட்டுல, நம்ம பழகற ஒரு மனுஷனோட பேச்சு செயல் நமக்குப் பிடிச்சிருந்தா, அவர் நமக்கு நல்லதே பண்ணிண்டு இருந்தாலும்,  அதை சும்மா குறிச்சுப்போம், அதை நினைச்சு பூரிக்க மாட்டோம் – நிறையப் பேர் அவருக்கு தேங்க்ஸ் கூட நினைக்கறதில்லை.  ஆனா அந்த மனுஷனோட பேச்சு செயல் நமக்குப் பிடிக்கலைன்னா, அதை சும்மா கண்டுண்டு மனசுலேர்ந்து விலக்காம அப்பப்ப அசை போடுவோம், அடிக்கடி அவரை நினைப்போம்,  அவரை மனசுக்குள்ள திட்டுவோம், பொருமுவோம், நிம்மதியை இழப்போம். இதுல பெரிய பிரச்சனை எங்க இருக்கு – அந்த மனுஷன் கிட்டயா, நம்ம கிட்டயா?

 

நம்மளை விடுங்கோ.  பீஹார்ல இருக்கற சாதாரண ஏழை ஜனங்களைப் பாருங்கோ.  கொரோனா தொடங்கின காலத்துல அவா லட்சக் கணக்குல வெளி மாநிலங்கள்ள வேலை பண்ணினா. அப்ப நாடு பூரா ஊரடங்கு வந்து அவாளுக்கு வேலை போய் சம்பளமும் இல்லைன்னு ஆயிடுத்து. பஸ் ரயில் போக்குவரத்தும்  நின்னு போச்சு. அந்த பீஹார் ஜனங்கள் தமிழ் நாட்டுலேர்ந்து, மத்த மாநிலங்கள்ள இருந்து, தலைல மூட்டையோட பீஹாரைப் பாத்துண்டு எத்தனை கிலோமீட்டர் நடந்தா? போற வழில அங்க அங்க பிரயாண உதவி அவாளுக்குக் கிடைச்சிருக்கலாம். ஆனா நீங்களும் நானும் நினைச்சுப் பாக்க முடியுமா அவா நடந்த தூரத்தை, அவா பட்ட கஷ்டத்தை?  அந்தக் கஷ்டத்தையும் தாண்டி அவா வாழ முடியும்னு அப்படி நடந்தா. இப்ப திரும்பவும் அவா வெளி மாநிலங்களுக்கு நம்பிக்கையோட வேலைக்கு வரா.  இதுல நமக்கான விஷயம் என்னன்னா, ஒதுக்கித் தள்ள வேண்டிய சில மனுஷாளை நம்மளே ஒரு பிரச்சனையா பாக்காம, போயிண்டே இருக்கணும்.   

 

நமக்கு பிரச்சனையா இருக்கறவா நம்ம வாழ்க்கைல தவிர்க்க முடியாம இருக்கா, அதுவும் வீட்டுலயே இருக்கா  – புருஷன் பொண்டாட்டி, அம்மா அப்பா, பையன் பொண்ணு  மாதிரி – அப்படின்னா என்ன  பண்றது? அதாவது, அவாகிட்ட நம்ம  நேரா நியாயமா நாசூக்கா இருந்தாலும், பிரச்சனை தீரலைன்னு ஆகலாமே? அப்படின்னா அது வேற விஷயம்.  நூத்துக்கு பத்து கேஸ்தான் இந்த ரகமா இருக்கும்.  தொண்ணூறு கேஸ் எப்படின்னா, அஞ்சு மணி, பத்து மணி நேர பிரயாண அசௌரியம் போலத்தான் இருக்கும். இதுதான் வாழ்க்கைல நிறையப் பேரை நிறைய சந்தர்ப்பத்துல பாதிக்கறது. சரியான மனசோட நாம இதைத் தாண்டினாலே பெரிசு.  

 

மனுஷா சம்பத்தப் பட்ட பிரச்சனையால நம்ம நிம்மதி கெடாம இருக்கணும்னா, நம்ம மனசு, நம்ம சிந்தனைதான் நமக்கு உதவணும். அது இப்ப ஆகாதுன்னா, ஒண்ணு பண்ணலாம். பொழைச்சுக் கிடந்தா அடுத்த பூதம் வரும் போதாவது அதுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு புதுசா பாடம் கத்துக்கலாம். இதுதான்  எனக்குத் தோண்றது. நீங்க என்ன நினைக்கறேள்?  

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2020

 

 

Monday 26 October 2020

திமிர்மாவளவன்!

 

-- ஆர்.வி.ஆர்

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஹிந்து மதத்தைப் பழித்து அற்ப சந்தோஷம் கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்களில் அவரும்  ஒருவர்.  அற்ப சந்தோஷத்தில்  பெருமை கண்டு வலம் வருவது திமிரின் அடையாளம். திருமாவளவனின் அடையாளமும் கூட.

 

சென்ற மாதம் திருமாவளவன் ஒரு இணையதளக்  கருத்தரங்கில் பேசியதின் வீடியோ பதிவு சமீபத்தில் வெளிவந்தது. அதில் அவர் உளறிய ஒரு பகுதி இது: “இந்து தர்மம், சனாதன தர்மம், மனு தர்மப் படி, எல்லாப் பெண்களுமே அடிப்படையில் கடவுளால் ‘பரத்தையர்களாக’, அதாவது ‘விபச்சாரிகளாக’,  படைக்கப் பட்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தில் பெண்கள் இப்படித்தான் நடத்தப் படுகிறார்கள், நசுக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள் ........ ”

 

பலரும்  தனது வீடியோ பேச்சைக்  கண்டனம் செய்வதைப் பார்த்தார் திருமாவளவன். உடனே சடாரென்று மனுஸ்மிருதி, பா.ஜ.க இரண்டையும் ஒன்றாக எதிர்த்து, மனு காலத்துப் பெண்களை விட்டுவிட்டு தற்காலப் பெண்களின் பாதுகாவலராக மாறிவிட்டார். அதன்படி, 23.10.2020 அன்று ட்விட்டர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.  அதில் அவர் சொல்வது: “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன  சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக்  காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன...”  இதனால் மனுஸ்மிருதிக்கு மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். மறுநாள் அவரது கட்சி ஆர்ப்பாட்டமும் நடத்தியது திருமாவளவன் நீளமாகப் பேசினார்.

 

முதலில் ஒன்று. மனு தர்மத்தின் ஒரு உள்ளடக்கம் என்று குறுப்பிட்டு திருமாவளவன் இணையதள கருத்தரங்கில் பேசியதற்கான மூல ஆதாரம்  எதையும் அவர் அப்போதும் சொல்லவில்லை, பின்னர் நிகழ்த்திய ஆர்ப்பாட்ட மேடை  உரையிலும் சொல்லவில்லை. அவரது கட்சி எம்.பி-யான ரவிக்குமார், மனுஸ்மிருதியின் ஒரு ஆங்கில மொழி பெயர்ப்புப் புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தைத் தேர்ந்தெடுத்து அதன் முதல் பக்கத்தை 23.10.2020 தேதியன்று ஆதாரமாக  வெளியிட்டார். அந்தப் பக்கத்திலும் கூட, திருமாவளவனின் ஹிந்துப் பெண்கள் இழிவுப் பேச்சின் பிரதிபலிப்போ ஆதார மூலமோ காணப்படவில்லை.  அதுவும் குறிப்பிட்ட அந்த பழிச் சொல் அந்தப் பக்கத்தில் இல்லவே இல்லை.    

                                                                                      

ஹிந்து மதத்தின் மீது தனக்குள்ள வெறுப்பைக் கொச்சையாக வெளிப்படுத்தி, ஹிந்துப் பெண்களை அபாண்டமாக இழிவுபடுத்தும் வரை திருமாவளவன் சென்றிருக்கிறார். உண்மையில் அவர் இணையதளத்தில் சொல்ல வந்தது இதுதான்:  “ஹிந்துக்களே! இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஹிந்துக்களுக்கு தர்ம-நியாயம் சொன்ன மனு, பெண்களை எப்படி இழிவாக வர்ணித்திருக்கிறார் பாருங்கள்! பிற்கால இந்தியாவின், அதுவும் சுதந்திர இந்தியாவின், நிலைமையும் சட்டமும் வேறாக இருக்கலாம்! இப்போது ஹிந்துப் பெண்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக, பிரதமராக, முதல் அமைச்சர்களாக ஆகி இருக்கலாம்! ஆண் தலைவர்களை நடுக்கத்தில் வைத்துத்  தம் காலில் விழவைக்கும் அரசியல் கட்சித் தலைவிகளாகவும்  இருக்கலாம்! ஆனால் அந்தக் காலத்தில் பெண்களை கீழ்மையாகச் சொன்ன ஒரு ரிஷி இருந்த மதம்தானே ஹிந்து மதம்? இந்த மதத்தில் ஹிந்துக்கள் தொடரலாமா? கூடாது! கூடாது!”  இவர் பேச்சிலும் அடிப்படை உண்மை இல்லை, நோக்கத்திலும் நேர்மை இல்லை.

 

சில நூற்றாண்டுகளாக ஹிந்துக்களே வாழாத ஒரு வாழ்க்கை முறை மனுதர்மம், பின்பற்றாத நூல் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதியைப் பற்றி இப்போது யாருக்கும் தெரியாது, அது நம்மிடையே சட்டமாகவும் இல்லை. ஆனால் மனதளவில் ஹிந்துக்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு - அது ஆதி காலத்திலிருந்து ஹிந்துக்களிடம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்தக் கடவுளையும் ஹிந்துப் பெண்களையும்  ஒருசேர அநாகரிகமாகப் பழித்து அவமதித்து, அந்தப் பழிப்பு வார்த்தைகள் மனுதர்மத்தில் உள்ளது என்று ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசிய திருமாவளவனை சட்டமும் வாக்காளர்களும் தண்டிக்கவேண்டும். 

    

திருமாவளவனின் பெண்கள்-இழிவுப் பேச்சுக்காக சென்னை போலீஸ் அவர் மீது வழக்குப் பதிந்தது.  உடனே என்ன நடக்கக் கூடுமோ அது நடந்தது. தி. மு. க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து, அவர் மீது   வழக்குப் பதிவானதைக் கண்டித்து அது திரும்பப் பெறப் படவேண்டும் என்று அறிக்கை தந்தார். காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்திற்கு, அதே ரீதியில் திருமாவளவனின் பேச்சிற்கு துணை நிற்க வெட்கமாக இருந்திருக்க வேண்டும்.

 

ஒரு ட்வீட் போட்டார் சிதம்பரம். அதில் திருமாவளவன்  மீது பதிவான வழக்கைக் குறுப்பிட்டு, அவர் “பேசிய பொருள் ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம்.  ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றமாகும்?  பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசி இருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?” என்று நடுத்தரமாகச் சொல்லி முடித்துக் கொண்டார்.   

 

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று உச்சரித்த தனது கட்சியின் பெரும் தலைவர், தேசப் பிதா   மகாத்மா காந்தி இன்று உயிரோடு இருந்தால் திருமாவளவனின் பெண்கள்-இழிவுப் பேச்சைக் கண்டிப்பார் என்று நினைக்காமல் – நினைத்தாலும் அதைச்   சொல்ல முடியாமல் -  “தந்தை பெரியார் இன்று இருந்து திருமாவளவன் மாதிரிப் பேசினால் அவர்மீதும் வழக்கா போடுவீர்கள்?” என்று பித்துக்குளித்தனமாக கேட்கிறார் ப. சிதம்பரம்.  தமிழ்நாட்டு அரசியலில்  தி.மு.க மற்றும் வி.சி.க-வுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்றால் எப்படி அசட்டுத்தனமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது! அசட்டு ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்கி வாங்கிப் பழக்கப்பட்ட சிதம்பரத்திற்கு இதெல்லாம் அத்துப்படி.  

 

ஒரு நடைமுறை விஷயத்தையும் பார்க்கலாம். அரசியல் தலைவராக இருக்கும் ஒருவர் அதிக விஷயங்கள் பேச வேண்டும், அதிக நேரமும் பேச வேண்டும். ஆனால் மக்கள் கவனத்தைப் பெறாத விஷயங்களை அவர் அதிகம் பேசக் கூடாது. அது கால விரயம். அனாவசிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளும் பேச்சையும் அவர் தவிர்க்க வேண்டும். அதை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கினால் அதற்கு பதில் சொல்லியே அவருக்கு மாளாது.

 

எல்லாம் போகட்டும். யுகம் யுகமாகப் பெண் தெய்வங்களை வணங்கி வருபவர்கள் ஹிந்துக்கள். பெண் தெய்வங்கள் பெயரில் ஹிந்துக் கோவில்களும் உண்டு. அப்படியான ஹிந்துக்களுக்கு தர்ம நியாயம் உபதேசித்த ஒருவர் - மனுவோ  யாரோ - பெண்கள் அகௌரவத்திலும் அவமானத்திலும் வீழ்ந்து கிடக்கும் ஒரு நிலையை, அதாவது திருமாவளவன் விவரித்த நிலையை, படைத்த கடவுளே எல்லாப் பெண்களுக்கும் கொடுத்தார் என்று எழுதி வைப்பாரா? அந்தப் பரிதாப நிலைதான் உண்மையாக இருந்திருக்க முடியுமா? தாயும் தாரமும் மகளும் கொண்டிருந்த அரசர்களும் அமைச்சர்களும் பொது  மக்களும்  அப்படி அவமானம் மிக்க சித்தரிப்பைக் காலம் காலமாக ஏற்றார்கள், ஆனால் திருமாவளவன் வந்துதான் ஒரு மாதத்திற்கு முன் இக்காலத்து ஹிந்துக்களின் கண்ணையாவது திறந்து விட்டார் என்று ஆகுமா? இதை ஏன் திருமாவளவன் யோசிக்கவில்லை?  மைக் கிடைத்தால் ஒரு அரசியல்வாதி இந்த அளவிற்கா தரம் தாழ்ந்து புத்தி மழுங்கிப் போவார்? 

  

தேர்தல் பாதிப்புகளையும் யோசிக்கலாம். 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு லோக் சபா தேர்தல்களிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். அதற்கு ஒரு முக்கிய காரணம் மோடி என்ற மனிதரின் தலைமைப் பண்புகள். இன்னொரு காரணம், இந்த தேசத்தில் ஊறிய ஹிந்து மத நம்பிக்கைகளை பா.ஜ.க புறம் தள்ளாமல் தாங்கிப் பிடித்தது - பிற மதத்தவர்களையும் அணைத்து. வெளியில் சொல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் இந்த உண்மை தெரியும்.  அப்படியானால், எதிர்க் கட்சிகள் மோடியைக் குறை சொல்லட்டும், அவரது செயல் திட்டங்களைக் குறை சொல்லட்டும். ஆனால் ஹிந்து மத மக்களை, அந்த மதப் பெண்களை, இப்படிக் கீழ்த்தரமாகப் பேசினால் என்ன ஆகும்? அந்தப் பெண்களை மட்டுமல்ல, அவர்கள் வீட்டின் ஆண்களையும் அந்தப் பேச்சு  நோகடிக்குமே, அவர்கள் தேர்தலில் நமக்கு எதிராக, நமது கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பலாமே என்ற எண்ணமாவது ஒரு அரசியல் தலைவருக்கு இருக்காதா? இருக்க வேண்டாமா?

 

தமிழக அரசியல் களத்தில், தலைவர்களின் எந்த இரட்டை வேஷமும், எந்த ஊழல் கறையும், எந்த கண்ணியக்  குறைவான பேச்சும் அவர்களுக்குத் தேர்தல்களில் நஷ்டம் தராதோ? அடுத்து, தண்டனை முடிந்து ஜெயிலில் இருந்து வெளிவரும் ஒரு தலைவருக்கும் கூட்டம் கூடுமோ?  

 

தப்பு செய்யும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தாங்கள் பாதிக்கப் படமாட்டோம் என்று நினைக்கிறார்கள் – கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும். அதே சமயம், மாற்றத்திற்காகக்  காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது, புதிய தலைவர்களும் அரும்புகிறார்கள்.  நல்லவர்கள் நம்பிக்கையை விடாமல் வைத்திருக்க வேண்டும் – திருமாவளவன் போன்றவர்கள் வலுவிழக்கும் வரை.  தமிழ் நாட்டில் அதுதானே வழி?

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Wednesday 30 September 2020

எஸ்.பி.பி-யின் பாட்டு. தமிழகத்தின் பாடு. தொடர்பு என்ன?

        -- ஆர்.வி.ஆர்

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடல்களில் சிகரங்கள் தொட்டவர். அவரது  குரல் வளம் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்கிறது.  

எஸ்.பி.பி-யின் தாய்மொழி தெலுங்கு. அந்த மொழியில் அவர் பல்லாயிர  பின்னணிப் பாடல்கள் பாடினார். கன்னடத்தில் பாடினார். தமிழிலும் வெளுத்துக் கட்டினார் மலையாளத்திலும் அவர் குரல் ஒலித்தது. ஹிந்திப் படங்களிலும் அவர் வெற்றி கண்டார் - அதுவும் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடும் அளவிற்குசல்மான் கானுக்காகப் பாடும் வரை.  

மற்ற இந்திய மொழி ஒன்றுமே தெரியாமல் தெலுங்கில் மட்டும் எஸ்.பி.பி பாடி இருந்தால் அவர் சாதனை அதோடு நின்றிருக்கும். மேலும் விரிந்து பரவி இருக்குமா? இருக்காது.   

பல மொழிகள் நம் நாட்டிற்குள் பேசப்படுகின்றன. உள் நாட்டில் ஒரு குடிமகன் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வசிக்கும் உரிமையை அரசியல் சட்டம் தருகிறது. ஆகையால் தாய் மொழியைத் தவிர உபயோகமான வேறு மாநில மொழியை – அதுவும் ஹிந்தியை – நம் நாட்டில் ஒருவர் கற்றுக்கொள்ள தயக்கம் காட்டினால், அல்லது முடியாமல் போனால், அவர் தமிழராகவும் இருந்துவிட்டால், என்ன அர்த்தம்? அவர் தமிழக அரசியல் கட்சிகளால், குறிப்பாக திமுக-வின் கடும் எதிர்ப்பால், கண் கட்டப்பட்டு காது குத்தப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார் என்று அர்த்தம். பல மொழிகளில் பாடிப் பெயர் வாங்கிய எஸ்.பி.பிஇதைப்  பக்கவாட்டில் உணர்த்துகிறாார். கட்டாயக் கடுக்கணைக் கழட்ட முடிந்தால் பல தமிழர்களும் இதைப் புரிந்து கொள்ளலாம். 

எஸ்.பி.பி-க்கு முன்னதாகத் தன் மந்திரக் குரலைப் பல மொழிகளில் நிரூபிக்க ஆரம்பித்த பாடகர், லதா மங்கேஷ்கர். ஹிந்தி பின்னணிப் பாடல்களின் அரசி. அவரது தாய் மொழி மராத்தி. ஆயிரத்துக்கும் மேலான ஹிந்தி மற்றும் பிற மொழிப் படங்களில் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவர். மற்ற இந்திய மொழிகள் ஒன்றிரண்டாவது அறிவதின் பயனை, இவரும் எஸ்.பி.பி-யும் அமோகமாக  அடைந்தவர்கள். 

     ஹிந்தி  தெரிந்ததால்  அல்லது  கற்றதால்,  லதா மங்கேஷ்கருக்கு மராத்தி மறந்து போனதா, அவர் மராத்தியில் பாடுவதை நிறுத்தி விட்டாரா? தமிழ் சரியாகக் கற்று தமிழில் பாடியதால் எஸ்.பி.பி-க்கு தெலுங்கு மறந்து விட்டதா, தெலுங்கில் பாடுவதை விட்டுவிட்டாரா? பிறகு ஹிந்தி சினிமாவுக்குப் பாட ஆரம்பித்ததும் அவருக்கு தமிழ்தான் மறந்து விட்டதா?  இல்லையே?  இதில் தமிழ் நாட்டிற்கும் ஒரு சேதி இருக்கிறது. 

அதிக தமிழ் நாட்டு இளைஞர்களை பள்ளிப் படிப்பின்போதே ஹிந்தி கற்க விடாமல் முடக்கி வைத்திருப்பதால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை.  அதைச் செய்துவரும்  அரசியல் தலைவர்கள்தான் அதன் ரகசிய பலன்களை அனுபவிக்கிறார்கள்.   

          தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பிடியில் சிக்காமல் கல்வியில் முன்னேறி பொருளாதாரத்திலும்  உயர விரும்பிய தமிழர்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் வசிக்கிறார்கள். இங்கிலாந்திலும் உண்டு.  அங்கே அவர்கள் மொழியால் ஒன்றுபட்டு அந்த நாடுகளின் பல ஊர்களில் தமிழ்ச் சங்கங்கள் அமைத்திருக்கிறார்கள். அவற்றைத் துவக்கி அவர்கள் பலரையும் இணைத்தது அவர்களேதான், ‘தமிழ் வளர்க்கும்’  தமிழ்நாட்டுத் தலைவர்கள் அல்ல.   

நன்றாகப் படித்து, சுயமாக சிந்திக்கத் தெரிந்து, அடிப்படைத் தேவைக்கான வருமானமும் கிடைத்துவிட்டால், தமிழர்கள் தங்களது இயற்கையான மொழிப்பற்றை அவர்களாகவே பார்த்துக் கொள்வார்கள் – ஹிந்தி படித்தாலும் சரி, வேலைக்காக வேறு நாட்டுக்கே சென்றாலும் சரி. ஆனால் அந்த கௌரவமான தகுதிகள் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்காமல் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர்களை சக்தியற்றவர்களாகவே வைத்திருப்பது  நம்மை ஆட்சி செய்த திராவிடக் கட்சித் தலைவர்கள். அப்படி அப்பாவியாகவே நிறையப் பேரை வைத்திருந்தால்தானே,  அவர்களிடம் எளிதாக ஓட்டு வாங்கலாம்?   

ஹிந்தி-எதிர்ப்பு வாசனை சேர்ந்து அரசியல் நெடி தூக்கலான மாநிலம் தமிழ் நாடு.  அதன் சினிமா உலகில் எஸ்.பி.பி தனது பாடல்களால் பெரும் வெற்றியும் புகழும் அடைந்தார்.  அவர் ஹிந்திப் பாடல்கள் பாடியதற்காக ஹிந்தி-எதிர்ப்பு அரசியல்வாதிகள் யாரும் அவரை  விமரிசிக்கவில்லை, எதிர்க்கவில்லை. பல மொழிகளில் அவர் பாடினார் என்பதை ஒரு பெருமையாகக் குறிப்பிட்டே திமுக அவருக்கான இரங்கல் செய்தியை வெளியிட்டது. 

தமிழ் சினிமாவில் இருந்துகொண்டே நீங்கள் ஹிந்திப் படங்களில் நடிக்கலாம், பாடலாம். நீங்கள் கல்வித் துறையில் நுழைந்தவரா? கொழுத்த கட்டணம் வசூலித்து ஹிந்தி சொல்லிக் கொடுக்கும் சி.பி.எஸ்.ஸி வழி தனியார் பள்ளிகளை தமிழ் நாட்டில் நடத்தலாம். தமிழராக இருந்துகொண்டு மற்ற மொழிகளில் டி.வி.சானல்களும் நடத்தலாம், அல்லது ஹிந்தி நன்றாகத் தெரிந்த தலைவர்கள் கொண்ட அகில இந்தியக் கட்சிகளுடன்  கூட்டணி வைத்து, மத்திய ஆட்சியில் மந்திரி பதவி பெற்று எல்லா வளமும் பெறலாம். எப்படி நீங்கள் பிரபலம் ஆனாலும் பணம் சேர்த்தாலும் – சரியான வழியிலோ வேறு வழியிலோ – தமிழ்நாட்டுப்   பொது வாழ்வில், அரசியல்வாதிகளின் பார்வையில், உங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும்.  ஆனால் நீங்கள் சாதாரணத் தமிழராக மட்டும் இருந்துவிட்டால், உங்களுக்குத் தேர்தல் தினத்தன்று இருநூறோ முந்நூறோ கிடைக்கும். அவ்வளவுதான். அரசாங்கமோ கட்சித் தலைவர்களோ  உங்களைத் தூக்கிவிட மாட்டார்கள். 

ஐரோப்பாவைப் பாருங்கள். 27 உறுப்பினர் நாடுகளின் 24 மொழிகள் ஐரோப்பிய யூனியனின் அலுவல் மொழிகள்.   ஒற்றை தேசமான இந்தியாவின் நிலப்பரப்பு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டு நிலப்பரப்பில் கிட்டத்தட்ட  முக்கால் அளவு. ஒரு தமிழர் ஹிந்தி மட்டும் கூடுதலாகக் கற்றுக் கொண்டால், ஒரு ஐரோப்பியர் இன்னும் எட்டு பத்து ஐரோப்பிய மொழிகளைக் கற்ற பலனுக்கு சமம் என்று கண் மூடிச் சொல்லலாம். அதாவது, ஒரு தமிழ் இளைஞருக்கு ஹிந்தி தெரிவதால் தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள பரந்த இந்தியப் பிரதேசத்தில் கிடைக்கும் தொடர்புகள், மனதளவில் அந்த மொழியறிவு தரும் கூடுதல் தன்னம்பிக்கை, வரும் வேலை வாய்ப்புக்கள் முக்கியமானவை, அசாத்தியமானவை. ஒரு ஹிந்தி இளைஞன் தமிழ் கற்பதை விட, ஒரு தமிழ் இளைஞன் ஹிந்தி கற்பது இன்னும் அதிகப் பயன் தருவது. 

திராவிடக் கட்சித் தலைவர்களிடம் ஒன்று சொல்லலாம். எஸ்.பி.பி. உதாரணத்தை விடுங்கள். குஜராத்தின் நரேந்திர  மோடி 2014-இல் இருந்து நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் ஹிந்திக்காரர் இல்லை.  இருந்தாலும்  அவர் நன்றாக ஹிந்தி கற்று மேடைப் பேச்சிலேயே சரளமாக ஹிந்தியில் பேசுகிறார். அவர் ஹிந்தி பேசுவதால் அவரது தாய்மொழி குஜராத்தி சீரழியவில்லை, குஜராத்தி மொழியைப் பாதுகாக்க அரசியல் பாதுகாவலர்கள் தேவைப்படவில்லை. தமிழுக்கு மட்டும் ஹிந்தியிடம் இருந்து என்ன ஆபத்து? இன்னொன்று. மோடிக்கு சரளமாக ஹிந்தி பேசத் தெரியாவிட்டால் அவர் தனது பலத்தில்  பிரதமர் ஆகி இருக்கவும் முடியாது. அப்படியானால் எக்காலத்திலும் தமிழ் நாட்டிலிருந்து ஒருவர் சொந்தக் காலில் நின்று பிரதமர் ஆகவே கூடாதா?  

சரி, மீண்டும் எஸ்.பி.பி-யை வைத்து கடைசியாக ஒரு வார்த்தை. அவர் தனது திறமையால், தனது முயற்சியால், தனது புத்திசாலித்தனத்தால் தனது பாட்டை வளர்த்துக் கொண்டார். தமிழக மக்களும் ஹிந்தி எதிர்ப்பிலிருந்து விடுபட்டு,  திராவிட அரசியல் கட்சிகளிடம் இருந்து தப்பித்து,  தங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டால்தான் உண்டு. தமிழ் வாழ்க! தமிழர்களும் வாழ்க! 

* * * * *

 Copyright © R. Veera Raghavan 2020

Wednesday 23 September 2020

Did Actor Suriya Commit Contempt of Court?

-- RVR

Did an action for criminal contempt lie against Tamil actor Suriya for his sharp comment against the judiciary earlier this month?  Let us take a look.

 

Eleven students from eleven states had petitioned the supreme court seeking a postponement of NEET – the entrance test for undergraduate medical admissions – that was scheduled for September 2020 after two prior postponements.  The reason urged was the continuing pandemic.  At the hearing on 17th August 2020, the supreme court asked the petitioners, “COVID may continue for a year more. Are you going to wait for another year? Do you know what is the loss to the country and the career peril to the students?”. Not convinced with the petitioners’ plea, the supreme court dismissed their petition. So NEET was successfully held on 13th September 2020, with about 15 lakh students writing the test across the country in over 4800 test centres.

 

Now to Suriya. He is a star in Tamil Nadu, with a huge fan base. He has a good image among large sections of the youth and is known for his charitable work, especially funding educational expenses of poor students, through a trust.  After NEET exam was held on 13th September this year, he tweeted a lengthy statement in Tamil on the same day.  Here are some translated extracts from that statement.

 

“The suicide of three students on the same day arising from fear of NEET exam shakes the conscience…… It is distressing to note that students are compelled to write an exam and prove their mettle even amidst the coronavirus that causes fear of life.”   

 

“The government which has to create equal opportunities for all, brings in an educational system through a law that creates disparities. Those who do not know the realities of the poor and the downtrodden frame educational policies.”

 

And then, Surya fired his salvo against the judiciary in these words: “The court which ‘fears for life’ (the actual Tamil expression here means ‘fearing for their own lives’ – i.e., not for the lives of others) because of coronavirus and renders justice through video-conferencing, orders that students must go out without fear and write their exam.”

 

Suriya went on to emphasise his opposition and antipathy to the very idea of NEET – not merely for the reason that three stressed-out students took their own lives shortly before the date of the exam. He said this too in his statement: 

“Manu Needhi (meaning, justice or social code according to sage Manu) examinations like NEET not only rob our students of opportunities but also take away their lives ..…..”

 

A sitting judge of the Madras High Court wrote a letter to the chief justice of the court, expressing his opinion that Suriya’s comment on the judiciary amounted to contempt of court, warranting contempt proceedings. Unfortunately, that letter soon got leaked to the press and social media.  

 

A division bench of the Madras High Court – i.e., two judges – led by the chief justice deliberated on the question if Suriya’s comment on the judiciary required initiation of criminal contempt proceedings. They passed a detailed judicial order on the 18th September 2020, holding that the matter did not deserve to be pursued.  Presently, the controversy seems legally settled. Still we may form our opinions.

 

The offence of criminal contempt alleged against Suriya chiefly falls under one of its three broad forms set out in The Contempt of Courts Act, 1971.  Considering his case alone, his comment on the judiciary would amount to criminal contempt if it:

 

(a) scandalises or tends to scandalise any court,

(b) or lowers or tends to lower the authority of any court.

 

In his statement of 13th Sept 2020, Suriya strongly expressed himself against NEET and criticised the exam, even though the supreme court had earlier upheld its constitutional validity and cleared the way for the holding of NEET. It was apparent that Suriya had a grouse against NEET for his own reasons. 

 

Experts may know that on the issue of “scandalising the court” as against fair criticism, Lord Denning said: “It is the right of every man, in Parliament or out of it, in the press or over the broadcast, to make fair comment, even outspoken comment, on matters of public interest.  Those who comment can deal faithfully with all that is done in a court of justice……” These words of Lord Denning have also been quoted in the order of the Madras High Court dated 18th September 2020 which closed the issue put against Suriya. How did the actor measure up to what Lord Denning said?

 

With three young misguided medical aspirants in Tamil Nadu taking their own lives shortly before 13th September, Suriya actually gave vent to his stand-alone anti-NEET views.  His statement referred to the court (meaning, judges occupying seats of justice) in disparaging words, obviously because the court had upheld the Constitutional validity of NEET and further blocked an attempt to have the exam put off beyond 13th September. So, his basic antipathy to NEET extended towards the court and judges too who had adjudged NEET as lawful and negatived a plea for its postponement beyond 13th September.


Suriya’s extended antipathy towards the court on the NEET issue overtook him. So he said, “The court which ‘fears for life’ (the actual Tamil expression here means ‘fearing for their own lives’ – i.e., not for the lives of others) because of corona and renders justice through video-conferencing, orders that students must go out without fear and write their exam.” Here he made an accusation against the court, viz., the judges were adopting dishonest double standards. That is, the judges followed one standard for themselves by which they didn’t hold physical hearings and, fearing for their own lives and for safeguarding their lives, they held hearings of their cases through video-conferencing. But, as he meant clearly, judges had another set of standards for students whom they directed to be physically present at NEET exam centres to take their entrance test, exposing the students to the coronavirus and not caring for the lives of the students. Actually, no court “directed” students to attend NEET exam. The supreme court only refused to postpone it beyond September.


Suriya’s remarks cannot be construed as “fair comment” or even as “outspoken comment”.  Nor did he “faithfully” deal with what the courts did while adjudging the NEET issues or while dispensing justice during the pandemic in its many stages. He did not keep himself within the limits set out by Lord Denning when a court has to adjudge if he by his statement “scandalised the court” or “lowered the authority of the court”.   Here, in the words of Wilmot CJ, ‘authority’ does not mean “that coercive power of the Judges, but the deference and respect which is paid to them and their acts, from an opinion of their justice and integrity”. Hence it appears that Suriya’s offending comment did scandalise the court or did lower the authority of the court.

 

The order of the Madras High Court deciding not to initiate and pursue the contempt issue with Suriya sets out in detail, with statistics, how he was wrong on facts with regard to dispensation of justice in Tamil Nadu during the pandemic. It explains how courts in Tamil Nadu, including the high court, had functioned to the best of their capacity, from 24.3.2020 to 15.9.220.  The scenario in the rest of the country, as we can see, would be no better. If Suriya had been issued notice and asked to answer a charge of criminal contempt, he would find it hard to justify his accusations against the court and judges.  Now he has been spared of that botheration, and he could be feeling thankful.


Did not Suriya know the difference between students physically attending a 3-hour NEET exam on one day during the pandemic with all precautions, and lawyers, court staff and judges, and litigants and witnesses too, coming to court five days a week throughout the virus period in all courts? And which of the two events could be managed throughout with best precautions? It is hard to imagine that an intelligent Suriya could not appreciate the difference. He just let malice be his voice and attacked the integrity of judges.


Suriya deserves credit for all his charitable work. But he has no right to offend the judiciary in the hope that an aggressive anti-NEET stance could be rewarding in the muddy public sphere in Tamil Nadu, with all major political parties speaking against NEET all day. His comment on the judiciary was wrong. It was cheap. It was disparaging. It would surely appeal to thousands of his fans and could make them lose faith in the integrity of the judiciary. It most probably amounted to criminal contempt, for which the best course would be to issue a notice to Suriya, hear him and decide the case according to law.  


If Suriya’s reference to court and video-conference hearings in his statement was only to the supreme court and its hearings, and not to the Madras High Court and its hearings, then the supreme court alone will have jurisdiction to initiate or entertain a case of criminal contempt against the actor, and not the Madras High Court. Since the high court has, in its order, analysed his case in great detail on merits, the legal question if Suriya committed criminal contempt is examined here – whichever be the court that will have jurisdiction over the case.


The law of contempt of court is designed to protect the honour and dignity of judges who cannot be expected to engage in a dialogue with outsiders and counter any false accusations or baseless disparaging remarks hurled at judges.  Such protection is in the interest of the public, and is therefore regarded as protection for the public.  There is no law on “contempt of the prime minister” or “contempt of chief ministers” or contempt of political functionaries or other classes of people.  All these persons can go to court against their accusers or may trade charges in the open, within legal limits, but a sitting judge cannot and must not do all that.  Hence the need to protect the honour and dignity of our judges on such occasions, employing the court’s Constitutional and statutory powers to try and punish for contempt.  A court may not brandish those powers with gusto or too often, nor keep them tucked in always. Using them is a fine art.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020