Saturday 27 June 2020

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: இந்தியாவின் மோடியும் சீனாவின் ராகுலும்


          -- ஆர். வி. ஆர்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைல ராகுல் காந்தி சொல்றதைப் படிச்சேளா? உடனே, 'இந்த படவா காதைப் பிடிச்சு பொடனில  ஒண்ணு கொடுக்கணும்'னு உங்களுக்கு தோண்றதா? ஆமான்னா நீங்க தேசத்தை நேசிக்கறவர்னு அர்த்தம்.

சீனா சர்வாதிகார நாடு.  அங்க கம்யூனிஸ்ட் கட்சிதான் ஒரே அரசியல் கட்சி. எதிர்க்கட்சி கிடையாது. சீனா நம்ம இந்தியாட்ட என்ன அக்கிரமம் பண்ணினாலும், சீன அரசாங்கத் தலைவர்களுக்கு உள்நாட்டு விமர்சகர்களை சமாளிக்கற அவசியமே இல்லை.  

இந்தியா ஜனநாயக நாடு, ஆனா முதிர்ச்சிக்கு வரணும்.   இங்க வருஷக்கணக்கா, அதுவும் இந்திரா காந்தி காலத்துலேர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைமையோட போக்கு என்னன்னா, கட்சிலயோ ஆட்சிலயோ தர்ம-நியாயம், ஜனநாயகப் பண்பு, திறமைக்கு அங்கீகாரம்னு அலட்டிக்கறது இல்லை.  சோனியா காந்தி பட்டத்து ராணியா வந்தப்பறம் கோல்மால் கோலோச்சினது. அவாளோட பொறுப்பில்லாத பிள்ளை ராகுல் காந்திக்கு கட்சில எல்லாரும் சலாம் போட்டா. அது சோனியா காந்திக்கு ரசிச்சது. அதுவே நமக்கும் ஆதாயம்னு, போடறவா ரண்டு கைலயும்  சலாம் போடறா.

இப்படி இருக்கற காங்கிரஸ் கட்சிக்கு, பாரதிய ஜனதா கட்சிலேர்ந்து நரேந்திர மோடின்னு ஒரு தலைவர் சத்ருவா வந்தார். அதுவும் எப்படி? நேர்மை, நியாயம், நெஞ்சுரம், தேசப்பற்று, அரசியல் சாதுர்யம்னு சோனியா காங்கிரஸ்  பார்க்காத ஆயுதங்களோட வந்தார்.

2014, அப்பறம் 2019-ன்னு அடுத்தடுத்து ரண்டு லோக் சபா தேர்தல்ல காங்கிரஸ், அதோட சேர்ந்த உதிரிக் கட்சிகள், எல்லாத்தையும் ஒரு கூட்டணி தலைமைல தோக்கடிச்சு பிரதமர் ஆனார் மோடி. இப்படி பத்து வருஷம் ஆட்சி கைல இல்லைன்னா காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்னு உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும், எவ்வளவுதான் தெரியும்?

இப்ப சோனியா காந்தி, பையன் ராகுல், பொண்ணு பிரியங்கா, மாப்பிளை ராபர்ட் வத்ரான்னு அவா அவா ஏகப்பட்ட நஷ்டத்துலயும் கஷ்டத்துலயும்  புழுங்கிண்டிருக்கா.  அதோட,  அவாளோட   தப்புத் தண்டாவை மோடி அரசாங்கம் புலன் விசாரணை பண்ணி கேஸ் மேல கேஸா போடறா.  நேர்மையான மோடி ஆட்சில இதெல்லாம் எப்படி முடியுமோன்னு சில பேர்க்கு பக் பக்னு இருக்கும்.

இவ்வளவு சிக்கல்ல, சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ நிதானமா இருக்க முடியுமா? அதுவும் அறைகுறை புத்தி, அச்சுப் பிச்சுப் பேச்சு, அம்மா செல்லம்னு ஜொலிக்கற   ராகுல் காந்திக்கு புத்தி பேதலிச்சே போயிடுத்து.

2017-ம்  வருஷம் ஜூன்  மாசம் இந்தியா-சீனாவுக்கு  ஒரு பிரச்சினை வந்தது. அப்ப ராகுல் காந்தி என்ன வேலை பண்ணினார் தெரியுமா? சொல்றேன்.

சீனாவுக்கு, பூட்டான் நாடும் ஒரு அண்டை நாடுதான்.  பூட்டான்  நாடு டோக்லம்  பகுதில, 2017 ஜூன் மாசம் சீனா தனக்கு ரோடு போட ஆரம்பிச்சது. இந்தியா-பூட்டான் பாதுகாப்பு ஒப்பந்தப் படி இந்தியப் படைகள் அங்க போய் பூட்டானுக்கு ஆதரவா ரோடு வேலையை நிறுத்தினது.  அப்ப சீனா முரண்டு பிடிச்சது.   ரண்டு மாசத்துக்கு மேல இந்தியா  சீனா துருப்புகள் எதிரும் புதிருமா டோக்லம் பகுதில முறைச்சது.  இந்தியா-சீனா யுத்தம் வருமோன்னு ஒரு உணர்வு இந்தியால பொதுவா பரவி இருந்தது. ஆனாலும், கூச்சல் போட்டுண்டிருந்த சீனாவை அதிகம் பேசாம, திடமா அமைதியா கையாண்டார் மோடி. அந்த வருஷம் ஆகஸ்ட் கடைசில அந்தப் பிரச்சனை ஒரு வழியா ஓய்ஞ்சது.  நாம தடுத்த ரோடு வேலையை சீனா நிறுத்தினது.   

சீனா டோக்லம் பகுதில பிரச்சினை உண்டாக்கின போது, ராகுல் காந்தி ஏதோ பேருக்கு அரை குறையா சீனாவை கண்டிக்கறது, மோடியை அப்பப்ப மட்டம் தட்டி ஏதாவது பேசறது, ட்வீட் பண்றதுன்னு பொழுதைப் போக்கினார்.  ஆனா அதோட நிக்கலை.  

ஜூலை 2017-ல, நம்ம அரசாங்கத்துக்குத் தெரியாம இந்தியாவுக்கான சீன தூதரை திடீர்னு சந்திச்சார் ராகுல். அந்த செய்தி வெளில கசிஞ்சு வந்தது. அப்பறம் ராகுல் காந்தியே சீன தூதரை பாத்துப் பேசினேன்னு வெக்கமில்லாம ட்வீட் விட்டார், “முக்கிய விஷயங்கள் பத்தி எனக்கு தெரிஞ்சாகணும். அதுனால நான் சீன தூதரை சந்திச்சேன், பூட்டான் தூதரையும் பாத்தேன், முந்தைய தேசிய  பாதுகாப்பு ஆலோசகரையும் பாத்தேன், வட கிழக்கு காங்கிரஸ் தலைவர்கள் கிட்டயும் பேசினேன்”  அப்படின்னு அந்த எல்லாரையும் அவியலா போட்டு, ஏதோ பத்தோட பதினொண்ணா சீன  தூதரை பாத்தா மாதிரி கெக்கே பிக்கே விளக்கம் சொன்னார் ராகுல்.

நம்ம பிரதமர் என்ன சொல்றார்னு கேட்டு அவருக்கு முழுசா தோள் குடுக்காம, எதிரி நாட்டு தூதரைப் பாத்து “எப்படி இருக்கேள் சார்! சௌக்கியமா? நம்ம நாட்டு ராணுவ வீரர்கள் ஏன் சார் உரசிண்டிருக்கா? நீங்கதான் தகவல் சொல்லணும்!” அப்படின்னு பேச இந்தியாலேர்ந்து ஒரு மட சாம்பிராணி போவானா?  ராகுல் காந்தி போனார்.          

இப்ப மூணு வருஷம் கழிச்சு நம்ம லடாக் நிலப்பரப்புல, கல்வான் பள்ளத்தாக்குல சீன ராணுவம் பிரச்சினை பண்றது. நம்ம பகுதிக்குள்ள வந்து கட்டுமானம் எழுப்பினது. அதுக்கு நம்ம ராணுவம் எதிர்ப்பு சொன்னது. இந்த ஜூன் 15-16 தேதில,  ரண்டு பக்கத்துக்கும் அந்த இடத்துல கைகலப்பு கட்டை வீச்சுன்னு ஆகி, ரண்டு நாட்டு ராணுவத்துக்கும் உயிரச் சேதம் ஏற்பட்டது. நமக்கு 20, சீனாவுக்கு 40-ன்னு தகவல் வந்திருக்கு.

டோக்லம் பிரச்சினையை விட இப்போதைய எல்லைப் பதட்டம் சீரியஸான விஷயம்.  சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நம்ம ஜவான்கள் உயிர் துறந்தது நமக்கு பெரிய துயரம்தான். இருந்தாலும் மோடி அமைதியா,  உறுதியா, தம்பட்டம் இல்லாம, வீர வசனம் பேசாம  இந்த எல்லைப் பிரச்சினையை கையாள்றார்.   ஆனா ராகுல் காந்தி தினமும் ஏதாவது பெனாத்திண்டே இருக்கார்.

“பிரதமர் ஏன் மௌனமா இருக்கார்? அவர் ஏன் ஒளியறார்? என்ன நடந்ததுன்னு நமக்கு தெரியணும். சீனா எப்படி நம்ம ஜவான்களை கொல்லத் துணிஞ்சது? அவா எப்படி நம்ம நிலத்தை எடுத்துக்கறது?” அப்படின்னு சீனாவை லேசா ஒரு தட்டு தட்டி, அந்த ஜோர்ல நம்ம பிரதமரை கேவலமா இழிவு பண்ணி  ட்வீட் குடுத்தார் ராகுல். இது ஜூன் 17-ம் தேதி.

“நம்ம படை வீரர்களை ஆயுதம் இல்லாம ஆபத்தை நோக்கி அனுப்பினது யாரு? யார் இதுக்கு பொறுப்பு?” அப்படின்னு அடுத்த நாள் 18-ம் தேதி ராகுல் ட்வீட் பண்ணினார்.

அப்பறம் ஒரு நாள் “மத்திய அரசாங்கம் தூங்கிடுத்து”ன்னு கமெண்ட் அடிச்சார்.   அடுத்த நாள், “பிரதமர் இந்திய நிலத்தை சீனாக்கு தாரை வாத்துட்டார்” அப்படின்னு மோடிக்கு ஒரு இடி குடுத்தார். அதுக்கு அடுத்த நாள், “நரேந்திர மோடி சரண்டர் மோடியாக்கும்” அப்படின்னு மலிவா கீழ்த்தரமா தேசப் பிரதமரை கேலி பண்ணி சீனாவை குளிர்விச்சார் ராகுல். 

நேத்திக்கு, ஜூன் 26-ம் தேதி கூட ராகுல் சும்மா இல்லை. “பிரதமர் சார்! தைரியமா பேசுங்க. பயப்படாதீங்க. ‘ஆமா, சீனா நம்ம நிலத்தை எடுத்துண்டிருக்கு.  நாம அதன் பேர்ல நடவடிக்கை எடுப்போம்’னு சொல்றதுக்கு பயப்படாதீங்க.” அப்படின்னு ட்வீட் பண்ணிருக்கார்.  ஒரு நாசூக்கு, இங்கிதம், கௌரதை எதுவும் இல்லாம கன்னா பின்னான்னு காமெடி வில்லன் மாதிரி பேசறார் ராகுல் காந்தி.      

மோதல் களத்துல நாளுக்கு நாள், மணிக்கு மணி, என்ன நடந்தது, அதோட பின்னணி என்னன்னு ராகுலுக்கு தெரியாது. நம்ம ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் மட்டும்தான் எல்லா விவரமும் தெரியும். இந்த மாதிரி எல்லைப் பிரச்சினைல, அதுவும் சீனா சம்பத்தப்பட்ட  பிரச்சினைல, அரசாங்கமே பொதுவுல எந்த அளவு பேசணும், எந்த அளவு ரகசியமா  காரியங்கள் பாக்கணும், உலக நாடுகள் கிட்ட தனியா எப்படி  நம்ம பக்க நியாயத்தை எடுத்து சொல்லணும்னு ஒரு வரைமுறை, விவஸ்தை இருக்கு. ஒரு மண்ணும் தெரியாம, சகட்டு மேனிக்கு மோடியை குத்தம் சொல்லிண்டே இருந்தா அடுத்த தேரதல்ல ஜெயிக்கறதுக்கு இப்பவே அடி போடலாம்னு ராகுல் அல்பமா நினைக்கறாரா இல்லையா, சொல்லுங்கோ.   

இந்தியாவுக்குள்ள, ராகுல் காந்தியை விட சீனாக்கு ஒரு நண்பர், அதுவும் இந்திய நலனை ரண்டாம் பட்சமா பாக்கற ஒரு சினேகிதர், வேற யாராவது இருப்பாளா?

தேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்த காங்கிரஸ் கட்சியோட பிரதான தலைவர், அதுவும் நேருவோட கொள்ளுப் பேரன், ராகுல் காந்தி. அவர் எப்படி இந்த அளவு தறி கெட்டு, தேச ஒற்றுமை உணர்வே இல்லாம, எதிரி சீனாவே நம்மளைப் பாத்து சிரிக்கற மாதிரி பேசறார்? இந்த மகா அக்கிரமத்துக்கு கட்சிக்குள்ளயும் ஏன் எதிர்ப்பு இல்லைன்னா,  அதுக்கான பதில் சீனாவைப் பாத்தா புரியும்.

"சீனாவோட அடாவடி, அக்கிரமம், அராஜகத்தைப் பத்தி பேசினா அந்த நாட்டு அப்பாவி மக்களைக் குறை சொல்றதுன்னு ஆகாது. மக்களை  அடக்கி ஆட்சியைப் பிடிச்சு வைச்சிருக்கிற சீன கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் சீனான்னு சொல்றோம்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எடுத்துச் சொல்றா. அது கரெக்ட். அதே மாதிரி, இன்னி தேதிக்கு காங்கிரஸ் கட்சின்னா என்ன அர்த்தம்? கட்சியைக் கைக்குள்ள  போட்டுண்டு,  கால்ல நசுக்கற சோனியா காந்தி, ராகுல் காந்தி ரண்டு பேர் மட்டும்தான் காங்கிரஸ் கட்சின்னு அர்த்தம். இதுவும் ரொம்ப  கரெக்ட், இல்லையா?   

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Friday 19 June 2020

The Murder of George Floyd


        -- RVR

US police officer Derek Chauvin stands charged with second degree murder for killing George Floyd at Minneapolis. Chauvin (44) is a white American and Floyd (46) was an African American. 

An unarmed George Floyd was arrested without resistance on 25th May 2020 from a parked car, on a charge of using a $20 counterfeit note for a purchase. Moments after arrest, being hand-cuffed behind and shoved, Floyd fell near a pavement face down with his chin touching the ground sideways. Then Chauvin knelt on Floyd's neck, while two other police officers were restraining Floyd to the ground, pressing on his torso and legs. Another officer stood guard, keeping horrified bystanders from interfering.

Pinned to the ground, Floyd groaned in agony, cried out again and again, "I can't breathe" – sixteen times, reports say – and begged for his life. Onlookers too asked Chauvin to remove his knee, but he didn't relent. He just kept kneeling, ignoring the pleas of Floyd, for nearly nine minutes till the man below became silent and lifeless.

Some eye witnesses had filmed Chauvin's violence, and there were also security cameras around, and he was aware of the video recording.  Footages of the tragic event soon went viral. The world was shaken. Chauvin and the other three officers were dismissed from service the next day. Chauvin is to be tried for second degree murder, and the other three for aiding and abetting the murder.  Meanwhile, protests and demonstrations over police racism and the killing of Floyd erupted in more than 2000 cities and towns across the US and elsewhere.

Floyd lost his life weeks ago, but a message coming out from his death seems relevant for all time.

Let's start with some basics. Police officer Derek Chauvin was stupid first and racist next. He didn't kill George Floyd secretly with no one looking. Most probably he didn’t really intend to kill Floyd. He was stupid to not know that if he pressed his knee long and hard on the neck of Floyd held to the ground, the poor man could die nine out of ten, and then the police officer could tell no lies against video evidence and his future could be doomed in prison for up to 40 years. Still he did the horrible thing. The law must punish him.

Why is Chauvin seen racist too? It is not just that he happened to be white and the dead man black. If Floyd was also white, there was a 99% chance the white police officer would not be so insane and brutal with a quiet man in secure custody - or at any rate he would take off his offending knee on hearing repeated cries of "I can't breathe".  Here Chauvin was heartlessly racist, and so never relaxed on his cruel deed that gave him racist pleasure. Next, Chauvin would have had racist inclinations against blacks for this reason - a large number of whites around him are racist in their minds in varying degrees and from a young age he instinctively took it from his community, though all of them wouldn't be so devilish like Chauvin.

We come from different races, nations, religions and religious sects, and we speak one or the other of world’s many languages as our mother tongue. We have an innate affiliation to these social groups, which gives us distinct identities unifying us within our groups. Not just that. We instinctively see others with a different group identity, especially strangers, as ranged against us in some way, depending on the occasion and our mettle. We can neither escape the unifying force of our group identities nor deny their divisive appeal.

The killing of George Floyd showed us the divisive part of a group identity in one man. Succumbing to negative influences of their group identities is instinctive for most people, since evil attracts us quicker than good. What sets apart the others in the same group is their ability to see themselves as conscious individuals first, and as group members next.

Be with your social group, but keep yourself secretly aloof to judge people and issues, including members of your group, on their merits. Know your group history and learn its ways and beliefs, but if you have to do a thing right and different at any time so you don’t hurt yourself or others – that is a fine art of balancing - do it. That way, any faults of your social group do not weigh much on you, you resolve your social conflicts quickly and you don't fall into extreme wrong acts in the belief of showing up your group identity. On the day Derek Chauvin engaged with George Lloyd, the officer could not take himself out of his group identity. Worse still, he lost his mind and committed a gruesome act that now magnifies a historical blemish on white Americans. 

So, we better keep in check the play of our group identities which are double-edged swords. We may fairly benefit from them but not let them detract or degrade us. Sorry, George, you had to die to remind us on this powerfully.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Sunday 7 June 2020

கொரோனா டீச்சர் பாடம் சொல்கிறார்

-- ஆர். வி. ஆர் 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, அதிலிருந்து நம்மைப் பாதுகாக்க, அரசாங்கம் நாடு தழுவிய ‘லாக்டௌன்’  அமல் செய்தது. நமக்கு சில சுகாதார அறிவுரைகள்  சொல்கிறது – அவற்றைப் பொதுமக்கள் பெரிதாக அனுசரிப்பதில்லை.  என்னவென்றால்:

1. வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிய வேண்டும் (பாதிப்பேர் கவசத்தைக் காதில் மாட்டி மோவாய்க் கட்டைக்கு குல்லா போடுகிறார்கள்);

2. வெளி மனிதர்களிடம் இருந்து மூன்று அடி விலகி இருக்க வேண்டும் (நீங்கள் தள்ளி நின்றாலும் நெருங்கி வந்து இடிக்கிறார்கள். சாரியும் சொல்வதில்லை);

3. அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் உபயோகித்து இரு கைகளையும் முழுதாக 20 வினாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும் (சாப்பிட்ட கையை சரியாகக் கழுவத் தெரியாதவர்களே நிறைய உண்டு)

கொரோனாவைத் தொடர்ந்து வந்த லாக்டௌன், பரவலான பொருளாதார பாதிப்பைத் தந்தது, அரசாங்கம் அதை எதிர்கொள்கிறது. இது ஒரு பக்கம்.   இன்னொரு பக்கம், லாக்டௌன் நாட்களில் கொரோனா பலரையும் வீட்டுக்குள்ளே வைத்திருந்து ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.  ஒரு பாடத்தையும் சொல்லியது.  

லாக்டௌன் சமீபத்தில் நன்றாகத்  தளர்த்தப்படும் முன், பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். நம்மில் பலருக்கும் சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், சக ஊழியர்கள் என்ற அனைவரிடமும் நேருக்கு நேரான தொடர்புகள் பாதியாக, கால் பங்காக, அரைக்கால் அளவாக, அதற்கும் கீழாகக் குறைந்தன. அதை ஈடு கட்ட அவர்களுடனான டெலிஃபோன் பேச்சுக்களை யாரும் பெரிதாக அதிகரிக்கவில்லை. பேசாமல் இருப்பதும் பரவாயில்லை என்று இரண்டு பக்கத்திலும் மிகப் பலர் நினைத்தார்கள். ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் மற்றொருவர் பார்த்து விசாரிக்கலாம். இருவருக்கும் உடம்பு சரியில்லை என்றால் இருவருமே அடுத்தவரை அப்பறம்  பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதைப் போல பலரும் இருந்தார்கள். அப்போது நம்மை அறியாமல் இன்னொன்றும் நேர்ந்தது, கவனித்தீர்களா? அதுதான், நம் மன அமைதி சட்டென்று  இரட்டிப்பாக அல்லது அதற்கும் மேலாக அதிகரித்தது. என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து இல்லை, அது வந்தால் அதற்கு சரியான நிவாரணமும் இல்லை. அது மெள்ள மெள்ள உலகெங்கும் லட்சக்கணக்கில் உயிர்ப்பலி வாங்குகிறது. அதில் அவதிப்பட்டு பிழைத்தவர்களும் அதிகம்தான்.  இருந்தாலும், நாம் அதன் தாக்குதலில் அகப்படாமல் இருக்க முடியுமா, அது வந்தால்  நம் உயிர் தங்குமா என்பது பற்றி நமக்கே லேசாக சந்தேகம் எழுந்தது.  இதனால், வெளி மனிதர்களுடன் கொண்டிருந்த உறவு நம் உணர்வில் சுருங்கியது.

எந்த உறவிலும் ஒரு உரசல் இருக்கும். பாதிப்பேர் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முயல்வார்கள். மீதிப்பேர் அதை மறைக்க மாட்டார்கள் அல்லது மறைக்கத் தெரியாதவர்கள். லாக்டௌனில் அந்த உறவே மழுங்கியபோது,    உள்மனதில் மற்றவர்களுடன் இருந்த உரசலும் அனைவருக்கும் தானாகக் குறைந்தது. அதோடு, ‘யார் எத்தனை நாளோ’ என்ற நினைப்பில், வீட்டில் இருக்கும் மற்றவர்களுடனான அபிப்பிராய பேதங்களும் தேய்ந்தன. எனக்குத் தெரிந்து, ஒரு அபார்ட்மெண்ட் பில்டிங்கில் சண்டையும் பூசலுமாக இருந்தவர்கள் அதன் சுவடு தெரியாமல் அமைதி ஆனார்கள் – அடுத்த வீட்டுக்காரர்களைப் பற்றிய நினைவே போனதால்.  

மற்றவர்களுடன் கொண்டிருந்த உரசல் மறைந்த உடன், மனதில் நமக்கு அமைதி தானாக ஊறியது, அவ்வளவுதான்.  மற்றபடி கொரோனா காலத்தில் எவரும் மன அமைதியை நாடிப் போகவில்லை, தேடி அலையவில்லை.  

கொரோனாவுக்கு முன்னர், பலரும் இன்னொரு மனிதரை முன்னிட்டு, அவரை நினைத்து, அவரது மாறுபட்ட அபிப்பிராயங்களை ஏற்க முடியாமல், அவர்பால் கோபத்தை உண்டாக்கி உரசலை வளர்த்துக் கொண்டவர்கள்.  இதில் நமது அலுவல் அல்லது குடும்பக் கடமைகள், நமது சொத்து  சம்பத்தமான அதிருப்திகள், அதன் விளைவான சூடான பேச்சுக்கள், கோபங்கள் என்பவை தவிர்க்க முடியாதவை – இவை பத்து பதினைந்து சதவிகிதம் இருக்கலாம். இவற்றுக்காக இருவரும் சமாதானமாகப் போகலாம் அல்லது சட்டத்தில் தீர்வு காணலாம். அரசியல் மற்றும் வியாபார உரசல்கள் வேறு ரகம்.  இவை தவிர்த்து, ‘நீயா நானா’ பாணியில் நம் அமைதியைத் தின்று தீர்க்கும் மனச் சண்டைகளும், எதிராளியிடம் சவால் விடும் சிந்தனைகளும் பேச்சுக்களும்தான் அதிகம்.  

உங்களுக்கு இருபது வயதுக்கு மேலா? அப்படியானால் உங்கள் எண்ணங்களை யாரும் விவாதித்து மாற்ற முடியாது.  நீங்களாக ஒரு கட்டத்தில் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்து ஒன்றிரண்டு விஷயத்தில் மாறினால் உண்டு.  அதுவும் விதிவிலக்குதான். இது புரிந்தால்   யாரும் பிறருடைய  எண்ணங்களோடு, அது தொடர்பான விஷயங்களோடு, மனதளவிலும் சண்டை போட மாட்டோம்.  

கொரோனா பாதிப்பு படிப் படியாகக் குறைந்து நாம் பலருடனும் நேரடித் தொடர்புகளை மீண்டும் வைத்திருக்கும் நாட்கள் வரும். அப்போது, கொரோனா டீச்சர் கற்றுக் கொடுத்த பாடத்தின் அடுத்த கட்டமாக, நம் மன அமைதி கெடாமல் இருக்க, மற்றவர்களை வெட்டித்தனமாக முன் போல மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர்களை ஒதுக்கித் தள்ளவும் வேண்டாம்.  ஒரு புன்னகையைக் காட்டி அவர்களுக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்து டாட்டா  சொல்லி வழியனுப்பி விடலாம். 

கொரோனா காலத்தில் மற்றவர்களை இயற்கையாக மறந்து அவர்களுடனான உரசலைத் தவிர்த்த மாதிரி,  இப்போது   உரசல் உறவுகளை ஒரு யுக்தியாக மனதளவில் விலக்கி வைக்கலாம். அப்படியானால் நமது அன்றாட உறவுகளும் மென்மையாக நிலைக்கும். அதுவும் தேவை.  நாமும் பைசா பெறாத கருத்து வேற்றுமைகளிலும் அதன் சண்டைச் சிக்கல்களிலும் மாட்டாமல் இருக்கலாம்.  இதனால் நமது இயற்கையான மன அமைதி பெரிதும் நழுவாமல் இருக்கும்.  என்ன டீச்சர், பாடம் படிச்சேனா?  

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020