Saturday 29 October 2022

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கேஜ்ரிவாலின் கோஷம் - "நோட்டுல சாமியைப் பாத்து, போடுங்கம்மா ஓட்டு!"

 

- ஆர். வி. ஆர்

 

 

ஜாம் ஜாம்னு இன்னிக்கு டெல்லி முதல் மந்திரியா இருக்கார் கேஜ்ரிவால். அவர் தொடங்கின கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. அந்தக் கட்சியோட தேர்தல் சின்னம் தெரியுமில்லையா? அதான், விளக்குமாறு.

 

கேஜ்ரிவாலுக்கு பளிச்னு வெளில சொல்ல முடியாத ஒரு பெரிய ஆசை இருக்கு. என்னன்னா, அவர் சீக்கிரமா நம்ம நாட்டு பிரதம மந்திரி ஆயிடணும். அந்த மாதிரி ஆசை மம்தா பானர்ஜிக்கும் இருக்கு, ராகுல் காந்திக்கும் இருக்கு. நித்திஷ் குமாரும் ஓரக் கண்ணுல அப்பிடி ஆசைப் படறார். ஆனா கேஜ்ரிவால் தான் இதுல ராட்சஸ ஆசை வச்சிண்டிருக்கார். அது அவருக்கே தெரியாம மறைமுகமா வெளிப் பட்டுடுத்து. எப்பிடின்னு தெரிஞ்சா சிரிப்பேள். ஏற்கனவே சிரிச்சிருப்பேளே!

 

        இன்னும் ரெண்டு மாசத்துல குஜராத் சட்டசபைத் தேர்தல் நடக்கப் போறது. கேஜ்ரிவால் அங்க போய் அவர் கட்சிக்காக பிரதமர் மோடியை எதிர்த்தும் பிரசாரம் பண்ணிண்டிருக்கார்.  இந்த சமயத்துல, திடீர்னு அவர் மோடிக்கு ஒரு ஐடியாவைச் சொல்லிருக்கார். இனிமே இந்திய ரூபாய் நோட்டுகள்ள ஒரு மாறுதல் பண்ணணும்னார். "ரூபா நோட்டுல ஒரு பக்கம் வழக்கம் போல காந்தி படம் இருக்கட்டும். மறு பக்கத்துல லட்சுமி, விநாயகர்னு சாமி படமா போடுங்கோ. லட்சுமி வளமைக்கு அதிபதி. விநாயகர் தடங்கல்களை நீக்குவார். அவா உருவம் நம்ம ரூபா நோட்டுல இருந்தா நம்ம பொருளாதாரம் முன்னேறும்"னு பத்திரிகையாளர்கள் முன்னாடி பேசிருக்கார், மூணு நாள் முன்னாடி. சிரிக்க முடியறவா சிரிக்கலாம். முடியாதவா அழலாம்.

 

கேஜ்ரிவால் அப்பிடிப் பேசினதுக்கு அவரோட இந்த நினைப்புதான் அடிப்படையா இருக்கணும்:  

 

‘ஹிந்துக்களோட ஓட்டு மோடியோட பா.ஜ.க-வுக்கு நிறையப் போறது. அதுக்கு ஒரு காரணம், மோடிக்கு ஹிந்து மதத்துல இயற்கையாவே பற்று இருக்கு, ஹிந்துக் கோவில்களுக்குப் போறார், சாமி கும்பிடறார், அது நாடு பூரா டிவி-ல தெரியறது. அந்தக் காட்சி ஹிந்துக்களுக்குப் பிடிக்கறது. அப்பழுக்கில்லாத நேர்மை, அசாதாரண  தலைமைப் பண்பு, அபாரமான மேடைப் பேச்சு, அவரோட மத்த சாதனைகள், எல்லாத்தோடயும் அவரோட ஹிந்து மதப் பற்றும்  சேர்ந்துண்டு ஹிந்துக்களை அதிகமா இறுக்கமா அவர்கிட்ட இழுக்கறது. இப்படிப் போயிண்டே இருந்தா நான் என்னிக்குப் பிரதம மந்திரி ஆறது?’

 

‘மோடியோட வெளிப்படையான அரசியல் நேர்மை, தலைமைப் பண்பு, சாதனை சரித்திரம், இதெல்லாம் எனக்குக் கிடையாது, வரவும் வராது. அப்ப ஒண்ணு பண்றேன். எண்பது பெர்சன்ட் ஹிந்துக்களை ஒரே ஐடியாவுல தெய்வத்தை நினைச்சு உருக வைச்சு என் பக்கம் இழுக்கறேன். இனிமே அச்சடிக்கிற ரூபா நோட்டுக்கள்ள ஒரு பக்கம் லட்சுமி, விநாயகர் அப்பிடின்னு ரெண்டு ஹிந்து தெய்வங்கள் உருவத்தைப் போடுங்கோன்னு மோடிக்கு பப்ளிக்கா ஒரு யோஜனை சொல்றேன். அது நடந்தா,  தினம் தன் கைக்கு வர ரூபா நோட்டுல லட்சுமி, விநாயகர் உருவங்களைப் பாத்து ஹிந்து ஜனங்கள் கண்ணுல ஒத்திப்பா. அப்பறம் நாடு பூரா லட்சோப லட்ச ஹிந்துக்கள் லோக் சபா தேர்தல்ல மோடியை ஒதுக்கி வைச்சு என்னோட விளக்குமாத்து சின்னத்துக்கு ஓட்டுப் போடுவா. சிறுபான்மை மக்களை வேற விதமா தாஜா பண்ணி அவா ஓட்டையும் வாங்கப் பாக்கறேன்.'


'இந்தப் பிளான்ல போனா என் கட்சிக்குத்தான் மெஜாரிட்டி கிடைக்கும். நான் பிரதமர் ஆயிடலாமே?’

 

    'ஆனா என்னோட யோஜனைக்கு உண்மையான காரணம் என்னன்னு நான் அசட்டுத் தனமா வெளில சொல்ல முடியுமா? பொருளாதாரத்தோட காசு பணம் சம்பத்தப் பட்டது. அதுனால, லட்சுமி விநாயகர் உருவங்களை ரூபா நோட்டுல சேர்த்தா நாட்டுப் பொருளாதாரம் உயரும், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது, எல்லா மனுஷாளும் சீக்கிறமே சுபிட்சமா இருப்பா, நம்ம பிரயத்தனத்துக்கு மேல தெய்வ அனுக்கிரகமும் நமக்கு வேணும் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டுப் போறேன். இதை நம்புவோம், இல்லாட்டி தெய்வக் குத்தமா ஆகும்னு நிறைய ஹிந்துக்கள் நினைப்பாளே?’

 

‘ஒருவேளை என யோஜனையை மோடி செயல் படுத்தலைன்னா? ரூபா நோட்டுல லட்சுமி விநாயகர் தெய்வங்களை நாம பாக்க முடியாம பண்ணினவர் மோடிதான்னு நினைச்சு ஹிந்துக்கள் அவர் மேல கோபப் படட்டும். இந்தியப் பொருளாதாரம் பெரிசா முன்னேறாததுக்குக் காரணம், ரூபா நோட்டு டிசைனை நான் சொன்னபடி மாத்தலை, அதான் காரணம்னு அப்ப சொல்றேன். மோடி ஓட்டுக்கள் என் பக்கம் நிறையத் திரும்புமே?’

 

கேஜ்ரிவால் தலைக்குள்ள இந்த மாதிரி எண்ணங்கள் ஏன் தறி கெட்டு ஓடும்னா,  அவர் கிட்ட குயுக்தி நிறைய இருக்கு.  அவர் கெட்டிக்காரர் தான். ஆனா தகாத எண்ணம், கெட்ட எண்ணம், இதுகளோட சேர்ந்த கெட்டிக்காரத்தனம் இருக்கே, அதுக்குப் பேர்தான் குயுக்தி.

 

மதத்தை நம்பறது, தெய்வத்தை நம்பறது, இதெல்லாம் அடிப்படைல என்னங்கறேள்? சங்கடங்கள் நிறைஞ்ச நம்ம வாழ்க்கைல ஒரு சமாதானம், அமைதி தேடறதுக்கு அவா அவா ஏத்துண்ட, நம்பிக்கை வச்சிருக்கற, ஒரு மார்க்கம். அதுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் விஞ்ஞானத் தத்துவங்களுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை.  ஐ.ஐ.டில எஞ்சினீரிங் படிச்ச கேஜ்ரிவாலுக்கு இது நன்னாத் தெரியும். ஆனா அவரோட பிரதம மந்திரி ஆசையும் அவர் குயுக்தியும் ஒண்ணா கலந்து அவரை அசட்டுத்  தனமா பேச வச்சிருக்கு.

 

கேட்டா, இந்தோனீஷியா நாட்டுல ரெண்டு பெர்சன்ட்டுக்கு குறைவாதான் ஹிந்துக்கள், எண்பத்தி ஐந்து பெர்சன்ட்டுக்கு மேல முஸ்லிம்கள், அந்த நாட்டு நாணய நோட்டுல விநாயகர் படம் இருக்கேன்னு விதண்டாவாதம் பண்றார் கேஜ்ரிவால். நம்ம நாட்டுல இப்ப இருக்கற அரசியல் சமூக நிலைமை என்னன்னு பாக்காம ‘இன்னொரு நாட்டுல அப்படி இருக்கேன்னு’ குழந்தைத் தனமாவா ஒரு முதல் மந்திரி பேசுவார்? அது மட்டும் இல்லை. வினாயகர் படம் போட்ட இந்தோனீஷிய 2,000 ரூபாய் நோட்டுக்கள்  பதினாலு வருஷத்துக்கு முன்னாலயே புழக்கத்துலேர்ந்து  அந்த நாடு எடுத்தாச்சு, இப்ப விநாயகர் படம் போட்ட நோட்டு அங்க இல்லைன்னு இன்டர்நெட் சொல்றது.    

 

சரி, இப்பிடியும் நினைச்சுப் பாக்கலாம். ‘ஹிந்து ஓட்டுக்களை ஈஸியா வாங்கணும்னு கேஜ்ரிவால் நினைக்கலை. தான் சொன்னது நிஜமாவே நாட்டுக்கு நல்லது, அதுனால நம்ம பொருளாதாரத்துக்கும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்னுதான் கேஜ்ரிவால் அப்படிப் பேசினார்னு  ஒரு பேச்சுக்கு வைச்சுக்கலாம்.  இவர் பேசினதை, இவருக்குப் பதிலா மோடி பேசினார்னு நினைச்சுப் பாருங்கோ. அப்ப முதல்ல மோடி மேல பாயற ஆசாமிகள்ள கேஜ்ரிவாலும் இருப்பார். உண்டா இல்லையா? அப்பறம் எப்பிடி கேஜ்ரிவால் நல்லெண்ணத்தோட மோடிக்கு யோஜனை சொன்னார்னு நினைக்க முடியும்?  


மோடி ஐடியா சொல்லி லட்சுமி விநாயகர் படங்களை  நம்ம ரூபா நோட்டுல போட்டா அந்த தெய்வங்கள் நாட்டுக்கு அனுக்கிரகம் பண்ணாது, அது நாட்டைப் பிளக்கற ஹிந்துத்வா, ஆனா தான் சொல்லி அது நடந்தா அந்த தெய்வங்கள் நமக்கு அனுக்கிரகம் பண்ணும்னு கேஜ்ரிவால் நினைக்கிறவர். ஏன்னா, பிரதமர் ஆகறதுக்கு வேற உருப்படியான வழி அவருக்குத் தெரியலை.

 

இப்பிடிப் பித்துக்குளி யோஜனை சொல்ற கேஜ்ரிவாலைத் திருத்தவே முடியாதான்னு கேட்டா, அதுக்கு ஒரே பதில்தான்: அதெல்லாம் நம்மளால ஆகற காரியமில்லை. லட்சுமி விநாயகர் தெய்வங்கள் நினைச்சா நடக்குமோ என்னவோ?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Wednesday 26 October 2022

பாருக்குள்ளே நல்ல ஆசை!

 -- ஆர். வி. ஆர்

 

 

 

 

இரவில் தூங்கிய ஸ்டாலினும் – இனி

தேசியம் ஓங்கிய தமிழ்நாடும்

 

 

மனதில் முதிர்ந்த ராகுலும் – சில

மர்மங்கள் உதிர்ந்த சோனியாவும்

 

 

புத்தி தொலைக்காத சிதம்பரமும் - பதவி

மாண்பு குலைக்காத மன்மோகனும்

 

 

தலித்தால் தழைக்காத மாயாவும் - இங்கு

அதுபோல் பிழைக்காத திருமாவும்

 

 

உறவுகள் செழிக்கும் ஆட்சிமுறை - அதை

அறவே கழிக்கும் அகிலேஷும்

 

 

காலை வாறாத நித்திஷும் - லேசில்

நிறம் மாறாத உத்தவ்வும்

 

 

அரசிலும் மாட்டின் உணவிலும் - தூய

வெளிப்படை காட்டும் லாலுவும்

 

 

மமதை மறைந்த மம்தாவும் - புது

வளமை குறைந்த கே.சி.ஆரும்

 

 

கயமை குன்றிய பவாரும் - இந்த

தேசம் ஒன்றிய பரூக்கும்

 

 

தனி ஆசைகள் விட்ட கேஜ்ரியும் - நம்

காலம் தொட்ட கம்யூனிஸ்டும்

 

 

லஞ்சம் களைந்த அரசினரும் - நல்

நெறிகள் விளைந்த ஊடகமும்

 

 

நாடு சிறக்கக் காண்போமா? - பெரும்

கனவு பறக்கக் கலைவோமா?

 

  


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022

Saturday 22 October 2022

Why Does Ashok Gehlot Worship the Gandhi Family?

           

         -- RVR


You know Ashok Gehlot. He is Rajasthan’s chief minister, in his third term now. But his high honour lies elsewhere. He takes pride as a steadfast loyalist of the Congress Party – or precisely, of Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi. On that, he left no one in doubt when he told reporters five days ago:  

 

“Vinoba Bhave had once said that his relationship with Bhagwat Gita was beyond reason. Similarly I would like to say that my relations with Gandhi family are exactly like relations between Vinoba ji and Holy Gita. In other words my relations with Gandhi family have been and are beyond all logic and reasoning. And it will continue to be so throughout my life”

 

       Gehlot is 71, in his 14th year as chief minister of Rajasthan. He knows that a younger and vibrant Congressman in his state, 45-year-old Sachin Pilot, has been aspiring for that office and working on it for a few years. Feeling threatened in that office, and suspecting some signs of support for Sachin Pilot from the party leadership, Gehlot said this also at the same time:

 

“There is no alternative to experience at any level. …… The young leaders in Congress should work hard and the central leadership will definitely give them a chance.”

 

Does Ashok Gehlot sound funny and self-centred in these utterances? Surely yes, and a few things are a clear pointer.

 

The Congress is a political party in a democracy. It should aim to win the trust of people, get enough votes and form governments at the Centre and in the states, provide an efficient corrupt-free administration and improve the country’s economy and people’s welfare to maximum levels.  The best way for any party to do this is to let a clean, strong, and forward-looking leadership based on merit come up within the party – and then ensure that real talent keeps freely growing across the party to reach positions of power and responsibility as they arise. But that culture took leave of the Congress some decades ago, to the delight of established heavy weights like Ashok Gehlot.

 

Who doesn’t know that Sonia Gandhi and Rahul Gandhi tightly hold the reins of power in the Congress Party?  Sonia Gandhi is enigmatic and Rahul Gandhi is quixotic. Priyanka Gandhi is treated like a goddess in the party. Her husband Robert Vadra tags along for his joy and more.  Together they are called “Gandhi family” in political parlance. It is to them Ashok Gehlot looks up in reverence.

 

Six years after Rajiv Gandhi’s death Sonia Gandhi became a primary member of the Congress Party in 1997. Two months later she became the President of the party. She continued as President at a stretch for nineteen years and, after a break, again for three years.  That is nearly twenty-two years in all. Should be an unmatched record in any political party in a democracy. 

 

Now, to Gehlot’s unabashed comparison of his devotion to the Gandhi family with Vinoba Bhave’s relations with Bhagwat Gita.  

 

Lord Krishna’s teachings delivered to Arjuna on the battlefront are comprised in Bhagwat Gita. Vinoba Bhave had studied Bhagwat Gita and was deeply inspired by the lessons he gained from the Gita.  He had translated the Gita into Marathi. He had given talks on the Gita, including many to his compatriots when they were all in jail as freedom fighters. To him, Bhagwat Gita was an abundant source of valuable knowledge.  “The place of the Gita in my life is unique. She is always there to help me in need”, wrote Vinoba.  

 

The same Bhagwat Gita can be a beacon of knowledge to anyone else too – not just Arjuna or Vinoba - who benefits by reading that book or listening to its recitations. That is, the Gita doesn’t selectively reward those who adore the treatise. The Gita, doesn’t look for support from its followers.  It talks about detachment and explains it, and it doesn’t look for quid quo pro of any sort from anyone. This is where Bhagwat Gita differs on all fours from the Gandhi family. The clever Ashok Gehlot knows it too. Then why did he utter the words ‘Bhagwat Gita’ when talking of his relations with the Gandhi family?  Well, that was a good way of pleasing the high ego of the entire Gandhi family who will relish it too.  

 

Are we being overcritical of Ashok Gehlot? Is it possible he was absolutely truthful or sensible about his relations with Gandhi family? Not at all. 

 

One may extol the virtues of another and look up to that other on being benefited by the other. This is possible in life, especially personal life.  But rules of engagement or behaviour in an organisation are different. The Congress Party is a political organisation meant to serve people by forming governments and running them well with the best of its talents, young or old.  The chief of the party must not be a special benefactor of any partyman who has no great attributes.  Nor should the chief make his partymen, especially the second level leaders, feel free to eulogise the chief sky high.  

 

Ashok Gehlot has not told us about any great special qualities he found in Sonia Gandhi that inspired him to function as an able chief minister or in otherwise serving his people.  Yet he adores her so high. He would also know that Sonia Gandhi loves to see her son Rahul Gandhi become prime minister, and her daughter Priyanka Gandhi wield influence in the party and possibly in a government.  So he clubbed them all together and said that his relations with the “Gandhi family” – not just with Sonia Gandhi – was like Vinoba Bhave’s relations with Bhagwat Gita. Clever Gehlot!

 

 

Ashok Gehlot will value his relations with the Gandhi family in tune with his being kept in high positions in the party and in the government in Rajasthan, whatever he says in public. Having delivered a most humble message for the ears of Gandhi family, he has also cautioned the aspiring young Sachin Pilot that “there is no alternative to experience at any level. …… The young leaders in Congress should work hard and the central leadership will definitely give them a chance.”

 

Rajiv Gandhi was 40 when he became India’s prime minister. His mother Indira Gandhi was 48 years and 2 months when she entered that office.  Does Gehlot say that a Congressman of 45 in Rajasthan – merely because he is not older – is unfit to become even a state chief minister?

 

Ashok Gehlot is not any exception on the Indian political scene. You’ll find replicas of him in many other states, in the Congress Party and in several regional parties.  He doesn’t have a good accident of birth in, or matrimonial alliance with, a powerful political family in India. That hurts him, especially when the current members of that political family don’t have gifts of reason, high integrity or great leadership and yet rule the party high and mighty.  So he looks up to that family and is overly nice to them. And even declares that his relations with the Gandhi family are "beyond all logic and reasoning".  

 

What can we do when the decay in our politics is still largely in place, looking for good chances to grow further?  I guess we can read Bhagwat Gita and try to find solace.

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Friday 14 October 2022

கட்சியினரிடம் ஸ்டாலின்: நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே!

      -- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தன் கட்சியினர் முன்பு அழாத குறையாகப் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்களா? இது நடந்தது அக்டோபர் 9-ம் தேதி. 

அன்று நடந்த திமுக-வின் பொதுக்குழுவில் அவர்  மீண்டும் தலைவராகத் தேர்வானார். அங்கு பெரிதாகக் கூடி இருந்த மாநில அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், உள் கட்சித் தேர்தல்களில் சமீபத்தில் வென்றவர்கள் ஆகியோரிடம் அவர்  உரை ஆற்றினார். அவரது பேச்சின் முக்கிய பகுதிகள்: 

”ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவன் நான்.  இன்னொரு பக்கம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என் நிலைமை. என்னை மேலும் துன்பப் படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?”

“நாள் தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சனையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். சில சில நேரங்களில் தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது.”

“பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்திற்கும் ஆளானது. இன்றைக்கு நம் வீட்டு பாத்ரூம் படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. எல்லோருக்கும் செல் போன் மூன்றாவது கண்ணாக முளைத்து விட்டது. இப்போது உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப் படுகிறது. எனவே உங்களது ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.” 

ஸ்டாலினின் இந்தப் பேச்சு டிவி, பத்திரிகைகளில் வெளிவந்தது. அதன் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ஜிவ்வென்று பரவி விட்டது. மேலாகப் பார்த்தால், ஸ்டாலின் பேசியது ஒரு நல்ல தலைவர் செய்யக் கூடியது என்று தோன்றலாம். ஆனால் உண்மை வேறு. 

      ஒரு அரசியல் கட்சியின் எல்லாத் தொண்டர்களும் லோக்கல் பெரும் புள்ளிகளும், கட்சி நிர்வாகிகளும் எப்போதும் கண்ணியமாக கட்டுப்பாடுடன் பேசுவார்கள், செயல்படுவார்கள் என்றில்லை. சில தவறுகள், முறைகேடுகள் அங்கங்கே நடக்கலாம். ஆனால் இதில் இரண்டு மூன்று விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டும். 

ஒன்று, கட்சியினரிடம் அதுபோன்ற தவறுகள் அங்கங்கே மட்டும் நிகழ்ந்தாலும், கட்சித் தலைமை சம்பத்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தன் பெயரைக் காப்பாற்ற முனைகிறதா? 

அது இல்லாமல், கட்சியில் முறைகேடாக  செயல்படுபவர்கள், கண்ணியம் இல்லாமல் பேசுபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பெரிதாக இருக்கிறதா, அவர்களின் பேச்சும் செயலும் மக்களுக்குத் தொடர்ந்து தீங்கு  விளைவிக்கிறதா, அந்தத் தகாத பேச்சும் செயலும் அடுத்தடுத்த மேல் மட்டங்களில் ஊருக்கு ஊர் பரவலாக இருக்கிறதா – இது போக, தொடர்புடைய யார் யாரோ (மாமன் மகன், மாப்பிள்ளை உட்பட)  எப்படி எப்படியோ பணம்  சம்பாதிக்கிறார்களா? ஆம் என்றால் அந்த அவலத்திற்கான பொறுப்பைக் கட்சியின் தலைமை தான் ஏற்கவேண்டும். அந்த நிலையில் ஒரு தலைவர்  கட்சியினருக்கு கண்ணியத்தில், நன்நடத்தையில் அறிவுரை கூறினால் அது ஹாஸ்யம். பயன் தராது. 

எல்லாவற்றையும் விட இந்தக் கேள்விகள் முக்கியம்.  கட்சித் தலைமை அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்கிறதா? கட்சித் தலைமையின் பண்பும் நடத்தையும் வெளி உலகில் மற்றும் நான்கு சுவர்களுக்குள் எவ்வாறு இருக்கின்றன?  சட்ட ஆதாரம் வைக்காமல் எந்த ஒரு கட்சி மர்மப் பொருளாதாரம் நடத்தினாலும், கட்சியினர் அதை நுகர்வார்கள். பின்பு அவர்களும் அதற்கு ஆசைப்படுவார்கள். 

குடும்பத் தலைமை உள்ள கட்சிகளில் ஒழுங்கீனமும் சீரழிவும் அதிகமாகத் தோன்றும். காரணம், ஜனநாயகத்தில் அதன் முக்கிய அங்கமான ஒரு அரசியல் கட்சியே ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி இருப்பது, கட்சிக்குள் மற்றவர்கள் பெரிதாக வளர்வதற்குத் தடையாக அமையும். உள் கட்சி ஜனநாயகத்தைக் காற்றில் பறக்க விடும் ஒரு குடும்பத் தலைமை, தன் குடும்பம் செழிக்க ஒரு நியதி வைத்து அதற்கு நேர் மாறான நல்ல நல்ல அறிவுரைகளைக் கட்சியினருக்கு வழங்கும். கட்சித் தலைமை குடும்பத்தை ஒட்டி அல்லது குடும்ப வழியில் பல பத்தாண்டுகள் நீடிக்கலாம், அது வேறு விஷயம்.   

சரி, இதன் பக்க விளைவு இன்னும் என்னவாக இருக்கும்?   

தன் வியாபாரம் அல்லது தொழில், தன் மகன்  மகள்களின் வியாபாரம் ஆகியவை பெருக, தன் குடும்பத்தின் செல்வம் செழிக்க, கட்சியில் பல புத்திசாலிகள் கட்சித் தலைமைக்கு ராஜ விசுவாசம் காட்டி - சில கட்சிகளில் மேலே கொடுப்பதைக் கொடுத்து கீழே கிடைப்பதைப் பெற்று – வசதி   காண முயல்வார்கள். அல்லது கட்சித் தலைமை நிலைத்து நிற்க  சட்ட ரீதியாகவோ வேறு வகையிலோ பக்க பலமாக இருந்து தன் ஆதாயத்தைப்  பார்த்துக் கொளவார்கள். இதற்கு ஒரு வகையில் உதாரணம் இப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இன்னொரு வகையில் திமுக பிரதானம்.   

ஒரு அரசியல் கட்சியில் பெரும் தவறுகள் செய்கிற தலைமை, தனக்குக் கீழே பல மட்டத்திலும் நிர்வாகிகளாக இருப்பவர்கள் நேர் வழியில் செயல்படுவார்கள், பண்பாகப் பேசுவார்கள், முறைகேடுகள் செய்ய மாட்டார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அது நடக்காது என்றும் அந்தத் தலைமைக்குத் தெரியும். ஆனால் என்ன, பொது வெளியில் கூடிய வரை நாசூக்காகப் பேசி, முடிந்தால் இலக்கியமும் பேசி,  விங்ஞான ரீதியில் காதும் காதும் வைத்த மாதிரிப் பல காரியங்களை நடத்திக் கொள்ளும் கலை அபூர்வமாக ஒன்றிரண்டு அரசியல் தலைவர்களுக்குத் தான் புலப்படும். பொது வெளியில் தன்னை உத்தமனாகக் காண்பிக்க அத்தகைய தலைவர்கள் கட்சிக் காரர்களுக்கு கண்ணியத்தைப் பற்றி போதிக்கலாம். அதெல்லாம் நாடகப் பேச்சு என்பது பேசுபவருக்குத் தெரியும் கேட்பவர்களுக்கும் புரியும். 

திமுக குடும்பக் கட்சிதான் என்ற உண்மையைத் தன் வாயாலேயே ஸ்டாலின் பொதுக் குழுவில் சூசகமாக உணர்த்தினார். கூடி இருந்த அனைவரும் அதைக் கைதட்டி  ஏற்றுக் கொண்டார்கள். அதாவது, ஸ்டாலின் பேசும்போது ஒரு நபரை மட்டும் குறிப்பிட்டு இப்படிப் பாராட்டினார்: “இளைஞரணியின் செயலாளர் தம்பி உதயநிதியின் முன்னெடுப்பு, பெருமையோடு சொன்னாங்களே, நாடு முழுவதும் திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று ..... அது பற்றி எனக்கு மிக மிக மிக மன நிறைவாக இருக்கிறது”. இதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அரங்கம் கைதட்டிக் கட்சியின் எதிர்காலத் தலைவரை வரவேற்றது.    

மத்தளம் போல் இரண்டு பக்கத்திலும் தான் அடி வாங்குவதாக அலுத்துக்  கொண்டாரே ஸ்டாலின் – கட்சியில் மற்ற ஒருவர் தலைவராக இருந்து ஒரு பக்க மத்தள அடியை வாங்கிக் கொள்ளட்டும், தான் முதல்வராக இருந்து இன்னொரு பக்க அடியை மட்டும் வாங்கலாம் என்று நினைப்பாரா?  உம்ஹூம். எல்லா அடியும் தன் மேல் விழட்டும் என்ற தியாக சிந்தனையா அவருக்கு? அல்லது குடும்பப் பாசத்தினால் எந்த வாய்ப்பையும் விட முடியவில்லையா?   

ஸ்டாலின் தன் கட்சியினருக்குச் சொன்ன அறிவுரைகளின் எதார்த்தமான அர்த்தம் இதுதான்: “உங்கள் பேச்சிலும் செயல்பாட்டிலும் எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் உங்களை வீடியோ எடுத்து செல் போனில் உலவ விடுவார்கள். அதை நீங்களோ நானோ மறுக்க முடியாமல் போய்விடும். நீங்கள் எச்சரிக்கை தவறுவதால் நான் கடைசியில் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே எனக்குப் பிரச்சனை உண்டாக்காதீர்கள்.” 

அதிகார மமதை, குடும்பப் பெருமை பீற்றல்,  மேல் ஜாதி உணர்வு, மக்களைப் பற்றிய இளக்காரம், அப்பட்டமான ஹிந்து எதிர்ப்பு போன்ற எண்ணங்களைத் தம் பேச்சுக்களில் வெளிப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், க. பொன்முடி, ஆ. ராசா ஆகியவர்களை ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியபோது மனதில் வைத்திருப்பார். ஆனால் “நீட் விலக்குப் பெறுவதின் ரகசியம் எங்களுக்குத் தெரியும்” என்று அச்சுப் பிச்சாகப் பேசிய உதயநிதியை நினைவில் வைத்தாரா? இல்லை, சென்ற தமிழகத் தேர்தலுக்கு முன் தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர் அணியில் இருந்த போது அவருக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை ஸ்டாலினே மக்கள் முன் வைத்தாரே, பிறகு செந்தில் பாலாஜியைத் திமுக-வில் சேர்த்து எம். எல். ஏ-வாக்கி வளமான மின் துறையில் அவருக்கு ஸ்டாலினே அமைச்சர் பதவியும் கொடுத்தாரே, அந்த கண்ணியத்தையாவது ஸ்டாலின் எண்ணிப் பார்த்தாரா? இது தொடர்பான எல்லாக் காட்சிகளையும் பொது மக்கள் செல் போனில் பார்த்தார்களே?  

 பொதுக் குழுவில் மைக் முன்னால் நின்றபோது, “உங்கள் பேச்சில், செயலில் கண்ணியத்தோடு நேர்மையும் நாணயமும் தலைதூக்கி இருக்க வேண்டும். எந்தப் பொதுப் பணத்தையும்  நீங்கள் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். அரசாங்கத்தின் நியமனங்களில், அரசு நடவடிக்கைகளில் அல்லது ஒப்பந்தங்களில் கழகத்தவர்கள் தலையீட்டால் முறைகேடுகள் நடக்கின்றன  என்ற குற்றச் சாட்டிற்கு நாம் எள்ளளாவும் இடம் கொடுக்காமல் மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்”  என்றெல்லாம் ஸ்டாலின் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவரும் தினமும் நன்றாகத் தூங்கி நிம்மதியாகக் காலையில் கண் விழிக்கலாமே?

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Sunday 9 October 2022

பாவம் ராஜராஜ சோழன்!

 -- ஆர். வி. ஆர்

 

அன்று மேடையில் நின்று பேசியவர் திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன். அருகில் அமர்ந்து ஆவரை ஆர்வத்துடன் கவனித்தவர் விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவன். பேசும்போது வெற்றி மாறன் குழம்பினார். மற்றவர்களையும் குழப்பினார். அதோடு, “நாம தெளிவோட இருக்கணும்” என்றும் தான் பேசியதற்கு மாறாகச் சொன்னார்.  குதர்க்கத்திற்கும் குழப்பத்திற்கும் பெயர் போன திருமாவளவன், இதைக் கேட்டு மகிழ்ந்திருப்பார். இது ஒரு வாரத்திற்கு முன் இந்தச் சூழ்நிலையில் நிகழ்ந்தது. 

 

சோழ மன்னன் ராஜ ராஜன் இடம் பெறும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பிரும்மாண்ட சினிமாவாக செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்தது. மறு நாள், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவரது மணிவிழாவை ஒட்டி ஒரு  சினிமாத் துறை அமைப்பு சென்னையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியது. அதற்கான மேடையில் திருமாவளவன் அமர்ந்திருக்க, அப்போதுதான் வெற்றி மாறன் இப்படிப் பேசினார்:

 

“தொடர்ந்து  நமது அடையாளங்களை நம்ம கிட்டேர்ந்து எடுக்கறாங்க. வள்ளுவருக்குக் காவி உடை குடுக்கறதா இருக்கட்டும், ராஜ ராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்கறதா இருக்கட்டும்,  இப்படித் தொடர்ந்து  நடந்துட்டிருக்கு.  இது சினிமாவுலயும்  நடக்கும்.  இந்த அடையாளங்களை நாம காப்பாத்திக்கணும். நம்முடைய விடுதலைக்காக நாம போராடணும்னா நாம அரசியல் தெளிவோட இருக்கணும். ...................”

 

ராஜ ராஜ சோழன் ஹிந்து அல்ல என்ற அர்த்தத்தில் வெற்றி மாறன் பேசியதைப் பின்னர் திருமாவளவன் ட்விட்டரில் ஆமோதித்தார்.  “ராஜ ராஜன் காலத்தில் சைவம் வேறு. வைணவம் வேறு ........ அக்காலத்தில் ஏது இந்து? ...... லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் ராஜ ராஜன் மீது இன்றைய இந்து அடையாளத்தைத் திணிப்பது சரியா?” என்று கேட்டுவிட்டு, வெற்றி மாறனின் கூற்றுக்காக அவரைப் “பெரியாரின் பேரன்” என்று புகழ்ந்தார். 

 

சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கும் சம்பிரதாயமாக ஒரு காலத்தில் பரவலாக இருந்தது. ஈ.வெ.ரா பெரியாரோ கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி” என்று வசை பாடியவர். அப்படியென்றால், லிங்க வடிவில் சிவனுக்குக் கோவில் எழுப்பி அக் கடவுளின் கீரத்தியைப் பரப்பி, அந்தக் கடவுளை வணங்கியதால் ராஜ ராஜ சோழனும் ஒரு அயோக்கியன், ஒரு காட்டுமிராண்டி” என்பாரா பெரியாரின் மைந்தர் திருமாவளவன்?  

 

திருமாவளவன் “பெரியார் பேரன்” என்று  வாயாரப்  பாராட்டிய வெற்றி மாறனும் தனது பேச்சின் மூலம் இதையா சொல்ல வருகிறார்? அதாவது: 


“ராஜ ராஜன் என்ற தமிழ் அரசன் ஹிந்து இல்லை. சைவ மதத்தவன் என்ற அடையாளயம்தான் அவனுக்கு இருந்தது. அதைத்தான் நாம் தற்காலத்தில் காப்பாற்ற வேண்டும். இருந்தாலும், ராஜ ராஜன் ஒரு பெரும் சிவ பக்தனாக வாழ்ந்ததால், நாங்கள் போற்றும் ஈ.வெ.ரா பெரியார் பார்வையில் அவன் ஒரு மஹா அயோக்கியனாக, வெறும் காட்டுமிராண்டியாகத் திகழ்ந்தான் என்பதையும் ஏற்கிறோம். அதுவும் அவனது பெருமையான அடையாளம்.”


என்று சொல்கிறாரா வெற்றி மாறன்? அதுதானே அவர் பேச்சின் அர்த்தம்? குழப்பத்தின் உச்சம் தொட்ட பிதற்றல் அல்லவா அவரது பேச்சும் அதன் அர்த்தமும்?

 

‘ஹிந்து மதத்தை எதிர்த்து ஏதாவது சொல்லவேண்டும், அதே சமயம் தமிழ் மன்னன் ராஜ ராஜனையும் தூக்கிப் பிடிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்துச் சொல்லும்போது, தஞ்சைப் பெரிய கோவில் எழுப்பியதற்காக ராஜ ராஜனை இகழக் கூடாது. அதற்கு ஒரே வழி ராஜ ராஜனை ஹிந்து மதத்திலிருந்து பிரித்து, அவன் ஹிந்துவே இல்லை, அவன் கட்டிய கோவிலில் உள்ள சிவனும் ஹிந்துக் கடவுளே இல்லை என்று ஒரே போடாகப் போட வேண்டும். அப்போதுதான் ஹிந்து மதத்தை மட்டும் சங்கடம் இல்லாமல் எதிர்க்கலாம்'.  இதுதான் ஹிந்து மத எதிர்ப்பாளர்களின் மன ஓட்டம். ஆனால் பெரியார் வைத்த வேட்டு, சிவ பெருமானை வணங்கிய ராஜ ராஜனுக்கும் சேர்த்துத்தான் என்ற உண்மை ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது. சிந்தையில் நேர்மையும் மனதில் நல்லெண்ணமும் இல்லாமல் போனதால் இந்த ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் குழம்பிப் போய்த் தாங்கள் வைத்த பொறியில் தாங்களே அகப்பட்டனர். 

 

அடுத்தது திருவள்ளுவர். அவருக்குக் காவி உடை சார்த்தி விட்டார்கள் என்பது பெரியார் பேரனுக்கு இன்னொரு ஆதங்கம். திருக்குறளின் முதல் அதிகாரத்தின் தலைப்பே “கடவுள் வாழ்த்து”. அந்த அதிகாரத்தில் “இறைவனடி சேராதார்” என்று ஒரு குறளும் முடிகிறது. கடவுளைப் போற்றிய, பரப்பிய, வணங்கிய திருவள்ளுவருக்கும் பெரியார் பார்வையில் ராஜ ராஜன் கதிதான். வெற்றி மாறன் என்ன சொல்லப் போகிறார்? “திருவள்ளுவர் காவிக்குப் பதில் வெள்ளை உடை தரித்துப்   படங்களில் இருக்கட்டும். பிறகு என் தாத்தா பெரியார் கணிப்பில் அவர் அயோக்கியர், காட்டுமிராண்டி என்று பெயர் பெறட்டும். அது திருவள்ளுவருக்குப் பாதகமில்லை. ஆனால் அவரது உருவம் காவி உடையில் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. அதுதான் தமிழர்களுக்குப் பெரிய இழுக்கு. குறளாசிறியரைக் காவி உடையில் காண்பித்தால்தான்  தமிழர்களின் அடையாளம் எங்கோ போய்விடும் – வள்ளுவருக்கு அயோக்கியன், காட்டுமிராண்டி என்ற பட்டங்கள்  கிடைப்பதால் அல்ல” என்பாரா வெற்றி மாறன்?

 

தமிழகத்தில் பெருவாரியான தமிழர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் முன் காலத்திய சைவத்தையும் உள்ளடக்கியதுதான் என்ற சாதாரண உண்மை வெற்றி மாறன் போன்ற ஒரு நல்ல சினிமா இயக்குனருக்கு உண்மையிலேயே புரியாதா என்ன?  புரியும்.  இருந்தாலும் எந்தத் துறையிலும் சில நடைமுறை சங்கடங்கள், அதன் பாதிப்புகள் இருக்கலாம்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, வேண்டும் என்றே மக்களிடையே ஒரு பிரச்சனையைப் பெரிதாகக் கிளப்பி மறியல், போராட்டம் என்று ஏற்படுத்தும் சக்தி படைத்த அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பாததை, அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்தால், சினிமாவில் பெரிய அளவில் ஜெயிப்பதில் பல சொல்லமுடியாத இடைஞ்சல்கள் உண்டு. விலகி நிற்பதை விடவும், அந்த அரசியல் தலைவர்களைப் புகழ்ந்து, அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவ்வப்போது நடந்து கொண்டால், அல்லது பேசினால், திரைத் துறையில் வாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் செயற்கைத் தடைகள் வராது – திறமை உதவுவது என்பது வேறு விஷயம். அந்த நிலையில் பயனாளி ஒருவருக்கு வாலி பலம் கூடக் கிட்டும். தமிழகத்  திரைத் துறையில் பலருக்கும் இது மனரீதியான ஒரு நிர்பந்தம். அதனால் அவர்களில் பலர் அந்த மாதிரியான சில அரசியல் தலைவர்களின் ரசிகர்களாகவும் ஆகிறார்கள். இதெல்லாம் அவரவர் மனநிலை, சக்தி, சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம்.

 

நல்ல சினிமா எடுக்கப்படும் பல மேலை நாடுகளில் சினிமாத் துறையினர் – அதில் திறமையானவர்கள் கூட - இப்படி அரசியல் தலைவர்களை அண்டியும்  கட்டியும்  நிற்பது உண்டா?  கிடையாது. ஏனென்றால், சீரழிந்த தமிழக அரசியல்  ஏற்படுத்தும் மறைமுக நிர்பந்தங்கள் அந்த  நாட்டுத் திரைத்துறையினருக்கு இல்லை.  

 

ஆனாலும் பாவம், திராவிடக் கட்சித் தமிழர்களிடம் சிக்கித் தவிக்கும் ராஜராஜனும் வள்ளுவரும்! அந்த இருவருக்காகவும் நமக்காகவும் இப்போது நம்மால் முடிந்தது ஒன்றுதான். "தமிழக அரசியலை சிவபெருமான் மீட்டுக் காப்பாற்ற வேண்டும்" என்று நாம் வேண்டிக் கொள்ளலாம்.  துன்பம் நேர்கையில்  இப்படி சிவபெருமானை வேண்டுவது நம் தமிழர்களின் அடையாளம் என்பதையாவது திருமாவும் வெற்றி மாறனும் ஒப்புக் கொள்வார்களே?


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022