Wednesday 26 October 2022

பாருக்குள்ளே நல்ல ஆசை!

 -- ஆர். வி. ஆர்

 

 

 

 

இரவில் தூங்கிய ஸ்டாலினும் – இனி

தேசியம் ஓங்கிய தமிழ்நாடும்

 

 

மனதில் முதிர்ந்த ராகுலும் – சில

மர்மங்கள் உதிர்ந்த சோனியாவும்

 

 

புத்தி தொலைக்காத சிதம்பரமும் - பதவி

மாண்பு குலைக்காத மன்மோகனும்

 

 

தலித்தால் தழைக்காத மாயாவும் - இங்கு

அதுபோல் பிழைக்காத திருமாவும்

 

 

உறவுகள் செழிக்கும் ஆட்சிமுறை - அதை

அறவே கழிக்கும் அகிலேஷும்

 

 

காலை வாறாத நித்திஷும் - லேசில்

நிறம் மாறாத உத்தவ்வும்

 

 

அரசிலும் மாட்டின் உணவிலும் - தூய

வெளிப்படை காட்டும் லாலுவும்

 

 

மமதை மறைந்த மம்தாவும் - புது

வளமை குறைந்த கே.சி.ஆரும்

 

 

கயமை குன்றிய பவாரும் - இந்த

தேசம் ஒன்றிய பரூக்கும்

 

 

தனி ஆசைகள் விட்ட கேஜ்ரியும் - நம்

காலம் தொட்ட கம்யூனிஸ்டும்

 

 

லஞ்சம் களைந்த அரசினரும் - நல்

நெறிகள் விளைந்த ஊடகமும்

 

 

நாடு சிறக்கக் காண்போமா? - பெரும்

கனவு பறக்கக் கலைவோமா?

 

  


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022

8 comments:

  1. அருமையான கவிதை!

    ReplyDelete
  2. நல்ல பொருளுரைக்கும் கவிதை.

    ReplyDelete
  3. Super arasial kural . Remote control manmohan comes to mind. A turbhan over Sonia image comes to mind. I could hv posted it here but it is not getting posted here.

    ReplyDelete
  4. Your ambition is limitless. Our lifetile is too limited to see these.

    ReplyDelete
  5. Very meaningful message. Nice comments. Satirical explanations. Keep it up sir

    ReplyDelete
  6. S kumar 182 B 2nd main road

    ReplyDelete