|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றினாலும்
நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகப்
பேசி இருக்கிறாரே?
|
|
|
2. கேள்வி: ஒரு
குடும்பத்தின் கையில் கட்சி, முறைகேடுகள் நிறைந்த ஆட்சி, அமோகச் செழிப்பில்
அமைச்சர்கள், பல்லிளிக்கும் சட்டம் ஒழுங்கு. இவை திமுக-வை
விட்டுப் பிரியவே பிரியாதா?
|
|
|
3. கேள்வி: "இந்தியாவில் சிறுபான்மையினர் அச்ச உணர்வோடு வாழ்கின்றனர்" என்று
முதல்வர் ஸ்டாலின் ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசி இருக்கிறாரே?
சிறுபான்மை மக்கள்
அச்சமில்லாமல் வாழ்ந்தால் ஸ்டாலினுக்கு அச்ச உணர்வு வருகிறது. பெரும்பான்மை
ஹிந்துக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை நிலைநாட்ட ஒன்றுபட்டால் அப்போதும்
ஸ்டாலினுக்கு அச்ச உணர்வு வருகிறது. அவரது சுயநல அச்சம் நாட்டுக்கு அச்சா, பஹுத் அச்சா! |
|
|
4. கேள்வி: "கமல் ஹாசனை
நடிகனாக மட்டும் சுருக்கிவிட முடியாது. கமல் உழைப்பை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள
வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறாரே? 'இன்றைய கமல் நடிப்பில் மட்டும் பாடமல்ல;
அரசியலில் திமுக-வை எதிர்த்து ஒரு நடிகர் எப்படி உழைத்தாலும்
அவருக்கு என்ன நேரும் என்பதற்குக் கமலின் அத்தகைய உழைப்பும் அதன் முடிவும் ஒரு
பாடம்' என்ற பொருளில் அன்பில் மகேஷ் இன்னொரு நடிகரை
எச்சரித்து மகிழ்கிறார். மற்றவர்களுக்கு இதில் ஒன்றுமில்லை. |
|
|
5. கேள்வி: சென்னை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயரம் வளர்ந்த கஞ்சா செடி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதே? பதில்:
காவல்துறைக்கு ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி வைத்தியம். குணமடையப்
பிரார்த்திப்போம். |
|
|
பகுதி 30 // 25.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment