|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "நான் மோடியின் அரசியல் வாழ்க்கையை
அழிக்க விரும்பவில்லை" என்று டிரம்ப் பேசி இருக்கிறார். காரணம் டிரம்பின்
திமிரா பெருந்தன்மையா?
|
|
|
2. கேள்வி: தந்தையிடம் அரசியல் கற்கும் நிலையில்
ஸ்டாலின் எப்படி இருந்தார், உதயநிதி எப்படி இருக்கிறார்?
|
|
|
3. கேள்வி: சுந்தர்
பிச்சைக்கும் ஶ்ரீதர் வேம்புவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
|
|
|
4. கேள்வி: மக்களிடம்
பிரதமர் மோடி பேசும் வானொலி நிகழ்ச்சியின் பெயர்,
'மனதின் குரல்'. சில எதிர்க் கட்சித்
தலைவர்கள் தங்கள் பாணியில் அவ்வாறு உரையாற்றினால் அதற்கு நீங்கள் என்ன பெயர்
தருவீர்கள்? மன்மோகன் சிங்: என் குரலில் சோனியாஜி மனது. மு.க. ஸ்டாலின்: திராவிட மாடல் மனது. கமல் ஹாசன்: மனதின் மனதில் மனதோ மனது. |
|
|
5. கேள்வி: "சமத்துவத்தை உண்டாக்க அனைத்து
ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினோம்" என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.
சரியா?
|
|
|
6. கேள்வி: "திமுக-வை
கண்மூடித்தனமாக எதிர்க்கும் பிராமணர்களை நான் எதிர்க்கிறேன்" என்று நடிகர்
எஸ். வி.சேகர் சொல்லி இருக்கிறாரே? பதில்:
திமுக-வை
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒருவர் தன்னை
மறைக்கப் பார்க்கிறார். |
|
|
7. கேள்வி: "சுதந்திரமாக, விஞ்ஞான ரீதியாக, சிந்திப்பது என்ற எண்ணமே
இந்தியாவில் பெரிதாக எதிர்க்கப்படுகிறது" என்று சிலி நாட்டிற்குச் சென்ற
ராகுல் காந்தி, மாணவர்கள் மத்தியில் மோடி அரசைக் குற்றம்
சாட்டிப் பேசி இருக்கிறாரே? பதில்:
ராகுல் காந்தியிடம் சிந்தனா சக்தி குறைவு. அந்த உண்மையைத் திசை
திருப்ப, 'மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு மோடி அரசு
முட்டுக்கட்டை போடுகிறது' என்று ஆரம்பித்து, தனது சிந்தனைக் குறைவுக்கான பழியை மோடி மீது தள்ளிவிடப் பார்க்கிறார்
ராகுல் காந்தி. கில்லாடி! |
|
|
பகுதி 3 // 19 .10.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment