|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: மணல்
விற்பனை வாயிலாகத் தமிழக அரசுக்கு 36 கோடி ரூபாய் வருவாய் காட்டப்பட்டுள்ளது, ஆனால்
தமிழகக் குவாரிகளில் நடந்த மணல் திருட்டால் மாநில அரசுக்கு 4,730 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று ஆவணங்கள் அடிப்படையில்
அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி-க்குத் தகவல் அனுப்பி இருக்கிறதே?
|
|
2. கேள்வி: அதிமுக-வில்
பல வருடங்கள் முன்னணித் தலைவராக இருந்து, அக்கட்சியின் தற்போதைய தலைமையுடன் முரண்பட்டதால் அங்கிருந்து
வெளியேற்றப்பட்டவர் கே. ஏ. செங்கோட்டையன். பின்னர் அவர் தவெக-வில் சேர்ந்து,
"வழி தெரியாமல் நின்ற எனக்கு வழி காட்டியவர் விஜய். என்
உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காகத் தான்" என்று பேசி இருக்கிறாரே?
|
|
3. கேள்வி: மக்கள்
ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் முன்பு தனது பிரதேச காஷ்மீரி மொழியில்
பேசினார். அப்போது ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசச் சொல்ல,
"மாநில மொழிக்கு மதிப்புத் தரவேண்டும். என்னைக் கேட்ட மாதிரி
தமிழக முதல்வர் ஸ்டாலினை உருது மொழியில் பேசச் சொல்வீர்களா?" என்று கோபமாகக் கேட்டிருக்கிறாரே?
|
|
4. கேள்வி: தமிழகத்தில்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேரத் தேர்வு எழுதியவர்களில் 36 சதவிகிதம் பேர், அதாவது 85,000த்துக்கு அதிகமானோர், தமிழ்ப் பாடத்தில் 40 சதவிகித மார்க் கூட
எடுக்காமல் பெயில் ஆகி இருக்கிறார்களே - அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்தும்?
|
|
5. கேள்வி: 'வாய்மையே வெல்லும்' என்ற சொற்கள் தமிழ்நாடு அரசு
சின்னத்தின் அங்கம். ஆனால் அரசியல் உலகில் 'வாய் மெய்யை
வெல்லும்' என்பது விதி என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள்.
சரி, 'பொய்மை' யைப் பற்றிய அரசியல்
விதி என்ன? தேர்தலில் ஒரு
வாக்காளர் ஓட்டுப் போடுவதின் அடையாளம், ஓட்டுச்
சாவடியில் அவர் கைவிரலில் வைக்கப் படும் மை. அந்த மை, தங்களுக்கு
ஓட்டளிக்கும் அதிக வாக்காளர்களின் விரல்களில் காணப்படவேண்டும் என்பதற்காக அநேக
அரசியல்வாதிகள் கூசாமல் மக்களிடம் பொய் சொல்கிறார்கள், பொய்
வாக்குறுதிகள் தருகிறார்கள், நினைத்தபடி தேர்தலில் வெற்றி
அடைகிறார்கள். ஆகையால், பொய் மையை வெல்லும். வாய்
மெய்யை வெல்லும்; பொய்
மையை வெல்லும். |
|
பகுதி 32 // 29.12.2025 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |