Wednesday, 13 August 2025

ராமனின் புத்தி சுவாதீனம் பற்றி வைரமுத்து உளறல்!

  

-- ஆர். வி. ஆர்

 

சென்னையில்  கம்பன் கழகத்தின் பொன்விழா சமீபத்தில் நடந்தது. அப்போது கவிஞர் வைரமுத்துவுக்குக்  'கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருது வழங்கப் பட்டது. விருது வாங்கிய விழா மேடையிலிருந்து ஒரு பைத்தியக்காரப் பேச்சைப்  பேசினார் வைரமுத்து.

 

கம்பராமாயணத்தில் வரும் பாடல் சொல் ஒன்றுக்கு ஏடாகூடமான விளக்கம் கொடுத்தார் வைரமுத்து.  அதன் மூலம் ராமன் புத்தி சுவாதீனம் அற்றவனாக இருந்தான், அப்படித்தான் கம்பன் சொல்ல வருகிறான் என்கிற ரீதியில் வைரமுத்து உளறிக் கொட்டினார். 

 

ராமாயண காவியத்தில், வாலி-சுக்ரீவன் யுத்தத்தின் போது, வாலி சுக்ரீவனைப் பிடித்துத் தரையில் வீசிக் கொல்ல  இருந்த தருணம் வருகிறது. அந்த நேரத்தில், மறைந்து நின்றிருந்த ராமன் எய்த அம்பு வாலியின் மார்பில் தைக்க, சுக்ரீவன் மீதிருந்த வாலியின் பிடி நழுவுகிறது.  சுக்ரீவன் தப்பிக்கிறான். வீழ்த்தப்பட்ட வாலி, தன் மார்பிலிருந்த அம்பைச் சிரமத்துடன் உருவிப் பார்த்து அது ராமபாணம் என்று தெரிந்து கொள்ள, ராமனும் வாலியின் முன் வருகிறான்.  

 

ராமன் தன்னைக் கொல்ல அம்பு விடுத்தான், அதையும் மறைந்து நின்று செய்தான், என்பதை ஏற்க முடியாத வாலி கோபத்தில் ராமனிடம் பல கேள்விகள் கேட்கிறான். அதில் ஒரு கேள்வியின் சாரம் இது: ‘சீதையைப் பிரிந்ததால், அந்தப் பிரிவில் திகைத்துப் போய், தன்னிலை மறந்து, என்னைக் கொல்ல முயன்றாயா ராமா?  இதை வெளிப்படுத்தக் கம்பன் வாலியின் வாயிலிருந்து வருவதாகத் தனது பாடலை இப்படி முடிக்கிறான்: "..... தேவியைப் பிரிந்த பின்னை, திகைத்தனை போலும் செய்கை?"

 

இந்தப் பாடலில் வரும் "திகைத்தனை" என்ற சொல்லின் அர்த்தத்தை, வைரமுத்து விபரீதமாக வளைத்து முறுக்குகிறார். அவர் பேசிய வார்த்தைகள் இவை:

 

"திகைத்தல் என்றால் பிரமித்தல். இன்னொரு சொல், மயங்குதல்.  மதி மயங்கி விட்டான். சீதையைப் பிரிந்த ராமன் செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்து விட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம் குற்றமாகாது என்று இந்திய தண்டனைச் சட்டம், 84-ஆம் பிரிவு சொல்கிறது. இது கம்பனுக்குத்  தெரியுமோ  தெரியாதோ. கம்பனுக்குச் சட்டம் தெரியாது, ஆனால் அவனுக்குச் சமூகம்  தெரியும், உளவியல் தெரியும், இந்த மண்ணைத் தெரியும்.  ராமன் என்ற ஒரு குற்றவாளி கம்பனால் முற்றிலும் விடுவிக்கப் படுகிறான். ராமனை மன்னித்து ராமனை மனிதன் ஆக்குகிறான், கம்பன். ராமன் அந்த இடத்தில் மனிதன் ஆகிறான். கம்பன் கடவுளாகிறான்.”

 

வைரமுத்து இப்படிக் கூச்சமில்லாமல் பிதற்றியதன் காரணம், அவரது இந்த எண்ணம்: ‘இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் சொன்ன கலைஞர் கருணாநிதி கோலோச்சிய திமுக-வின் இன்றையத் தலைவர் மு. க. ஸ்டாலினையும், அவர் மகன் உதயநிதி ஸ்டாலினையும் நமது கோணங்கிப் பேச்சு மகிழ்விக்கும். அதனால் அவர்களிடம் நம் மதிப்பு உயர்ந்து நமக்கு வருகிற பலன்கள் வருக வருகவே!'

 

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற தினம் முதல்ராவணனை வதம் செய்து ராமன் சீதையை மீட்ட நாள்  வரை, ராமன் தன் மனைவியைப் பிரிந்திருந்தான். அந்த எல்லா நாட்களிலும் ராமன் புத்தி சுவாதீனம் இழக்காமல், வாலியைக் கொன்ற நேரம் மட்டும் ராமன் புத்தி சுவாதீனத்தை இழந்திருந்தானா என்ன சொல்கிறார் வைரமுத்து?

 

இன்னொன்று. வாலி-சுக்ரீவன் யுத்தத்திற்கு முன்னரே, ராமனும் சுக்ரீவனும் தம்முள் பேசி வாலி வதத்தைத் திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி சுக்ரீவன் வாலியை யுத்தத்திற்கு அழைத்தான், வாலியும் சண்டைக்கு வந்தான், வாலி வதம் அப்படியாக நடந்தது என்று கம்பராமயணத்தில் வருகிறது. ஆகையால் ராமன் புத்தி சுவாதீனம் இழந்ததால் வாலியைக் கொன்றான் என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படிப் பேசுபவர்களின் புத்தியைப் பற்றி யார் என்ன சொல்ல?

 

ராமபாணத்தால் வீழ்ந்து முடங்கி இருந்த வாலி, ஆத்திரத்தில் ராமனிடம் ஒவ்வொன்றாகக் கேள்விகள் கேட்க, அந்தக் கேள்விகளுக்கு ராமன் பொறுமையாகப் பதிலளிக்கிறான்.  தான் வாலியைக் கொல்ல வந்தது ஏன் என்றும் விளக்குகிறான். ராமன் ஏன் மறைந்திருந்து அம்பு வீசினான் என்பதை லக்ஷ்மணன் விளக்குகிறான். முடிவில் ராமன் மற்றும் லக்ஷ்மணனின் விளக்கங்களால் வாலி திருப்தி அடைகிறான், அதை வாலியே ராமனிடம் சொல்கிறான். இவையும் கம்பராமாயணத்தில் அடுத்து வரும் பாடல்களில் உள்ளன. 

 

முடிவாக,  'ராமன் அறத்தின்படி நடந்திருக்கிறான், அவன்மீது தவறில்லை. நான்தான் என் வாழ்வில் தவறான செய்கைகள் செய்துவிட்டேன்' என்று வாலி உணர்ந்தான். தான் செய்த தீதை, கெட்ட செயல்களை, ராமன் பொறுத்தருள வேண்டும் என்றும் வாலி ராமனிடம் வேண்டினான் என்றெல்லாம் கம்பரே விவரிக்கிறார். ஆகையால், 'சீதையைப் பிரிந்ததால் மனக் கலக்கம் கொண்டிருந்த ராமன், அவன் என்ன காரியம் செய்கிறான் என்பது தெரியாமலேயே என்னைக் கொல்ல முயற்சித்தானோ?' என்று ஆரம்பத்தில் எண்ணிய வாலி அந்த எண்ணத்தைப் பின்னர் மாற்றிக்  கொள்கிறான் என்பது தெளிவாகிறது.  

 

ஒரு கட்டத்தில், வாலி ராமனைப் பார்த்துத் "தந்தை போன்றவனே!" என்றும் அழைத்துப் பேசுவதாகக் கம்பன் சொல்கிறான். அடுத்து, ராமன் பேசிய பேச்சை உள்வாங்கி உணர்ந்த வாலி, "என் உயிர் போகும் முன்னர் எனக்கு மெய்யறிவைத் தந்து அருள் செய்தாய்" என்றும் ராமன் மீது நன்றி கொண்டவனாகப் பேசுகிறான் (வாலி வதைப் படலம், பாடல் 130). 

 

ராமனின் மீது வாலிக்கு ஏற்பட்ட மதிப்பு எப்படி உயர்கிறது என்றால், தன்னருகே தன் மகன் அங்கதன் வந்து வருந்தி அழுதபோது அவனைத் தேற்றிவிட்டு, ராமனின் பெருமையையும் அங்கதனுக்கு எடுத்துச் சொல்கிறான் வாலி.  பின்னர், எவர் மனதையும் தொடும் ஒரு காரியத்தை வாலியும் ராமனும் செய்கிறார்கள். வாலி ராமனிடம் அங்கதனை அடைக்கலமாக ஒப்படைக்கிறான். ராமனும் அங்கதனை ஏற்று, தன்னுடைய உடைவாளை அங்கதனிடம் கொடுக்க, அதை அங்கதனும் பெற்றுக் கொள்கிறான். அச் சமயம் வாலியின் உயிர் பிரிகிறது (வாலி வதைப் படலம், பாடல்கள் 159, 160)

  

இறுதியாக ராமன் மீது வாலி குறை காணவில்லை, மாறாக அவன் ராமன் மீது மதிப்பும் மரியாதையும்  கொண்டவன் ஆனான் என்பது கம்பர் மூலமாகவே  நமக்கு விளங்குகிறது. கம்பராமாயணத்தின் இந்த மற்ற பாடல்களைப் பற்றி வைரமுத்து மேடையில் மூச்சு விடாததன் காரணம் என்ன? அவற்றுக்கு விரோதமான கண்ணோட்டத்தில் ஏன் அன்று பேசினார்? நேர்மையின்மை, உள்நோக்கம் தானே?

 

ஆரம்பத்தில் வாலி ராமனைப் பார்த்துக் கேட்ட ஒரு கேள்வியை ஏதோ கம்பனே அப்படிக் கேட்டு ராமனைப்  புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று கம்பனே தீர்ப்பும் கொடுத்த மாதிரிப் பேசி இருக்கிறர் வைரமுத்து. 

 

தனது பேச்சில் வைரமுத்து கடைசியாகச் சொல்ல வருவது இது: 'புத்தி சுவாதீனம் இழந்த ராமன் ஒரு கொலையைச் செய்துவிட்டான். ஆகவே ராமன் கடவுள் அல்ல, வெறும் மனிதன். இன்னொரு பக்கத்தில், வெறும் மனிதனான கம்பன், கொலைபாதகக் குற்றம் செய்த ராமனைச் சாமர்த்தியமாக புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று காண்பித்து, அதன் காரணமாக இ.பி.கோ சட்டப் பிரிவு 84 போன்ற சட்ட அடிப்படையில் ராமனை – அதாவது ஒரு அவதாரக் கடவுளையே – குற்றம் செய்யாதவனாக ஆக்கிக்   காப்பாற்றுகிறான். ஆகையால் கம்பன், கடவுளாக உயர்கிறான்.

 

வைரமுத்துவின் இந்த எண்ணம், இந்த வியாக்கியானம், அசல் மாய்மாலம், ஏமாற்று வேலை, பிராடுத்தனம்!

 

வைரமுத்து குறிப்பிட்ட இ.பி.கோ சட்டம் நீக்கப் பட்டு அதற்குப் பதில் வேறு பெயரில் ஒரு புதுச் சட்டம் அமலில் இருக்கிறது. அதிலும் வைரமுத்து சொன்ன சட்டப் பிரிவின் அம்சம் உண்டு. இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மீதான குற்றச் சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப் படவேண்டும் என்றால், அந்த நபர்தான் அகற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அவர்தான் குற்றம் நடந்த தருணத்தில் தான் புத்தி சுவாதீனம் இழந்து இருந்ததாக நிரூபிக்க வேண்டும்.

 

தொடக்கத்தில் வாலி ராமன் மீது ஒரு சந்தேகம் கொண்டிருந்தாலும் – அதாவது சீதையைப் பிரிந்த காரணத்தால் ராமன் தன் மீது அம்பு எய்தபோது அவன் திகைப்பில் இருந்தானோ என்ற சந்தேகம் கொண்டிருந்தாலும் – ராமன் வாலியிடம் பேசப் பேச, தன்மீது ராமன் குற்றம் இழைக்கவில்லை  என்று வாலி உணர்கிறான், மேலும் ராமனை வாலி புகழ்கிறான், போற்றுகிறான் என்று கம்பர் விவரிக்கிறார்.  முடிவில் ராமன் குற்றம் செய்ததாக அவன் மீது கம்பராமாயணத்தில் குற்றச்சாட்டே வைக்கப் படவில்லை – கடைசியில் வாலியின் பார்வையில் கூட அந்தக் குற்றச்சாட்டு இல்லை.  ஆகையால் ராமனின் பெயரைக் கம்பன் காப்பாற்றித் தர ஒரு சட்டப் பிரிவு கை கொடுக்கிறது என்று வைரமுத்து சொல்கிறாரே, அந்தச் சட்டப் பிரிவுக்கு இங்கு தேவையும் இல்லை, வேலையும் இல்லை. வைரமுத்துவின் சட்ட வாதமும் புஸ்வாணம்தான்.

 

தன்மீது விழும் உளறல் குற்றச்சாட்டிலிருந்து இப்போது யாராலும் காப்பாற்றப் பட முடியாமல் இருப்பவர் ஒருவர்தான். வேறு யார்? வைரமுத்துதான்!

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Tuesday, 5 August 2025

வந்தனம் மோடி


                            வந்தனம் மோடி

                                     (பாடல்)

 

 

மோடி என்றால் அவன் நரேந்த்ர மோடி - எங்கு

தேடினாலும் அவன் போல் தலைவன் யார்?

ஓடி ஓடி தேசம் காப்பவனே - உனைப் 

பாடிப் பாடி வந்தனம் செய்குவோம்!

 

 

 - ஆர். வி. ஆர்

R. Veera Raghavan, Advocate, Chennai

 

 


Saturday, 2 August 2025

"இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது!" - ராகுல் காந்தி குதூகலம்.

  

          -- ஆர். வி. ஆர் 

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு உள்ள அதிகாரமும் முக்கியத்துவமும் அவரது வலிமையான நாடு அளித்தது. வாய்க் கொழுப்பு, அவரது அசட்டுத்தனம் கொடுத்தது – அவரது சமீபத்திய பேச்சு இதற்கு உதாரணம்.

 

டிரம்பிற்கு ரஷ்யா மீது ஒரு கோபம் உண்டு. காரணம், அவர் தலையிட்டுப் பார்த்தும் ரஷ்யா-உக்ரைன் போரில் அவர் விரும்பிய வழியில் ரஷ்யா போரை நிறுத்த முன்வரவில்லை.  அதனால் அமைதிக்கான நோபல் பரிசு வாய்ப்பும் டிரம்பை விட்டு நழுவியது என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது. 

 

இந்தியா மீதும் அதிபர் டிரம்பிற்கு மனக்கசப்பு உண்டு.  அதற்குக் காரணம்: மோடியின் தலைமையிலான இந்தியாடிரம்பின்  மானத்தை சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்தது – அதுவும் டிரம்ப் தனக்குத் தானே வாங்கிக் கட்டிக் கொண்டது. எப்படி என்றால், பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, சென்ற மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதல் மூலம்  பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்களையும் ராணுவக் கட்டமைப்புப் பகுதிகளையும் ஏவுகணைகள் வீசி துவம்சம் செய்தது. பாகிஸ்தானும் சோப்ளாங்கியாக நம் மீது எதிர்த் தாக்குதல் செய்தது.

 

நான்கு நாட்கள் நடந்த அதிவேகப் போரில்  'முடியலை' என்றாகிவிட்ட பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா போரை நிறுத்தியது. இந்த நேரத்தில் விஷமக்கார டிரம்ப் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.

 

“இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடனான உங்கள் வர்த்தகம் நின்றுபோகும்” என்று இரு நாடுகளையும் தனது அரசு எச்சரித்ததால் அவை போரை நிறுத்தின என்று டிரம்ப் கூசாமல் புளுகினார்.  "இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே போர் பெரிதாகாமல்  நான் தடுத்தேன்" என்றும் சவடாலாகப் பேசினார். அவரது நோபல் பரிசுக் கனவு மங்கவில்லை.

 

சக்தி மிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புளுகை அழுத்தமாக நேரடியாக மறுக்காமல்அதே சமயம் உலகம் நன்றாகப்  புரிந்துகொள்ளூம் வகையில், இந்தியா ஒன்றைத் தெளிவு படுத்தியது. அதாவது, பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவை அணுகிக்  கேட்டதாலும், ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பெரிதும் நிறைவேறி விட்டதாலும்இந்தியா போரை நிறுத்தச் சம்மதித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு அதுதான் காரணம், வேறு எந்த மூன்றாம் நாடும் அதற்குக் காரணம் அல்ல  என்பதை உலகம் நம்புமாறு இந்தியா எடுத்துச் சொன்னது. இருந்தாலும் டிரம்ப் புளுகியபடி இருந்தார்.

 

சென்ற ஜூன் மாத நடுவில், டிரம்புடன் போனில் பேசிய மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நான்கு-நாள் போர், அந்த இரு நாடுகளுக்குமான ராணுவத் தொடர்பு வழிகள் மூலமாக, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டபடி, நிறுத்தப் பட்டது. இதில் மற்ற மத்தியஸ்தம் ஏதும் நடக்கவில்லை என்றும் டிரம்பிடமே  தெரிவித்தார் – இதை  இந்தியாவின் வெளி விவகாரத்துறை செயலரும் ஒரு அறிக்கை மூலம் அப்போது தெரியப் படுத்தினார்.

 

தன் மூக்குடைந்தாலும் டிரம்ப் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இப்போது, 'என் மானத்தை வாங்கிய இந்தியாவே, உன்னை விட்டேனா பார்!' என்பதற்காகவும் சேர்த்து, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும்  பொருட்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25% வரி விதித்திருக்கிறார். அது போக, நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால்  நமது நாட்டுப் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதியானால் அதற்கு ஒரு அபராதமும் போட்டிருக்கிறார்.

 

புதிய வரி மற்றும் அபராதம் விதித்ததுடன் டிரம்ப் நிற்கவில்லை. அவற்றைத் தொடர்ந்து, "ரஷ்யப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் 'செத்த பொருளாதாரங்கள்' (dead economies). அவை எப்படியும் போகட்டும்" என்று தத்துப் பித்தென்று சென்ற ஜூலை 31-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

 

வாய்க் கொழுப்பில் டிரம்ப்பிற்குச்  சளைக்காத அரசியல் தலைவர், அவரையும் மிஞ்சக் கூடிய தலைவர், உலகில் ஒரு மனிதர்தான் உண்டு. ராகுல் காந்திதான் அவர். இந்தியாவை எதிர்த்து, அதுவும் மோடியை எப்படியாவது சங்கடப் படுத்தும், பேச்சை யார் பேசினாலும் அதை ராகுல் காந்தி வரவேற்பார். அதன்படி, டிரம்பின் 'செத்த பொருளாதார' அறிக்கை வந்த அதே நாள் ராகுல் காந்தி அதைக் கொண்டாடிப் பேசினார்.  

 

ராகுல் பேசிய வார்த்தைகள் இவை: "டிரம்ப் சொல்வது சரிதான். இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்பது, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்.  ஜனாதிபதி டிரம்ப் இந்த உண்மையைக் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." அடுத்து, தனது X தளத்திலும் "இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது. அதைக் கொன்றவர் மோடி" என்று ராகுல் காந்தி பதிவிட்டார்.

 

இந்தியா ஒரு செத்த பொருளாதாரம் என்பதை ராகுல் காந்தி நிஜமாகவே நம்புகிறாரா? இல்லை, “டிரம்பை ஒரு பொய்யர் என்று மோடி அறிவிக்கத் தயாரா?” என்று தான் சமீபத்தில் வெட்டிக் கேள்வி கேட்டோமே, அது ராகுல் காந்தியே டிரம்பை இடிப்பது போல் தொனிக்கிறதே, அது டிரம்பிற்கு வருத்தம் தருமே என்று ராகுல் இப்போது யோசிக்கிறாரா? அதனால் ‘டிரம்பை ஒருவிதத்தில் சமாதானம் செய்வோம்’ என்று எண்ணி டிரம்பின் 'செத்த பொருளாதாரக்' கருத்தை  வரவேற்று அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் வளைந்து பணிந்து பேசி இருக்கிறாரா ராகுல்? ராகுலின்  பித்துக்குளிப் பேச்சுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்.

 

தான் வெறுக்கும் மோடி நிர்வகிக்கும் நாட்டை டிரம்போ வேறு யாரோ மட்டம் தட்டி இழித்துப் பேசினால், ராகுல் காந்தியின் அற்ப சந்தோஷத்திற்கு அளவு கிடையாது. இதுவும் ராகுல் பேச்சுக்கு ஒரு காரணம்.

 

என்ன பேசுகிறார் ராகுல் காந்தி? நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோஹன் சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் நம் பிரதமர்களாகப் பதவி வகித்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் துடிப்புடன் ஜிகுஜிகுவென்று ஜொலித்ததா? பிறகு 2014-ம் வருடம் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான நாள் முதற்கொண்டு தான் நமது பொருளாதாரம் சோகை அடைந்து செத்துவிட்டதா?

 

ஒரு நாட்டின் பொருளாதாரமே மடிந்து போவது அந்த நாட்டிற்கான பெரும் கேடு, பெரும் துயரம்.  மோடி பிரதமரான முதல் ஐந்து ஆண்டுகள் சென்றபின் நடந்த 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் லோக் சபா தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது, இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது, அதற்குக் காரணம் மோடி தலைமையிலான மத்திய ஆட்சி என்று ராகுல் காந்தி மக்களிடம் சொன்னாரா? இல்லை.  ஏனென்றால் ஒரு அமெரிக்க அதிபர் மதிகெட்டு அவ்வாறு முன்னதாக அறிவிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் அப்போது அந்த அளவு புத்தி கோளாறாக வேலை செய்யவில்லை.

 

இன்னொன்று. தொழிலதிபர் அதானியை எதிர்த்தும், பிரதமர் மோடி அந்தத் தொழிலதிபருக்குச் சாதகமாக முடிவுகள் எடுப்பதாகவும், ராகுல் காந்தி  அடிக்கடி சொல்லி வருகிறார். செத்துப்போன ஒரு பொருளாதாரத்தில் ஒரு தொழிலதிபர் ராகுல் காந்தியின் கவனம் பெறும் அளவிற்கு வளர்ந்து தொழில் செய்ய முடியுமானால் அவர் பெரிய தொழில் மேதையாக இருக்கவேண்டுமே? இதை ராகுல் காந்தி ஒப்புக் கொள்கிறாராபாவம் ராகுல் காந்தி. தன் பிதற்றல் தன்னை எப்படியெல்லாம் அம்பலப் படுத்தும் என்பதை அவர் உணரவில்லை.


டிரம்பிற்கும் ராகுல் காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தியா இழிக்கப் பட்டாலும், இந்தியா எக்கேடு கெட்டாலும் – அப்படிக் கெட்டதாக ஒரு அபத்தப் புரளியை யார் கிளப்பினாலும்  – டிரம்பிற்குக் கவலை இல்லை. தன் சுயலாபம் மட்டுமே அவருக்குக் குறி. ராகுல் காந்தியும் அப்படித்தானே?


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 


Friday, 25 July 2025

நான் யார்?


-- ஆர். வி. ஆர்

 

 

நான் யார்?

(பாடல்)

 

 

நான் நான் நான் நான் நான்
யார் யார் யார் நான் யார்
மொழி மதம் தேசம் தான் நான்

யாரென்று உணர்த்திடுமா நான்
யாரென்று உணர்த்திடுமா

 

 

மரம் செடி கொடிகளைப் போல்
பிற உயிரினங்களைப் போல்
பூமியும் விண்மீன் போல் நானும்
இயற்கையின் புதிரல்லவா? – நானும்
இயற்கையின் புதிரல்லவா?

 

 

அண்டம் தோன்றிய நாள் – அதில்
உள்ளவை எத்தனை கோள்
வானத்தின் வெளி எல்லை – நா
ம்
இவை பல
அறிந்ததில்லை – நாம்
இவை பல
அறிந்ததில்லை

 

 

இயற்கையின் புதிராய் நான் வெறும்
சிற்றறிவுடையோன் நான் – எந்தன்
புதிரை அறிவு
வணங்க நீ
அமைதி காக்க மனமே நீ
அமைதி காக்க மனமே

 

25/07/2025

         Author: R. Veera Raghavan, Advocate, Chennai 

Monday, 2 June 2025

வந்தனம் சேவாலயா

               

    -- ஆர். வி. ஆர்


 

சேவாலயா ஒரு தொண்டு நிறுவனம். சென்னை அதன் தலைமையிடம். தனது சேவைகளில் ஒன்றாக, சேவாலயா முதியோர் இல்லங்கள் நடத்துகிறது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்ட, ஆதரவும் வசதியும் அற்ற, முதியோர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கூடவே வாழ்வின் அடிப்படைக் கண்ணியம், ஆகியவற்றை அளித்து வருகிறது சேவாலயா.

 

சேவாலயாவின் மகத்தான பணியை நினைத்து, அங்கிருக்கும் முதியோர்களின் மனம் இந்தப் பாடல் வரிகளை எண்ணிப் பார்க்கலாம்.

 


 
Photo credit: sevalaya.org

  

 

சேவாலயா ..... சேவாலயா .....

எமக்கெலாம் ..... தாயாகினாய் ..... நீ

தாயாகினாய் .....   

 

 

யாருக்கும் வேண்டவில்லை

யாரும் மதித்ததில்லை

காலம் கட்டி இழுத்து – எம்மைச்

சேர்த்து விட்டது இங்கு

   வாழ்வில் புது கண்ணியம் – இன்று

காணும் மனிதர்கள் நாம்

 

 

சேவாலயா ..... சேவாலயா .....

எமக்கெலாம் ..... தாயாகினாய் ..... நீ

தாயாகினாய் .....

 

    01.06.2025

Author: R. Veera Raghavan, Advocate, Chennai