Monday, 10 April 2017

கர்ணன் கவலை தருகிறார்


        பொது  நலனை நினைத்துப் பார்க்கிறவரா நீங்கள்? அப்படியானால் ஹை கோர்ட் நீதிபதி கர்ணன் உங்களுக்குக் கவலையும் வேதனையும் அளித்திருப்பார்.  கோபத்தையும் கொடுத்திருக்கலாம்.

      என்ன செய்தார்  நீதிபதி கர்ணன்?  சர்ச்சைக்குரிய ஒன்றைச் செய்தார். அதாவது, சில சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல ஹை கோர்ட் நீதிபதிகள் உட்பட இருபது நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தங்கள் பணியில் ஊழல் செய்வர்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதிக் குற்றம் சுமத்தினார். அவருடைய நீதிமன்றப் பணியாக செய்த காரியம் அல்ல இது. ஒரு சாதாரண மனிதனாக அவர் புரிந்த செய்கை இது.  ஆகையால் இது பற்றி மேலும் பேசும்போது, அவரை 'கர்ணன்' என்று மட்டும் குறிப்பிடுவது சரி என்று தோன்றுகிறது.  இதில் வேறு அர்த்தம் இல்லை.

       கர்ணனின் குற்றச்சாட்டுகள் தவறானாவை, ஆதாரம் இல்லாதவை என்ற அடிப்படையில் ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பென்ச் தாமாக முன் வந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது. அவர் எழுதிய வேறு சில கடிதங்களும் அந்த நடவடிக்கையின் காரணம். பிற நீதிபதிகளைப் பற்றிய அவரது குற்றச்சாட்டுகளில் வலு இருந்தால், "நான் சொன்னது உண்மை. இதோ அதற்கான ஆதாரங்கள்" என்று சுப்ரீம் கோர்ட்டில் அவர் நிரூபணம் காட்டியிருக்க முடியும். அது நடந்தால் சுப்ரீம் கோர்ட்டே அவர்மீது எடுத்த நடவடிக்கையில் இருந்து அவரை விடுவிக்கும். அதன் தொடர்ச்சியாக, பொது நலன் காத்தவர் என்ற பாராட்டுக்களும் கர்ணனுக்குக் குவியும் - அதாவது அவர் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்து அதை அவர் நிரூபித்தால். கர்ணன் மீதே வேறு ஒரு நீதிபதியோ மற்றவரோ ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, அந்த வேறு நபரும் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொண்டால் அவருக்கும் இதே நிலைதான்.  ஆனால் இது எதையுமே கர்ணன் புரிந்துகொள்ளவில்லை. குற்றச்சாட்டுகள் சொன்னதோடு சரி.

           சென்ற மார்ச் 31ம் தேதி நடந்த விசாரணையின் போது கர்ணனின் சவடால் பதில்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, "நாங்கள் கேட்பதைப் புரிந்து கொள்ளும் சக்தி இவருக்கு இருக்கிறதா?" என்று அனுதாபமான ஒரு சந்தேகத்தை அடார்னி ஜெனரலிடம் கேட்டார்.  இந்த அளவு கரிசனம், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்கும் ஒரு சாதாரண மனிதருக்கு நீதிபதிகளிடமிருந்தே கிடைப்பது அவரது அதிர்ஷ்டம்.  ஆனாலும் சில நடைமுறை காரணங்களுக்காக கர்ணனிடம் சுப்ரீம் கோர்ட் காண்பித்த மென்மையான அணுகுமுறை சரியானதுதான்.

         கோர்ட்  அவமதிப்பு  செய்ததற்காக  கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்பினால், அதை ஏற்று அவர் மீதான நடவடிக்கையை அதோடு முடித்துக் கொள்ளும் தாராள மன நிலையைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்ச் 31ம் தேதி வெளிப்படுத்தினார்கள்.  ஆனால் கர்ணன் அதற்கு இசையவில்லை. தனது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் தராமல், ஒரு தெளிவான நிலையும் எடுக்காமல், தடம் மாறியவாறே அவர் பதில் அளித்தார்.  ஒரு கட்டத்தில் தனக்கு மன நலம் கலங்கி இருக்கிறது என்றும் ஏதோ அர்த்தத்தில் சொன்னார். கடைசியில், கர்ணன் தனது பதிலை எழுத்து மூலமாகத் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.  பிறகு ஏழு நீதிபதிகளும் எழுந்தபோது, "அடுத்த வாய்தாவுக்கு நான் வரமாட்டேன்" என்று கர்ணன் அவர்களிடம் விறைப்பாகச் சொன்னார். அப்போதும் அந்த நீதிபதிகள் அமைதி காத்தனர். பொது நலனில் அக்கறை உள்ள எவரும் வருத்தப்படும் காட்சியைத்தான் கர்ணன் கோர்ட்டில் உருவாக்கினார்.

         இருபது   நீதிபதிகள்    மீது   கர்ணன்   ஊழல்    குற்றச்சாட்டு வீசிவிட்டு, 'தவறென்றால் அவர்கள் தனித்தனியாக என்மீது வழக்கு போடட்டும். அவர்களும் நானும் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம். அதை விடுத்து என்மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு ஏற்பட்டு நான் மட்டும் கோர்ட்டில் ஆஜராகி ஏன் பதில் சொல்லவேண்டும்?' என்று கேட்க முடியாது. ஒரு நீதிபதியைப் பற்றி பொதுப்படையாக 'அவர் ஊழல் செய்கிறார்' என்று எவரும் ஆதாரம் தராமல் பேசிவிட்டு,  அந்த நீதிபதியை கோர்ட் படியேற வைப்பது முறையல்ல. அந்த வழிமுறை மற்றவர்களுக்குத் தான் பொருந்தும். அதனால்தான் மத்திய மந்திரி அருண் ஜெயிட்லி, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கோர்ட்டில் இப்போது மான நஷ்ட வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார். 

     தான் ஒரு தலித் என்பதால்தான் தனக்கு  எதிரான கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை வந்தது என்று கர்ணன் பகிரங்கமாகச் சொல்கிறார்.  இந்தக் குற்றச்சாட்டு நிச்சயம் தவறு - கோர்ட் அவமதிப்பை விடவும் அதிக வருத்தத்திற்குரியது.

           மண்ணும் மொழியும் மதமும் ஜாதியும் நமக்கு அதுவாக வந்து சேரும் பிறவி அடையாளங்கள்.  இவற்றை நமக்குள் ஒற்றுமையை வளர்க்க நல்ல விதமாகப் பயன்படுத்தலாம், அல்லது நம் தவறுகளை மறைக்கும் திரையாக குயுக்தியாகவும் வெளிப்படுத்தலாம். இந்த அடையாளங்களை இப்படியோ அப்படியோ கையாள்பவர்கள் எல்லா இடத்திலும் உண்டு. அது அவர்களின் தனி மனிதப் பண்புகளைப் பொறுத்தது. ஆனால் ஒன்று.  ஒருவரின் தனிமனித குணங்களைக் கவனிக்காமல் அவரின் பிறவி அடையாளங்களை மட்டும் வைத்து, அவர் மதிக்கத்தகுந்தவர் அல்லது வெறுக்கப்பட வேண்டியவர் என்று எவர் நினைத்தாலும் அது அறியாமையும் அநாகரிகமும் ஆகும்.
     
           ’ஒரு தலித் என்பதற்காகவே நான் குறி வைக்கப் படுகிறேன்’ என்று கர்ணன் சொல்வது, தலித் அல்லாதவர்கள் மீது அவர் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டாகிறது. இதனால் அவர் தலித்துகளின் பாதுகாவலன் என்கிற தோற்றம் யாருக்கேனும் ஏற்பட்டால் அது சரியல்ல.  'பிற நீதிபதிகள் ஊழல்வாதிகள் எனக் குற்றம் சொல்லி அதற்கான ஆதாரங்களையும் கர்ணன் காண்பிக்கவில்லை என்றால் அது பெரும் தவறு, அதற்கான சட்ட விளைவை அவர் ஏற்கவேண்டும்' என்று பலர் நினைப்பார்கள். இதனால் அவர்கள் தலித்துகளின் விரோதி என்கிற எண்ணம் யாருக்கேனும் தோன்றினால் அதுவும் சரியல்ல. இதை இன்னொரு வழியில் புரிந்துகொள்ள மற்றொரு இந்தியரை நினைத்துப் பார்க்கலாம். அவர் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம்.
  
          கலாம்  ஒரு  முஸ்லிம்.   தனிப்பட்ட   வாழ்க்கையிலும்  பொது வாழ்விலும் உயர்ந்த குணங்கள் உடையவராக இருந்தார். தவறுகள் ஏதும் செய்து அவற்றை மறைக்கத் தனது மத அடையாளத்தை அவர் முன் நிறுத்தவில்லை. ஆகையால் வேறு மதத்தைச் சார்ந்த லட்சக் கணக்கானவர்களின் நேசத்தையும் பாராட்டையும் பெற்றார்.

       தனி  மனிதச்  சிறப்புகளால்தான்   ஒருவர்  தானும்  உயர்ந்து தனது தேசத்துக்கும், மொழிக்கும், மதத்திற்கும் ஜாதிக்கும் பெருமை சேர்க்க முடியும். தானாக வரும் பிறவி அடையாளங்கள் மட்டும் எவருக்கும் உயர்வு தராது. மஹாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா, மியன்மாரின் ஆங் சான் சு சி, தமிழ்நாட்டின் காமராஜ் ஆகியோர் தமது தனிமனிதச் சிறப்புகளால் அவர்களது பிறவி அடையாளங்களுக்கும் ஒளி சேர்த்த இன்னும் சிலர்.

       இந்தியாவில்  அநீதியைச்  சந்திக்கும் தலித்துகள் ஏழைகள். அதிலிருந்து அவர்கள் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். வசதி படைத்த கர்ணன் தவறு செய்கிறவர், அதன் விளைவுகளை சட்டப்படி சந்திக்க வேண்டியவர்.  இது போன்ற நுண்ணிய வித்தியாசங்களை மக்கள் எல்லா சம்பவங்களிலும், எல்லா வகை மனிதர்களிடத்தும், புரிந்துகொள்ள வேண்டும் – அது இன்னும் முக்கியம்.  படிப் படியாக அந்த நாள் இந்தியாவில் வரக் காத்திருப்போம்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017  



Saturday, 25 March 2017

Justice Karnan, Quite Wrong Again


      Justice C. S. Karnan is in the news, for wrong reasons again.  He made  a statement unrelated to his functions as a judge of the Calcutta High Court.  That made him look really sorry.

      Seven judges of the Supreme Court sat together to enquire into a charge of contempt of court against Justice Karnan after summoning him. When he remained absent at the hearing without justification, the judges issued a bailable warrant of arrest to secure his presence in court.   Learning about the warrant he said publicly, as a party called to court, that he was being targeted since he was a “Dalit”, i.e., one belonging to certain caste groups which some other caste groups might look down upon.  Of course, no one becomes anyway low in status by birth, but that is a different issue. 

      Justice Karnan’s accusation against the seven Supreme Court judges is plainly unimaginable.  It can only be untrue.  He says, in effect, two things:  one, the contempt-of-court charge brought against him is groundless; two, he has been spitefully charged because he is a Dalit.

         Justice Karnan has no quarrel with the law of contempt  of court, and he accepts it as a desirable law.  All he says is that he was slapped with a charge of contempt of court for dishonourable reasons even as he committed no contempt.  As one trained in law and legal procedures, he should know that first and foremost he should explain himself to show that he did not commit any contempt.   He could do that only by coming to court, and that is the way to go about for anyone similarly charged.  If he is not keen to answer the charge and merrily makes counter charges against judges who try the case, he will not convince anyone.  Assume you are driving, a traffic policeman stops you and he asks for your driving licence.  Without producing your licence if you yell at him, “You are checking my papers because of my caste!” what can anyone make out?  

       Look at another scenario.  A judge, also a Dalit, issues notice to someone to answer a charge of contempt of court.  The person summoned belongs to a different caste group, he refuses to answer the charge and says publicly, “The judge calls me to court out of ill will since I belong to a particular caste group”.  Here, that man is unconvincing as Justice Karnan.  

        I am sure there are millions of Indians who are not Dalits and who don’t feel any superiority over Dalits.  That is the reality, showing that many men and women anywhere in the world are generally good to fellow human beings.  Many such good souls in India are not expressing their disapproval of Justice Karnan’s reaction to Supreme Court’s move, so they may not be misunderstood.  Their silence would not mean that Justice Karnan attracts less opposition to his utterance.

        Dalits who face oppression or other misfortune in life are mostly uneducated and poor, usually residing in villages.  Among them if one acquires some university education and gets to do well in life – especially if he shifts to bigger cities and works there – he will not stick with others of his group who are not so well-educated or well-placed.  He will keep more distance from them as he gets more affluent, privately relishing his good fortune among the less fortunate.   The less fortunate would also naturally shrink from the more fortunate in their group, feeling a little scared.  This happens between an affluent person and a poor person in any caste group, Dalit or non-Dalit.  This is a common human trait all over the world, in every walk of life.  This is because affluence creates a class of its own, and earns a respect of its own.  Like the Americans and the Saudi Arabians have it in the eyes of poorer nations.
  
        So when Justice Karnan has come up in life, holds the high status of a High Court judge and is fairly affluent, it is impossible – for a worldly reason – that he will suffer discrimination or hatred at the hands of others. Certainly not from seven judges of the Supreme Court at one go.

       With a false and fanciful accusation, Justice Karnan might induce some Dalits to guess a contempt action is brought against him because he is a Dalit.  He might also leave some others wondering if his brazen disrespect to Supreme Court’s authority points to a flaw in India’s public policy on appointments to high posts.  Both these lines of thinking are incorrect for different reasons, in different measures.  In any case, in the present controversy India’s poor innocent Dalits are not being helped though they are mentioned.  The consequence is as grave as any contempt of the Supreme Court. But, sadly, no remedial action can be taken by anyone in the cause of the unfortunate Dalits.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


Sunday, 5 March 2017

Supreme Court Found Jayalalithaa Guilty. What Next?


      Last month the Supreme Court of India delivered a judgement the entire nation wanted to know what it would be.  It found the AIADMK supremo and former Tamil Nadu chief minister Jayalalithaa, her close friend Sasikala and two others guilty.  In a second-level appeal the top court overturned the Karnataka High Court’s clean chit to the accused persons, and fully approved the trial court’s findings that justified convicting all of them.

      The Supreme Court determined that Jayalalithaa amassed assets valued far more than her verifiable income during a five-year period when she was Tamil Nadu’s chief minister.  Possessing such unexplained assets is an offence under the Prevention of Corruption Act, 1988.  The court further found that all the four were in criminal conspiracy to advance Jayalalithaa’s object, and that the chief minister was aided by the other three to acquire her surplus assets.  Jayalalithaa did not live to learn about the Supreme Court’s judgement.  She died ten weeks before it was announced, and so the Supreme Court recorded that the criminal case against her 'abated'  that is, it had to be discontinued  though the judges opined that available proof clearly pointed to her guilty conduct under the anti-corruption legislation. 

      Did the trial court or the Supreme Court return a finding that Jayalalithaa took bribes in specific instances? No. That was not also required for their adjudication. When it was established in court that Jayalalithaa, a public servant, had acquired assets exceeding her income but could not explain how, anyone figures out how she could have made money to buy her questionable assets. If she had earned her money cleanly to finance those assets she would have revealed it to the court and cleared her name.  When she did not show proper lawful sources for her surplus funds which funded her excess assets, that was enough to consider her guilty under the anti-corruption law.  

      Most of the voters have not  grasped  a central fact recognised by the Supreme Court. That is, the Supreme Court declared that out of the four brought to justice, it was chief minister Jayalalithaa who had amassed all those excess assets, retaining much of them in the names of the other three and with some businesses floated by those three.  That means, Jayalalithaa had leaned on the other three to amass wealth by wrong means, not the other way around. The major offender was Jayalalithaa, the elected representative of people. That was the Supreme Court's finding.

        Laws in a democracy  place government  work in  the hands  of two classes of people – civil servants, and elected representatives who belong to political parties. Between them the elected representatives control and oversee the civil servants. When the two classes go about their jobs honestly, whether efficiently or not, people have their best chances to work and prosper.  This is basic to the working and growth of a democracy.  Here, if efficiency is lacking in administration there is always room for efficiency to enter.  The most stealthy way of undermining a democracy, while retaining its outward form, is by letting bribery and corruption flourish in government transactions. Then efficiency in administration too gets stifled and sidelined by design.

     If a ruling political leader in India makes money by corrupt deals on some government contracts and through special government favours, the common people would not know it easily.  Other politicians sniff out his corrupt ways, but most of them are not clean themselves and have either made their moneys the same way or are biding their time.

         Remember, a person in charge of  a  government has authority to make postings of key officers and personnel at places and in positions he wants them to serve.  If he makes gains through bribes or devious methods, he will also demand a routine share of unaccounted money and ask irregular favours from his ministers and officers he chooses for key government postings, knowing that they will take bribes or secure other personal benefits in their official work.  So the stream of corruption flows down.  It travels faster downstream – it seldom moves upstream from the bottom - and spreads wider too downstream.  The result is, a corrupt man at the top of an elected government picks the pocket of every citizen.  He won’t care where he takes it, whom he robs, in what amounts or for how long.  He would just want to cover his tracks as he keeps hunting.  And taking to corruption is like going in for luxuries.  You never feel you had enough.  

      A corrupt leader  heading  a government  could be efficient in keeping the government going, and be quite intelligent too.  He might remain popular through tricks and good luck.  But he blocks the best chances of progress and prosperity for the people. That is the chief reason why lots and lots of talented young Indians go to the US to do well and prosper easily, rapidly and surely. So, unlike other crimes of an elected leader, corruption hits ordinary citizens the hardest, though not quite visibly.  It is more devastating when an elected leader, like a chief minister, is the villain.  So our laws should deal with proven corruption among elected leaders more sternly than they do now – to leave a disheartening effect on those waiting in the wings.

        Adolf Hitler of the Nazi Party wrecked havoc in Germany through oppression and dictatorship.  It happened step by step after he was sworn in its Chancellor in January 1933 to head a coalition government.  He could get a law passed in the Reichstag, the German Parliament, called the Enabling Act of 1933 which gave the German Cabinet powers to enact legislation bypassing Parliament and departing from the German Constitution.  With that, he abolished labour unions and all other political parties and put his political opponents in prison.  From 1933 to 1945, he made his one-man rule by whim look legal. He presided over the genocide of about 6 million Jews in a hate campaign.

       After Germany was defeated in the Second World War and Allied forces occupied the country in 1945, the Nazi Party was banned.  The present German Criminal Code outlaws use of all symbols of unconstitutional organisations, except for purposes of art or science, research or teaching.  It is a punishable crime in Germany to celebrate or promote Nazi symbols such as Swastika, Celtic Cross or the Nazi salute in support of the banned political party.  The country has legally prohibited any act to eulogise or revive the despotic Nazi Party, rather than leave it to the good sense of the people in the light of past experience.  Today you can't also see a statue of Hitler at a public place in Germany.

      We should  look upon corruption  among elected leaders as bad for the pride and development of our country as Nazism is viewed for Germany.   If we do that we need a change of law, somewhat to this effect: If the Supreme Court holds an elected representative, whether an MP, MLA or local councillor, guilty of an offence under the Prevention of Corruption Act, 1988, no one may say he was not guilty of that crime and no one may publicly say anything in praise of him or do anything publicly to preserve or propagate his name or memory in the political sphere.  Using any of his pictures or possessions for that purpose will also not be permitted.  The convict should also be banned from undertaking any political activity, being a member or leader of any political party and contesting elections for any political office, for the rest of his life.  Any co-conspirator or abettor, as confirmed by the Supreme Court, and his pictures and possessions, will also be subject to like prohibitions.

        Are we harsh or  unfair in  talking of a new law like this? No, we aren’t.  All political leaders humbly claim that people are their real masters.  If a servant is caught swindling his master’s funds, will the master dismiss the servant for ever or ban him for some years and welcome the culprit later?  Our legal system of today allows the corrupt political servant to be back working at the same place, or even a bigger household, after his jail term plus six years.  Meanwhile his sharers and associates keep singing his praise and awaiting his return.  Or if the culprit dies sooner, they openly adulate him and pep up his memory so they may cash in on his remaining fame and step into his shoes quickly – we know this will happen for sure. Then who are the real masters?    

* * * * *
  

Copyright © R. Veera Raghavan 2017

Thursday, 16 February 2017

ஜனநாயகத்தின் பாட்டைப் பாருங்கள்!


     எம்.ஜி.ஆர் முன்னிருத்தி அவர் பெயரை உச்சரித்துக்கொண்டு அரசியலில் வளர்ந்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

   ஜெயலலிதாவை ’அக்கா’ ’அம்மா’  என்று போற்றி, தானும் ‘சின்னம்மா’ என்று போற்றப்பட்டு, அரசியலில் இப்போது பெரிதாக வளர முனைகிறவர் சசிகலா. இவர்கள் இருவருக்கும் எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை முறையாக முடிப்பது நீதிபதிகளுக்கே பெரிய சவாலாக இருந்தது. கடைசியில் இந்த இருவரும், இன்னும் வேறு இருவரும், சொத்துக் குவிப்பு என்னும் ஊழல் குற்றத்தைச் செய்தவர்கள், ஆதற்காகக் கூட்டு சதி செய்தவர்கள், உடந்தையானவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால் சசிகலாவோ, அல்லது அவரிடம் பயத்தையும் பவ்யத்தையும் தொடர்ந்து காட்டும் பெருவாரியான அதிமுக எம்.எல்.ஏக்களோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கூட அங்கீகாரமும் மதிப்பும் காட்டியதாக ஒரு அறிகுறியும் இல்லை. மாறாக, பொதுவாழ்வில் ஒழுக்கமும் தூய்மையும் தேவையே இல்லை என்கிற தோற்றம்தான் தந்திருக்கிறார்கள். இது சரியான செயல் என்றால், எதிர்க் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வேறொரு ஊழல் வழக்கில் தீர்ப்பளித்து, அந்தக் கட்சியினரும் அப்படியான தீர்ப்பை உதாசீனம் செய்து குற்றவாளித் தலைவரைக் கொண்டாடினால் அதையும் அதிமுக-வினர் நியாயம் என்பார்களா? மாட்டார்கள்.


      சாதாரண  செருப்புத்  திருடன் கூட,  பிடிபட்டால் அவமானம் அடைகிறான். ஆனால் ஜெயலலிதாவும் அவர் தோழி சசிகலாவும் முறையற்ற வகையில் பெரும் சொத்து சேர்த்த குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றமே ஊர்ஜிதம் செய்த பின்னும், சசிகலா எந்தக் குற்ற உணர்வும் இல்லாது பவனி வந்தார். ’உச்ச நீதிமன்றம்தான் ஏதோ தப்பு செய்துவிட்டது, நீதிமன்றத்தை மன்னித்துவிடலாம்’ என்பது போல்தான் அவரும் அவரைச் சார்ந்த அதிமுக-வினரும் காட்சி தந்தனர். ஜெயில் தண்டனையை அனுபவிக்க சசிகலா பெங்களூருவுக்குச் செல்லும்போதும், அவர் காசிக்குப் புண்ணிய யாத்திரை போவது மாதிரியான சில வழிபாடுகளை இரண்டு நினைவிடங்களில் ஆதரவாளர்கள் புடைசூழ நிதானமாகச் சென்னையில் நிகழ்த்திவிட்டுப் புறப்பட்டார். அவர் ஜெயிலுக்குப் போன பின், ‘தியாகத் தாய் சின்னம்மா’ என்ற கோஷமும் எழுப்பி அவர் கட்சியினர் அவரைப் புகழ்கிறார்கள்.  இன்னும் என்னவெல்லாம் காணக் கிடைக்குமோ?

    எம்.ஜி.ஆர் திரையில்  பாடிய ஒரு பிரபலமான பாட்டின் முதல் இரண்டு வரிகள் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன. அவை: “நான்……… செத்துப் பொழச்சவண்டா. எமனை, பாத்து சிரிச்சவண்டா”.  மறைந்தவர் என்பதால் ஜெயலலிதாவை இந்த விஷயத்தில் விட்டுவிட்டு, சசிகலா இந்தப் பாட்டை எப்படி ஆரம்பிப்பார் என்று கேட்டால், இப்படிச் சொல்லலாம்: “நான் ……… சொத்துக் குவிச்சவடா! கோர்ட்டை, பாத்து சிரிச்சவடா!” 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017



Monday, 13 February 2017

சசிகலாவா பன்னீர்செல்வமா?


       சசிகலாவா பன்னீர்செல்வமா? யார் ஜெயலலிதாவுக்குப் பின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வர வேண்டும்? இப்போது மாநிலம் தீர்வு தேடும் பிரச்சனை இது.

        பன்னீர்செல்வமே    முதல்     அமைச்சராகத்    தொடரவேண்டும்,  சசிகலா வேண்டாம், என்பவர்கள் பிரதானமாகச் சொல்வது: ”சசிகலா அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் வந்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அரசாங்க முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி அதன் பயன்கள் எங்கோ போகும். பன்னீர்செல்வத்திடம் அந்தக் குறையோ ஆபத்தோ இல்லை. தவிர, பன்னீர்செல்வம் எளிமையானவர். சசிகலா மாதிரி, கும்பிடு போடுபவர்களை எதிர்பார்க்கும் தலைக்கனம் கொண்டவர் அல்ல. அது மட்டுமல்ல, சசிகலா எதிரியாக உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது, அதில் அவர் குற்றவாளி என்றாகித் தண்டனை அடைந்தால் அவர் உடனே பதவி விலகவும் ஏற்படும். ஆகையால் சசிகலா முதல் அமைச்சராகக் கூடாது, பன்னீர்செல்வம்தான் வரவேண்டும்.”

      சசிகலா முதல் அமைச்சராகப் பதவி ஏற்கவேண்டும் என்பவர்களின் வாதம்: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை எட்டுவதற்கான ஆதரவு, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாயிலாக அவருக்கு இப்போதுவரை உள்ளது.  இது வலிமையான வாதம். ஆனால் அந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் சுதந்திரமாக வாக்களிக்கும்போது பன்னீர்செல்வம் ஜெயிக்கிற அளவுக்கு அவருக்கே ஆதரவு தந்தால் அவர்தான் முதல்வர். ஆக இதெல்லாம் வெறும் எண்ணிக்கை விவகாரம். சட்டசபையில்  ஓட்டெடுப்பு நடந்தால் இது தெளிவாகும். அதில் வெல்கிறவர் முதல்வர் ஆவார். இருவருக்குமே எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு சட்டசபையில் கிடைக்காமல் போனால் சட்டம் வேறு தீர்வை வைத்திருக்கிறது.  இது போக,  பரவலாகப் பேசப்படாத விஷயங்கள் சிலவும் இதில் முக்கியமானவை. அதற்கு முன் சில சங்கதிகளைப் பார்க்கலாம்.   

        ’அண்ணாவின் ஆட்சியை நாங்கள்தான் அமைத்தோம், அல்லது அமைப்போம்’ என்று திமுக-வும் சொன்னது, அதிமுக-வும் சொன்னது. ஆனால் அண்ணா வேறு, கருணாநிதி வேறு, எம்.ஜி.ஆர் வேறுதான். இப்போது ’அம்மாவின் ஆட்சியை நாங்கள்தான் நிறுவுவோம்’ என்று சசிகலாவும் பன்னீர்செல்வமும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா வேறு, சசிகலா வேறு, பன்னீர்செல்வம் வேறுதான். மறைந்தவரின் பெயரைச் சொல்லி, ’அவரது ஆட்சியை நான் தருவேன்’ என்று எந்த அரசியல்வாதி சொன்னாலும் அந்தப் பேச்சில் உண்மை இருக்காது, தந்திரம்தான் இருக்கும். அரசியலிலும் ஆட்சியிலும் தந்திரம் தேவைதான்.  ஆனால் அதையும் தாண்டி, செயல் பேசவேண்டும். அதுதான் முக்கியம்.  ஆனால் பேசுவதுதான் பெரிய செயல் என்று தமிழ்நாட்டில் ஆகிவிட்டது.

       தீவிர  அரசியலுக்குப்  புதியவரானாலும்,  தனது 70-வது வயதில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகிறார். அதுவே ஜனநாயகத்தில் சாத்தியமாகிறது. அப்படி என்றால் 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் உதவியாளராக அவருக்கு மிக நெருக்கமாக இருந்து, கொல்லைபுற அரசியலில் காதோ காலோ வைத்திருந்த சசிகலா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக நினைப்பது ஜனநாயகத்திற்கு முரண்பட்டதல்ல.  ஆனால் அந்தப் பதவியை அடைந்து  மாநில அரசாங்கத்தை வழி நடத்த இவர் சிறந்தவரா என்பது வேறு விஷயம்.  இந்தக் கேள்வி பன்னீர்செல்வத்தை நோக்கியும் வரும்.

        ’சசிகலா    முதல்வராக   வந்தால்   அவர்    குடும்பத்தினர்   சிலர் அரசாங்க முடிவுகளில் – அரசு ஒப்பந்தங்கள் உட்பட – மூக்கை நுழைத்து அது இது செய்வார்கள், தமிழக அரசின் வருவாய் பெரிதும் குறையும்’ என்கிற எதிர் அணியின் குற்றச்சாட்டு, பொதுமக்கள் பலரின் மனதிலும் எதிரொலிக்கலாம்.  ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்ந்தால் அந்த ஆட்சி சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்காது.  இதை மேலும் விளக்கலாம்.

  தற்போதுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்  அனைவரும்  சடாரென்று பன்னீர்செல்வத்துக்குத் தங்கள் ஆதரவை அளித்து அவரை முதல்வர் ஆக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பன்னீர்செல்வத்தின் கீழ் யார் யார் அமைச்சர்கள் ஆவார்கள்?  அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவையே முதல்வர் ஆக்கியிருந்தால், அப்போது சசிகலா ஆட்சியில் எந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆவார்களோ, அவர்கள்தான் அனேகமாகப் பன்னீர்செல்வம் ஆட்சி அமைத்தாலும் அமைச்சர்களாக இருப்பார்கள்.   இருவரில் ஒருவர் முதல்வராக ஆனால் அந்த அமைச்சர்கள் ஊழல் அமைச்சர்களாக இருப்பார்கள், மற்றவர் தலைமை ஏற்றால் அதே அமைச்சர்கள் மிகச் சரியாக, நேர்மை தவறாமல் வேலை செய்வார்கள் என்று வராதே?   இருவரின் ஆட்சியிலும் அமைச்சர்கள் பெரிதும் வேறு வேறானவர்கள் ஆனாலும், தமிழ்நாடு பல வருடங்களாகப் பழக்கப் பட்ட அடிப்படை அமைச்சர் குணம் மாறாது.  இருவரில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் நேர்மை ஓங்கி நிற்கும் என்ற தோற்றம் நமக்குக் கிடைக்கவில்லை.

     பன்னீர்செல்வம்  ஏன் சசிகலாவை எதிர்க்கிறார்? தான் முதல் அமைச்சர் ஆவதற்குத் தடையாக சசிகலா திடீரென்று வந்துவிட்டாரே என்று அவருக்குத் தாமதமாகத் தோன்றியதுதான் காரணம்.  சசிகலாவின் குடும்ப சொந்தங்கள் அவரிடம் இருந்து ஏற்கனவே விலகிப் போயிருந்தால், அப்போது பன்னீர்செல்வம் சசிகலாவைக் கடைசிவரை எதிர்க்காமல் சசிகலாவே மீதமுள்ள நாலரை ஆண்டுகளும் முதல்வராக இருக்க ஆதரவு கொடுப்பார் என்பது நிச்சயமா? இல்லை. பன்னீர்செல்வத்தின் முதல்வர் ஆசை தவறானதும் அல்ல.   ஆனால் அது நிறைவேறினாலும், தமிழ் நாட்டு ஆட்சியில் நேர்மையும் திறமையும் எழுந்து நிற்கும் என்பதற்கான தெளிவான அறிகுறி இல்லை.

           தமிழக ஆளுனர் எவரையும் ஆட்சி அழைப்பதற்கு முன்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து அது சசிகலா முதல்வராகத் தடையாக இருந்தால், பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இன்னும் கூடி சசிகலா தரப்பை மிகவும் பலவீனப் படுத்தும்.  அது எப்படி அமைந்தாலும் இதைச் சொல்ல வேண்டும்.

     அதிமுக-வில் சசிகலா பெற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவர்மேல் உள்ள நம்பிக்கையினாலோ மரியாதையினாலோ ஏற்பட்டதில்லை.  ’கட்சிக்குள் யாருமே எதிர்க்காமல் இருக்கும் இவரை நாம் ஆதரிக்காவிட்டால் நம் கதி என்னாகுமோ’ என்கிற கிலியில்தான் பலர் அவரை ஆதரித்திருப்பார்கள்.  எம்.ஜி.ஆர் இருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைவர்களும் கடவுளைக் காண்கிற பரவசத்தொடு அவரை அணுகினார்கள். ஜெயலலிதா தலைமை ஏற்றபிறகு அவர் மறையும் வரை அவரிடம் எம பயம் காட்டி வளைந்தார்கள்.  பின்னர் சசிகலா கட்சியில் தலை எடுத்தவுடன் அவரை எம துதராகப் பாவித்துக் கைகூப்பி அவரிடம் நடுக்கம் கொள்கிறார்கள்.  இப்போது பன்னீர்செல்வம் தனி அணியாக நின்ற பின் அவரிடம் வந்து சேரும் கட்சித் தலைவர்களும் எம்.எல்.ஏ-எம்.பிக்களும் அவர் பக்கம் தலை நிமிர்ந்து நின்று அவரிடம் பொன்னாடை வாங்கிக் கொள்கிறார்கள். பன்னீர்செல்வம் பரவலான ஒரு அனுதாபத்தை ஈர்க்கிறார்.  

       தான் முதல் அமைச்சராக இருக்கும்போது கூட, கட்சியில் இருக்கும் அடுத்த கட்டத் தலைவரை, மனிதனாக மதிக்கும் பன்னீர்செல்வத்தின் பண்பு அதிமுக-வில் பல வருடங்கள் தென்படாத ஒன்று. அத்தகைய பண்பு கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரையும் கவர்ந்து, அதன் விளைவாக சசிகலா தரப்பிலிருந்து பலர் பன்னீர்செல்வத்திடம் வந்து சேர்ந்திருப்பது அதிமுக-வில் ஒரு நல்ல அரசியல் பண்புக்குக் கிடைத்த வெற்றி.  இது சசிகலாவிடமிருக்கும் செருக்கையும் சற்றுக் குறைத்து அவர் பக்கமிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் முதுகையும் ஓரளவு நிமிர்த்தும்.

    ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராகச் சிறப்பாகவும் கண்ணியமாகவும் செயல்பட்டிருக்கிறார். இப்போது சசிகலாவுடன் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது அணிக்கு வரும் கட்சியினரைப் பணிவாகக் கனிவுடன் நடத்துகிறார்.  இதெல்லாம் டெலிவிஷனில் தமிழ்நாடே பார்த்தது. மாநிலம் முழுவதும் மக்கள் பன்னீர்செல்வத்தை விரும்புவது முன்னைவிடவும் – அதாவது ஜெயலலிதா காலத்தை விடவும் - அதிகமாகிறது. ஆகையால் அவருக்கு அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள்-எம்.பிக்கள் ஆதரவு கொடுத்தால் அவர்களுக்குத் தொகுதிகளில் மக்கள் ஆதரவு இன்னும் கூடும் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் கவிஞனின் கற்பனையாக ஒன்றை நாம் ஆனந்தமாக நினைத்துப் பார்க்கலாம்.   அது இதோ.

        அதிமுக எம்.எல்.ஏக்கள்  ஆதரவுடன் பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்கிறார். அதில் பங்கு பெறும் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, ”நீங்கள் நேர்மை தவறக்கூடாது. உங்கள் துறைகளில் முறைகேடுகள் எதுவும் நேராமல் விழிப்புடன் கவனியுங்கள். தவறினால் என்னிடமிருந்து நடவடிக்கை வரும். இந்த நல் நடத்தையை உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று எச்சரிக்கை சொல்கிறார். அதோடு, “நேர்மையான ஆட்சியைக் கொடுப்பேன்” என்று மக்களிடமும் பகிரங்கமாகப் பேசி அமைச்சர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் லஞ்ச-ஊழல் எண்ணத்தை மட்டுப் படுத்துகிறார். தமிழகத்தின் சில பல்கலைக் கழகங்களிலாவது அறிவில் சிறந்த நேர்மையானவர்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கிறார். இவையெல்லாம் ஆட்சியில் பலனும் தருகின்றன. . . . . . .

         அரசாங்கத்தில் அசாதாரணத் திறமையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் நேர்மையைப் புகுத்துவதே பொது நலனைப் பெரிதும் உயர்த்தும்.  இதைச் செய்ய முடியும் என்பதைக் கூட, சசிகலாவை விடப் பன்னீர்செல்வத்திடம் தான் நினைத்தாவது பார்க்க முடியும். பன்னீர்செல்வம் முதல்வராக வருகிறாரோ இல்லையோ, வந்தாலும் இவ்வகையில் செயல்படுவாரோ இல்லையோ, இப்படிக் கவிஞனின் கற்பனையாக நம் மனம் சிறகு விறித்து மகிழ்வது என்ன ஒரு இனிமை! இன்றைய ஜனநாயகத்தில் இப்படித்தான் நமக்கு ஆனந்தம் வாய்க்குமோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


Monday, 6 February 2017

சசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது


       சிலர் விரும்பியது நடக்கப் போகிறது. சிலர் பயந்ததும் நிகழப் போகிறது. சசிகலா தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகப் போகிறார். அதிமுக-வின் தமிழக எம்.எல்.ஏக்கள் அவரை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து, அந்த வைபவம் அரங்கேற வழி செய்திருக்கிறார்கள். அதை முன்னிட்டு பன்னீர்செல்வமும் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

    தனக்குப் பிறகு அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சசிகலா வரவேண்டும் என்று மறைந்த ஜெயலலிதா விரும்பி இருப்பாரா? இல்லை, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடன் நெருங்கி இருந்தாலும் சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் எப்போதும் பதவி கொடுக்கவில்லை.   பதவி ஏதும் கொடுத்தால் சசிகலா மெள்ள மெள்ள தனக்குப் போட்டியாக கட்சிக்குள் வளரலாம் என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா சசிகலாவுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை.  அப்படியானால், ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் அடங்கி ஒடுங்கி அவர் புகழ் பாடிய அதிமுக எம்.எல்.ஏக்கள், அவர் மறைவுக்குப் பின் ஏன் சசிகலாவின் இத்தகைய ஏற்றத்திற்கு உடன்படுகிறார்கள்? இதற்கான பதிலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் ஒரு கடந்த கால நிகழ்சியைப் பார்த்துவிட்டு வரலாம்.

             பிரதமர்   ஜவஹர்லால்    நேரு    மறைந்த  பிறகு  அவரின் தனி உதவியாளர் எவரும் - நேருவுடன் சேர்ந்து அவரும் சிறை சென்றிருந்தாலும் - இந்தியாவின் பிரதமராக ஆகி இருக்க முடியாது, அப்படி நடக்கவும் இல்லை.  நேருவும் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது.  நேருவை விடக் கட்சியில் அதிக அதிகாரத்துடன் இருந்த ஜெயலலிதாவும் அது மாதிரியான ஒரு தலைமை மாற்றத்தைத் தன் கட்சியிலும் விரும்பாத போது, அது அதிமுக-வில் நடக்கிறது.  அதற்கு ஒரே காரணம் நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் இருந்தது, ஜெயலலிதாவின் அதிமுக-வில் அது இல்லை. நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் தழைக்க நேருவின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம்.  ஜெயலலிதாவின் அதிமுக-வில் ஜனநாயகம் நலிய ஜெயலலிதாவே காரணமாக இருந்தார்.

      பழைய காலத்துக் காங்கிரஸ் கட்சி நேருவின் மறைவுக்குப் பின் நாட்டு நன்மையையும் கட்சியின் ஜனநாயகப் பண்புகளையும் கருத்தில் கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.  தான் பிரதமராக இருக்கும்போதே இறந்தால், ஆட்சியில் தலைமை மாற்றம் நேர்வது இந்த முறையில்தான் அமையவேண்டும் என்பது நேருவின் விருப்பமாகவும் இருந்திருக்கும்.  எதேச்சாதிகாரம் மிகுந்த ஜெயலலிதாவின் அதிமுக-வில், எதேச்சாதிகார அதிபதியும் அவரை அண்டியிருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் தனக்கு எது பிடிக்குமோ, அதற்கு எது உகந்ததோ – ஆதிக்கம் செலுத்துவதோ, அதன் கீழ் தழைப்பதோ – அதைத்தான் செய்வார்கள்.  அந்தக் கட்சியின் அதிபதி மறைந்தபின் அதன் அடுத்த கட்டத் தலைவர்கள் கட்சியில் எந்த மனிதரின் கீழ் சேவகம் செய்து தாங்கள் நிலைப்பதும் தங்கள் நலனைக் காப்பாற்றுவதும் சுலபமோ, அவரைத்தான் தலைவராகக் கொண்டாடுவார்கள், ஆதரிப்பார்கள். ஆகவே சசிகலா முடிந்தவரை அடுத்த அதிபதியாக இருக்க ஆசைப் படுவதும், எம்.எல்.ஏக்களும் மற்ற தலைவர்களும்  அவர் தலைமையை ஏற்பதும், அவர்களின் மாறாத இயற்கை குணங்கள். இருந்தாலும் ஜெயலலிதா பெற்றிருந்த தனிப்பட்ட மக்கள் செல்வாக்கில் சிறிதளவும் பெறாதவர்கள் மற்ற அதிமுக-வினர், சசிகலா உட்பட.  ஜெயலலிதாவுக்குப் பின் அவர் அமைத்த ஆட்சியை அதிமுக-வில் யார் முதல்வராகித் தொடர்ந்தாலும், திக்-திக் மனதோடுதான் ஆட்சி செய்யவேண்டும்.  யார் காலை எவர் எப்போது வாருவார்களோ?

       பல விமரிசகர்களும், சில எதிர்க் கட்சித் தலைவர்களும் சசிகலாவைவிட பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர், பன்னீர்செல்வமே தொடரலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சாதுவான கைப்பாவையாகத்தான் விரும்பிச் செயல்படுவார்.  ஏற்கனவே ஜெயலலிதாவின் நிழலாக முதல் அமைச்சர் பதவியில் இருந்த மாதிரி, இப்போது சசிகலாவின் சார்பாகத்தான் அந்தப் பதவியில் இருப்பேன் என்று அவரே தெளிவாகத் தன்னைக் காண்பித்திருக்கிறார்.  அசல் நடிகரே கேமராவுக்கு முன் வந்து நடிக்கிறேன் என்கிறபோது டூப் நடிகர் எதற்கு? 

              இன்னொரு விஷயம்.  சோனியா காந்தியின் பிரதிநிதியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பின்னால் இருந்தவரின் மருமகன் மீது எவ்வளவு ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச் சாட்டுகள் வந்தன?  பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அது மாதிரியான குற்றச்சாட்டுகள் பலர்மீதும் எழத்தானே செய்யும், அவை எளிதில் வெளிச்சத்துக்கு வராத தடுப்புக் கவசமாகத் தானே அவரும் இருக்க நேரிடும்?  ஆகையால் சசிகலாவுக்குப் பதில் பன்னீர்செல்வம் முதல்வராக – அதாவது சசிகலாவின் சொல்பேச்சைக் கேட்கும் முதல்வராக – இருக்கட்டும் என்பதில் அர்த்தமில்லை.  

      ‘எனக்குப் பிடித்தமானவர் எதேச்சாதிகாரியாக இருந்தால் பரவாயில்லை. அவரைப் போற்றுவேன்.  ஆனால் எனக்குப் பிடிக்காதவர் அப்படியாக வந்தால் நான் எதிர்ப்பேன்’ என்று பரவலாகப் பல மக்களும் அப்பாவித்தனமாக எண்ணுகிறார்கள். மக்களின் அந்த எண்ணம் மாறும் வரை, அரசியல் சட்டம் அளிக்கும் ஜனநாயகம் அவர்களுக்குச் சிறிய நன்மைகளே தரும். எதேச்சாதிகாரர்களுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், அவரைப் போற்றும் கட்சியினருக்கும்தான் பெரு நன்மைகள் செய்யும்.  இது எதோ ஜெயலலிதாவையும் அதிமுக-வையும் மட்டும் நினைத்து சொல்லப் படுவதில்லை.  வேறு பல தமிழக கட்சிகளுக்கும், வெளி மாநில கட்சிகளுக்குகும் இது பொருந்தும்.  இன்றைய காங்கிரஸ் கட்சியே வருத்தம் தரும் உதாரணம்.

          ’எல்லாம்  சரி.   சொத்துக்   குவிப்பு   வழக்கில்  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எப்போதும் வரலாமே, அது சசிகலா முதல் அமைச்சராகத் தொடர்வதற்குத் தடையாக இருக்கலாமே?’, என்று யாராவது கேட்டால், சசிகலா ஆதரவாளர்களின் மனதில் இப்படி ஒரு பதில் ஓடலாம்: “ஒன்றும் பிரச்சனை இல்லை. சமத்தான ஒரு டூப் முதல்வரை அமர்த்திவிட்டு, சசிகலா தியாகி பட்டம் வாங்கிக் கொள்ளலாம். நமது ஜனநாயகத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் சிறை சென்றுவந்து, பின்னர் முதல் அமைச்சர் ஆவது கடினம்.  ஆனால் ஒரு பெரிய பதவியில் இருக்கும் போதே அவர் சிறை செல்ல நேர்ந்தால், பதவியைத் துறந்த தியாகி என்ற பெயரோடு அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு பெருகும்.  பின்னர் அவர் வெளிவந்து தேர்தலில் போட்டியிடும் போதுகூட, பலரையும் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அவரும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம்!” எனது ஊகம் உங்களுக்கும் தோன்றினால் புன்னகைப்பீர்கள்.  இல்லை என்றால் முகம் சுளிப்பீர்கள்.  எது உங்கள் முகபாவம்?
* * * * *

Copyright © R. Veera Raghavan 2017  


Tuesday, 31 January 2017

Tamil Nadu’s Jallikattu Protest: Can We Take Pride?


      This was prime national news this month.  A continuous six-day protest was staged on Chennai’s Marina beach by several thousand students and educated young men and women demanding that Tamil Nadu allow jallikattu, a sort of bull-taming sport.  That sport was played in parts of the State’s rural areas but remained banned by the Supreme Court on legal grounds.   Parallel agitations by youngsters at other towns in Tamil Nadu strengthened the clamour for the sport. The State and Central governments yielded, and Tamil Nadu brought in a new law at express speed which removed the court-imposed ban on jallikattu. 

      Here I am not on the merits of permitting or banning jallikattu.  Hooligans mingling with the protesters and spreading violence, post success, at Chennai should be tackled separately by the police. As to the legal worth of the new Tamil Nadu law, the Supreme Court will decide.   Let us look at other things.  First, the backdrop.

      Protesters at the Marina kept swelling from day one, reaching 30,000 or even more at its peak by different estimates. Despite their number, they were not unruly.  They helped regulate traffic on the beach road and themselves cleaned their surroundings all those days.  The unpolitical stance of the Marina activists drew more protesters at Chennai and elsewhere, made many people sympathise with them and forced politicians to shy away from them.  Also, with an emotional tang among lots of Tamils, the jallikattu issue put a glow to their fight. 

   There is a general euphoria that the victorious uprising for jallikattu is a well-deserved snub on India’s corrupt and self-indulgent political class, marking a special moment for democracy.  That is true, but not all the way.  Equally true are a few allied things.

      Tamil Nadu’s massive agitation was possible because the State government allowed protesters to gather in big numbers without legal permission at the Marina and elsewhere and grow to unmanageable sizes. The AIADMK which rules the State feared that if the government moved to stop and scatter the crowds the Opposition would term it a police excess and steal the support of all asking for jallikattu. So the government kept quiet and let the problem become bigger, until it woke up late, worked hectically and changed a statute through executive orders to permit jallikattu, with Central government support. 

      Outwardly, every political party including the AIADMK has given credit to the Marina fighters. That was because no part of the glory goes to a rival political party. But no party in power and no government should be overawed and subdued publicly, with protesters breaking the law and breathing down its neck to get their demands met.  

      If the youth congregating at the Marina had been evacuated when they were in a few hundreds, Tamil Nadu would not have faced an overly giant and dominating protest later.  If a growing gigantic agitation like this – in breach of the law regulating protests at a public place – is justified as democracy in action, Karnataka activists could do it in Bengaluru demanding changes in the inter-State river water law, so Karnataka may control the Cauvery river and deny Tamil Nadu its due share of the river water. It is good to remember: Democracy does not mean getting every freedom for the people.  It means people surrendering a few of their freedoms to the State in exchange for more valuable freedoms. 

      True, the  Marina experience may help the young participants stay determined for anything worthy in their future lives, and many of them may discover their leadership qualities.  A majority of them would not have seen a jallikattu before, and a good number of them might not have sighted a bull earlier – but still they will have these personal gains.  At the other side, their large assembly and victory are a side-effect of the phoney and combative democracy played by political parties in Tamil Nadu, and elsewhere too.  If major opposition parties in the State will not enjoy and exploit every bad moment, and illegal challenge of authority, faced by a ruling party – here imagine any party in power and any party in the Opposition – the government could have stalled the agitation, began without legal permission, at its early stage.  If an issue is so overwhelmingly important, touching the hearts and minds of the people of the entire State – that was the impression created by the jallikattu agitators – the way forward is protesting at legally permitted venues without violating regulatory laws or electing a government that helps make the desired law. The Marina spectacle is a right group of people setting a wrong precedent. 

      How did the Occupy Wall Street  protest of 2011 go off in the US?  It lasted from 17th September to 15th November of that year, much longer than the Marina agitation, though with lesser crowds.  Organisers of Occupy Wall Street were considering three locations in New York City to stage it.  The police learnt about their plans and fenced off two of them which were public spaces, and so the protesters assembled at the third alternative venue, Zuccotti Park which was private property.  New York City does not allow use of amplified sound unless a permission is issued.  The protesters had no such permission and so could not use loudspeakers at Zuccotti Park.  Speakers had to rely on their vocal chords to make speeches which were repeated word for word by voice helpers standing a little away from the speakers, which were again repeated by more voice helpers stationed further down, to let the widespread listeners hear.  Finally, when the owners of Zuccotti Park issued notice to the protesters to leave, policemen in riot gear started removing the protesters, arresting 200 persons in that process. In democratic India, can you imagine protesters following the law this much while doing a public protest against a government?

       No bandhs or forced train stoppages happened in New York City during the eight-week protest it witnessed, while they happened like normal events in Tamil Nadu during Chennai’s one-week agitation at a grabbed public space.   As Occupy Wall Street ended, the Mayor’s office in NYC released a statement which included this: No right is absolute and with every right comes responsibilities. The First Amendment gives every New Yorker the right to speak out – but it does not give anyone the right to sleep in a park or otherwise take it over to the exclusion of others – nor does it permit anyone in our society to live outside the law.”   

      During the Marina protest, did we hear comparable words from Tamil Nadu chief minister or from leaders of any political party in India?  No, but our laws and the US laws will be the same for the Marina scene.   Then, is our democracy staying fit or trembling?  The young, earnest, unpolitical Marina protesters have something to introspect.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


Saturday, 14 January 2017

ஜல்லிக்கட்டில் ஓட்டில்லாத காளை மாடு


      என்ன நடக்கிறது ஜல்லிக்கட்டு விளையாட்டில்?  இதைத் தெரிந்து கொள்ள நீங்கள் அந்த விளையாட்டுத் திடலுக்குச் செல்ல அவசியம் இல்லை. அதன் விடியோ காட்சிகளை இணையத்தில் பார்க்கலாம்.  பார்த்து பரிதாபப் படலாம் – மாட்டுக்கும் மனிதனுக்கும் சேர்த்து.

         சிலர் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டு என்கிறார்கள். சிலர் வீர விளையாட்டு என்று பெருமையோடு சொல்கிறார்கள். இன்னும் சிலர் தமிழ் நாட்டின் வீர விளையாட்டு என்று பிரகடனம் செய்கிறார்கள்.   எது விளையாட்டு?

         ஒருவர்    மற்றவரோடு    அல்லது     இன்னொரு    பிராணியோடு விளையாட வேண்டும் என்றால் இரண்டு பேருக்கும் அந்த விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது விளையாட்டு என்று ஆகும்.  இரண்டு பேர் கூடி பாண்டி ஆடலாம், சீட்டாடலாம், டென்னிஸ் ஆடலாம் – ஏன் சட்டசபைக்குள்ளேயே தலைவர் சொல்படி தர்ணா செய்யலாம்.  இதெல்லாம் விளையாட்டு.  வளர்ப்பு நாயோடு ஓடிப் பார்ப்பதும்,  எறிந்த பந்தை அது விரட்டிக் கவ்வித் திரும்புவதும் விளையாட்டுதான். புலி தனது முன்னங்கால்களைத் தூக்கி, பழக்கியவரின் தோள்கள் மீது வைப்பதும் அவர் புலியைத் தழுவி நிற்பதும் இருவருக்கும் விளையாட்டு. மனிதர்களோடு நீரில் நீந்தி பல வித்தைகள் செய்கிறது டால்ஃபின். அது இர தரப்பினருக்கும் விளையாட்டு. ஆனால் காளை மாட்டை மிரள வைத்து, அதைத் தப்பிக்கவிடாமல் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து சீண்டி இழுப்பதும் அதன் திமிலைப் பிடித்து  அமுக்குவதும் மாட்டுக்கு விளையாட்டல்ல, வினை.  சிறுத்தைப் புலி கூட நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கூட்டமாகப் பார்த்தால் அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஒளியப் பார்க்கும்.  ஜல்லிக்கட்டில் காளை மாட்டுக்கும் அதே கதிதான். ஆனால் என்ன, மனிதர்கள் இல்லாத காடு சிறுத்தைக்கு உண்டு.  மனிதர்களிடையே வாழும் காளை மாட்டுக்கு ஓட்டு இல்லை.  பிறகு அரசியல்வாதிகள் ஓட்டைப் பார்ப்பார்களா, காளையை கவனிப்பார்களா?


        நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரு காளை மாட்டைச் சூழ்ந்து ஆரவாரமாக அதை அடக்க முனைந்தால் அது அச்சுறுத்தப் படுகிறது.  அந்த நிலையே அதற்குத் துன்பமானது. ஆதன் கண்களிலும் உடல் மொழியிலுமே மிரட்சி தெரியும். முன்பாக, மைதானத்துக்கு அருகில் கொட்டிலில் உள்ளபோதே, தனக்கு நேரப்போகும் சித்திரவதையை அது உணர்கிறது.  அவிழ்த்து விட்டாலும் கொட்டிலில் இருந்து வெளிவரவே மறுத்து நிற்கிறது. அது வெளிவருவதற்கான வாசலும் குறுகலான அகலம் கொண்டதுதான். பின்புறத்திலிருந்து சிலர் மாட்டை உந்தி வெளியில் தள்ள, அது பயத்தில் வெளிப்புறம் பாய்கிறது. அப்போது அதைச் சுற்றி விரட்டுபவர்களிடம் இருந்து மாடு தப்பிக்கவே வழி பார்க்கிறது – அவர்களோடு விளையாட அல்ல. அதைத் தப்பிக்க விடாமல் தடுப்பவர்களைத் தான் முட்டித் தள்ளியும் தூக்கி எறிந்தும் அது வழி செய்து கொள்கிறது -  அவர்களைத் துன்புறுத்த அல்ல. 

        ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் சிலர், அது ஆயிரக் கணக்கான வருடங்கள் நடந்து வந்த பாரம்பரியம் என்கிறார்கள். இருக்கலாம். மிகப் பழமையானது என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் எந்தப் பழக்கத்தையும் இந்த நாளில் நாம் பின்பற்றுவதில்லை.  ஆயிரக் கணக்கான வருடங்கள் பால்ய விவாகம் நம்மிடையே இருந்தது, பலதார மணம் இந்துக்களிடையே நடந்தது, ஆண்கள் குடுமி வைத்திருந்தோம், மன்னர்கள் ஆட்சி செய்தார்கள், போர்கள் புரிந்துக்கொண்டே இருந்தோம்.   பழமை தழைக்கட்டும் என்று இவைகளை நாம் இப்போது போற்றவில்லை, விட்டுவிட்டோம்.

          ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் சிலவகைக் காளைகளே அழிந்துபோகும் என்கிறது இன்னொரு வாதம்.  இது பிராணிகள் இனம் பாதுகாக்கும் அக்கறையினால் வரும் பேச்சல்ல. அந்தவகைக் காளைகள் அழியாமல் காப்பதற்கு அவைகளுக்குத் துன்புறுத்தல் தரவேண்டியதில்லை.  புல்லும் கழனியும் கொடுத்தால் போதும். 

         ’ஜல்லிக்கட்டினால் காளைகளுக்குத்  தீங்கு ஒன்றும் நேர்வதில்லை, ஆகையால் அது தொடரட்டும்’ என்று பேசுகிற ஒரு பிரபலஸ்தர் சொல்கிறார்: ”ஜல்லிக்கட்டில் காளைகள் செத்ததில்லை, மனிதர்கள்தான் செத்திருக்கிறார்கள்”.  சரி, அப்படியானால் ஜல்லிக்கட்டு மனிதர்களின் நலனுக்காகவும் நடக்கக் கூடாதே? தாறுமாறாக வாகனம் ஓட்டுவது மனிதர்களுக்கு ஆபத்து என்பதால் அதைத் தடை செய்கிற மாதிரி, ஜல்லிக்கட்டும் அதே காரணத்துக்காக நடக்காமல் இருப்பது நல்லது. 

          இன்னொரு    பிரபலஸ்தர்   ”ஜல்லிக்கட்டு   நடக்கட்டும்.   அதை ’ஏறு தழுவுதல்’ என்று அழைக்க வேண்டும்” என்று யோசனை தருகிறார்.  ஜல்லிக்கட்டில் காளைகள் படும் பாடு மாறாத போது, அந்த ஆட்டத்திற்கு என்ன பெயர் வைத்தால் என்ன?  கொலை செய்வதை ‘இறைவனடி சேர்த்தல்’ என்று உயர்த்திச் சொன்னால், உயிர் எடுப்பது மாறாதே?

       ஜல்லிக்கட்டு  நடப்பதும்  நடக்காமல்  இருப்பதும்  சட்டம் சம்பத்தப் பட்டது மட்டும் அல்ல.  மனிதர்கள் வைப்பதுதான் சட்டம். அது எப்படியும் இருக்கட்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நம்மைப் பண்படுத்தும் வேறு விஷயங்களும் இதில் அடக்கம்.   காட்சி ஒன்று அதை நினைவுபடுத்துகிறது என்பதால் அதை மட்டும் இப்போது சொல்கிறேன்.  அதை இணைய விடியோக்களில் நீங்களும் பார்க்கலாம்.

      ஜல்லிக்கட்டின் போது தன்னைச் சுற்றி நிற்கும் மனிதர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி ஒரு காளை மாடு, மூன்று புறம் பத்தடி உயர சுவர்கள் கொண்ட ஒரு இடுக்கில் மாட்டி நிற்கிறது.  அங்கு பின்பக்கச் சுவற்றை ஒட்டி பத்துப் பதினைந்து மாடுபிடி வீரர்கள், அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல், பம்மிப் பதுங்கி இருக்கிறார்கள்.  அவர்களை நோக்கி வெறியோடு ஒரு பாய்ச்சல், ஆக்ரோஷமான ஒரு முட்டு – இதை அந்தக் காளை செய்திருந்தால் தன்னைத் தொல்லை செய்தவர்களில்  இரண்டு பேரையாவது  ஆஸ்பத்திருக்கோ மயானத்துக்கோ அனுப்பியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், தான் விலகித் தப்பிக்கவே இடம் தேடி பரிதாமாக நிற்கிறது அந்தப் பிராணி.  காளை மாடு நம்மிடம் காட்டும் கருணையை நாமும் அதனிடம் காட்டலாம்.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

Thursday, 12 January 2017

அதிமுக-வில் சசிகலாவின் உயர்வு: யார் தருவார் இந்த, ஜனநாயகம்!


     தலைப்பைப் பார்த்துவிட்டு, சசிகலா அதிமுக-வில் பொதுச் செயலாளராக உயர்ந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப் படுகிறது என்று தப்பாக நினைக்காதீர்கள். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் குரலுமல்ல இது. குறிப்பான அவரது பின்னணியில், இந்திய அரசியல் கட்சிகளின் தலைமை மாற்றம் பற்றிய பொதுவான ஓரு பார்வை இக் கட்டுரை.

     ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக நியமனம் ஆனதை எதிர்ப்பவர்கள் கூறும் முதல் காரணம்: அவர் ஜெயலலிதாவின் தனி உதவியாளரகத்தான் முப்பது வருடங்களுக்கு மேலாக இருந்தார், மற்றபடி அவர் தீவிர அரசியலில் இருந்ததே இல்லை.  மேலும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அதிமுக-வில் சேரவைத்து, பதவிகள் கொடுத்து அடையாளம் காட்டியமாதிரி, ஜெயலலிதா எப்போதும் சசிகலாவை அவ்விதம் கட்சிக்குள் பிரதானமாக முன் நிறுத்தவில்லை என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது. அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தங்களின் பதவியைக் காக்க சசிகலாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவு அவருக்குக் கிடையாது, என்பதும் சசிகலா எதிர்ப்பாளர்களின் பேச்சு.

          ஜனநாயக ரீதியில் இயங்க வேண்டிய ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தனது மறைவுக்குப் பின்னால் இன்னார்தான் அவர் இருந்த இடத்தில் வரவேண்டும் என்று கட்டளை இடுவது பொருந்தாது. ஆகையால் ஜெயலலிதா இருந்தபோதே அவர் சசிகலாவைக் கட்சியில் அதிகாரபூர்வமாக பிரபலப் படுத்தவில்லை, தனக்குப் பின் சசிகலாதான் கட்சியை வழிநடத்துவார் என்று சுட்டிக் காட்டியதில்லை என்றெல்லாம் பேச முடியாது. ’எதுவானாலும் சரி, அரசியலில் பெரிதாக ஈடுபடாமல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் திடீரென்று சசிகலா மாதிரி ஒருவர் கட்சியின் மிக உயர்ந்த பொதுச் செயலாளர் பொறுப்பைப் பெறுவது எப்படிச் சரியாகும்?’ என்பதும் ஒரு கேள்வி. இது சரியான கேள்விதான். ஆனால் இதற்கான பதில் ஜெயலலிதாவிடமிருந்தே வருகிறது.

    ஜெயலலிதா இருந்தவரை, சசிகலா  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, ஜெயலலிதா வீட்டிலேயே வசிப்பவர் என்று மட்டும் பொதுவில் அறியப் பட்டவர். கட்சித் தலைவர்களும் பிற மனிதர்களும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்திக்கச் சென்ற போது அவர்கள் ஜெயலலிதாவின் விருப்பப்படி சசிகலாவை மட்டும் சந்தித்தார்களா, இருவரையும் சந்தித்தார்களா, எந்த அளவுக்கு அவர்களின் விவகாரங்களில் சசிகலா ஈடுபாடும் ஆதிக்கமும் செலுத்தினார் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவை ஜெயலலிதாவும், சம்பத்தப் பட்ட அந்த மனிதர்களும், சசிகலாவும் மட்டும் அறிந்தவை. அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது பற்றி ஊகிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

        நீண்ட காலமாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்து, பல மனிதர்களிடம் முக்கிய விஷயங்கள் பேசி, சசிகலா பெற்ற அனுபவம் அதிமுக-வில் வேறு எவருக்கும் கிட்டியிருக்காது. அதோடு, அதிமுக-வின் உள் கட்சி விஷயங்கள், ரகசியங்கள், மற்றும் அதிகார விளையாட்டுக்களில் சசிகலா பெற்ற தேர்ச்சி, பிறகு அவரது புத்திசாலித்தனம் மற்றும் சாதுரியம் பற்றி பல மட்டத்திலும் உள்ள அந்தக் கட்சித் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.  அவரோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைவிட சசிகலா சில படிகள் மேலானவர், சக தலைவர்களின் நிறை குறைகளை அதிகம் தெரிந்தவர், அவர் தலைமையை ஏற்றால் தங்கள் பதவிகளுக்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று அந்தத் தலைவர்கள் முடிவு செய்துதான் இப்போது சசிகலாவின் பின் நிற்கிறார்கள்.  பல முன்னணிக் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் பதவிக்காகத்தான் அங்கிருக்கிறார்கள் என்பது சாதாரண உண்மை.  இதில் அதிமுக தலைவர்களை மட்டும் தனியாகக் குறை சொல்வது பாரபட்சமானது.

        சசிகலா இன்றைய சூழ்நிலையில் அதிமுக-வின் பொதுச் செயலாளர் ஆவதற்கு, தான் அறியாமலேயே வித்திட்டவர் ஜெயலலிதாதான். சசிகலாவை, அனைத்தும் அறிகிற சக்தி வாய்ந்த உதவியாளராக ஜெயலலிதா திரைமறைவில் வைத்திருந்தார். மற்றவர்களுக்கு, கட்சிக்குள் உண்மையான ஜனநாயக ரீதியில் பதவி நியமனங்களும் தேர்வுகளும் நடக்கவில்லை, மரியாதையான அங்கீகாரமும் கிடையாது. வா என்றால் வருவது, நில் என்றால் நிற்பது, போ என்றால் போய் விடுவது என்பதை ஏற்றவர்கள்தான் கட்சிக்குள் தவழ்ந்து மேலே வந்தார்கள். ஜெயலலிதா ஏற்படுத்தி விட்டுச் சென்ற இந்த நிலையில் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளரானது அதிர்ச்சி தருவதல்ல.  

       அடுத்ததாக, பன்னீர் செல்வத்தை விலகச் சொல்லி சசிகலா தமிழக முதல்வர் ஆனாலும் வியப்பல்ல. பணிவுடன் பன்னீர் செல்வம் அதற்காக வழிவிட்டு நின்றாலும் ஆச்சரியமல்ல.  சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் சொல்லப் போகும் தீர்ப்பு சசிகலாவின் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் வாய்ப்பைத் தடுக்குமா என்று பார்த்த பிறகு இதை முடிவு செய்துகொள்ளலாம் என்றுகூட அவரும் பிற கட்சித் தலைவர்களும் காத்திருக்கலாம்.  நாமும் காத்திருந்துதான் நடக்கப் போவதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், நமது நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெறுவதுகூட ஒரு அரசியல் தலைவருக்கு நிரந்தர வீழ்ச்சியல்ல. அவர் மிகப் பெரிய தலைவராக இருந்தால், கண்டிப்பாக அவர் செல்வாக்கு சரியாது. தண்டனையிலிருந்து மீண்டு வர அவருக்கு வயதும் தெம்பும் இருக்கவேண்டும்.  அதுதான் நமது இப்போதைய ஜனநாயகம்.

        கட்சிக்குள் முறையான சுதந்திரமான வளர்ச்சிக்கும் தலைமை மாற்றத்திற்கும் வழி இல்லை என்கிற நிலையில், சசிகலாவுக்குப் பதில் வேறு யார் அதிமுக-வின் பொதுச் செயலாளராக வந்திருந்தாலும், எதிர்ப்புகளும் சலசலப்புகளும் பரவலாக எழுந்திருக்கும்.  இப்போது சசிகலாவுக்கு வரும் உள் கட்சி எதிர்ப்புகளை விட அவை அதிமாகக் கூட இருக்கலாம் – நமக்குத் தெரியாது.  போகப் போகத்தான் கட்சித் தொண்டர்கள் சசிகலாவை எதிர்ப்பது வலுவானதா, பரவலானதா என்பதும் தெரிய வரும்.    

       காங்கிரஸ்  கட்சியில் சேர்ந்து  நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் ராஜீவ் காந்தி அவரது அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு திடீரென்றுதான் பிரதம மந்திரி ஆனார்.  அவர் கொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகவும், காங்கிரஸ் கட்சியில் சேராதிருந்த அவர் மனைவி சோனியா காந்தி, பின்னர் அக் கட்சியில் உறுப்பினாராகி சில மாதங்களிலேயே அதன் தலைவரானார். இதே மாதிரித்தான் சசிகலா அவர் கட்சியில் முக்கியத்துவம் பெறுவதும் இப்போது நடக்கிறது.  

       ஒரு கட்சியின் பெரிய தலைவர் மறைந்த பிறகு ரத்த பந்தம், நெருங்கிய நட்பு, அவரே சுட்டிக் காட்டியவர் போன்ற காரணங்களினால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் இடத்திற்கு வரும் மற்றவர் திறமை உள்ளவராக அமையலாம், சாதாரணமானவராகவும் இருக்கலாம்.  அவரால் கட்சி நடக்கும், ஆட்சியும் நகரும். ஆனால் அப்படிப் பட்டவர் முறையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனென்றால் முறையாகவும் நேர்மையாகவும் செயல்பட விரும்புகிறவர்கள் இந்த வழிகளில் கட்சித் தலைமைக்கு வரத் தயங்குவார்கள். இதில் விதிவிலக்குகள் மிகவும் அரிது.  ஆக இது போன்ற தலைமை மாற்றம் வருவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் பெரிய தீங்கு செய்யும்.   

     அடுத்தபடியாக,  பல  கட்சிகளிலும்  பாசக்கார  அப்பாவோ அம்மாவோ தலைவராக இருப்பதால், பின்னர் ஒரு நாள் அவர் இடத்தில் வருவதற்கு அவரின் மகனையோ மகளையோ, அல்லது எல்லாக் குழந்தைகளையும், கட்சிக்குள் முன்கூட்டியே தயார் செய்து முன்னிலைப் படுத்துகிறார். இதற்கு உதாரணமே வேண்டாம் - இது தவறாமல் அனேகமாக எல்லா பெரிய கட்சிகளிலும் நடக்கிறது. இது தூய்மையான ஜனநாயக முறை அல்ல. ஆட்சி செய்பவர்களை மன்னர்களாகவே பார்க்கும் நமது மக்களும் அறியாமையினால் வாரிசு அரசியலை ஆமோதித்து வரவேற்கிறார்கள். இந்த வழியிலான தலைமை மாற்றமும் தலைவர்களின் குடும்பத்தில் வேலை வாய்ப்பு உண்டாக்குமே தவிர ஆட்சிக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாது.

        குறுக்கு வழியில் கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் வருபவர்களை சர்வ சாதாரணமாக ஏற்கும் மக்களைக் கொண்ட இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் காத்திருக்கிறது. அது நடக்கும் வரை நமது ஜனநாயகத்தை மக்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே அதிகம் கொண்டாடுவார்கள். பிறகென்ன, “யார் தருவார் இந்த, ஜனநாயகம்!” என்றுதானே அவர்கள் ஆனந்தமாகப் பாடுவார்கள்?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017