Tuesday, 31 January 2017

Tamil Nadu’s Jallikattu Protest: Can We Take Pride?


      This was prime national news this month.  A continuous six-day protest was staged on Chennai’s Marina beach by several thousand students and educated young men and women demanding that Tamil Nadu allow jallikattu, a sort of bull-taming sport.  That sport was played in parts of the State’s rural areas but remained banned by the Supreme Court on legal grounds.   Parallel agitations by youngsters at other towns in Tamil Nadu strengthened the clamour for the sport. The State and Central governments yielded, and Tamil Nadu brought in a new law at express speed which removed the court-imposed ban on jallikattu. 

      Here I am not on the merits of permitting or banning jallikattu.  Hooligans mingling with the protesters and spreading violence, post success, at Chennai should be tackled separately by the police. As to the legal worth of the new Tamil Nadu law, the Supreme Court will decide.   Let us look at other things.  First, the backdrop.

      Protesters at the Marina kept swelling from day one, reaching 30,000 or even more at its peak by different estimates. Despite their number, they were not unruly.  They helped regulate traffic on the beach road and themselves cleaned their surroundings all those days.  The unpolitical stance of the Marina activists drew more protesters at Chennai and elsewhere, made many people sympathise with them and forced politicians to shy away from them.  Also, with an emotional tang among lots of Tamils, the jallikattu issue put a glow to their fight. 

   There is a general euphoria that the victorious uprising for jallikattu is a well-deserved snub on India’s corrupt and self-indulgent political class, marking a special moment for democracy.  That is true, but not all the way.  Equally true are a few allied things.

      Tamil Nadu’s massive agitation was possible because the State government allowed protesters to gather in big numbers without legal permission at the Marina and elsewhere and grow to unmanageable sizes. The AIADMK which rules the State feared that if the government moved to stop and scatter the crowds the Opposition would term it a police excess and steal the support of all asking for jallikattu. So the government kept quiet and let the problem become bigger, until it woke up late, worked hectically and changed a statute through executive orders to permit jallikattu, with Central government support. 

      Outwardly, every political party including the AIADMK has given credit to the Marina fighters. That was because no part of the glory goes to a rival political party. But no party in power and no government should be overawed and subdued publicly, with protesters breaking the law and breathing down its neck to get their demands met.  

      If the youth congregating at the Marina had been evacuated when they were in a few hundreds, Tamil Nadu would not have faced an overly giant and dominating protest later.  If a growing gigantic agitation like this – in breach of the law regulating protests at a public place – is justified as democracy in action, Karnataka activists could do it in Bengaluru demanding changes in the inter-State river water law, so Karnataka may control the Cauvery river and deny Tamil Nadu its due share of the river water. It is good to remember: Democracy does not mean getting every freedom for the people.  It means people surrendering a few of their freedoms to the State in exchange for more valuable freedoms. 

      True, the  Marina experience may help the young participants stay determined for anything worthy in their future lives, and many of them may discover their leadership qualities.  A majority of them would not have seen a jallikattu before, and a good number of them might not have sighted a bull earlier – but still they will have these personal gains.  At the other side, their large assembly and victory are a side-effect of the phoney and combative democracy played by political parties in Tamil Nadu, and elsewhere too.  If major opposition parties in the State will not enjoy and exploit every bad moment, and illegal challenge of authority, faced by a ruling party – here imagine any party in power and any party in the Opposition – the government could have stalled the agitation, began without legal permission, at its early stage.  If an issue is so overwhelmingly important, touching the hearts and minds of the people of the entire State – that was the impression created by the jallikattu agitators – the way forward is protesting at legally permitted venues without violating regulatory laws or electing a government that helps make the desired law. The Marina spectacle is a right group of people setting a wrong precedent. 

      How did the Occupy Wall Street  protest of 2011 go off in the US?  It lasted from 17th September to 15th November of that year, much longer than the Marina agitation, though with lesser crowds.  Organisers of Occupy Wall Street were considering three locations in New York City to stage it.  The police learnt about their plans and fenced off two of them which were public spaces, and so the protesters assembled at the third alternative venue, Zuccotti Park which was private property.  New York City does not allow use of amplified sound unless a permission is issued.  The protesters had no such permission and so could not use loudspeakers at Zuccotti Park.  Speakers had to rely on their vocal chords to make speeches which were repeated word for word by voice helpers standing a little away from the speakers, which were again repeated by more voice helpers stationed further down, to let the widespread listeners hear.  Finally, when the owners of Zuccotti Park issued notice to the protesters to leave, policemen in riot gear started removing the protesters, arresting 200 persons in that process. In democratic India, can you imagine protesters following the law this much while doing a public protest against a government?

       No bandhs or forced train stoppages happened in New York City during the eight-week protest it witnessed, while they happened like normal events in Tamil Nadu during Chennai’s one-week agitation at a grabbed public space.   As Occupy Wall Street ended, the Mayor’s office in NYC released a statement which included this: No right is absolute and with every right comes responsibilities. The First Amendment gives every New Yorker the right to speak out – but it does not give anyone the right to sleep in a park or otherwise take it over to the exclusion of others – nor does it permit anyone in our society to live outside the law.”   

      During the Marina protest, did we hear comparable words from Tamil Nadu chief minister or from leaders of any political party in India?  No, but our laws and the US laws will be the same for the Marina scene.   Then, is our democracy staying fit or trembling?  The young, earnest, unpolitical Marina protesters have something to introspect.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


Saturday, 14 January 2017

ஜல்லிக்கட்டில் ஓட்டில்லாத காளை மாடு


      என்ன நடக்கிறது ஜல்லிக்கட்டு விளையாட்டில்?  இதைத் தெரிந்து கொள்ள நீங்கள் அந்த விளையாட்டுத் திடலுக்குச் செல்ல அவசியம் இல்லை. அதன் விடியோ காட்சிகளை இணையத்தில் பார்க்கலாம்.  பார்த்து பரிதாபப் படலாம் – மாட்டுக்கும் மனிதனுக்கும் சேர்த்து.

         சிலர் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டு என்கிறார்கள். சிலர் வீர விளையாட்டு என்று பெருமையோடு சொல்கிறார்கள். இன்னும் சிலர் தமிழ் நாட்டின் வீர விளையாட்டு என்று பிரகடனம் செய்கிறார்கள்.   எது விளையாட்டு?

         ஒருவர்    மற்றவரோடு    அல்லது     இன்னொரு    பிராணியோடு விளையாட வேண்டும் என்றால் இரண்டு பேருக்கும் அந்த விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது விளையாட்டு என்று ஆகும்.  இரண்டு பேர் கூடி பாண்டி ஆடலாம், சீட்டாடலாம், டென்னிஸ் ஆடலாம் – ஏன் சட்டசபைக்குள்ளேயே தலைவர் சொல்படி தர்ணா செய்யலாம்.  இதெல்லாம் விளையாட்டு.  வளர்ப்பு நாயோடு ஓடிப் பார்ப்பதும்,  எறிந்த பந்தை அது விரட்டிக் கவ்வித் திரும்புவதும் விளையாட்டுதான். புலி தனது முன்னங்கால்களைத் தூக்கி, பழக்கியவரின் தோள்கள் மீது வைப்பதும் அவர் புலியைத் தழுவி நிற்பதும் இருவருக்கும் விளையாட்டு. மனிதர்களோடு நீரில் நீந்தி பல வித்தைகள் செய்கிறது டால்ஃபின். அது இர தரப்பினருக்கும் விளையாட்டு. ஆனால் காளை மாட்டை மிரள வைத்து, அதைத் தப்பிக்கவிடாமல் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து சீண்டி இழுப்பதும் அதன் திமிலைப் பிடித்து  அமுக்குவதும் மாட்டுக்கு விளையாட்டல்ல, வினை.  சிறுத்தைப் புலி கூட நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கூட்டமாகப் பார்த்தால் அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஒளியப் பார்க்கும்.  ஜல்லிக்கட்டில் காளை மாட்டுக்கும் அதே கதிதான். ஆனால் என்ன, மனிதர்கள் இல்லாத காடு சிறுத்தைக்கு உண்டு.  மனிதர்களிடையே வாழும் காளை மாட்டுக்கு ஓட்டு இல்லை.  பிறகு அரசியல்வாதிகள் ஓட்டைப் பார்ப்பார்களா, காளையை கவனிப்பார்களா?


        நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரு காளை மாட்டைச் சூழ்ந்து ஆரவாரமாக அதை அடக்க முனைந்தால் அது அச்சுறுத்தப் படுகிறது.  அந்த நிலையே அதற்குத் துன்பமானது. ஆதன் கண்களிலும் உடல் மொழியிலுமே மிரட்சி தெரியும். முன்பாக, மைதானத்துக்கு அருகில் கொட்டிலில் உள்ளபோதே, தனக்கு நேரப்போகும் சித்திரவதையை அது உணர்கிறது.  அவிழ்த்து விட்டாலும் கொட்டிலில் இருந்து வெளிவரவே மறுத்து நிற்கிறது. அது வெளிவருவதற்கான வாசலும் குறுகலான அகலம் கொண்டதுதான். பின்புறத்திலிருந்து சிலர் மாட்டை உந்தி வெளியில் தள்ள, அது பயத்தில் வெளிப்புறம் பாய்கிறது. அப்போது அதைச் சுற்றி விரட்டுபவர்களிடம் இருந்து மாடு தப்பிக்கவே வழி பார்க்கிறது – அவர்களோடு விளையாட அல்ல. அதைத் தப்பிக்க விடாமல் தடுப்பவர்களைத் தான் முட்டித் தள்ளியும் தூக்கி எறிந்தும் அது வழி செய்து கொள்கிறது -  அவர்களைத் துன்புறுத்த அல்ல. 

        ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் சிலர், அது ஆயிரக் கணக்கான வருடங்கள் நடந்து வந்த பாரம்பரியம் என்கிறார்கள். இருக்கலாம். மிகப் பழமையானது என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் எந்தப் பழக்கத்தையும் இந்த நாளில் நாம் பின்பற்றுவதில்லை.  ஆயிரக் கணக்கான வருடங்கள் பால்ய விவாகம் நம்மிடையே இருந்தது, பலதார மணம் இந்துக்களிடையே நடந்தது, ஆண்கள் குடுமி வைத்திருந்தோம், மன்னர்கள் ஆட்சி செய்தார்கள், போர்கள் புரிந்துக்கொண்டே இருந்தோம்.   பழமை தழைக்கட்டும் என்று இவைகளை நாம் இப்போது போற்றவில்லை, விட்டுவிட்டோம்.

          ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் சிலவகைக் காளைகளே அழிந்துபோகும் என்கிறது இன்னொரு வாதம்.  இது பிராணிகள் இனம் பாதுகாக்கும் அக்கறையினால் வரும் பேச்சல்ல. அந்தவகைக் காளைகள் அழியாமல் காப்பதற்கு அவைகளுக்குத் துன்புறுத்தல் தரவேண்டியதில்லை.  புல்லும் கழனியும் கொடுத்தால் போதும். 

         ’ஜல்லிக்கட்டினால் காளைகளுக்குத்  தீங்கு ஒன்றும் நேர்வதில்லை, ஆகையால் அது தொடரட்டும்’ என்று பேசுகிற ஒரு பிரபலஸ்தர் சொல்கிறார்: ”ஜல்லிக்கட்டில் காளைகள் செத்ததில்லை, மனிதர்கள்தான் செத்திருக்கிறார்கள்”.  சரி, அப்படியானால் ஜல்லிக்கட்டு மனிதர்களின் நலனுக்காகவும் நடக்கக் கூடாதே? தாறுமாறாக வாகனம் ஓட்டுவது மனிதர்களுக்கு ஆபத்து என்பதால் அதைத் தடை செய்கிற மாதிரி, ஜல்லிக்கட்டும் அதே காரணத்துக்காக நடக்காமல் இருப்பது நல்லது. 

          இன்னொரு    பிரபலஸ்தர்   ”ஜல்லிக்கட்டு   நடக்கட்டும்.   அதை ’ஏறு தழுவுதல்’ என்று அழைக்க வேண்டும்” என்று யோசனை தருகிறார்.  ஜல்லிக்கட்டில் காளைகள் படும் பாடு மாறாத போது, அந்த ஆட்டத்திற்கு என்ன பெயர் வைத்தால் என்ன?  கொலை செய்வதை ‘இறைவனடி சேர்த்தல்’ என்று உயர்த்திச் சொன்னால், உயிர் எடுப்பது மாறாதே?

       ஜல்லிக்கட்டு  நடப்பதும்  நடக்காமல்  இருப்பதும்  சட்டம் சம்பத்தப் பட்டது மட்டும் அல்ல.  மனிதர்கள் வைப்பதுதான் சட்டம். அது எப்படியும் இருக்கட்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நம்மைப் பண்படுத்தும் வேறு விஷயங்களும் இதில் அடக்கம்.   காட்சி ஒன்று அதை நினைவுபடுத்துகிறது என்பதால் அதை மட்டும் இப்போது சொல்கிறேன்.  அதை இணைய விடியோக்களில் நீங்களும் பார்க்கலாம்.

      ஜல்லிக்கட்டின் போது தன்னைச் சுற்றி நிற்கும் மனிதர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி ஒரு காளை மாடு, மூன்று புறம் பத்தடி உயர சுவர்கள் கொண்ட ஒரு இடுக்கில் மாட்டி நிற்கிறது.  அங்கு பின்பக்கச் சுவற்றை ஒட்டி பத்துப் பதினைந்து மாடுபிடி வீரர்கள், அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல், பம்மிப் பதுங்கி இருக்கிறார்கள்.  அவர்களை நோக்கி வெறியோடு ஒரு பாய்ச்சல், ஆக்ரோஷமான ஒரு முட்டு – இதை அந்தக் காளை செய்திருந்தால் தன்னைத் தொல்லை செய்தவர்களில்  இரண்டு பேரையாவது  ஆஸ்பத்திருக்கோ மயானத்துக்கோ அனுப்பியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், தான் விலகித் தப்பிக்கவே இடம் தேடி பரிதாமாக நிற்கிறது அந்தப் பிராணி.  காளை மாடு நம்மிடம் காட்டும் கருணையை நாமும் அதனிடம் காட்டலாம்.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

Thursday, 12 January 2017

அதிமுக-வில் சசிகலாவின் உயர்வு: யார் தருவார் இந்த, ஜனநாயகம்!


     தலைப்பைப் பார்த்துவிட்டு, சசிகலா அதிமுக-வில் பொதுச் செயலாளராக உயர்ந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப் படுகிறது என்று தப்பாக நினைக்காதீர்கள். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் குரலுமல்ல இது. குறிப்பான அவரது பின்னணியில், இந்திய அரசியல் கட்சிகளின் தலைமை மாற்றம் பற்றிய பொதுவான ஓரு பார்வை இக் கட்டுரை.

     ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக நியமனம் ஆனதை எதிர்ப்பவர்கள் கூறும் முதல் காரணம்: அவர் ஜெயலலிதாவின் தனி உதவியாளரகத்தான் முப்பது வருடங்களுக்கு மேலாக இருந்தார், மற்றபடி அவர் தீவிர அரசியலில் இருந்ததே இல்லை.  மேலும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அதிமுக-வில் சேரவைத்து, பதவிகள் கொடுத்து அடையாளம் காட்டியமாதிரி, ஜெயலலிதா எப்போதும் சசிகலாவை அவ்விதம் கட்சிக்குள் பிரதானமாக முன் நிறுத்தவில்லை என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது. அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தங்களின் பதவியைக் காக்க சசிகலாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவு அவருக்குக் கிடையாது, என்பதும் சசிகலா எதிர்ப்பாளர்களின் பேச்சு.

          ஜனநாயக ரீதியில் இயங்க வேண்டிய ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தனது மறைவுக்குப் பின்னால் இன்னார்தான் அவர் இருந்த இடத்தில் வரவேண்டும் என்று கட்டளை இடுவது பொருந்தாது. ஆகையால் ஜெயலலிதா இருந்தபோதே அவர் சசிகலாவைக் கட்சியில் அதிகாரபூர்வமாக பிரபலப் படுத்தவில்லை, தனக்குப் பின் சசிகலாதான் கட்சியை வழிநடத்துவார் என்று சுட்டிக் காட்டியதில்லை என்றெல்லாம் பேச முடியாது. ’எதுவானாலும் சரி, அரசியலில் பெரிதாக ஈடுபடாமல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் திடீரென்று சசிகலா மாதிரி ஒருவர் கட்சியின் மிக உயர்ந்த பொதுச் செயலாளர் பொறுப்பைப் பெறுவது எப்படிச் சரியாகும்?’ என்பதும் ஒரு கேள்வி. இது சரியான கேள்விதான். ஆனால் இதற்கான பதில் ஜெயலலிதாவிடமிருந்தே வருகிறது.

    ஜெயலலிதா இருந்தவரை, சசிகலா  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, ஜெயலலிதா வீட்டிலேயே வசிப்பவர் என்று மட்டும் பொதுவில் அறியப் பட்டவர். கட்சித் தலைவர்களும் பிற மனிதர்களும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்திக்கச் சென்ற போது அவர்கள் ஜெயலலிதாவின் விருப்பப்படி சசிகலாவை மட்டும் சந்தித்தார்களா, இருவரையும் சந்தித்தார்களா, எந்த அளவுக்கு அவர்களின் விவகாரங்களில் சசிகலா ஈடுபாடும் ஆதிக்கமும் செலுத்தினார் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவை ஜெயலலிதாவும், சம்பத்தப் பட்ட அந்த மனிதர்களும், சசிகலாவும் மட்டும் அறிந்தவை. அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது பற்றி ஊகிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

        நீண்ட காலமாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்து, பல மனிதர்களிடம் முக்கிய விஷயங்கள் பேசி, சசிகலா பெற்ற அனுபவம் அதிமுக-வில் வேறு எவருக்கும் கிட்டியிருக்காது. அதோடு, அதிமுக-வின் உள் கட்சி விஷயங்கள், ரகசியங்கள், மற்றும் அதிகார விளையாட்டுக்களில் சசிகலா பெற்ற தேர்ச்சி, பிறகு அவரது புத்திசாலித்தனம் மற்றும் சாதுரியம் பற்றி பல மட்டத்திலும் உள்ள அந்தக் கட்சித் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.  அவரோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைவிட சசிகலா சில படிகள் மேலானவர், சக தலைவர்களின் நிறை குறைகளை அதிகம் தெரிந்தவர், அவர் தலைமையை ஏற்றால் தங்கள் பதவிகளுக்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று அந்தத் தலைவர்கள் முடிவு செய்துதான் இப்போது சசிகலாவின் பின் நிற்கிறார்கள்.  பல முன்னணிக் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் பதவிக்காகத்தான் அங்கிருக்கிறார்கள் என்பது சாதாரண உண்மை.  இதில் அதிமுக தலைவர்களை மட்டும் தனியாகக் குறை சொல்வது பாரபட்சமானது.

        சசிகலா இன்றைய சூழ்நிலையில் அதிமுக-வின் பொதுச் செயலாளர் ஆவதற்கு, தான் அறியாமலேயே வித்திட்டவர் ஜெயலலிதாதான். சசிகலாவை, அனைத்தும் அறிகிற சக்தி வாய்ந்த உதவியாளராக ஜெயலலிதா திரைமறைவில் வைத்திருந்தார். மற்றவர்களுக்கு, கட்சிக்குள் உண்மையான ஜனநாயக ரீதியில் பதவி நியமனங்களும் தேர்வுகளும் நடக்கவில்லை, மரியாதையான அங்கீகாரமும் கிடையாது. வா என்றால் வருவது, நில் என்றால் நிற்பது, போ என்றால் போய் விடுவது என்பதை ஏற்றவர்கள்தான் கட்சிக்குள் தவழ்ந்து மேலே வந்தார்கள். ஜெயலலிதா ஏற்படுத்தி விட்டுச் சென்ற இந்த நிலையில் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளரானது அதிர்ச்சி தருவதல்ல.  

       அடுத்ததாக, பன்னீர் செல்வத்தை விலகச் சொல்லி சசிகலா தமிழக முதல்வர் ஆனாலும் வியப்பல்ல. பணிவுடன் பன்னீர் செல்வம் அதற்காக வழிவிட்டு நின்றாலும் ஆச்சரியமல்ல.  சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் சொல்லப் போகும் தீர்ப்பு சசிகலாவின் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் வாய்ப்பைத் தடுக்குமா என்று பார்த்த பிறகு இதை முடிவு செய்துகொள்ளலாம் என்றுகூட அவரும் பிற கட்சித் தலைவர்களும் காத்திருக்கலாம்.  நாமும் காத்திருந்துதான் நடக்கப் போவதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், நமது நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெறுவதுகூட ஒரு அரசியல் தலைவருக்கு நிரந்தர வீழ்ச்சியல்ல. அவர் மிகப் பெரிய தலைவராக இருந்தால், கண்டிப்பாக அவர் செல்வாக்கு சரியாது. தண்டனையிலிருந்து மீண்டு வர அவருக்கு வயதும் தெம்பும் இருக்கவேண்டும்.  அதுதான் நமது இப்போதைய ஜனநாயகம்.

        கட்சிக்குள் முறையான சுதந்திரமான வளர்ச்சிக்கும் தலைமை மாற்றத்திற்கும் வழி இல்லை என்கிற நிலையில், சசிகலாவுக்குப் பதில் வேறு யார் அதிமுக-வின் பொதுச் செயலாளராக வந்திருந்தாலும், எதிர்ப்புகளும் சலசலப்புகளும் பரவலாக எழுந்திருக்கும்.  இப்போது சசிகலாவுக்கு வரும் உள் கட்சி எதிர்ப்புகளை விட அவை அதிமாகக் கூட இருக்கலாம் – நமக்குத் தெரியாது.  போகப் போகத்தான் கட்சித் தொண்டர்கள் சசிகலாவை எதிர்ப்பது வலுவானதா, பரவலானதா என்பதும் தெரிய வரும்.    

       காங்கிரஸ்  கட்சியில் சேர்ந்து  நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் ராஜீவ் காந்தி அவரது அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு திடீரென்றுதான் பிரதம மந்திரி ஆனார்.  அவர் கொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகவும், காங்கிரஸ் கட்சியில் சேராதிருந்த அவர் மனைவி சோனியா காந்தி, பின்னர் அக் கட்சியில் உறுப்பினாராகி சில மாதங்களிலேயே அதன் தலைவரானார். இதே மாதிரித்தான் சசிகலா அவர் கட்சியில் முக்கியத்துவம் பெறுவதும் இப்போது நடக்கிறது.  

       ஒரு கட்சியின் பெரிய தலைவர் மறைந்த பிறகு ரத்த பந்தம், நெருங்கிய நட்பு, அவரே சுட்டிக் காட்டியவர் போன்ற காரணங்களினால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் இடத்திற்கு வரும் மற்றவர் திறமை உள்ளவராக அமையலாம், சாதாரணமானவராகவும் இருக்கலாம்.  அவரால் கட்சி நடக்கும், ஆட்சியும் நகரும். ஆனால் அப்படிப் பட்டவர் முறையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனென்றால் முறையாகவும் நேர்மையாகவும் செயல்பட விரும்புகிறவர்கள் இந்த வழிகளில் கட்சித் தலைமைக்கு வரத் தயங்குவார்கள். இதில் விதிவிலக்குகள் மிகவும் அரிது.  ஆக இது போன்ற தலைமை மாற்றம் வருவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் பெரிய தீங்கு செய்யும்.   

     அடுத்தபடியாக,  பல  கட்சிகளிலும்  பாசக்கார  அப்பாவோ அம்மாவோ தலைவராக இருப்பதால், பின்னர் ஒரு நாள் அவர் இடத்தில் வருவதற்கு அவரின் மகனையோ மகளையோ, அல்லது எல்லாக் குழந்தைகளையும், கட்சிக்குள் முன்கூட்டியே தயார் செய்து முன்னிலைப் படுத்துகிறார். இதற்கு உதாரணமே வேண்டாம் - இது தவறாமல் அனேகமாக எல்லா பெரிய கட்சிகளிலும் நடக்கிறது. இது தூய்மையான ஜனநாயக முறை அல்ல. ஆட்சி செய்பவர்களை மன்னர்களாகவே பார்க்கும் நமது மக்களும் அறியாமையினால் வாரிசு அரசியலை ஆமோதித்து வரவேற்கிறார்கள். இந்த வழியிலான தலைமை மாற்றமும் தலைவர்களின் குடும்பத்தில் வேலை வாய்ப்பு உண்டாக்குமே தவிர ஆட்சிக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாது.

        குறுக்கு வழியில் கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் வருபவர்களை சர்வ சாதாரணமாக ஏற்கும் மக்களைக் கொண்ட இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் காத்திருக்கிறது. அது நடக்கும் வரை நமது ஜனநாயகத்தை மக்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே அதிகம் கொண்டாடுவார்கள். பிறகென்ன, “யார் தருவார் இந்த, ஜனநாயகம்!” என்றுதானே அவர்கள் ஆனந்தமாகப் பாடுவார்கள்?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

Monday, 26 December 2016

ராகுல் காந்தியின் எச்சரிக்கைப் பாடல்: பம்-பம்-பம்! பூகம்பம்!


        ”பாராளுமன்றத்தில் என்னைப் பேசவிடுவதில்லை.  பிரதம மந்திரி மோடியைப் பற்றிய விவரங்களை நான் அங்கு அவிழ்த்துவிட்டால் பூகம்பமே வெடிக்கும்! கபர்தார்!”  என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார் ராகுல் காந்தி.  எப்படியோ அவரும் தன் வாயைக் கட்டி பாராளுமன்ற வளாகத்தைக் காத்ததற்காக ஜனநாயம் அவரை வாழ்த்தட்டும்.

        ராகுல் காந்தியின் இந்தப் பேச்சில் பல விஷயங்கள் தோன்றுகின்றன.  முதலில், எதை யாரிடம் எப்படிப் பேசுவது என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. 6 மாதக் குழந்தையிடம் பேசும் பெற்றோர்கள் தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வித விதமான சப்தங்கள் எழுப்புவார்கள்.  மற்ற பெரியவர்கள், ஐந்து வயதுக் குழந்தையிடம் அன்பை அதிகம் காட்டிப் பேசுவது, பதிநான்கு-பதினைந்து வயதுக்கு மேற்பட்ட இளம் பருவத்தினரிடம் ஆதரவு காட்டி அக்கறையோடு அவர்கள் நிலைக்கு வந்து பேசுவது, தங்களைவிட வயதில் இன்னும் பெரியவர்களிடம் மரியாதை காட்டிப் பேசுவது என்பது பொருத்தமாக இருக்கும். 

   ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதி மீது ஒரு குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டை மக்களின் முன் வைத்துப் பேச முனைந்தால், அதை உறுதியாகவும் தெளிவாகவும் மட்டும் சொல்லி விட்டுவிடுவது நல்லது. அதனால் குற்றம் சொல்பவர்மீது மானநஷ்ட வழக்கு ஏதும் வந்தால் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அவர் தகுந்த ஆதாரங்களுடன் தன்னை முன்கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.  இது தவிர, தான் வெளியிடும் குற்றச்சாட்டை ஒருவர் எப்படி டாம்பீகமாகச் சொன்னாலும், இடி, மின்னல், சூராவளி, பூகம்பத்தை வரவழைத்துப் பேசினாலும் அதிகப் பலன் ஏதும் இருக்காது.  இது ஏதோ மோடிக்கு ஆதரவாகச் சொல்லப் படுவதில்லை. 

     இந்தியாவில் ஒரு அரசியல்வாதி மற்ற அரசியல்வாதி மீது எப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை வைத்தாலும் அது மக்களிடம் எடுபடுவதில்லை.  ஏனென்றால் மக்களின் நினைப்பு பொதுவாக இப்படித்தான் இருக்கும்; ‘அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள். அனைவரும் அவர்களின் சகல சௌபாக்கியத்தை மட்டும் வளர்த்துக் கொள்பவர்கள் – ஏதோ போகிற போக்கில் நமது ஓட்டிற்காக நமக்கும் ஒன்றிரண்டு செய்வார்கள். இதில் என்ன இவர் அவரைப் பற்றிப் பழி பேசுவது, அவர் இவரைப் பற்றிக் குற்றம் சொல்வது?’  

      ஒரு பிரபல  அரசியல்வாதியின் மீது  கோர்ட்டில் லஞ்ச  ஊழல் வழக்கு நடந்து அவர் தண்டனை பெற்றாலும் மக்கள் உடனே அடுத்த தேர்தலில் எதிர்க் கட்சிக்குத் தங்கள் ஓட்டைத் திருப்பிவிடுவதில்லை.  ‘ஏதோ, எதிர்க் கட்சியின் பிரபல அரசியல்வாதி மீது வழக்கு வரவில்லை – அவர் முந்திக்கொண்டு இவர்மீது வழக்கைப் போட்டுவிட்டார் - அல்லது தனக்கு எதிரான ஆதாரம் எளிதாகச் சிக்கிவிடாமல் ஊழல் செய்திருக்கிறார் – எது என்னவோ, கோர்ட் தண்டனை பெறவில்லை என்பதால் எதிர்க் கட்சி அரசியல்வாதி சுத்தமானவர் என்று ஆகாது’ என்றெல்லாம் மக்களின் மனதில் நிழலாடும்.   பல மணி நேரம் நீட்டி முழக்கிச் சிந்தித்து மக்கள் இந்த நினைப்பை அடைவதில்லை. மின்னல் ஒளி நேரத்தில் அவர்களுக்கு இந்த எண்ணம் விலாவாரியாக இல்லாவிட்டாலும் மங்கலாகத் தோன்றிவிடும் என்று சொல்லலாம். இது பழக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பலருக்கும் அடிமனதில் அபிப்பிராயங்கள் ஏற்படுவது மாதிரித்தான்.

      அதே  ரீதியில்  இன்னொரு  விஷயம்.   ஒரு  அரசியல்  தலைவர் எதிர்க்கட்சி அரசியல் தலைவர் மீது லஞ்ச ஊழல் வழக்குகள் போட்டு அவை தள்ளுபடி ஆனாலும், ‘இவர் பொய் வழக்குகள் போட்டவர், இனிமேல் இவருக்கும் இவர் கட்சிக்கும் ஓட்டுப் போடக் கூடாது’ என்றும் மக்கள் முடிவு செய்வதில்லை. இதற்கெல்லாம் அப்படியும் இப்படியுமாக நிரூபணம் வேண்டுமா?  அகில இந்தியாவிலும் ஊழல் வழக்குகள் போட்ட பிரபல அரசியல்வாதிகளையும் அவற்றை எதிர்கொண்ட பிரபல அரசியல்வாதிகளையும்   நினைத்துப் பாருங்கள், அது போதும்.

     ஒரு  ஒப்பீட்டையும்   நீங்கள் கவனிக்கலாம்.  அமெரிக்காவில் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் ஆளானவர் என்ற ஒரு தலைவரின் அரசியல் வாழ்க்கை அதோடு முடிவுக்கு வரும். ஏனென்றால் அந்த நடத்தை அங்கு அபூர்வமானது, விதிவிலக்கானது. உதாரணம், வாடர்கேட் ஊழல் ஆதாரபூர்வமாக வெளிப்பட்டு அதில் சிக்கிய பின் ஜனாதிபதி பதவியிலிருந்து நிக்சன் ராஜினமா செய்தது.  அது அவர் இரண்டாம் முறை ஜனாதிபதியாக இருந்தபோது நிகழ்ந்த ராஜினமா. அமெரிக்காவில் மூன்றாவது முறையாக ஒருவரே ஜனாதிபதி பதிவிக்குப் போட்டியிட முடியாது என்றாலும், ஊழலால் சரிந்த மக்கள் செல்வாக்கை அவர் மீட்கமுடியாது. இந்தியாவில் அப்படி இல்லை.  இதற்கும் முன் உதாரணம் உண்டு.

   ஜனநாயகத்தில்  வாடர்கேட்  ஊழலைவிட  மக்களையும்  பிற கட்சித் தலைவர்களையும் கடுமையாகப் பாதித்தது, நமது நாட்டில் இந்திரா காந்தி பிரகடனம் செய்த அவசர நிலை.  அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி இதுபோன்ற காரியத்தைச் செய்து பின்னர் தேர்தலிலும் ஜெயிப்பார் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் இந்தியாவில் அவசர நிலைக் கொடுமைகளுக்காக இந்திரா காந்தி தோற்கடிக்கப் பட்டாலும் மீண்டும் அவரது கட்சி தேர்தலில் ஜெயிக்குமாறு மக்கள் அவர் தலைமைக்கு வாக்களித்து அவர் பிரதம மந்திரி ஆனார்.  ஆகவே வெறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒரு இந்திய அரசியல் பிரபலத்தைப் பெரிதாக ஒன்றும் அசைப்பதில்லை.

    சரி, இதனால் பூகம்பப்  பயம்  காட்டிய ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? இந்திய அரசியல் நிலையில் வெறும் ஊழல் குற்றச் சாட்டுகளை எதிர் அணியினர் மீது சுமத்துவது ஒரு அரசியல்வாதிக்கு ஏற்றத்தையும் மக்கள் செல்வாக்கையும் தராது. இது அனைவருக்கும் பொருந்தும் – ராகுல் காந்திக்கும் மோடிக்கும் சேர்த்து.  ஈர்ப்பு சக்தி (charisma) கொண்டு மக்கள் செல்வாக்குப் பெறுவது என்பது ஒன்று.  அது ராகுல் காந்திக்கு இல்லை.  அது இல்லாமல், இப்போதைய அரசியல் வெளியிலும் ஆட்சியிலும் பெருவாரியான மக்களின் ஆதரவை சிறுகச் சிறுக சேகரித்து வெற்றிகள் காண்பிக்க ஒரே வழிதான் உண்டு.  அதை அவர் பின்பற்ற யோசிக்கலாம். 

      ஒரு தலைவர் ஆட்சியில் இருந்தால், பல்துறை வல்லுனர்களுடன் கைகோர்த்து, மக்கள் சேவையில் முழுமூச்சுடன் இறங்கி, அதற்கான திட்டங்களை செயல்படுத்தி, ’பொருளாதார முன்னேற்றம் எற்படுகிறது, அது நம்மையும் வந்து அடைகிறது’ என்பதை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும்.  அதுதான் மக்களின் நிலைத்த நம்பிக்கையையும் ஆதரவையும் கொண்டுவரும். அது இல்லாமல் வெறும் இலவசங்கள் மட்டும் கொடுத்தால் மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அரசுப் பணத்திலிருந்து இலவசங்கள் அளிப்பதை எளிதாக எந்தக் கட்சி அரசியல்வாதியும் செய்யலாம்.   ’வேறு வழியில்லை.  இது நம் விதி. இது எப்போதும் வரலாம், எப்போதும் போகலாம். இது நாமே சம்பாதிப்பது, நம் காலிலேயே நிற்பது, அதோடு சேர்ந்த கௌரவமான வாழ்க்கை போல ஆகாது’ என்று பல தரப்பு இளைஞர்களும் உணர ஆரம்பித்துவிட்டனர்.

     ஆட்சி   செய்யும்   அரசியல்   தலைவர்,   நீடித்து   நிற்கும் நிலையான முன்னேற்றத்தை மக்களின் வாழ்வில் காட்ட முனையவில்லை என்றால், எதிர்கட்சியில் இருக்கும் தலைவர் தன்னால் அவ்வாறு செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்து அவர்களின் ஆதரவை மெள்ள மெள்ள சேகரித்து அந்த அடிப்படையில் ஆட்சிக்கு வந்து அந்த நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதுதான் ஒரு அரசியல்வாதிக்கு நீண்டகால வெற்றியையும் செல்வாக்கையும் கொடுக்கும் என்கிற நிலை வந்துவிட்டது. இதை ராகுல் காந்தி உணரவேண்டும். பிறகு, இந்த வழியில் செல்வதற்கான தகுதி தனக்கு இருக்கிறதா என்பதையும் உணர்ந்து அதை மேம்படுத்திக் கொள்வது பற்றியும் அவர் யோசிப்பது அவசியம்.

     மேலே சொன்ன வழியைப் பின்பற்றி  சில மாநிலங்களிலாவது காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பது அல்லது கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி முயற்சிக்கலாம்.  இவ்வாறு காங்கிரஸ் எழும்புவது அந்தக் கட்சிக்கும் நாட்டுக்கும் அவசியம். அதற்கு ராகுல் காந்தி அடித்தளம் அமைக்க முடிந்தால், பின்னர் அவரே  “தம்-தம்-தம்! வசந்தம்!” என்று குதூகலமாகப் பாடலாம்.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

Thursday, 22 December 2016

Demonetisation: Modi or Manmohan Singh – Who is Credible?


       Did you read  Manmohan Singh’s  newspaper article  on the recent demonetisation of 500 and 1,000 rupee notes?  If not, please flip through The Hindu of 9th Dec. and have a look or view it at http://www.thehindu.com/opinion/lead/Making-of-a-mammoth-tragedy/article16779252.ece .  The government’s initiative is important, and so is the writer who was India’s prime minister for ten years before Narendra Modi assumed that post.

            Manmohan Singh quotes Modi on the primary reasons for demonetisation, viz., one was to check “enemies from across the border …. using fake currency notes” and the other was “to break the grip of corruption and black money”.   He agrees saying, “Both these intentions are honourable and deserve to be supported whole-heartedly” and adds, “Counterfeit currency and black money are as grave a threat to India as terrorism and social division. They deserve to be extinguished using all the firepower at our disposal”.  So far so good.

            The former prime minister faults Modi on an assumed underlying premise behind demonetisation, viz., Modi’s “false notion”, as he put it, that “all cash is black money and all black money is in cash”.  Anyone who is 18 would not believe that all cash is black money.  Did Manmohan Singh really think that Modi held a false notion that “all cash is black money”?  No, the former governor of Reserve Bank of India could not have honestly believed what he wrote.  If one imagines that “all cash” is black money, it means he thinks Reserve Bank of India routinely prints and issues black money!  

             Manmohan Singh could not also have believed, as he wrote, that Modi held a “false notion” that “all black money is in cash”.   Anyone who is a little older than 18 will not have that notion, and Manmohan Singh cannot be naive to think that Modi hoped all black money to be in cash.  Not just Modi, his peon and cook too should know that blackmoneywallahs gain nothing by keeping their entire illegal cash incomes in not-to-be-used bundles of paper currency.  They would enjoy enough of that income by buying gold, land, buildings or other assets and by splurging.  Some have also been caught keeping their black money in bank fixed deposits.  So Manmohan Singh was wrong in imputing these false notions to Modi.  But more than that, the former prime minister has damned himself severely.  Here is how.

            Manmohan Singh writes  further: “Black money is a menace to our society that we need to eliminate. …… This is wealth that has been accumulated over years by those with unaccounted sources of income.  Unlike the poor, holders of black money have access to various forms of wealth such as land, gold, foreign exchange, etc. There have been various attempts by many governments in the past decades to recover this illicit wealth through actions by the Income Tax department, Enforcement Directorate and schemes such as Voluntary Disclosure.”  And he adds: “Evidence from these past attempts has shown that a large majority of this unaccounted wealth is not stored in the form of cash”.   What an unconscious confession!

           Without saying it, but clearly implying it, Manmohan Singh admits that it is mostly during past Congress or Congress-led regimes at the Centre that black money in India was “accumulated over years”.   He admits too, indirectly, that attempts by those governments to unearth black money in the country and book offenders yielded no good results. What follows? When his party ruled the central government, people could freely generate and acquire black money, coolly convert it into other forms of assets and merrily keep that wealth, and they would not be traced and booked at any of those stages.  This showcases the sheer inefficiency, unwillingness, and possibly more, of the ruling governments of those times in battling black money. 

        We know that the 2G spectrum scandal at the central ministerial level, storming around minister A. Raja, heaping a huge revenue loss on the government and involving massive kickbacks – God knows how much it was, and how much of it was black money - was enacted when Manmohan Singh was prime minister.  We know too that his minister for communications and IT, Kapil Sibal, certified that the scam caused “zero loss” for the government.  Time magazine knew more.  In 2011 it gave that scandal its pride of place in its all-time list of “Top 10 Abuses of Power”, and put it second in the list behind the Watergate scandal.

            Manmohan Singh implies this too, though he feels shy of saying it explicitly.  He would like us to believe that it is impossible to curtail the never-ending generation and growth of black money in the country, that no action such as demonetisation can be effective against that menace and that all any government can do is lament it like what he does.  He takes that stance by implication, so he can portray all the past Congress or Congress-led coalition governments at the Centre as doing their best to contain black money - and hope that no one may accuse those governments of inaction.  A futile hope.

        Many advanced nations do not  permit  black money to be continuously generated and spread in their economies, like India does.   Those countries do not witness so much of free-wheeling corruption.  Their top government officers who have to watch over and report or act against corruption are themselves not corrupt, and that checks corruption down the line. More important, ministers who run governments in those countries are largely clean and so they inspire officers on integrity at work.  A few exceptions can always be tackled.

          If a ministry is not perceived  to be clean in its dealings with businesses, many government officers will take the cue and benefit themselves financially in illegal ways.  That ministry will have no mind or energy to take serious and imaginative actions against governmental corruption and its byproducts like black money.  Officers of such a government cannot also check or go after black money.  Modi has given the impression that he is honest and determined, and so long as that impression stays many government officers would feel inspired to implement his drive against black money.  Reports coming in every day since demonetisation that unaccounted old currency notes, new currency notes, gold and other assets worth in crores are being seized from every nook and corner of the country are a testimony to Modi’s moral leadership in India’s fight against black money.  

        After 2014 elections, the prime minister and his ministers changed, while officers of the central government remained. How come the same officers now uncover hidden black money and suspicious wealth in large chunks through their raids and inspections across the country, while they did just a little of that under decades of previous governments, mostly Congress-propped or Congress-led?  The reason is, they derived no inspiration from those governments to go on a mission mode and act boldly and honestly in searches and seizures.  

           Economists and other experts have expressed varying degrees of approval or disapproval on Modi’s demonetisation and allied measures for their worth in producing results.  So, for the layman theses conflicting opinions cancel out themselves and he has to go by what he sees around and senses. India’s common people seem to see the difference between years of previous central regimes and Modi’s government now scrapping high value notes and acting against black money.  That is why, while queuing up before banks and ATM’s to withdraw small amounts of cash in a regulated post-demonetisation period, and putting up with other hardships, they have backed the party headed by Modi hugely in civic polls in three States and in Chandigarh, all held after demonetisation was announced.   This is also an answer to a good part of other comments of Manmohan Singh in his article. 

        Sure, swift legal action against the corrupt and the blackmoneywallahs is a warning to them, and others wanting to emulate them.  It will hold them in perennial fear that they could be caught anytime, shamed and brought to justice, and will keep most of them largely contained. That is how it works in advanced countries, and not because angels live there. So the present demonetisation and its follow-up actions will have a good preventive effect on corruption and black-money holding, and that is a huge national benefit.  That will last as long as we have a central government that shows a clean image and acts tough on corruption and black money.  Manmohan Singh has not also acknowledged this national benefit.

       Wikipedia  introduces  Manmohan Singh as  an “Indian economist and politician”.   Viewing him as an “economist-turned ordinary politician” would be closer to reality.  Manmohan Singh will know it.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

Thursday, 15 December 2016

ஜெயலலிதாவும் அவர் செல்வாக்கும்


          இம்மாதம் ஐந்தாம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். இந்திய அரசியல் வானில்  ஒரு ஒளிரும் நட்சத்திரம் மறைந்தது.

      இம்மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கு முறை அ.தி.மு.க-வை வெல்ல வைத்தவர். கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களைத் தொடர்ச்சியாக வென்று அரசு அமைத்தவர்.  சென்ற 2016 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி ஏதும் வைக்காமல் அ.தி.மு.க தனித்து – அதாவது ஜெயலலிதா தனி ஒருவராக – களம் இறங்கி தமிழக ஆட்சியைக் கைப்பற்றி  சாதனை புரிந்தவர்.

      தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் எப்படி இவ்வளவு அமோக மக்கள் செல்வாக்குப் பெற முடிந்தது? அதுவும் அரசியல் வித்தகரான தி.மு.க-வின் கருணாநிதியை எதிரியாக வைத்துக் கொண்டு?

          எம்.ஜி.ஆரே அ.தி.மு.க-வினுள்  ஜெயலலிதாவைப் பிராதனமாக முன் நிறுத்தி, கட்சிக்குள் அவருக்குப் பெரும் ஏற்றத்தைத் தந்தார்.  எம்.ஜி.ஆர் மறைந்தபின், ஜெயலலிதா அக்கட்சிக்குள் சில தந்திரசாலிகளை வென்று, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியையும் போராடி வீழ்த்தி அ.தி.மு.க-வின் தலைமையைக் கைப்பற்றினார்.  இவை அனைவரும் அறிந்தவை.

      அரசியலில் காலூன்ற, நீடித்து நிற்க, நெடிதான உயரங்களை எட்ட, புத்தி கூர்மையும் உறுதி கொண்ட நெஞ்சும் போர்க்குணமும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஜெயலலிதா ஒரு சமீபத்திய உதாரணம்.  இந்தத் திறன்கள் அனைத்தும் ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கருணாநிதிக்கும் குறைவில்லாமல் இருகின்றன. அதோடு நாவன்மை, எழுத்தாற்றல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றில் கருணாநிதி மேம்பட்டவர்தான். இருந்தாலும் தமிழ்நாட்டில் அவரை விடவும் ஜெயலலிதா அதிக மக்கள் செல்வாக்குப் பெற்றவராக விளங்கினார்.  இந்த நிலையை மாநிலத்தின் சென்ற இரண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளும், 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க-விற்குக் கிடைத்த வெற்றியும் (39 தொகுதிகளில் 37 வெற்றி) பறை சாற்றின.  ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணங்களை விடுத்து, அவரது செல்வாக்கின் வளர்ச்சியை மூன்று காரணங்களில் இப்படிப் பார்க்கலாம்.

      எம்.ஜி.ஆரின் அபரிதமான மக்கள் செல்வாக்கைக் கூடிய வரை பார்சல் செய்துவைத்துக் கொண்டவர் ஜெயலலிதா என்று சொல்லலாம்.  எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்தவர் அவர்.   அவைகளில் பெரும்பாலும் அவர் எம்.ஜி.ஆரை அடையக் காத்திருக்கும் கதாநாயகியாகவும், தங்கமான எம்.ஜி.ஆர் அவருடன் ஒன்று சேரும் கதாநாயகனாகவும் தோன்றினார்கள். வெகுஜனப் பெண்களில் மிகப் பலர் – குறிப்பாக, பாமரப் பெண்கள் - பரிசுத்தமான கதாபாத்திரமான எம்.ஜி.ஆரிடம் மனம் ஒன்றினார்கள்.  சாதாரணப் பெண்களிடம் இது இயற்கை.  சினிமாத் திரையில் எம்.ஜி.ஆரோடு வில்லனாக மோதிய நம்பியார் மீது சாதாரண மக்கள் வெறுப்புக் கொண்டது எப்படி இயற்கையோ, அதே மாதிரித்தான் இதுவும்.  அந்த எம்.ஜி.ஆரே சினிமாக் காட்சிகளில் ஜெயலலிதாவோடு இணைகிறார் என்றால் அந்தப் பெண் ரசிகர்கள் பலர் ஜெயலலிதாவோடு தங்களை ஒன்றுபடுத்திப் பார்ப்பதும் இயற்கைதான்.

      ஓரு டெலிவிஷன் பேட்டியில் ஜெயலலிதாவிடம் “நீங்கள் எம்.ஜி.ஆரை விரும்பினீர்களா?” என்று கேட்டபோது அவர் சிரித்தவாறே “யார்தான் எம்.ஜி.ஆரை விரும்பமாட்டார்கள்? அவர் மக்களை ஈர்க்கும் சக்தி உடைய (’கரிஸ்மாடிக்’) நபர்” என்று பொதுவாகச் சொன்னார். அது, எம்.ஜி.ஆர் மீது  மக்கள், குறிப்பாகப் பெண்கள், சினிமாவின் தாக்கத்தால் லயித்திருந்தார்கள் என்பதை உணர்த்தியதுமாகும். நம்பியாரை வெறுத்து, எம்.ஜி.ஆரைப் போற்றிய அவரது எண்ணற்ற ஆண் ரசிகர்களும், திரையில் அவர் பலமுறை இணைந்த ஜெயலலிதாவிடம் ஈர்ப்புக் கொண்டிருப்பார்கள். பிந்தைய நாட்களில் எம்.ஜி.ஆரே தனது அரசியல் கட்சியில் ஜெயலலிதாவைச் சேரவைத்து முன் நிறுத்தி ஆதரித்ததால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகியையும் தாண்டி ஜெயலலிதாவையே சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அங்கீகரித்தார்கள்.  

      ஜெயலலிதாவைப் போல் விசேஷப் பின்னணி கொண்ட எவரும் போட்டிக்கு வராததால் இந்திரா காந்திக்குப் பின் அவரது மகன் ராஜீவ் காந்தியும், ராஜீவின் மரணத்திற்குப் பின் அவர் மனைவி சோனியா காந்தியும் அரசியலுக்குப் புதிது என்றாலும் சுலாபமாகத் தலையெடுத்தார்கள்.  ஜானகிக்கு அது முடியாமல் போனது. சினிமாவின் விளைவால் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்த ஜெயலலிதாவுடன் அவரது புத்திசாலித்தனம், நெஞ்சுறுதி, போர்க்குணம் ஆகியவையும் கைகோர்த்து நின்றதால்,  கருணாநிதியால் அவற்றை முழுவதும் வெல்லும் அளவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

          இரண்டாவது காரணம். நிகருக்கு நிகராக புத்திசாலித்தனம், மன உறுதி  மற்றும் போர்க்குணம் கொண்ட இரு அரசியல் எதிரிகளில் ஒருவர் பெண், ஒருவர் ஆண் என்று வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் சித்தாந்தம், அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றில் அவர்களுக்குள் வேறுபாடு இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.   அப்போது பெண் வாக்காளர்களிடையே பெண் தலைவருக்குச் சற்றேனும் அதிகமான ஆதரவு கிடைக்கும் – குறிப்பாக இந்தியாவைப் போன்ற வளரும் ஜனநாயகத்தில். பாதிக்குப் பாதியாவது பெண் வாக்காளர்கள் இருக்கும்போது, ஐம்பது சதவிகித வாக்குகளில் பெண் தலைவர் அதிகம் பெற வாய்ப்பிருக்கிறது.  இதுபற்றி இன்னும் சொல்லலாம்.

      பொதுவாக ஒரு சமூகத்தில் ஆண்கள் பெண்களுக்கு சம அளவில் மரியாதை - அதாவது மனதளவிலான சமத்துவ மரியாதை - காண்பிக்காமல் இருந்தால், பெண்களுக்கு உள்ளளவில் ஆண்கள் மீதே மெலிதான மன வருத்தம் இருக்கும்.  சுதந்திரமான, ஆக்ரோஷமான பெண்கள் இதை வெளிப்படுத்தலாம். வெளிப்படுத்தாத பெண்களுக்கும் இந்த உணர்வு இருக்கும். இது ஆணாதிக்கத்தின் மறுபக்கம். ரகசிய வாக்கெடுப்பின் போதாவது கணிசமான பெண் வாக்காளர்கள், இரண்டு தகுந்த ஆண் மற்றும் பெண் தலைவர்களில் பெண் தலைவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பார்கள். அந்தப் பெண் தலைவர் வாக்களிக்கச் சொல்வது அவர் கட்சியின் பிற ஆண் வேட்பாளர்களுக்கு என்றாலும், கடைசியில் ஆட்சியை வெல்லப் போவது ஒரு தகுதியான பெண் தலைவர் என்பதால் அவரது கட்சிக்கு நிறையப் பெண் வாக்காளர்களிடம் அதிக ஆதரவு கிடைக்கும்.  அதே சமயம், ஆண் வாக்காளர்கள் இந்த மாதிரியான பாகுபாட்டை ஓட்டில் காட்டுவதில்லை.

      தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆண்கள் பெண்களை சமமாகக் கருதினாலும் இல்லையென்றாலும், அரசியல் தலைவர்களுக்கான ஆதரவை ’ஆண் தலைவர்கள் - பெண் தலைவர்கள்’ என்ற அடிப்படையில் எக்காரணத்தாலும் பிரித்து அளிப்பதில்லை. இந்திரா காந்தி அரசியலில் ஓங்கி இருந்தபோது பல ஆண்கள் தன் சுற்றத்துப் பெண்களை ஒருபடி கீழ் என்று நினைத்தாலும், பெண் தலைவரான இந்திரா காந்தியை ’ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து ஆதரித்தார்கள் என்பது பலருக்கு நினைவிருக்கும்.  அந்த மனப்பாங்கு ஆண்களிடையே இன்றும் தொடர்கிறது. ஆகையால் ஆண் வாக்காளர்களின் ஓட்டுக்கள் நிகருக்கு நிகர் தகுதி நிரம்பிய ஒரு பெண் அரசியல் தலைவருக்கு வராமல் போவதில்லை. இதனாலும் ஜெயலலிதா பலன் கண்டார்.

      மூன்றாவது காரணம். மக்களிடையே மத உணர்வுகள் மேலோங்கிய தேசம் இந்தியா. 2011 மக்கள் தொகைக் கணக்குப்படி, நமது நாட்டில் சுமார் 80% இந்துக்கள், 14% முஸ்ளிம்கள், 6% மற்ற மதத்தினர் வசிக்கிறார்கள்.  கருணாநிதி இந்துக்களை மட்டம் தட்டினார். மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை மதித்தார், போற்றினார்.  தமிழ்நாட்டின் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கருணாநிதி இந்துக்களை அவமதிக்கவேண்டும் என்று விரும்பவில்லை, அதனால் மகிழவும் மாட்டார்கள். ஆனாலும், தான் அப்படிச் செய்வது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பாளர் என்று உணரப்பட்டு தன் கட்சிக்கு அவர்களின் ஆதரவு கொத்தாகக் கிடைக்கும் என்று கருணாநிதி நம்பியதாகவே தோற்றம் தெரிந்தது.

      மக்கள் தொகையில் 80% சதவிகிதத்தினரின் மத நம்பிக்கையை அங்கீகரிக்காதது, இகழ்வது பெருவாரியான இந்துக்களுக்கு மனக்கசப்பைத் தரும் என்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியதுதான்.  பொறுமைசாலிகளான இந்துக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஜெயலலிதா தன்னை ஒரு இந்து என்று வெளிப்படுத்துவதில் வெட்கப் படவில்லை. பிற மதத்தினரையும் அரவணைத்துச் சென்றார். ஆக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிடமிருந்து அவருக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைத்தது.  அதே சமயத்தில், கணிசமான இந்துக்களும் கருணாநிதியின் பாரபட்ச மதப் பார்வையை எதிர்த்து ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என்று நினைத்தால் ஆச்சரியம் இல்லை.  சென்ற தமிழக சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினே, “எங்கள் கட்சியின் 90% தொண்டர்கள் இந்துக்கள். என் மனைவியே மாநிலத்தின் பல கோவில்களுக்குச் சென்றவர். நம்பிக்கை உள்ளவர்களின் குறுக்கே நாங்கள் நிற்பதில்லை” என்று பேசியது ‘ஓட்டிழப்பை நிறுத்தவேண்டும்’ என்ற நினைப்பால்தான்.  பெறும்பான்மை மதத்தினராக இருந்தும் மத நிந்தனையை மௌனமாக ஏற்கவேண்டாம் என்கிற எண்ணம் சமீப காலமாக நாடெங்கும் சற்று அதிகமான இந்துக்களிடம் எழும்புகிறது. அரசியல் விமரிசகர்கள் பலர் இந்த எண்ணத்தையும் மனதில் வைத்திருந்து கருணாநிதியைவிட ஜெயலலிதாவை அதிகம் வரவேற்றிருப்பார்கள். ஆக ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு கூடியதற்கு கருணாநிதியின் இந்து மதம் பற்றிய நிலைப்பாடும் ஒரு காரணம். 

      இந்த மூன்று காரணங்களும் சிறிதும் பெரிதுமாக ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு மலையென வளர உதவின. இவற்றுக்கு அடிப்படையாக அவரின் மேற்சொன்ன தனிமனிதச் சிறப்புகள் பேருதவியாக இருந்தன – அவை இல்லாதிருந்தால் ஜெயலலிதா கருணாநிதியை எதிர்த்து அரசியலில் பெருவெற்றிகள் அடைந்திருக்க முடியாது.

      இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, சோனியா காந்தி ஆகியோருடன் ஜெயலலிதாவையும் ஒரு வகையில் சேர்த்துப் பார்க்கலாம்.  முன்னிருந்து அல்லது பின்னிருந்து ஆட்சி அமைத்த இந்தப் பெண் அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் பொதுவானது - வெளிப்படையான எதேச்சாதிகாரம். அதை அவரவர் பாணியில் வெளிப்படுத்தினாலும், அவர்களின் கீழுள்ள கட்சித் தலைவர்கள் தங்களின் நலன்களுக்காகத் தங்கள் தலைவிகள் மனம் குளிரும் அளவிற்கு வளைந்து கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள். அதிகமானவர்கள் சிறிதும் கூச்சப்படாமல் வளைந்தது ஜெயலலிதாவுக்கு என்றால் மிகையல்ல.

      மகத்தான வெற்றிகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சியில் நன்னெறிகளைக் கடைப்பிடித்து உதாரணம் காண்பித்தாரா? அவரும் சரி, கருணாநிதியும் சரி, இதை மற்றவர் வேண்டுமானால் செய்துகாட்டட்டும் என்று விட்டுவிட்டார்கள்.  இது வருத்தத்திற்கு உரியது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016


Wednesday, 7 December 2016

நரேந்திர மோடி: ஆயிரத்தில் ஒருவன் (ஐநூறிலும் ஒருவன்)


            பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை பணத் தன்மை நீக்கம் (demonetisation) செய்வதாக பிரதம மந்திரி அறிவித்தது நாட்டுக்குப் பலன் தருமா இல்லையா? இது தொடர்ந்து விவாதிக்கப் படுகிறது.  

      இந்த நடவடிக்கையின் ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் சரி, ஒரு வகையில் ஒன்றுபடுகிறார்கள்.  அதாவது, இதன் ஒரு முக்கிய நோக்கமான ‘கறுப்புப் பண ஒழிப்பு’ என்பது தேசத்திற்கு அவசியமான நல்ல நோக்கம் என்பதில் எவரும் வேறுபடவில்லை. ’குறுகிய கால வலிகள் இருந்தாலும் பணத் தன்மை நீக்கம் நீண்டகால நன்மைகள் பல ஏற்படுத்தி அந்த நோக்கம் நிறைவேறச் செய்யும்’ என்று சிலரும் ’மக்களுக்குப் பரவலாக சிரமங்கள் ஏற்படுவதுதான் மிஞ்சுமே தவிர அந்த நோக்கம் நிறைவேறாது’ என்று சிலரும் வாதம் செய்கிறார்கள்.  இதற்கு சரியான பதிலைக் காலம்தான் கடைசியில் காண்பிக்க முடியும். இப்போது நாம் இது தொடர்பான வேறு ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கலாம்.

     லஞ்ச ஊழல் மூலமாக கருப்புப்பணம் கணிசமாக உருவாகிறது என்பது எல்லோரும் அறிந்தது.  அந்தப் பணத்தில் பெரும் பங்கு அரசாங்கத்தில் சம்பத்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் லஞ்ச வருமானம் என்பதும் தெரிந்தது. அரசாங்கத்தில் முறைகேடுகள் வியாபித்திருக்கும்போது, தனியார் துறையில் இருப்பவர்கள் சிலரும் ‘பெரியண்ணன் தயக்கம் இல்லாமல் செய்வதை நாமும் பயமில்லாமல் செய்யலாமே’ என்று குளிர்விட்டு தங்களின் அளவிற்கு   லஞ்ச வருமானம் பெறுகிறார்கள், கருப்புப் பணம் சேர்க்கிறார்கள்.   

     ’முறைகேடுகள்   மூலமாகப்  பெற்றதை   நாம்  கருப்புப்  பணமாக வைத்திருந்தாலும் சரி, தங்கம், ரியல் எஸ்டேட் என்று மாற்றிக் கொண்டாலும் சரி, பிடிபடமாட்டோம்’ என்ற மகா தைரியம் லஞ்ச ஊழல்வாதிகளுக்கு இருக்கிறது.  அந்த தைரியத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார் அல்லது எது? நடவடிக்கை எடுக்கவேண்டிய நமது அரசாங்கங்களும் – அதாவது அரசாளும் அரசியல்வாதிகளும் - அவர்களின் மனமறிந்த பாராமுகமும்தான்.  ஆகையால் லஞ்ச ஊழல் தழைக்கிறது.  கருப்புப்பணம் கொழிக்கிறது.  வரிகளை ஏய்த்து கருப்புப் பண பொருளாதாரம் நாட்டுக்குக் கேடு செய்கிறது.

         பொது ஊழியராக இருந்துகொண்டு லஞ்சம் வாங்குவதும் வருமானத்திற்கு மேல் பணமோ சொத்தோ வைத்திருப்பதும் தண்டனைக்கு உரிய குற்றங்கள் என்று ஊழல் தடுப்பு சட்டம் சொல்கிறது.  ஆனால் இந்த சட்டத்தைப் போல் அனாயாசமாக அதிகமாக மீறப்படும் சட்டம் வேறு இருக்காது.

        ஏமாற்றுதல், திருட்டு, அடிதடி, மற்றும் கொலை போன்ற தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகின்றன, பின் நீதிமன்ற வழக்குகளாக விசாரிக்கப் படுகின்றன.  ஆனால் லஞ்சம் வாங்குவதும், வருமானத்திற்கு மேலான பணம் மற்றும் சொத்து வைத்திருப்பதும் – அதுவும் அரசு அல்லது பொதுத்துறையில் பதவி வகிப்பவர்கள் செய்வது - அதே அளவிற்குப் பதிவாகி நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திப்பதில்லை.  காரணத்தை விளக்க வேண்டுமா? சரி, அதையும் பார்க்கலாம்.

          அரசாங்கப் பொறுப்பில் உள்ள ஒரு அரசியல்வாதி லஞ்சத்தில் திளைக்கிறார் என்றால், அவருக்கு அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தைப் பற்றி வாய் திறக்க தைரியம் இருக்காது.  தினமும் இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பிடிக்கும் ஒரு தந்தை ஒன்றிரண்டு சிகரெட் ஊதும் தன் விடலைப் பையனிடம் என்ன சொல்லிக் கண்டிக்க முடியும்? அது மட்டுமல்ல. அமைச்சரே கைநீட்டி வாங்குவதைக் காட்டிலும் இணக்கமான அதிகாரிகளை லஞ்சம் பெற அனுமதித்து, அதில் கப்பம் வாங்கிக்கொள்வது சுலபமானது, பல்முனை வருமானம் தரக்கூடியது, சற்றுப் பாதுகாப்பானது என்பதால் அந்த வழியைப் பலரும் பின்பற்றுவதுண்டு.  பின் யார் யாரைக் காட்டிக் கொடுக்கமுடியும்? இதனால்தான் அரசாங்க லஞ்சம், அதில் தொடரும் பணச் சேர்ப்பு, சொத்துக் குவிப்பு ஆகியவை பெரும்பாலும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதில்லை. 

           ஆட்சிக்குத் திரும்பிய ஒரு கட்சி, பழைய ஆட்சியின் தலைவர் மீது லஞ்ச உழல் வழக்குப் போட்டு, அது நிலுவையில் இருக்கும்போதே வழக்குப் போட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பிற லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கி, ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்போ - எத்தனை பாம்புகளோ - பாம்பாட்டியும் உண்டோ’ என்ற சந்தேகத்தைப் பலரிடமும் விதைத்தது வேறு கதை. ஆனால் அமைச்சர்களும் மற்ற பொது ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதோ கருப்புப் பணம் வைத்திருப்பதோ அனேகமாக வழக்கிற்குக் கூட வருவதில்லை என்பது உண்மை. அதற்கு ஒரு அடையாளமும் உண்டு.

      எந்த ஒரு அரசியல் தலைவரும் எதிர்க் கட்சியில் இருக்கும்போது ஆளும் கட்சியைக் குறிப்பிட்டு “இந்த ஆட்சியில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து விட்டது” என்று விமரிசனம் செய்வது வழக்கமானது. ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் நம் தேசத்திலோ தன் மாநிலத்திலோ ”லஞ்சம் மிகுந்துவிட்டது, கருப்புப் பணமும் பெருகிவிட்டது, அவற்றைக் கட்டுப்படுத்த நான் தீவிர நடவடிக்கை எடுப்பேன்” என்று பேசுவதுண்டா?  ஒரு பாசாங்குக்காக அப்படிப் பேசினால், ஆந்த ஆட்சியில் லஞ்சத்தினால் பாதிக்கப் படும் மக்கள் சிரிப்பை உதிர்ப்பார்கள். பிறகு அடுத்த தேர்தலின்போது கோபத்தைக் காட்டுவார்கள். ஆகவே, பொதுவாகச் சொன்னால், ஆட்சி செய்பவர்கள் அவர்களின் ஆட்சியின்போது லஞ்சம், கருப்புப் பணத்தைப் பற்றி எல்லாம் பேசாமல், ’ஏதோ அதிகாரிகள் மட்டத்தில்தான் லஞ்சம் இருக்கிறது. அதுவும் ஆளும் அரசியல் தலைவர்களுக்குத் தெரியாமல் நடக்கிறது’ என சாதாரண மக்களை நம்பவைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று திட்டமிட்டு மௌனமாகச் செயல்படுகிறார்கள். 

      இந்தச் சூழ்நிலையில் ஒரு பிரதம மந்திரியே “நாட்டில் லஞ்சமும் கருப்புப் பணமும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் நான் நடவடிக்கை எடுத்துவருகிறேன். இது தவறா?” என்று மக்களைப் பார்த்து தைரியமாகப் பேசுவார் என்பது கற்பனை செய்யமுடியாத விஷயம். நரேந்திர மோடி அதைச் செய்திருக்கிறார். தன் கையை சுத்தமாக வைத்திருந்து, தன் சக அமைச்சர்களும் அவ்வாறே இருப்பது வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்று அவர்களுக்கும் உணர்த்தி, தன் ஆட்சியில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்மீது உறுதியான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் ஒரு அரசியல் தலைவர்தான் இவ்வாறு பகிரங்கமாகப் பேசமுடியும்.  மத்தியிலும் மாநிலத்திலும் பல வருடங்கள் ஆட்சி செய்த வேறு பல அரசியல் தலைவர்கள் இவ்வாறு பகிரங்கமாகப் பேசியதில்லை, அதற்கேற்ற தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், அதை  மேலும் விளக்க வேண்டுமா?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

Sunday, 13 November 2016

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராகுல் காந்தியின் நாலாயிர திவ்ய பிரசங்கம்


    ஏண்டாப்பா ராகுல் காந்தி, உன்னை இப்பிடி சௌஜன்யமா கூப்பிட்டா தப்பில்லயே? உனக்கு என் பேரன் வயசுதான் இருக்கும்.  நன்னா இரு!

          பேப்பர்ல பாத்தேன். செல்லாதுன்னு ஆன நாலாயிரம் ரூபாயோட திடுதிப்புனு ஒரு பாங்க் வாசலுக்குப் போனயாம்.  அங்க நிறையப் பேர் நாலாயிரம் ரூபாய்க்கு செல்லாத நோட்டை வச்சுண்டு அதைப் புது நோட்டா பாங்க்ல மாத்தணும்னு பெரிய கியூவில காத்திண்டிருக்க, நீயும் கியூவில சேந்துட்டயாம்.  பேப்பர்காரா, டெலிவிஷன்காரா விடுவாளா? அவாள்ளாம் கூடி நின்னு ஏன் வந்தேள், எதுக்கு வந்தேள்னு உங்கிட்ட கேக்க, நீயும் ஒரு குட்டிப் பிரசங்கமே பண்ணிட்டயாம்.

   “என்னோட செல்லாத  ரூபா நாலாயிரத்தை புது நோட்டா மாத்திக்க வந்திருக்கேன்.  இந்த கியூவில ஏழைப்பட்டவா மணிக்கணக்குல நிக்கறா.  பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாயை மாத்தறதுக்கு மக்கள்ளாம் காத்திண்டிருந்து அவதிப்படும்போது அவாளுக்கு பக்க பலமா ஆதரவா இருக்கேன். குடிமக்கள் ஒரு பிரச்சனையை சந்திச்சா, நானும் சந்திக்கறேன்” அப்படின்னு பேசிருக்க. அதோட மீடியாக்காராளைப் பாத்து “உங்களுக்கும் சரி உங்க கோடீஸ்வர முதலாளிகளுக்கும் சரி, மக்களோட பிரச்சனைலாம் புரியாது. பிரதம மந்திரிக்கும் அப்படித்தான்”னு பொரிஞ்சிருக்க.  கியூவில நின்னவா உங்கூட செல்ஃபி எடுக்கறச்சே சிரிச்ச முகமா இருந்து, உள்ள போனதும் பாங்க்காரா எடுத்த போட்டோக்கும் புன்னகைச்சுண்டு பழைய நோட்டு நாலாயிரத்தை மாத்திண்டு வந்துட்ட.

          ”ஒரு எதிர்க்கட்சித் தலைவரா நான் பண்ணினதுல என்ன தப்பு”ன்னா கேக்கற? சொல்றேன்.
                                                                                                       
     மக்களோட கஷ்டத்துல பங்கெடுத்துக்கற அரசியல் தலைவரா இருக்கறது ரொம்பப் பெரிய விஷயம்.   அந்த மாதிரி தலைவர்கள் பத்தாயிரத்துல பத்து பேர் தேறினா ஜாஸ்தி.  எப்படின்னா, ஒரு எதிர்க் கட்சித் தலைவர் மக்கள் பிரச்சனைன்னு சொல்லி ஆளும் கட்சியை எதுத்து பப்ளிக்கா பேசினா அவர் மக்கள் கஷ்டத்துல பங்கெடுக்கறார்னு ஆகாது.  மக்கள் கிட்டயே போய்  “உங்க கஷ்டம் எனக்குப் புரியறது. ஆனா நாட்டை ஆள்றவாளுக்குப் புரியலயே"ன்னு ஒரு பாட்டம் அழுதாலும் அவர் மக்கள் கஷ்டம் புரிஞ்சு அதுல பங்கெடுத்துட்டார்னு அர்த்தமில்லை. இந்த நடவடிக்கைக்கெல்லாம்  வேற காரணமும் ஜாஸ்தியா இருக்கு. இல்லை, இதான் வழி இதான் அடையாளம்னா கம்யூனிஸ்டுகள், காக்கா குருவி கட்சிகள்ளாம் அதுல பேர் வாங்கி எல்லா தேர்தல்லயும் அமோகமா ஜெயிக்கணும். அது நடக்கலயே?

  ’நம்ம கஷ்டத்துலேர்ந்து  இந்தத் தலைவர் நம்மளைக் கொஞ்சம் கரையேத்துவார்’னு மக்கள் ஒருத்தரைப் பாத்து உள்ளூர எப்ப நினைக்கறாளோ அப்பத்தான் அவர் மக்கள் கஷ்டத்துல பங்கெடுத்துண்டவர்னு சொல்லலாம்.  பாங்க் வாசல்ல சிரிச்சுண்டே உங்கூட செல்ஃபி எடுத்துண்டாளே, அவாள்ளாம் என்ன நினைச்சிருப்பா? தான் அப்பறமா பாத்து ரசிக்கறதுக்கும், தெரிஞ்சவாட்ட அந்த போட்டோவைக் காட்டி பெருமைப் படறதுக்கும் தோதா நீ வந்தையேன்னு நினைச்சுப்பா.  நீ கியூவில நிக்கறப்ப, பேசறப்ப கேமராவோட நிறைய டிவி, பத்திரிகைக்காரா வந்தாளேன்னு நீ சந்தோஷப் பட்டிருப்ப. அவ்வளவுதான்.

        “கால்   கடுக்க  கியூவில   நிக்கறது  மக்களுக்குக்  கஷ்டமில்லையா? அந்த நேரத்துல ஒரு தலைவனா நானும் கூட நின்னா அவாளுக்கு ஆறுதல் இல்லையா?”ன்னு நீ கேட்டா, அது நியாயமான கேள்வியா முதல்ல தோணும்.  ஆனா யோசிச்சா வேற சில விஷயமும் உனக்கு எதிர்க் கேள்வியா வரும். 

           ரேஷன் கடை வாசல்லயும் ஏழைப்பட்டவா நூறு இரணூறு ரூபாயோட கியூவில நிக்கறா. உனக்கும் ரேஷன் கார்டு இருக்கும், அதுக்கு ஒரு கடையும் இருக்கும். அந்தக் கடை கியூவில எப்பவாவது நின்னு ”என் கார்டுல சக்கரை வாங்கறதுக்கு நிக்கறேன்.  காத்து நிக்கற இந்த ஏழை ஜனங்களுக்கு ஆதரவா, ஆறுதலா இருக்கேன்”னு பேசிருக்கையா? குழாயடில குடி தண்ணிக்காக குடத்தோட வரிசை கட்டி நிக்கறவாளுக்கு பக்க பலமா ஒண்ணா நின்னு ஜலம் பிடிச்சிருக்கையா? அது இல்லைன்னா, அமெரிக்க தூதரகம் வாசல்ல விசா வாங்கணும்னு பழியா கியூவில நிக்கறாளே, அந்தக் கியூவில நீ எப்பவாவது சேந்திருக்கையா? அதுவும் வேண்டாம். நீ அடிக்கடி ஏர்போர்ட் போறயே, அப்பல்லாம் கியூவில நின்னுதான் போர்டிங் பாஸ் வாங்கிக்கறயா?  இங்கல்லாம் நீ கண்டிப்பா வரிசைல நிக்கணும், காத்திண்டிருக்கணும்னு சொல்லலை. ஒரு நவயுக தலைவனா நீ சிந்திக்கவேண்டிய விஷயமும் செய்யவேண்டிய காரியமும் ஆயிரம் இருக்கு.  கியூவில நிக்காமயே நீ மக்களுக்கு சேவை பண்ணலாம். ஆனா, ”நான் கியூவில நின்னா மக்களுக்கு ஆதரவா இருக்கேன்னு அர்த்தம். அவாளுக்கு கஷ்டம்னா அது எனக்கும் வரட்டும்”னு நீ நாலாயிரக் கியூவில மட்டும் சேந்து கித்தாப்பா சொன்னா, மத்த கியூவில அப்பாவியா மக்கள் நிக்கும்போது, அவா சிரமத்தை நீ ஏன் மதிக்கலைன்னு கேள்வி வருமா இல்லையா?  அதுவும் நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்து மத்த கியூவில எல்லாம் ஜனங்கள் அடிக்கடி எல்லா வருஷத்துலயும் நிக்கறாளே? ஊஹூம். உன்னோட வியாக்கியானம் இடிக்கறது.

           நீ அந்த பாங்க் கியூவில சேராம இருந்தா, அதுல நின்னவா யாரும் நீயோ வேற தலைவர்களோ வந்து நிக்கணும்னு ஆசைப்பட மாட்டா.  ரேஷன் கடை, அது இதுன்னு சொன்னேனே, அங்கயும் அப்பிடித்தான்.  அவாள்ளாம் ஆஸ்பத்திரி நோயாளி மாதிரி தன் கஷ்டத்தை நொந்துப்பா – அது வேற விஷயம்.  ஆனா அங்கல்லாம் நீ போய் நின்னா, போரடிச்சுண்டு கியூவில நிக்கறவாளுக்கு நீ ஒரு ஜாலி பொழுது போக்கா இருப்ப.  மத்தவாளுக்கு நீ வெறும் பொழுது போக்குப் பொம்மையா இருக்கறது நன்னா இல்லை.

          ஆளும்  கட்சியோ எதிர்க்கட்சியோ, ஒரு அரசியல் தலைவர்னா பேச்சு செயல் ரண்டுத்துலயும் அடுத்த கட்சி மனுஷாளுக்கு ஈடு குடுத்துண்டு இருக்கணும்.  அது சரிதான். உன் காங்கிரஸ் கட்சிலயே இதுக்கு ஜாம்பவான்கள் இருந்திருக்கா.  ஆளும் கட்சில உன் கொள்ளுத் தாத்தா நேரு, ஆளும் கட்சி-எதிர்க் கட்சி ரண்டுலயுமே காமராஜ்னு உதாரணம் சொல்லலாம்.  அவாளல்லாம் நினைவு படுத்தறா மாதிரி உங்கப்பா வயசுக்காராளே காங்கிரஸ் கட்சில இருந்ததில்லை.  அதுனால, அந்தப் பெரிய தலைவர்கள் மாதிரி நீ இருக்கணும்னு சொல்லலை.  ஆனா கேஜ்ரிவாலை ஞாபகப் படுத்தற காங்கிரஸ் தலைவர்னு நீ பேர் வாங்கணுமா என்ன?

          ஏதோ உன்னைக் குறை சொல்லணும்னு இவ்வளவு பேசறேன்னு நினைக்காத. நீ நின்ன கியூவில உனக்குப் பதிலா பிரதம மந்திரி மோடியே பழைய நோட்டு நாலாயிரத்தோட வந்து நின்னிருந்தாலும், அவருக்கேத்த பிரசங்கம் பண்ணிருந்தாலும், அவருக்கும் இதே விமரிசனம்தான் பொருந்தும்.  சரிதான?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

Tuesday, 8 November 2016

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துச் சொன்ன உண்மை


       இது சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்தி. உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஒரு போலீஸ்காரர் தாமதமாகப் பணிக்கு வந்தார்.  அவர் மீது கோபம் அடைந்த உயர் அதிகாரியான ஒரு இன்ஸ்பெக்டர் அந்தப் போலீஸ்காரரைக் கன்னத்தில் அறைய அவர் மயக்கமுற்று விழுந்தார். வராத செய்தி என்னவென்றால், அந்த இன்ஸ்பெக்டர் ஒரு உண்மையை அடித்துச் சொல்லியிருக்கிறார்.

   தமிழ்நாடு அல்லாமல்  வேறு மாநிலத்திலிருந்து  இந்த பளார் செய்தி வெளிப்பட்டாலும் வியப்பில்லை.  ஏனென்றால் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் துர்குணங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.  சரி, அதற்கும் வேலைக்குத் தாமதமாக வந்த போலீஸ்காரரை ஒரு உயர் அதிகாரி கன்னத்தில் விட்டதற்கும் சம்பந்தம் உண்டா? உண்டு.

      போலீஸ் துறையை விடுங்கள். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வணிக வரித்துறை என்று வேறு எந்தத் துறையையும் எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டின் பிற அங்கங்களான சட்டசபை மற்றும் நீதித்துறையையும் கணக்கில் கொள்ளுங்கள்.  இந்தத் துறைகளின் தலைவர்களோ அவர்களுக்கு அடுத்தடுத்து இருக்கும் அதிகாரிகளோ தங்களுக்குக் கீழே பணிபுரியும் எந்த ஒரு ஊழியரையும் கைநீட்டி அடிக்க முடியுமா – அதுவும் தாமதமாக ஆபீசுக்கு வந்ததற்காக?   

        போலீஸ் துறையில் மட்டும் ஏன் இப்படி ஒரு அநியாயம் சாதாரணமாக நடக்க முடிகிறது?  அதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும் பெருவாரியான அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் பலரையும் நெறி தவறவைத்து, விதிகளை மீற வைத்து, அநியாயமும் அடாவடியும் கூட செய்யவைக்கிறார்கள். இவற்றை அனேகமாக காதும் காதும் வைத்த மாதிரி கமுக்கமாகச் செய்து முடிப்பது போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

     ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தங்களது சொந்த ஆதாயத்தை வளர்த்துக் கொள்ளவும், தங்களுக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கவும், தங்களின் அரசியல் எதிரிகளை இம்சிக்கவும் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்துவது இந்தியாவில் பரவலாக நடக்கிறது. இந்த வேலைகளுக்கு போலீசார் அளவிற்கு மற்ற துறை அதிகாரிகளைப் பயன்படுத்த இடமுமில்லை. உடன்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு வேண்டிய இடத்தில் பணி, பதவி உயர்வு மற்றும் சில ருசியான பலன்கள் கிட்டும்.  மற்றவர்களுக்கு நேர்மையும் போலீஸ் திறமையும் இருந்தாலும் ஏதோ மாவாட்டுகிற மாதிரியான பணியும் அதோடு சேர்ந்த எச்சரிக்கையும் கிட்டும். இதுபோக, ஆள்பவர்களின் சொல்லுக்கு இணங்கத் தயாரானவர்கள் சிலரையும் போலீஸ் வேலையில் சேர்ப்பது உண்டு. இவ்வாறு ஆசை காட்டி ஈர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகள், தங்கள் எஜமானர்களின் அநியாய, அக்கிரம ஆசைகளுக்குத் தெரிந்தே துணை நிற்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் மிகுந்த இந்தியாவில், ஆளும் அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகளை நிர்பந்தித்து கைப்பாவைகளாக ஆட்டுவிப்பது இன்னும் எளிதாக இருக்கிறது.

        இப்படி ஆக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பொது மக்களிடமும் தங்களின் கீழ் வேலை செய்யும் மற்ற பணியாளர்களிடமும் நிதானமாகவோ நியாயமாகவோ நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.  இவர்கள் கற்ற குரூரமும் கயமையும் இவர்களின் கீழ் வேலை செய்பவர்கள் பலரையும் தொற்றிக் கொள்ளும்.  அது இன்னும் கீழே உள்ளவர்கள் மேல் செலுத்தப்பட்டு மேலும் பலரை அவமதிக்கும், காயப்படுத்தும்.

      போலீஸ் அதிகாரிகளை ஏவலுக்கு ஆளாக்கி அவர்களின் பணி ஒழுக்கத்தைக் குலைத்த அரசியல்வாதிகள், ஒருவகையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஊக்குவித்த அந்நாட்டு ராணுவத் தலைவர்கள் மாதிரிதான்.  அந்த ராணுவத் தலைவர்கள் முக்கியத்துவம் பெறவும் இந்தியாவில்  நாசவேலைகள் அரங்கேறவும் அங்கு விசேஷமாக வளர்க்கப்பட்ட தீவிரவாதிகள், தாங்கள் பயின்ற ஆயுதம் ஏந்திய அராஜகத்தை தங்களுக்குள் சிறிதும், பாகிஸ்தான் மக்களுக்கு எதிராகப் பெரிதும் பிரயோகிப்பார்கள்.  அந்தச் செயல்களை அந்நாட்டு ராணுவ அதிகாரிகளே கட்டுப் படுத்த முடியாது – அவர்களோ அல்லது பின் வரும் அதிகாரிகளோ மனம் மாறும் வரை.  இதற்கு இணையாக நமது போலீஸ் துறை எதனால் எந்த அளவு பாதிப்படைந்திருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்கலாம்.

     வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை,  வணிகவரித்துறை மற்றும் போலீஸ் துறைகளுக்கு இதுவரை செல்லாதவர்களையும் கேட்டுப் பாருங்கள் – அதாவது அவர்கள் எந்தத் துறை அலுவலகத்தில் காலடி வைக்கத் தயங்குவார்கள் என்று. ‘போலீஸ் துறை’ என்பது பெரும்பாலோரின் உள்ளுணர்வின் பதிலாக இருக்கும். இருந்தாலும் போலீஸ்காரர்களைச் சுயநலத்திற்காகக் கையாளும் அரசியல்வாதிகள்தான் அதற்கான பழியைப் பெரிதும் ஏற்கவேண்டும். இந்த அடிப்படை உண்மை அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கைவீச்சிலும் பிரதிபலிக்கிறது அல்லவா?
* * * * *


Copyright © R. Veera Raghavan 2016