|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "நாங்கள் உங்களுக்கு மரியாதை
கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்" என்று
திமுக-வை நோக்கிக் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசி இருக்கிறாரே? பதில்: காங்கிரஸ்
கட்சி தமிழகத்தில் தேய்ந்து போன நிலையில், மற்ற
பல மாநிலங்களிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு சரிந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களைத் திமுக பெரிதாக மதிக்காது. சுதந்திர சமூகத்தில்
ஒருவருக்கான மதிப்பு என்பது அவர் தானாக சம்பாதித்துக் கொள்ளும் சக்தி. அதன்
விளைவாக அடுத்தவர் அந்த சக்தியை அங்கீகரிப்பார். இந்தப் பொது நியதியை - அதுவும்
ஒருவர் காலை மற்றவர் வாரும் அரசியல் உலகில் - காங்கிரஸ் உணர்ந்து தனக்கான
மரியாதையை வெல்ல வேண்டும். மக்கள் செல்வாக்கைப் பெற வாய்ப்புள்ள இளைஞர்கள்
கட்சிக்குள் முன்னேற, தலைவர்களாக மத்தியிலும்
மாநிலங்களிலும் பரிணமிக்க, முதலில் காங்கிரஸ் வழி
செய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் மிஞ்சி மிஞ்சி செய்யத் தக்கது:
முக்கல், முனகல், பொருமல். |
|
2. கேள்வி: "வரும் சட்டசபைத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாட்டு அணிக்கும்
நடக்கும் போட்டி. வெல்லப் போவது டெல்லி அணியா, தமிழ்நாட்டு
அணியா என்பது கேள்வி" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?
பாரதத்திலிருந்து தமிழகத்தைத் தனிமைப்படுத்த நினைக்கும் கட்சி
திமுக. அதைத் தீர்க்கமாக எதிர்க்கிற கட்சி பாஜக என்கிற உண்மை ஸ்டாலின் உள்மனதில்
கசந்து அதுவே தொண்டை வரை வந்து அவர் அடக்கிவைத்த வார்த்தைகள்: 'வெல்லப்
போவது தமிழ்நாட்டு அணியா, இந்திய அணியா?' |
|
3. கேள்வி: தவெக
தலைவர் விஜய், திமுக அரசின்
முறைகேடுகளை எதிர்க்க வல்லவராகத் தெரிகிறார். மேடைகளில் அவ்விதம் பேசுகிறார்.
அவர் கட்சியை விட, பாஜக எந்த வகையில் சிறந்தது?
|
|
4. கேள்வி: தமிழக
சட்டசபைத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணி வைக்க முயலும்
தவெக, ஊழலோடு கை கோர்க்க
நினைக்கிறது என்றால் அதிமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைத்த பாஜக அதைச் செய்தே
விட்டது என்று அர்த்தமில்லையா?
செஸ் ஆட்டம் மாதிரி, தனது நகர்வுகளில் ஒரு தற்போதைய சமரசம் செய்துகொண்டு
தமிழகத்தை மீட்டு எதிர்காலத்தில் மாநிலத்தில் நல்லாட்சி வழங்கும் பெரும்
வெற்றியைக் கணக்கிடுகிறது பாஜக. தவெக செய்ய நினைப்பது வேறு, பாஜக செய்திருப்பது வேறு. |
|
5. கேள்வி: வீடுகளில்
விளக்கேற்ற நாம் தனியாகப் பயன்படுத்தாத எண்ணைக்கு,
ஏன் விளக்கெண்ணை என்ற பெயர்? அந்தப் பெயரில்
விளக்குக்கு என்ன வேலை?
|
|
பகுதி 52 // 17.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Wednesday, 18 February 2026
கேள்வி-பதில் (17.02.2026)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment