Tuesday, 2 June 2026

கவிஞர் மதுவந்திக்கு அஞ்சலி

 

 

கவிஞர் மதுவந்தி எனது 48 ஆண்டு கால நண்பர். இயற்பெயர், நா. வீரராகவன். மதுரைக்காரர், பின்னர் டெல்லிவாசி. நற்பண்புகள் மிகுந்தவர். பல நண்பர்களை ஈர்த்தவர். சமீபத்தில், ஆரோக்கியமான 67-வது வயதில் அவர் சட்டென மறைந்தார். அவருக்கு அஞ்சலியாக, துயரத்தில் எழுதப் பட்ட பாடல் இது. இதிலுள்ள இழப்புணர்வு பலருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும்.

 

 

போய்விட்டாய் போய்விட்டாய்

சொல்லாமல் போய்விட்டாய்

வாழ்வின் பரிதாபத்தை

நொடியில் காட்டிப் போய்விட்டாய்

 

 

உன் நாவின் இனிய சொற்களும் - உன்

இதயம் தேக்கிய கனிவும் - உன்

கண்ணில் ஊறும் நட்பும் - பாவி

காலனை ஈர்த்துக் கொண்டதோ

 

 

நல்ல எழுத்தைப் பார்க்கும் நான்

பகிர்ந்து மகிழ நீயில்லை

நீ போற்றும் வரிகளை நான் – இனி

பார்க்கப் போவதுமில்லை

 

 

சட்டென நீ சென்றவுடன்

சுற்றம் வெறுமை ஆனதே - உன்

அழகிய பண்புகள் யாவும் - எனை

ஆற்றுப் படுத்துக நண்பனே

 

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

பூபாளம், ஜூன்-ஜூலை 2026

 

No comments:

Post a Comment