|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "விசிக நினைத்திருந்தால், 2026 சட்டசபைத்
தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி சிதறியிருக்கும்" என்றெல்லாம் விசிக
தலைவர் திருமாவளவன் பேசி இருக்கிறாரே? பதில்: இன்றைய
நிலையில் இதுபற்றிக் கவலைப்பட வேண்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின் அல்ல.
இதுபற்றிச் சிந்திக்க வேண்டியவர், தவெக
தலைவரும் கூட்டணி அரசின் முதல்வருமான விஜய். "விசிக நினைத்தால் ....."
என்று விஜய்யிடம் திருமாவளவன் பெரிதாக என்ன சொல்ல நினைக்கிறாரோ? |
|
2. கேள்வி: "இன்றில்லாவிட்டால் நாளை, நாளை
இல்லாவிட்டால் மறுநாள், அல்லது என்றாவது ஒரு நாள் நாங்கள் வெற்றி
பெறுவோம்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசி இருக்கிறாரே? பதில்: இன்று, நாளை, மறுநாள், எந்நாளும் சீமான் இதே வார்த்தைகளைச்
சொல்லுவார். |
|
3. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் சோனம்
வாங்சுக் முன்நின்று டெல்லியில் நடத்திய போராட்டம் குறித்துக் கருத்துத்
தெரிவித்த நடிகை ஜோதிகா, சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ்
ஆகியோரைச் சுட்டிக்காட்டி, "உங்களைப் போன்றவர்களைப் பிள்ளைகளாக வளர்க்கக்கூடிய
தாய்களாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று சொல்லியிருக்கிறாரே? பதில்: எதிர்க்கட்சித்
தலைவர்களாகிய ராகுல் காந்தி, பிரியங்கா
காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மம்தா
பானர்ஜி, மு. க. ஸ்டாலின் போன்றவர்கள் மத்திய
அரசுக்கு எதிராகச் செயல்படுவதற்கு லாயக்கற்றவர்கள், அவர்கள் சுத்த வேஸ்ட், என்பது
ஜோதிகாவின் கருத்து. அதை எப்படியோ சுற்றி வளைத்துச் சொல்லப் பார்க்கிறார். |
|
4. கேள்வி: 'கம்பளிப்பூச்சி ஜனதா கட்சி' என்று ஒரு கட்சி ஆரம்பிக்க
நினைக்கிறேன். எடுபடுமா? பதில்: இன்றைய நிலையில் அது பெயரளவில் எடுபடும். |
|
5. கேள்வி: புல், பூண்டு, பூச்சி - விளக்கவும். பதில்: புல், ஆடு மாடுகளுக்கு உணவு. பூண்டு, மனிதர்களுக்கு உணவு. சில பூச்சிகள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை -
ஆபத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. |
|
பகுதி 116 // 29.07.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment