வந்தனம் மோடி
(பாடல்)
மோடி என்றால் அவன் நரேந்த்ர மோடி - எங்கு தேடினாலும் அவன் போல் தலைவன் யார்? ஓடி ஓடி தேசம் காப்பவனே - உனைப் பாடிப் பாடி வந்தனம் செய்குவோம்! |
R. Veera Raghavan, Advocate, Chennai |
வந்தனம் மோடி
(பாடல்)
மோடி என்றால் அவன் நரேந்த்ர மோடி - எங்கு தேடினாலும் அவன் போல் தலைவன் யார்? ஓடி ஓடி தேசம் காப்பவனே - உனைப் பாடிப் பாடி வந்தனம் செய்குவோம்! |
R. Veera Raghavan, Advocate, Chennai |
-- ஆர். வி. ஆர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு
உள்ள அதிகாரமும் முக்கியத்துவமும் அவரது வலிமையான நாடு அளித்தது. வாய்க் கொழுப்பு,
அவரது அசட்டுத்தனம் கொடுத்தது – அவரது சமீபத்திய பேச்சு இதற்கு உதாரணம்.
டிரம்பிற்கு ரஷ்யா மீது ஒரு கோபம் உண்டு. காரணம், அவர்
தலையிட்டுப் பார்த்தும் ரஷ்யா-உக்ரைன் போரில் அவர்
விரும்பிய வழியில் ரஷ்யா போரை நிறுத்த முன்வரவில்லை.
அதனால் அமைதிக்கான நோபல் பரிசு வாய்ப்பும் டிரம்பை விட்டு நழுவியது என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது.
இந்தியா
மீதும் அதிபர் டிரம்பிற்கு மனக்கசப்பு உண்டு.
அதற்குக் காரணம்: மோடியின் தலைமையிலான இந்தியா, டிரம்பின் மானத்தை சர்வதேச அளவில் சந்தி
சிரிக்க வைத்தது – அதுவும் டிரம்ப் தனக்குத் தானே வாங்கிக் கட்டிக் கொண்டது. எப்படி என்றால், பாகிஸ்தான்
வளர்த்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, சென்ற மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்களையும் ராணுவக் கட்டமைப்புப் பகுதிகளையும்
ஏவுகணைகள் வீசி துவம்சம் செய்தது. பாகிஸ்தானும் சோப்ளாங்கியாக நம் மீது எதிர்த் தாக்குதல் செய்தது.
நான்கு
நாட்கள் நடந்த அதிவேகப் போரில் 'முடியலை'
என்றாகிவிட்ட பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
இந்தியா போரை நிறுத்தியது. இந்த நேரத்தில் விஷமக்கார டிரம்ப் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.
“இந்தியாவும்
பாகிஸ்தானும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடனான உங்கள் வர்த்தகம்
நின்றுபோகும்” என்று இரு நாடுகளையும் தனது அரசு எச்சரித்ததால் அவை போரை நிறுத்தின
என்று டிரம்ப் கூசாமல் புளுகினார். "இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே போர் பெரிதாகாமல்
நான் தடுத்தேன்" என்றும் சவடாலாகப் பேசினார். அவரது
நோபல் பரிசுக் கனவு மங்கவில்லை.
சக்தி
மிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புளுகை அழுத்தமாக நேரடியாக மறுக்காமல்,
அதே சமயம் உலகம் நன்றாகப் புரிந்துகொள்ளூம்
வகையில், இந்தியா ஒன்றைத் தெளிவு
படுத்தியது. அதாவது, பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவை அணுகிக் கேட்டதாலும், ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பெரிதும்
நிறைவேறி விட்டதாலும், இந்தியா போரை நிறுத்தச் சம்மதித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு அதுதான்
காரணம், வேறு எந்த மூன்றாம்
நாடும் அதற்குக் காரணம் அல்ல என்பதை உலகம் நம்புமாறு இந்தியா எடுத்துச் சொன்னது. இருந்தாலும் டிரம்ப் புளுகியபடி இருந்தார்.
சென்ற
ஜூன் மாத நடுவில், டிரம்புடன் போனில் பேசிய மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நான்கு-நாள் போர், அந்த இரு நாடுகளுக்குமான ராணுவத்
தொடர்பு வழிகள் மூலமாக, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டபடி,
நிறுத்தப் பட்டது. இதில் மற்ற மத்தியஸ்தம் ஏதும் நடக்கவில்லை
என்றும் டிரம்பிடமே தெரிவித்தார் – இதை இந்தியாவின் வெளி விவகாரத்துறை
செயலரும் ஒரு அறிக்கை மூலம் அப்போது தெரியப்
படுத்தினார்.
தன்
மூக்குடைந்தாலும் டிரம்ப் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இப்போது, 'என் மானத்தை வாங்கிய இந்தியாவே, உன்னை விட்டேனா பார்!' என்பதற்காகவும் சேர்த்து,
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25% வரி விதித்திருக்கிறார். அது போக,
நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் நமது நாட்டுப்
பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதியானால் அதற்கு ஒரு அபராதமும் போட்டிருக்கிறார்.
புதிய
வரி மற்றும் அபராதம் விதித்ததுடன் டிரம்ப் நிற்கவில்லை. அவற்றைத் தொடர்ந்து,
"ரஷ்யப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் 'செத்த பொருளாதாரங்கள்' (dead economies). அவை
எப்படியும் போகட்டும்" என்று தத்துப் பித்தென்று சென்ற ஜூலை 31-ம் தேதி
ஒரு அறிக்கை வெளியிட்டார்.
வாய்க் கொழுப்பில் டிரம்ப்பிற்குச் சளைக்காத
அரசியல் தலைவர், அவரையும் மிஞ்சக் கூடிய தலைவர், உலகில் ஒரு
மனிதர்தான் உண்டு. ராகுல் காந்திதான் அவர். இந்தியாவை எதிர்த்து, அதுவும் மோடியை எப்படியாவது சங்கடப் படுத்தும், பேச்சை யார் பேசினாலும்
அதை ராகுல் காந்தி வரவேற்பார். அதன்படி, டிரம்பின் 'செத்த பொருளாதார' அறிக்கை வந்த அதே நாள் ராகுல்
காந்தி அதைக் கொண்டாடிப் பேசினார்.
ராகுல்
பேசிய வார்த்தைகள் இவை: "டிரம்ப்
சொல்வது சரிதான். இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்பது, பிரதமர் மற்றும்
நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி
டிரம்ப் இந்த உண்மையைக் கூறியதில் நான்
மகிழ்ச்சியடைகிறேன்." அடுத்து, தனது X தளத்திலும் "இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது. அதைக் கொன்றவர்
மோடி" என்று ராகுல் காந்தி பதிவிட்டார்.
இந்தியா
ஒரு செத்த பொருளாதாரம் என்பதை ராகுல் காந்தி நிஜமாகவே நம்புகிறாரா?
இல்லை, “டிரம்பை ஒரு பொய்யர் என்று மோடி
அறிவிக்கத் தயாரா?” என்று தான் சமீபத்தில் வெட்டிக் கேள்வி கேட்டோமே, அது ராகுல் காந்தியே டிரம்பை இடிப்பது போல் தொனிக்கிறதே, அது டிரம்பிற்கு வருத்தம் தருமே என்று ராகுல் இப்போது யோசிக்கிறாரா? அதனால் ‘டிரம்பை
ஒருவிதத்தில் சமாதானம் செய்வோம்’ என்று எண்ணி டிரம்பின் 'செத்த பொருளாதாரக்' கருத்தை வரவேற்று அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் வளைந்து பணிந்து பேசி இருக்கிறாரா
ராகுல்? ராகுலின் பித்துக்குளிப் பேச்சுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்.
தான்
வெறுக்கும் மோடி நிர்வகிக்கும் நாட்டை டிரம்போ
வேறு யாரோ மட்டம் தட்டி இழித்துப் பேசினால், ராகுல்
காந்தியின் அற்ப சந்தோஷத்திற்கு அளவு கிடையாது. இதுவும் ராகுல் பேச்சுக்கு ஒரு காரணம்.
என்ன
பேசுகிறார் ராகுல் காந்தி? நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோஹன் சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் நம் பிரதமர்களாகப்
பதவி வகித்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் துடிப்புடன் ஜிகுஜிகுவென்று ஜொலித்ததா? பிறகு 2014-ம் வருடம் நரேந்திர மோடி இந்தியாவின்
பிரதமரான நாள் முதற்கொண்டு தான் நமது பொருளாதாரம் சோகை அடைந்து செத்துவிட்டதா?
ஒரு
நாட்டின் பொருளாதாரமே மடிந்து போவது அந்த நாட்டிற்கான பெரும் கேடு, பெரும் துயரம். மோடி பிரதமரான முதல் ஐந்து ஆண்டுகள்
சென்றபின் நடந்த 2019 மற்றும் 2024-ம்
ஆண்டுகளில் லோக் சபா தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது, இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது, அதற்குக் காரணம் மோடி தலைமையிலான
மத்திய ஆட்சி என்று ராகுல் காந்தி மக்களிடம் சொன்னாரா?
இல்லை. ஏனென்றால் ஒரு அமெரிக்க அதிபர்
மதிகெட்டு அவ்வாறு முன்னதாக அறிவிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் அப்போது அந்த
அளவு புத்தி கோளாறாக வேலை செய்யவில்லை.
இன்னொன்று.
தொழிலதிபர் அதானியை எதிர்த்தும், பிரதமர் மோடி அந்தத் தொழிலதிபருக்குச் சாதகமாக
முடிவுகள் எடுப்பதாகவும், ராகுல் காந்தி அடிக்கடி சொல்லி வருகிறார். செத்துப்போன ஒரு பொருளாதாரத்தில் ஒரு
தொழிலதிபர் ராகுல் காந்தியின் கவனம் பெறும் அளவிற்கு வளர்ந்து தொழில் செய்ய முடியுமானால்
அவர் பெரிய தொழில் மேதையாக இருக்கவேண்டுமே? இதை ராகுல்
காந்தி ஒப்புக் கொள்கிறாரா? பாவம் ராகுல் காந்தி. தன்
பிதற்றல் தன்னை எப்படியெல்லாம் அம்பலப் படுத்தும்
என்பதை அவர் உணரவில்லை.
டிரம்பிற்கும் ராகுல் காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தியா இழிக்கப் பட்டாலும்,
இந்தியா எக்கேடு கெட்டாலும் – அப்படிக் கெட்டதாக ஒரு அபத்தப் புரளியை
யார் கிளப்பினாலும் – டிரம்பிற்குக் கவலை இல்லை. தன் சுயலாபம் மட்டுமே அவருக்குக் குறி. ராகுல் காந்தியும்
அப்படித்தானே?
* * * * *
Author: R.
Veera Raghavan, Advocate, Chennai
-- ஆர். வி. ஆர்
நான் யார்? (பாடல்)
|
நான் நான் நான் நான் நான் யாரென்று உணர்த்திடுமா – நான்
|
மரம் செடி கொடிகளைப் போல்
|
அண்டம் தோன்றிய நாள் – அதில்
|
இயற்கையின் புதிராய் நான் –
வெறும்
|
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
சேவாலயா ஒரு தொண்டு
நிறுவனம். சென்னை அதன் தலைமையிடம். தனது சேவைகளில் ஒன்றாக, சேவாலயா முதியோர் இல்லங்கள்
நடத்துகிறது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்ட,
ஆதரவும் வசதியும் அற்ற, முதியோர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம்,
கூடவே வாழ்வின் அடிப்படைக் கண்ணியம், ஆகியவற்றை அளித்து வருகிறது சேவாலயா.
சேவாலயாவின் மகத்தான
பணியை நினைத்து, அங்கிருக்கும் முதியோர்களின் மனம் இந்தப் பாடல் வரிகளை எண்ணிப் பார்க்கலாம். |
சேவாலயா ..... சேவாலயா
..... எமக்கெலாம் .....
தாயாகினாய் ..... நீ தாயாகினாய் .....
|
யாருக்கும் வேண்டவில்லை யாரும் மதித்ததில்லை காலம் கட்டி இழுத்து – எம்மைச் சேர்த்து விட்டது இங்கு வாழ்வில்
புது கண்ணியம் – இன்று காணும் மனிதர்கள் நாம் |
சேவாலயா ..... சேவாலயா
..... எமக்கெலாம் .....
தாயாகினாய் ..... நீ தாயாகினாய் .....
|
01.06.2025
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
மகிழ்வோமே! (முதியோர் கீதம்)
[ஒரு முதியோர் இல்லத்தினருக்காக எழுதப்பட்டது]
|
மகிழ்வோமே மனம் மகிழ்வோமே! நிறைவோமே நெஞ்சம் நிறைவோமே! மகிழ்வோமே மனம் மகிழ்வோமே! நிறைவோமே நெஞ்சம் நிறைவோமே!
|
வருத்தம் இல்லை ஒரு வெறுப்பும் இல்லை! காயம் இல்லை ஒரு கசப்பும் இல்லை! வருத்தம் இல்லை ஒரு வெறுப்பும் இல்லை! காயம் இல்லை ஒரு கசப்பும் இல்லை!
|
யாரையும் அண்டாமல் எவரையும் சாராமல் நல்மனதுடன் நாம் ஜீவிப்போம்! நல்மனதுடன் நாம் ஜீவிப்போம்! நல்மனதுடன் நாம் ஜீவிப்போம்!
|
Author: R. Veera Raghavan,
Advocate, Chennai
-- ஆர். வி. ஆர்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது பொதுவெளியில் அசட்டுத்தனமாக ஒரு கேள்வியை இரு முறை எழுப்பி இருக்கிறார் – வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நோக்கி.
‘ஆபரேஷன்
சிந்தூர்’ தாக்குதல்களை இந்தியா தொடங்குவதற்கு முன்பாக,
இந்தியா அது பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்தது'
என்று ஜெய்சங்கர் சொன்னதாக வைத்துக் கொண்டார் ராகுல் காந்தி. அதன்படி
அவர் தனது கேள்வியை முன் வைத்திருக்கிறார். ராகுல் கேட்டது:
"நமது தாக்குதல் பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? நாட்டிற்கு
உண்மை தெரிய வேண்டும்".
ராகுல்
காந்தியின் கேள்விக்கு வெளிவிவகாரத் துறை பதில் சொல்லிவிட்டது. என்னவென்றால்: இந்தியா தனது தாக்குதலைத் துவங்குவதற்கு முன்னதாக அது பற்றிப் பாகிஸ்தானுக்குத்
தகவல் சொல்லவில்லை, இந்தியா தனது ஆரம்ப அடியை அடித்த பின்னர், அந்தத் தாக்குதலானது
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள்
மீது மட்டும் நடத்தப் பட்டது, அந்நாட்டின் ராணுவத் தளங்களின் மீது இந்தியா தாக்குதல்
நடத்தவில்லை என்று பாகிஸ்தானுக்குத்
தெரிவிக்கப் பட்டது, இதைத்தான் அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார், ஆனால் அவர் பேச்சு திரிக்கப் படுகிறது
பயங்கரவாத
முகாம்கள் மீது மட்டும் முதலில் தாக்குதல் நடத்திய இந்தியா, பின்னர் ஏன் அது பற்றிப்
பாகிஸ்தானிடம் தகவல் சொன்னது? ஏனென்றால், அந்த அடியை வாங்கிய கலக்கத்தில் பாகிஸ்தான்
இந்திய ராணுவத் தளங்களின் மீது தாக்குதல் செய்யக் கூடாது, அது நடந்தால் இந்தியா பாகிஸ்தானின்
ராணுவத் தளங்களையும் தீவிரமாகத் தாக்க வேண்டியிருக்கும், பிறகு அது நீண்ட போருக்கு
வழிவகுக்கும், முடிந்தவரை போரைத் தவிர்க்கலாம், என்ற மேலான எண்ணத்தில் இந்தியா பாகிஸ்தானிடம்
பின்னர் அந்தத் தகவலைச் சொன்னது.
ஒரு பயில்வான் தன்னை அனாவசியமாக அடித்து ஓடும் ஒரு தெருக் காவாலியைப் பிடித்து, தன்னை அடித்த கையைப் பற்றி முறுக்கி அதன் மணிக்கட்டில் பலமாக ரண்டு போட்டு, அதன் பின் “பாரு, இத்தோட விட்றேன். இனிமே நீ பேஜார் பண்ண, பெண்டை நிமித்திருவேன். ஜாக்கிரதை!”
என்று அந்தக் காவாலியை எச்சரிக்கும் செயலைப் போல் இந்தியா செய்தது – தனது முதல் தாக்குதலுக்குப் பிறகு
இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த தகவலின் மூலமாக.
ராகுல்
காந்தியின் கேள்வியைச் சற்று ஆராயலாம்.
காங்கிரஸின்
முடிசூடா மன்னர் ராகுல் காந்தி. அவர்தான் லோக் சபாவில் எதிர்க் கட்சித் தலைவர். எதுவானாலும்
அவர் இப்படி ஒரு மழலையாக, பாகிஸ்தானை மகிழ்விக்கும் விதமாக, நமது மத்திய அமைச்சரைப்
பார்த்துக் கேட்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?
அப்படியானால் நீங்கள் தேசபக்தர்.
ராகுல்
காந்தியின் கேள்விக்கான பின்னணி நமக்குத் தெரியும்.
சென்ற
மாதம் பாகிஸ்தான் ராணுவம் நான்கு பயங்கரவாதிகளை இந்தியாவின் பஹல்காமிற்கு அனுப்பி 25
அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் படுகொலையை நிகழ்த்தியது.
அதை அடுத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை
வெளுத்து வாங்கிப் பணிய வைத்தது - நான்கே நாட்களில். நிலைகுலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்க, போர்
நின்றது.
சமீபத்திய
ஜெய்சங்கரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ஏன் தனது பிதற்றல் கேள்வியைக்
கேட்டார்? அரசியல் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி தன்னைச் சுற்றித் தானே
பின்னிக் கொண்ட வலைதான் அவரை அப்படிக் கேட்க வைத்தது.
2004-2014
ஆகிய பத்து வருடங்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பை மதித்துச் செயல்படும் மன்மோஹன் சிங், ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தது.
2014-ம்
ஆண்டிலிருந்து இன்றுவரை, 11 வருடங்களாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக்
கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.
மோடி
ஆட்சியில் சாதாரண மக்களுக்கான குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள், மருத்துவக்
காப்பீடு, வீடு கட்ட உதவி போன்ற தேவைகள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பெரிதும் நிறைவேறுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கின்றன. இன்னும் பல சாதனைகளும்
மோடி ஆட்சியில் உண்டு. இந்த ஆட்சியில் மத்திய அரசு செய்யும் வேலைகளில் – அதுவும் உயர்
மட்டத்தில் – லஞ்ச ஊழல் இல்லாமல் போனது. நாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளும் வெகுவாகக்
கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இது போன்ற பரவலான பெரிய சாதனைகளை, இவற்றுக்கு இணையானதை, மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி – அதாவது, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் லகான் பிடித்த ஆட்சி – செய்யவில்லை. அப்போது மத்தியில் ஊழல் ஊற்றெடுத்தது.
கோணல்
புத்தியில், ராகுல் காந்தி தனது அம்மா சோனியா காந்தியை ஓரம் கட்டியவர். கொழுப்புப்
பேச்சில் அவர் எவரையும் மிஞ்சியவர். அடுத்த பிரதமருக்கான ஆசையில் மோடியை எப்படியும்
எதிர்க்க வேண்டும் என்று அவர் துடிக்கிறார். “எங்கள் மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி
சாதனைகள் மாதிரி, மோடி அரசு தனது பதினோரு ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை”
என்று ராகுல் காந்தியால் பேச முடியாது, அப்படிப் பேசி அவர் மோடி அரசை எதிர்க்க முடியாது. எரிச்சலான
ராகுல் காந்தி அவ்வப்போது என்ன செய்கிறார்?
"தேசத்தின்
காவலாளி மோடி, ஒரு திருடர். சீனாவின் எல்லைக் கட்டுப்பாட்டு அத்துமீறல்களை அவர் ராணுவ
ரீதியாக எதிர்க்க முடியாமல் நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ரபேல்
போர் விமானங்கள் வாங்கியதில் மோடி முறைகேடு செய்கிறார்” என்ற வகையில் மலிவான பொய்களை
மட்டும் ராகுல் காந்தியால் பேச முடிகிறது.
இப்போது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் மோடியின் பேரும் புகழும் இந்திய மக்களிடையே மேலும்
உயர்கிறது. பார்த்தார் ராகுல் காந்தி. மோடியின் பேரை உடனே ரிப்பேர் செய்யவேண்டும் என்று
எண்ணினார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மோடி அரசு முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு
இந்தியத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தது, அதனால் நாம் சில போர் விமானங்களை
இழந்தோம், தேசப் பாதுகாப்பு நடவடிக்கையில், நமது போர் விமானிகள் உயிரைக் காப்பதில்,
ராகுல் காந்தியான நான்தான் கிங்கு என்று அவிழ்த்து விடுவோம். வேறு வகையில் மோடி அரசை
நம்மால் எதிர்க்க முடியவில்லை என்றால் இதைச் செய்வோம்’ என்று நினைத்தார் ராகுல் காந்தி.
விளைவு, அவரது பாப்பா கேள்வி. இதுதான் விஷயம்.
நல்ல வேளை. ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை எடுத்துச் சொல்ல பிற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வரும் குழுக்கள் எதிலும் ராகுல் காந்தி இல்லை. அந்தக் குழு ஒன்றில் அவர் சேர்க்கப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?
ஒரு குழு உறுப்பினராக ராகுல் காந்தி ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்கையில் அந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளின் முன்னால் அமர்ந்து, “பஹல்காம் பயங்கரவாதத்திற்கு முன்பாக மோடி அரசு நான்கு பேரைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு 25 அப்பாவி பாகிஸ்தானியர்களைக் கொன்று போட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது, அதை ஜெய்சங்கர் தீர்த்துவைக்க வேண்டும்!” என்று அவர் உச்சகட்டமாக உளறுவாரோ?
* * * * *
Author: R. Veera
Raghavan, Advocate, Chennai