Tuesday 27 February 2024

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!


   -- ஆர். வி. ஆர்

 

அநேக அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? ஊரை ஏமாற்றுகிறார்கள், ஊழல் புரிகிறார்கள், செல்வம் சேர்க்கிறார்கள், பரம்பரை அரசியலில் சுகிக்கிறார்கள், நாட்டிற்குக் கேடு செய்கிறார்கள். வெட்கம் மானம் இல்லாத அவர்களைப் பற்றிய நையாண்டிப் பாடல் இது.

 

மகாகவி பாரதியை வணங்கி வந்த வரிகள் இவை.   


 

 

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

எட்டுத் திக்கும் நல்லோர்கள் வெறுத்துநின்ற போதினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

திட்டமிட்டுத் தீதுசெய்து செல்வம் ஈட்டும் போதிலும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

வட்ட மாவட்டத் தலைகள் அக்கிரமம் செய்தினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

வெட்டி மணலெடுத்த ஆறு பள்ளத்தாக்கு ஆகினும்

  வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

 பட்டம் தரும் பல்கலைகள் ஊழலால் பாழாகினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!


சட்டம் அவர் கூட்டம்மீது கண்கள்வீசு போதினும்

  வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

அட்டைக்கத்தி சர்வாதிகா ரியாய்த் தலைவர் ஆகினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

கட்சிமானம் பாதாளத்தில் வீழுகின்ற போதினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!


Author: R. Veera Raghavan, Advocate, Chennai 

 

No comments:

Post a Comment