Saturday 19 February 2022

கண்கள்

 -- ஆர். வி. ஆர்

 

  

 

சிங்கத்தின் கண்களில் ஆதிக்கம் அமைத்து

சேவலின் கண்களில் செருக்கைச் சேர்த்து

 

 

யானையின் கண்களில் பொறுமையைப் பூட்டி

பூனையின் கண்களில் ஆர்வத்தை அமர்த்தி

 

 

எலியின் கண்களில் பீதியைப் பரப்பி

புலியின் கண்களில் ஆக்ரோஷம் அடைத்து

 

 

நாயின் கண்களில் நன்றியை நிறுத்தி

பசுவின் கண்களில் சாந்தம் செதுக்கி

 

 

மானின் கண்களில் மிரட்சி மிதக்க

மனிதன் கண்களில் பாசாங்கைப் புதைத்து

 

 

அவரவர் தன்மையைக் காட்டியும் மறைத்தும்

அற்புதம் செய்வது விழிகள்தானோ!

 

   முதல் பிரசுரம்:  பூபாளம், பிப். 2022

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

7 comments:

  1. அவரவர் பார்வையைப்பொறுத்தது

    ReplyDelete
  2. அருமையான எண்ண ஓட்டம். கண்களும கவி பாடும்.

    ReplyDelete
  3. Beauty lies in the eyes of the beholder.... Ur eyes went a step further.. Wow!

    ReplyDelete
  4. அற்புதம்

    ReplyDelete