Sunday 4 April 2021

வார்த்தைகள்


 -- ஆர். வி. ஆர்   


 
 

 

சிற்சில நேரத்தில்

சில சில எண்ணங்கள் 
சேர்ந்தால் அவைகளைச் 
சொல்வது அழகல்ல! 
 

 

 

சில பேச்சை  சில

செவிகள் கேட்கலாம்

எழுத்தில் வருவது

எந்நாளும் முறையல்ல!


 

 

என்னென்ன சிந்தனை

எவ்வெந்த வார்த்தையில்

எக்காலம் உரைப்பது

என்றுணர்தல் அறிவு! 

 

 


வார்த்தை வடிவில்

வெளிப்படும் அறிவு

வெளிவரும் முதிர்ச்சி

வசப்படுமா நமக்கு?

 

 

   

இறைவன் அருளோ

இயற்கையின் பரிசோ

இருத்தல் வேண்டும்

இதில்நாம் வெல்வதற்கு!


 


* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021

 

No comments:

Post a Comment