Monday, 28 May 2018

மோடியே காரணம்! ஓடியே போகணும்!


வானம் விழுந்தாலும் மோடி - பசுஞ்
சாணம் விழாதாலும் மோடி!

பூமி வெடித்தாலும் மோடி - நாய்
டாமி குரைத்தாலும் மோடி!

கானகம் எரிந்தாலும் மோடி - வெல்லப்
பானகம் புளித்தாலும் மோடி!

வெயில் சுட்டாலும் மோடி - தீ
கையில் பட்டாலும் மோடி!

மழை பெருகி வந்தாலும் மோடி - சாதம்
குழைந்து வெந்தாலும் மோடி!

பத்தும் செய்வான் மோடி - பகையைப்
பித்தும் செய்வான் மோடி!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Monday, 30 April 2018

Removing a Supreme Court Judge: Can India Check a Venomous Congress and a Mischievous Kapil Sibal? Yes!


Why should a political party be so venomous, and its leader so mischievous, towards a chief justice in the supreme court? The Congress and Kapil Sibal could answer: “That’s our hope for survival”.   

On the 20th of this month, 64 members of Rajya Sabha got together and presented a proposal – called a motion – to Rajya Sabha Chairman Venkaiah Naidu, for removing Justice Dipak Misra, the current chief justice in the supreme court.  It is a tough long-drawn process to remove a serving judge of the supreme court or of a high court by force of law. Newspapers call that process impeachment.

The Constitution permits removal of a judge of the higher judiciary on grounds of “proved misbehaviour or incapacity”.  The 64 proposers who sought removal of Chief Justice Misra were drawn from seven Opposition parties, led by the Congress party. Supreme court lawyer, Congress leader and Rajya Sabha member Kapil Sibal who was one of those 64, looked a chief architect and proponent of the impeachment move.

Chairman Venkaiah Naidu consulted some experts in law and quickly rejected the motion for impeachment. So that proposal died.

The Congress party, principally led by Kapil Sibal on this issue, has dared a dubious act doomed to fail anyway.  First, there was no cause for removing Chief Justice Misra, no "misbehaviour or incapacity".  Second, the Opposition parties can never gather the needed special majority of members in either House of Parliament to approve the impeachment motion, if the voting day comes.  Third, there is something to be noted in passing but it is real. Chief Justice Misra will retire on 2nd October 2018, in less than six months - mostly resulting in the dropping of any impeachment proceedings midway because of his retirement. Then why did the Congress party and Kapil Sibal go ahead on their idea of removing the Chief Justice of India? Because the party has turned vicious and its MP villainous. They have their reasons.

Anyone sees that some observations, orders and judgements rendered by the supreme court, especially Justice Misra, in recent times are not relished by the Congress party and its lawyer Kapil Sibal.  They are upset because if the court had done things or issued orders they wished, they would be politically benefitted and could also make propaganda against the ruling BJP which has been widely winning elections across India. The Congress is now angry and frustrated with the ruling party and with the supreme court headed by its present chief justice. So the Congress would be surely and stealthily behind the 64 members of Rajya Sabha in their action against Chief Justice Misra. Of course, Kapil Sibal says that those members were not acting at the bidding of their parties and were exercising their Constitutional rights to seek removal of a judge.  Are you not laughing?

The Congress party knows that the very commencement of impeachment proceedings against a judge of the higher judiciary, especially a straight judge, will deeply disturb and embarrass him. The judge might also stay away from the court room during the pendency of those proceedings.  That is what the Congress party wanted Chief Justice Misra to face, and perhaps do, with a mere beginning of the impeachment process if Chairman Venkaiah Naidu would admit the notice of motion.  The Congress and Kapil Sibal could attempt what they wished because the present law gives them scope for it. Here is how.

Under the law 50 members of Rajya Sabha, or 100 members of Lok Sabha, may sign and present a notice of motion for removing a judge.  After the Rajya Sabha Chairman or Lok Sabha Speaker admits that notice of motion, it is not put to vote in either House straight way. The Chairman or Speaker is required to form a three-member inquiry committee consisting of a sitting judge of the supreme court, a sitting chief justice of a high court and a jurist.  Keeping in view the notice of motion, the inquiry committee will frame specific charges against the judge and consider his defence. Finally, the committee will report if the judge is guilty of any charge or not.

If the inquiry committee reports that the judge is not guilty of any charge against him, the proposal for impeachment cannot continue and that is the end of it. If the committee reports he is guilty of any charge, then Rajya Sabha and Lok Sabha will vote to say if the judge is to be removed or not.  For a successful impeachment, both the Houses need to vote separately and favouring the removal, after which the President issues a formal order removing the judge.

The law prescribes a tough special majority of members in each House for impeachment to succeed.  First, at least a simple majority of the total membership of that House should be present when the vote is taken.  Next, approval of a two-thirds majority of the members present and voting is needed to consider the motion as passed in a House. 

Rajya Sabha has 245 members and Lok Sabha, 545 members. All the members of each House of Parliament would be present in their House when voting on impeachment takes place, since that moment is important. With the ruling NDA on the other side, the Congress party and its allies can never get anywhere near winning numbers in either House on an impeachment motion.  So their attempt to bring down Chief Justice Misra was destined to fail.  The Congress party and Kapil Sibal knew it well. So did the ruling party and everyone who studied law. Still the Congress party could abuse the law and try its luck for a wicked purpose.

We should now discover that our law for impeachment of judges is imperfect in one aspect, and it can be cured with just one change in The Judges (Inquiry) Act, 1968.  That change, when done, will require that the 3-member inquiry committee for investigating any charge against a judge is to be appointed only after both Houses of Parliament, at their separate sittings, call for the constitution of that committee by passing resolutions with the support of a simple majority of members present in each House.

Such a change in the law will disable any attempt by small irresponsible groups of politicians who certainly cannot secure a two-thirds majority support in Rajya Sabha and Lok Sabha to remove a judge, but yet file a notice of motion for his removal.  They do it to give the targeted judge an embarrassing prospect of a needless investigation by an inquiry committee. The present law cannot stop any such malicious notice of motion coming from an inconsequential group of MP's, and leaves it to the wisdom of one person – the presiding officer of Rajya Sabha or Lok Sabha – to reject that notice and keep out an inquiry committee. This is not the best way of protecting an honest independent judge. The suggested change in the law will do it effectively. 

The changed law will also bring it closer to the protection given to the President of India in the Constitutional provisions which prescribe when and how the President may be impeached.  Actually, a judge of the higher judiciary also needs such an assured protection from harassment. 

      Numerous politicians, from ruling parties and from the Opposition, would be interested in many court cases with high stakes, which are often decided by high courts and the supreme court. These men and women would be upset with judicial decisions that hurt them, their close relatives and associates and their benamis. So politicians could often have their grouses against bold, independent and upright judges, but not against the President who has chiefly ceremonial duties. That means, judges of high courts and the supreme court are likely targets of frivolous and vengeful moves of impeachment.  Hence the law must give them firmer pre-emptive protection against such assaults, like the President has.

      Even a single incident of a motivated impeachment action  against a judge, if it makes some headway, is a serious blow to India’s institution of pride and honour, its judiciary. So the change in the law for removal of judges, outlined above, is crucial.  After all, when criminals outsmart policemen, policemen should quickly get the better of criminals.  

No one may imagine that this opinion is unduly harsh on the Congress party or its member Kapil Sibal.  They could not think of or ask for any action for the removal of Justice C. S. Karnan of the Madras High Court whose “misbehaviour” till his retirement was prolonged and well known. At least in a few instances, his misbehaviour was also affirmed by a seven-judge bench of the supreme court when last year it convicted him, still a high court judge, for contempt of court. You will correctly guess why the Congress party wanted to be inactive in his case. But the party has a different approach towards the respectable Chief Justice Dipak Misra because this judge remains inconvenient and, more over, for subtle reasons this judge can also be coolly treated as a political untouchable in today's India.

    There was also an instance of impeachment proceeding against a supreme court judge in which the Congress party and Kapil Sibal showed peculiar disinterest and interest, and that must be remembered. That supreme court judge was Justice V. Ramaswami.

In 1993, impeachment proceedings against Justice Ramaswami had crossed the inquiry committee stage also. The 3-member inquiry committee had found that judge guilty of misbehaviour on 11 counts, mostly financial misdeeds.  Before voting took place in Lok Sabha that judge was assisted by Kapil Sibal who, as his lawyer, addressed the House for 5 hours to defend the judge. During voting, the ruling Congress party, together with its allies, rescued that judge in a special way.  Their 205 members were present inside Lok Sabha to raise the number of votes needed for a two-thirds majority of members present, but abstained from voting. And that ensured the collapse of the motion for impeaching Justice V. Ramaswami.  Do you now have a full  view of the diabolic double standards of the Congress party and Kapil Sibal when it comes to preserving independence and uprightness among judges of the higher judiciary?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Tuesday, 24 April 2018

என்று தணியும் இந்தக் கல்வியாளர்களின் தாகம்?



இந்தியாவில் இயங்கும் பல்கலைக் கழகங்களில், பலவற்றின் துணைவேந்தர்கள் யார் என்று அந்த அந்த மாநிலங்களில் உள்ள படித்தவர்களுக்கே தெரியுமா? தெரியாது.  தனது ஊரில் உள்ள களவாணிகளின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியுமா? அதுவும் தெரியாது.  தான் இருப்பதே தெரியாமல், வந்த வேலையை முடித்துவிட்டுப் போய்விட வேண்டும் என்றுதான் அந்தக் களவாணிகளும் அதே ரகத் துணைவேந்தர்களும் நினைக்கிறார்கள். பிடிபட்டு பெயர் வெளியானவுடன் இந்தத் திருடர்கள் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் அவமானத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மதுரைக்கு அருகில், ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஒரு பெண் இருக்கிறார்.  அந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிகிரி படிப்பு படிக்கும் தனது மாணவிகள் நான்கு பேரை அவர் போனில் தொடர்பு கொண்டார்.  அந்தக் கல்லூரி சார்ந்த மதுரை-காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவிகள் வகிக்கும் சிலரது பெண்-ஆசைகளுக்கு அந்த மாணவிகள் இணங்கவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்லி அழைத்தார்.  ஒத்துழைத்தால் மாணவிகள் தங்களின் பரீட்சைகளை சுலபமாகக் கடக்கலாம், நல்ல பணமும் வரும், பின்னர் முதுநிலைப் படிப்பு,  பிஎச்.டி படிப்பும் நிறைவேறும், அதற்கான உதவித் தொகைகளும் கிடைக்கும், அரசாங்க வேலைகள் கூட அவர்களுக்குக் கிட்டும் என்றெல்லாம் ஆசை காட்டினார்.

போனில் பேசும்போது, “கண்ணுங்களா, இது ஒரு நல்ல வாய்ப்பு” என்று திரும்பத் திரும்ப அந்தப் பேராசிரியர் அப்பாவி மாணவிகளை வசியப்படுத்த முயற்சித்தார். குறி வைக்கப்பட்ட மாணவிகள் ”சம்மதம் இல்லை. இனிமேல் இதுபற்றி எங்களிடம் பேசவேண்டாம்” என்று உடனே மறுத்துவிட்டார்கள். அதைக் கேட்ட பேராசியரும், “இல்லை கண்ணுங்களா, நீங்க சந்தேகப் படற மாதிரி நான் ஒண்ணும் தப்பான அர்த்தத்துல பேசலை. அவங்க வீட்டு கல்யாணம், காது குத்தல் நிகழ்ச்சிகள்ள வாசல்ல நின்னு வரவேற்கத்தான் உங்களை எதிர்பாக்கிறாங்க!” என்கிற மாதிரியும் தெளிவு படுத்தவில்லை.   ”சரி, இந்த விஷயம் வெளில தெரியாம இருக்கட்டும். எதுக்கும் ரண்டு நாள் கழிச்சு போன் பண்றேன்” என்று ஒரு நப்பாசையுடன் பேச்சை முடித்துக் கொண்டார் அந்தப் பேராசிரியர்.

பேராசிரியையின் இருபது நிமிட டெலிபோன் பேச்சு எப்படியோ பதிவாகி அந்த ஆடியோ மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. கேட்டால் மனதை சங்கடப்படுத்தும் நயவஞ்சகப் பேச்சு அது. இப்போது அந்தப் பாதகி கைதாகி அவர்மீது விசாரணை நடக்கிறது.

கல்லூரி மாணவிகளை ஒரு மானக்கேடான தவறில் தள்ளிவிட்டு அவர்களின் கௌரவ உணர்வை அழிக்க முனைந்திருக்கிறார் ஒரு பேராசிரியர் – தானே ஒரு பெண்ணாக இருந்தும்.  டெலிபோன் குரல் தன்னுடையது அல்ல என்று அவர் இதுவரை மறுக்கவில்லை.  யாரோ தனது கழுத்தில் கத்தியை வைத்து கட்டாயப் படுத்தியதால் அப்படிப் பேசியதாகவும் அவர் சொல்லவில்லை. அகையால் போலீசுக்கும் கோர்டுக்கும் அவர் என்ன விளக்கம் கொடுத்தால் என்ன?.

சமீப வருடங்களாக தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் ஒவ்வொருவராக லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுகளில் மாட்டுகிறார்கள். உள்ளே அவர்களுடன் கைகோர்த்து ஊழலில் லாபம் அடைந்தவர்களும்  கீழ் நிலைகளில் இருப்பார்கள். ஒரு அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் ஊழல் நடந்தால் கீழ் மட்டம் வரை வழிகிறதே, அது மாதிரி.  ஊழல்வாதிகள் அனேகமாகத் தனி மனித ஒழுக்கத்திலும் பலவாறாக சறுக்கத் தயாராக இருப்பார்கள். பிடிபட்ட பேராசியை விஷயத்தில், அவரது பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நான் சொல்லவில்லை.  ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் பல விதத்திலும் படு வீழ்ச்சி அடைவதால், அவற்றில் உயர் பதவிகள் வகிக்கும் யாருக்கும் பொதுமக்களிடம் மதிப்பு இருக்காது. மற்றபடி, யார் வண்டவாளம் எப்போது தெரியுமோ? 

தங்கள் பல்கலைக் கழகத்தின் உயர்ந்த பதவிகளில் இருக்கும் சிலரை இருட்டு வழிகளில் திருப்திப்படுத்தினால் நான்கு அப்பாவி மாணவிகளுக்குப் பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதை அவர்களின் பேராசியரே ஏன் எடுத்து விவரிக்கிறார்?   அவர் முயற்சித்தது நடந்தால், அந்தப் பேராசியருக்கும் முறைகேடாகப் பெரிய ஆதாயம் கிடைக்கும்  என்றுதானே அர்த்தம்?  அந்தப் பல்கலைக் கழகத்தில் உயர் பதவிகள் வகிக்கும் சிலர், அந்தப் பேராசியரிடம் முன்னதாக இதுபற்றிப் பேசி உதவி கேட்டதால்தானே அந்தப் பெண் பேராசியரும் தனது மாணவிகளிடம் பேசி இருக்க முடியும்? இது வெறும் ஊகமல்ல. அப்படித்தான் சில உயர் பதவிக்காரர்கள் தன்னைக் கேட்டுக் கொண்டார்கள் என்று அந்தப் பேராசிரியரும் அடிக்கடி தனது போன் பேச்சில் குறிப்பிடுகிறார். என்ன பல்கலைக் கழகமோ, பிஎச்.டி படிப்பு வரை அதில் என்ன படிப்போ, அதில் படிக்க வேண்டிய மாணவர்களுக்கு என்ன துர்பாக்கியமோ  என்று நீங்கள் நினைக்க மாட்டீர்களா? 

மனித வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நினைத்துக் கொள்ள, வயதானவர்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு: “நீ முந்திண்டா உனக்கு. நான் முந்திண்டா எனக்கு”. அது போல, ஒரு நிறுவனத்தில் கூட்டு ஊழலும் தனித்தனி ஊழலும் செய்பவர்களிடம் ஒரு புரிந்துணர்வு உண்டு: “நீ மாட்டிக்கிட்டா உனக்கு, நான் மாட்டிக்கிட்டா எனக்கு”. ஆகையால், பிடிபட்ட ஒருவரோ இருவரோ மட்டும்தான் ஒரு பல்கலைக் கழகத்தில் லஞ்ச ஊழல் செய்பவர்கள் என்று கணக்கிட்டு, அதில் பணிபுரியும் மற்ற சிலரின் வல்லமையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

தமிழ் நாட்டு பல்கலைக் கழகங்களில் ஊழல் ஊற்றெடுத்துப் பொங்கி வருவது 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் – கழகங்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்து.  அப்புறம் என்ன?  'கழகம்' என்ற பெயரோடு ஒரு அமைப்பு செயல்பட்டால் அதோடு பலவித முறைகேடுகளும் ஒட்டிக்கொண்டுதான் வருமோ என்னவோ.

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு கூத்தை கவனித்திருப்பீர்கள். ’நாங்கள்தான் தமிழை வளர்க்கிறோம்.  இல்லாவிட்டால் தமிழ் தேய்ந்து போய்விடும்’ என்ற வெட்டி வீராப்பான சிந்தனை உடைய பல அரசியல் கட்சித் தலைவர்களும் வேறு சிலரும் தமிழ்நாட்டில் உண்டு. “தமிழ்நாட்டில் அனைவரும் ஊழல் பல்கலைக் கழகங்களில் சிக்கித் தவிக்கட்டும். அது எங்கள் கவலை இல்லை.  இந்த மாநிலத்தில் தகுதியையும் திறமையயும் அடக்கி வைத்து, தமிழர்கள் பலரையும் நாங்கள் அமெரிக்காவிற்கு விரட்டினோம் அல்லவா? அந்த அமெரிக்காவில் தமிழ் வளர்ப்பதற்காக, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ் இருக்கையை ஏற்படுத்த அந்தப் பல்கலைக் கழகத்தின் நிபந்தனையை ஏற்று கோடி கோடியாக நன்கொடை வசூலித்துக் கொடுப்போம்!” என்று புட்டுப் புட்டு விளக்காத குறையாக அந்தத் தமிழ்க் காப்பாளர்கள் செயல்பட்டார்கள்.  

ஹார்வர்டுக்கு அதிமுக-வின் தமிழக அரசு பத்து கோடி ரூபாய் கொடுத்தது. திமுக ஒரு கோடி ரூபாய் கொடுத்தது. இப்போது ஊழல் புகாரை எதிர்நோக்கும் மதுரை-காமராஜர் பல்கலைக் கழகமும் அதன் பணியாளர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களிடம் சுமார் இருபத்தி ஒன்று லட்ச ரூபாய் கெடுபிடியாக வசூலித்து அப்போது அளித்தது. ஊழலை வளரவிட்டு தமிழர்கள் முன்னேற்றத்தை முடக்கிவிட்டு, அமெரிக்காவில் தமிழ் வளர்க்கிறார்களாம். கல்வியைப் பற்றி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் போலி அக்கறைக்கு வேறு உதாரணம் வேண்டுமா? 

தமிழ் நாட்டை ஐம்பது வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு  பிரதான கழகக் கட்சிகள்தான் இந்த மாநிலத்தின் கல்வித் தரத்தை அதள பாதாளத்துக்குக் கொண்டு சென்றவர்கள்.  இதில் சந்தேகமே வேண்டாம். ”1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த நாங்களும், முன்னர் ஆட்சி செய்த அந்தக் கால காங்கிரஸ்காரர்கள் மாதிரி மிக நேர்மையானவர்கள், திறமையானவர்கள், அர்ப்பணிப்பு மிக்கவர்கள்தான். ஆனால் இப்போது அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் துணைவேந்தர்களும் முன்பு போல் இல்லை. வேண்டும் என்றே எங்கள் ஆட்சிக் காலங்களில் மட்டும் ஊழல் பெருச்சாளிகள் ஆகிவிட்டார்கள்” என்பார்களா இரு கழகங்களின் தலைவர்களும்? அப்படி என்றால், கல்வியில் உள்ளூர் தரத்தை உயர்த்தி உலகத் தரத்தை நெருங்குவதற்கு ஏதாவது வெள்ளைக்கார துணைவேந்தரையும் வெள்ளைக்கார அதிகாரிகளையும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நியமனம் செய்தால்தான் உண்டா? நாம் வெளியில் சிரிக்கலாம். உள்ளுக்குள் அழலாம். எல்லாரும் அமெரிக்கா போகமுடியாதே?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Monday, 16 April 2018

ஐ.பி.எல்-லும் அருகம் புல்லும்!



எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து சென்னையில் ஒரு காரியத்தை ஆட்டம் பாட்டம் வன்முறையோடு முடித்து விட்டார்கள். அதாவது,  பொதுமக்களின்  கிரிக்கெட் ஆர்வத்தை காலால் மிதித்து, சில கிரிக்கெட் ரசிகர்களையும் பிடித்து உதைத்து,  சீசனில் மீதம் இருந்த  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் இருந்து விரட்டி விட்டார்கள். பாஜக இந்த நடவடிக்கைகளில் சேரவில்லை.

கவனித்தீர்களா? பெருவாரியான அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்தால் அது நல்ல காரியத்திற்காக இருப்பதில்லை!

பல வருடங்கள் நடந்த காவிரி நதிநீர் வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நீர்ப் பங்கீட்டு அளவைத் தீர்மானித்து, சென்ற பிப்ரவரியில்  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. முதல் இரண்டு மாநிலங்களுக்கான பங்கீடுதான் இந்த வழக்கில் கசப்பான சச்சரவாக இருந்தது.

தனது தீர்ப்பை அமல்படுத்த,  ஆறு வாரத்தில் மத்திய அரசு ஒரு ’ஸ்கீம்’ – ஒரு செயல் திட்டம் – ஏற்படுத்தவேண்டும்  என்றும்  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  பின்னர் மத்திய அரசு இதுபற்றி நான்கு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்தது. ஆனாலும் நான்கு மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு  செயல் திட்டத்தை அது உருவாக்க முடியவில்லை.  ஆகையால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டிடம் சில விளக்கங்கள் கேட்டு கால அவகாசத்தையும் நீட்டிக்கக் கோரியபோது, கோர்ட் ஒருசில அபிபிராயங்கள் சொல்லி, வரும் மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு ஒரு வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தனது காலக் கெடுவை நீடித்தது.  

          வரும் மே மாத நடுவில் கர்நாடகத்தில் நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தல்களை மனதில் வைத்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ’காவிரி மேலாண்மை ஆணையம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்காமல்  காலம்    தாழ்த்துகிறது என்று தமிழகத்தின் மற்ற எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இப்போது அந்த ஆணையம் உடனடியாக அமைக்கப் படவேண்டும் என்று கோரி பல வழிகளில் அவை போராடுகின்றன.  இதில் திமுக பிரதானமாக முன் நிற்கிறது.

இந்த நிலையில், ஏற்கனவே சென்னையில் நடக்க ஏற்பாடாகி இருந்த பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் நடக்கக் கூடாது, நடத்த விடமாட்டோம், என்று எல்லா தமிழக எதிர்க் கட்சிகளும் மிரட்டல்கள் விட்டன.  மத்திய அரசுக்கான தனது காலக் கெடுவை சுப்ரீம் கோர்ட் நீட்டிய பின்னரும், ஐ.பி.எல் போட்டிக்கான எதிர்ப்பு குறையவில்லை. ஆக்ரோஷமும் வன்முறையும் கலந்த ஆர்ப்பாட்டங்கள் மறியல்கள், அத்துமீறல்கள்  அந்த அரசியல் கட்சிகள் தலைமையில் நடந்தன. குழம்பிய அதிமுக-வின் மாநில அரசு, ”ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில் நடக்காமல் இருந்தால் நல்லது. நடந்தால் பாதுகாப்பு தருவோம்” என்று சொல்லி எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கும் பணிந்து சட்டத்துக்கும் சல்யூட் வைத்தது.

       இந்த ஐ.பி.எல் சீசனின் சென்னை கிரிக்கெட் போட்டிகளில் முதல் விளையாட்டு ஏப்ரல் 10-ம் தேதி சேப்பாக்கத்தில் நடந்தது. போராடும் கட்சிக்காரர்கள் அன்று போலீஸ் தடைகளை மீறி அரங்கிற்கு அருகில் வந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அநாரிகப் பேச்சு மற்றும் அடி உதைகளை வழங்கி ரௌடித்தனம் செய்தார்கள். கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த நகரில் பாதுகாப்பு கிடைக்காது என்றாகி, மீதமிருக்கும் ஆறு ஐ.பி.எல் போட்டிகளும் சென்னையை விட்டு வேறு நகருக்கு மாற்றப் பட்டுவிட்டன.   

சென்னையில் அரங்கேறிய அராஜகச் செயல்களுக்குப் பின்னால் உள்ள தமிழக எதிர்க்கட்சிகளின் உள்நோக்கம் என்ன? அவர்களது மனதின் குரல் அதைச் சொல்லும். அந்தக் குரல் இப்படியாக இருக்குமோ?: ”மத்திய பாஜக அரசு மார்ச் இறுதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் என்று அமைத்திருந்தால், கர்நாடகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒதுக்கிவிட்டு ’மத்தியில் ஆளும் பாஜகதான் ஆணையத்தை அமைத்து கர்நாடகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது’ என்று பிரசாரம் செய்யும். அதுவே கர்நாடகத்தின் மே மாதத் தேர்தல்களில் பாஜக தோற்பதுக்கு பெரிதும் உதவும்.  இதனால் மோடிக்கே அரசியல் பலம் குறையும். மோடி எங்கு தோற்றாலும் நாம் தமிழகத்திலிருந்து அவரை இன்னும் தள்ளி வைக்கலாம். தமிழ்நாட்டுக்கு அடுத்த மாநிலத்திலேயே மோடி நன்றாகத் தோற்றால் இங்கு அவரை இன்னும் தள்ளிவைத்து நாம் பிரசாரம் செய்யலாம். அது மட்டுமா?  ’காவிரி மேலாண்மை ஆணையம் வந்து காவிரி நீர் கர்நாடகத்துக்கு குறைவாகக் கிடைப்பதற்கு காரணம் மோடிதான்’ என்று நிரந்தரமாக அவரையும் பாஜக-வையும் எதிர்த்து கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யட்டும். தமிழ் நாட்டிலோ, அந்த ஆணையத்தைக் கொண்டு வந்து தமிழக விவசாயிகளைக் காத்து அருளியது திமுக-வின் ஸ்டாலினும் அவரோடு கைகோர்த்தவர்களும்தான் என்று எதிர்காலம் முழுக்க நாம் பிரசாரம் செய்யலாம். காவிரி நீருக்காக சட்டப் போராட்டத்தில் அசாத்தியத் தீவிரமும் தைரியமும் வெளிப்படுத்திய அதிமுக-வின் ஜெயலலிதா, அநியாய மந்தமும் அலட்சியமும் காட்டிய திமுக-வின் கருணாநிதி,  சமமான தீர்ப்பு கொடுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆகிய அனைவரையும் மக்கள் மறக்கச் செய்து, நமக்கு இல்லாத பெருமையைப் பெற்று மற்றதையும் அடைவோம்!”

தமிழக கர்நாடக எதிர்க்கட்சிகளின் உள்நோக்கத்தை ஊகிக்கத் தெரியாத பால் பாட்டில் குழந்தையாக இருக்க மாட்டார் மோடி. தேவையான கோர்ட் உத்தரவுகளைப் பெற்று தெளிவாக செயல்படுவதுதான் அனைவருக்கும் எப்போதும் நல்லது என்பதை அவர் உணர்ந்திருப்பார்.  இரு மாநிலத்திலும் மக்களின் உண்ர்ச்சிகள் கிளரப்பட்ட காவிரி நீர்ப் போராட்டத்தின் கோர்ட் தீர்வு,  ஒரு மாநிலத்தின் தேர்தல்களுக்கு மிக முன்பாக ஏனோதானோ என்று அமல் செய்யப்பட்டு எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் மீண்டும் பலி ஆகாமலும் சிரமப் படாமலும் இருப்பதும் நல்லதுதானே?

கிரிக்கெட் இந்தியா பூராவும் ரசிக்கப்படும் மிகப் பெரிய விளையாட்டு. அதில் மிகப் பெரிய வியாபாரமும்  சேர்ந்தது. சென்னை நகரம் கிரிக்கெட் பித்து. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் படும் வரை தமிழ்நாட்டில் விளையாட்டு கூடாது, பொழுதுபோக்கு கூடாது, வியாபாரமும் கூடாதா? யாரும் கோலிகுண்டு, கபடி கூட ஆடக் கூடாதா? சினிமா டிராமா பீச் பட்டாணி சுண்டல்?  தாங்கள் கேட்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்காக – அதுவும் இப்போது சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை அமல் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் – சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாது என்று போராடுவது பைத்தியக்காரத்தனம், பித்துக்குளித்தனம், குடாக்குத்தனம் என்று அவரவர் மனம் போல் நினைத்துக் கொள்ளலாம். இப்போது ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. அவை ’சென்னையில் நடக்கவில்லையே, நமது உடல் ஆரோக்கியத்துக்கும் சேதம் இல்லையே’ என்று அங்கு விளையாடும் வீரர்களும் நேரடியாகப் பார்ப்பவர்களும் மகிழ்ச்சி அடையலாம்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரிடம் இருந்து  நமக்கு சுதந்திரம் வேண்டும் என்று அந்த நாள் மஹாத்மா காந்தி தலைமையில் நாடு தழுவிய போராட்டம் எழுந்தது. அந்த சுதந்திரப் போராட்டம், ’காவிரி மேலாண்மை ஆணையம் உடனே வேண்டும்’ என்ற இந்த நாள் கோரிக்கைக்கு சற்றும் மதிப்புக் குறைந்ததல்ல என்பதை திமுக-வின் ஸ்டாலினே ஏற்றுக் கொள்வார். ஆனால் நல்ல வேளை – ஸ்டாலினும் அவரோடு சேர்ந்து போராடும் மற்ற தலைவர்களும் சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரியவர்களாக  இருந்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? ”நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் கிரிக்கெட்டை இந்தியர்கள் யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது, கிரிக்கெட் மட்டைகள், ஸ்டம்புகள், பந்துகள் எல்லாவறையும்  தீயிலிட்டுக் கொளுத்துவோம்!” என்று கோஷம் போட்டிருப்பார்கள். அதோடு விட்டிருக்கவும் மாட்டார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்து அந்த ஸ்டாலினும் அவரோடு சேர்ந்தவர்களும் நம் தேசத் தலைவர்கள் எவரும் நினைத்துப் பார்க்காத ஒரு புது போராட்டமும் நடத்தி இருப்பார்கள். என்ன அது? இன்னுமா நீங்கள் ஊகிக்கவில்லை?  அதான், 1934-ஆம் வருடம் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சென்னை சேப்பாக்கத்தில்  முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்ததே, அதையே நடக்கவிடாமால் மறியல் செய்து தடுத்து நிறுத்தி காந்தி, காமராஜ், ராஜாஜி போன்ற தலைவர்களை மூக்கில் விரல் வைக்கச் செய்திருப்பார்கள்! இன்றைய தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் அன்று இல்லாததால் நமது சுதந்திரப் போராட்டமே எப்படி களையும் கண்ணியமும் இழந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்!

கடைசியாக, ஐ.பி.எல்-லுக்கும்  அருகம் புல்லுக்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள்? இது நுணுக்கமான விஷயம். தமிழக மக்களுக்கு சுருக்கமாகச் சொல்கிறேன். நம்மூரில் நீங்கள் கிரிக்கெட் பார்ப்பதற்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கும் உள்ள நெருங்கிய தொடர்புதான் இங்கும் இருக்கிறது. புரிந்திருக்குமே!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Tuesday, 10 April 2018

சூரப்பா ஒரு வீரப்பா அல்ல!



எம். கே. சூரப்பா - இவர்தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர். மீடியாக்களில் இவர் பெயர் இப்போது அடிபடுவதற்குக் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இவரது நியமனத்தை எதிர்ப்பதுதான். 

பி.எஸ். வீரப்பா - இவர் அந்தக் கால தமிழ் சினிமாக்களின் பிரபல வில்லன்.  அதனாலேயெ  மக்களால் வெள்ளித் திரைகளில்  வெறுக்கப்பட்டவர்.

சூரப்பாவை ஒருவித வீரப்பாவாக கணித்து தமிழக அரசியல் தலைவர்கள் அவரை எதிர்க்க என்ன காரணம்? தமிழகத்தின் ஒரு முக்கிய கல்வி கேந்திரத்தின் தலைவர் ஆவதற்கான  சிறந்த படிப்போ அனுபவமோ நேர்மைப் போக்கோ அவரிடம்  இல்லை என்கிறார்களா? இல்லை.  போயும் போயும் இந்த சில்லறை  அம்சங்கள் பற்றி அக்கறைப்படும் அளவிற்கு வேலையற்றவர்கள் அல்ல நம் தலைவர்கள்!

          தமிழகமும் கர்நாடகமும் பெற வேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கீட்டு அளவை தீர்மானித்து உச்ச நீதிமன்றம் சென்ற பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.  ’அதன்படி மத்திய அரசு ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யாமல் தவிர்க்கிறது’ என்று கண்டனம் செய்து, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும்  உண்ணா விரதம், மறியல், கடையடைப்பு என்று போராடுகின்றன. பா.ஜ.க இதில் சேரவில்லை.  இந்த சூழ்நிலையில், சூரப்பா கர்நாடகத்திலிருந்து வந்தவர் என்பதால் போராட்டம் செய்யும் எல்லா அரசியல் தலைவர்களும் அவரது துணைவேந்தர் நியமனத்தை எதிர்க்கிறார்கள்.

          காவிரி நீர்ப் பிரச்சனை என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலத்து மக்கள் உருவாக்கியதல்ல. இது குறிப்பாகத் தமிழ்நாடு அரசு காவிரி நீரில் தனது நியாயமான உரிமைகளையும் நீர்த்  தேவைகளையும் முன்பே நிலை நாட்டாமல் பல ஆண்டுகள் தூங்கியதால் பூதமாய் வளர்ந்த பிரச்சனை. இப்போது இரு மாநிலங்களிலும் உள்ள சாதாரண மக்களின் நிலை என்ன? இரு வேறு குடும்பத் தலைவர்களின் சண்டையில், குடும்ப உறுப்பினர்கள் அவரவர் குடும்பத் தலைவர்களை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டிய நிலைதான் இரு மாநில மக்களுக்கும்.  ஆனால் தமிழக மக்களும் கர்நாடக மக்களும் மனதிற்குள் அடுத்த மாநிலத்தவரை எதிரியாகப் பார்ப்பதில்லை.

கோர்ட் முடிவுகள் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு உண்டு.  ஆகையால் காவிரி நீர்ப் பங்கீடு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த  இறுதித் தீர்ப்பையும், அது கோர்ட் சொல்படி அமல் செய்யப் படுவதையும் அவர்கள் சமாதானமாக ஏற்பார்கள்  என்று எதிர்பார்க்கலாம்.   இது இரு மாநில அரசியல்வாதிகளுக்கும் தெரிந்ததுதான்.  இருந்தாலும், காவிரி நீர் பிரச்சனையின் கடைசிக் கட்டமான இந்த நேரத்தில் ஏதாவது அமளி  ஆர்ப்பாட்டம் செய்வது முக்கியம் – அப்போதுதான் நமது அரசியல் மார்க் ஷீட்டில் நல்ல மதிப்பெண்கள் வரச் செய்து, சிலர் வாங்கி இருந்த பழைய முட்டை மார்க்குகளையும்  மக்கள் மறக்கச் செய்து,  ”காவிரிப் போராட்டத்தில் நான்தான் முதல் ரேங்க்!” என்று மார் தட்டலாம் என்று எல்லா கட்சித் தலைவர்களும் நினைக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதியாகத் தமிழக தலைவர்கள் சூரப்பாவின் துணைவேந்தர் நியமனத்தையும் எதிர்க்கிறார்கள். அதுதான் விஷயம். 

தமிழ்நாட்டில், காவிரி நதிநீர் சட்டப் போராட்ட வெற்றியில்  ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அதிமுக-வுக்கு  மிக அதிகமான பங்கு உண்டு. இந்தப் பெருமையை தூக்கிப் பிடிக்க இயலாத இப்போதைய அதிமுக, ஆட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சிக்காரர்களைப் போலவே மக்கள் கவனத்திற்கு அலையவேண்டி இருக்கிறது.  ஆகவே அவர்களும் சேர்ந்து “பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது” என்று நழுவுகிறார்கள்.

சூரப்பா என்ன குற்றம் செய்தார்? கர்நாடகத்தில் காவிரி நீரைப் பிடித்து வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு  போதிய அளவு கிடைக்காமல் செய்தது சூரப்பாவா? இல்லையே?  தமிழகத்துக்கு குறைந்த அளவுதான் நீர் திறந்துவிட முடியும் என்று அந்த மாநிலத்தில் அவ்வப்போது முடிவு செய்தது யார்? அங்கு ஆட்சி செய்த கட்சிகளின் தலைவர்கள் தானே? அதற்கும் சூரப்பாவிற்கும் என்ன சம்பந்தம்? வேலை தேடி கர்நாடகம் சென்று அங்கே நிரந்தரமாகத் தங்கி அச்சத்தில் இருக்கிறார்களே தமிழர்கள், அவர்களும் சூரப்பாவும் ஒன்றுதானே இந்த விஷயத்தில்? சூரப்பா கர்நாடகத்தவர் என்பதால் அவரது துணைவேந்தர் நியமனத்தை தமிழ் நாட்டுத் தலைவர்கள் எதிர்த்தால் – அதுவும் இந்த நேரத்தில் – அது தமக்கு எதிர்வினைகள் ஏற்படுத்தலாம் என்று கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் இன்னும் அச்சம் அடையலாம் அல்லவா? தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் அது பற்றிக் கவலை இல்லை? ஏனென்றால் அந்தத் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓட்டுப் போட மாட்டார்கள்.

காவிரி நீர்ப் பிரச்சனையோ இல்லையோ, தமிழ் நாட்டின் எந்த பல்கலைக் கழகத்திலும் ஒரு தமிழர்தான் துணைவேந்தராக வரவேண்டும் என்று முழங்குகிற கட்சிகளும் பிரபலஸ்தர்களும் இந்த மாநிலத்தில் உண்டு.  அவர்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும்: ’தமிழக மக்களின் வேலை வாய்ப்புத் திறனை நம்மால் வளர்க்க முடியவில்லையா? அதனால் நமக்கு பாதகமில்லை. எப்படியோ தானாக முயன்று அதை வளர்த்துக் கொண்டவர்கள் நல்ல வேலை தேடி தமிழகம் தாண்டிப் போனாலும் பரவாயில்லை. கெட்டிக்காரத் தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் நமக்கு தடைகள் சிலவும் அகன்றன என்று அர்த்தம். முடிந்தவரை தமிழ் நாட்டு வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என்று கூக்குரல் எழுப்பினால், சரியான வேலை இல்லாமல் இருக்கும் எண்ணற்ற தமிழர்களின் ஆதரவு நமது கட்சிக்கும் தொழிலுக்கும் கிடைக்குமே! அது மட்டுமல்ல.  விசேஷத்  திறமையாளர் ஒருவரின் சேவை நமக்கு தேவைப்பட்டால் – உதாரணம் மருத்துவ சேவை – லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா என்று நாம் போய் வருவோம். நமது மக்களுக்கு கிடைக்கும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள், தகுதி குறைந்த தமிழர்கள் தலைமை தாங்கும் பல்கலைக் கழகங்களிலோ மருத்துவ மனைகளிலோ கிடைக்கிற தரத்தில் இருந்தால் போதுமே!'

கடைசியாக ஒரு மிக முக்கிய விஷயம். தமிழகத்தின் பல பல்கலைக் கழக துணைவேந்தர்களின் அருமை பெருமைகள் இப்போது மேலும் தெரிய வருகின்றன. யார் கண்டது?  ’சூரப்பா  போன்றவர்கள்  தமிழ் நாட்டு பல்கலைக் கழக துணைவேந்தர்களானால், நமது வாழ்க்கை வளம் பெறுவது எப்படி?’ என்ற சோகக் கவலைகளும் சில எதிர்ப்பாளர்களுக்கு இருக்கலாம். தமிழக கல்விக் கடலில் கிடைக்கும் முத்துக்கள் எவை எவை என்பது ஏற்கனவே அவற்றை எடுத்தவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும்!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Thursday, 5 April 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: அஸ்வினியும் அழகேசனும் – காதலால் விழுந்தார்கள்


அஸ்வினியோட சோகக் கதை ஞாபகம் இருக்கா? கொஞ்ச நாளைக்கு முன்னால, சென்னை நகர்ல ரோட்லயே ஒரு உயிர்ப்பலி நடந்ததே, அதைக் கேக்கறேன். ’ஒருத்தர் மாத்தி  ஒருத்தர் அடிக்கடி நகரத்துல வெட்டுக் குத்து நடத்தினா அதுல எது ஞாபகம் இருக்கும்’னு கேக்கறேளா? சரி, நானே சொல்றேன்.

அஸ்வினி 19 வயசுப் பொண்ணு. சாதாரண குடும்பம்தான். காலேஜ்ல முதல் வருஷம் படிச்சிண்டிருந்தா.  அழகேசனுக்கு 26 வயசு. வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை பண்ணிண்டிருந்தான். ரண்டு வருஷத்துக்கு முன்னால, அஸ்வினி ஸ்கூல்ல படிக்கறபோது அவாளுக்குள்ள  சிநேகம் வந்ததாம்.  கொஞ்ச காலத்துக்கு அப்பறம் அவளுக்கு அவன் மேல இருந்த சிநேகம் போயிடுத்துங்கறா. அதாவது காதல்னு இருக்கே, அது ரண்டு பேருக்கும் வந்ததாம். அப்பறம் அவளுக்கு போயிடுத்தாம், அவனுக்கு மட்டும் இருந்ததாம். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு  தீவிரமா இருந்தானாம் அழகேசன். அவ மேல இருந்த பிரியத்துல, தன்னோட சொத்தை அடமானம் வச்சு ரண்டு லட்ச ரூபா கடன் வாங்கி அவளுக்கும் அவ படிப்புக்கும் செலவழிச்சேன்னு சொல்றான் பையன்.

அஸ்வினிக்கு இஷ்டமோ இல்லையோ, தன்னை விட்டுட்டு அந்தப் பொண்ணு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சானாம் அழகேசன். ஒரு நாள் அவளை ரோட்டுல பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு அவன் கேக்க, முடியாதுன்னு அவ சொல்ல, மறைச்சு வச்சிருந்த கத்தியை எடுத்து ராஸ்கல் நடு ரோட்டுலயே அவளைக் குத்தி பரலோகத்துக்கு அனுப்பிட்டான். அதை முடிச்சுட்டு தன் மேலயே பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கப் பாத்தான். அதுக்குள்ள பக்கத்தில இருந்தவா அவனைப் பிடிச்சு போலீஸ்ல குடுத்துட்டா. இப்ப ஜெயில், கோர்ட், கேஸ்னு தவிக்கறான்.

ஒரு ஆணும் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பரமா விரும்பினா அதுக்கு பேர் காதல்னு வச்சுக்கலாம். ரைட்டா? யார் யாருக்கு இடைல எதுக்காக பரஸ்பர அன்பு முளைக்கலாம்கறதுக்கு ரூல்ஸ் கிடையாது. பரஸ்பர அன்பு இல்லைன்னா, அங்க காதல் இல்லைங்கறதுதான் ஒரே ரூல். 

இன்னொருத்தருக்கு என் மேல ஆசை இல்லாட்டாலும்  நான் மட்டும் அவா மேல ஆசை வச்சுப்பேன்னு ஒருத்தர் நினைச்சா அதுக்கு பேர் காதல் இல்லை. அது அசட்டு ஆசை. அதை ஏதோ 'ஒருதலைக் காதல்'னு பத்திரிகை, டி.வி, சினிமால உருகிப் பேசறவாளும் பாடறவாளும் இருக்கா. அதுல மயங்கற அறியாப் பையன்களும் பொண்களும் இருக்காளே?  அந்தப் பையன்கள் பொண்களுக்கு ஒண்ணு ரண்டு சொல்லத் தோண்றது.

நம்மளை வேண்டாம்னு அலட்சியம் பண்றவாதான் நமக்கு வாழ்க்கைத் துணையா இருக்கணும்னு நாம அவாளையே தொடர்ந்தா என்ன ஆகும்?  அவா நம்மளை இன்னும் இளப்பமா நினைப்பா, உதாசீனம் பண்ணுவா.  அதுனால ஒண்ணும் தப்பில்லைன்னு நாம நினைச்சா, நமக்கு சுய மரியாதை இல்லைன்னுதான அர்த்தம்?

சுய மரியாதை வேண்டாம்னு நினைக்கற யாருக்கும் வாழ்க்கைல பெரிய காரியங்கள் பண்ற ஆசையோ, சக்தியோ கிடைக்காது. அப்படிப் பட்டவா கல்லு மண்ணு மரக் கட்டை மாதிரி இருக்கலாம்.  அதாவது ஜடமா இருக்கணும்.  குழந்தைகளா, இந்த நிலைமை உங்களுக்கு வேண்டாம். முதல்ல உங்களையே நீங்க காதலிங்கோ. உங்களுக்குன்னு மதிப்பும் மரியாதையும் சேர்த்துக்கப் பாருங்கோ. அது கைகூடினா பலவிதமான கோளாறுகள் உங்க கிட்டயே வராது.  காதல் தோல்வி ஏற்பட்டாலும் உங்களை கவுக்காது. வெறும் ஜம்ப வார்த்தையா இதைச் சொல்லலை. உண்மையான சுயமரியாதைக்கு அப்படி ஒரு தடுப்பு சக்தி இருக்குங்கற அர்த்தத்துல சொல்றேன். ஏன்னா அந்த சுயமரியாதைக்கு தலைக்கனம் கிடையாது.  அது பிறத்தியாரை வம்படியா இம்சிக்காது. இம்சிக்கிற இன்னொருத்தர் கிட்டயும் பல்லிளிக்காது. அப்படின்னா, தனிப்பட்ட வாழ்க்கைல நம்மளை வேண்டாங்கறவரோட ஏன் நிரந்தர சண்டையோ வெட்டுக்குத்தோ வரப்போறது?

   உங்களைக் காதலிச்ச பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களை விட்டு விலகிட்டா, அது உங்களுக்கு பெரிய ஏமாத்தம் தான். சந்தேகமில்லை.  ஆனா உங்களுக்குன்னு சுய மரியாதை  உணர்வு இருந்தா, இந்த மனக் கஷ்டத்துலேர்ந்து நீங்களாவே மெள்ள மெள்ள விடுபடுவேள்.  நிச்சயமா கொலை பண்ணமாட்டேள், தற்கொலையும் பண்ணிக்க மாட்டேள்.  இன்னொண்ணு – ஒருத்தரை ஒருத்தர் ஆழமா ஆடம்பரம் இல்லாம நேசிக்க ரண்டு வருஷப் பழக்கம்லாம் போறாது குழந்தைகளா. ரண்டு வருஷப் பழக்கத்துக்கு  நடுவுலயே இந்த காதல் நமக்கு  சரிப்படுமான்னு ஒருத்தர் யோசிக்கலாம்.  அதுவும் ஒரு பொண்ணு பதினேழு வயசுல காதலிக்க ஆரமிச்சா, ஒண்ணு ரண்டு வருஷத்துல புரிதல் அதிகமாகி சில சந்தர்ப்பத்துல இது மாதிரி யோசிக்கலாம்.  பதினேழு வயசு அஸ்வினிக்கு அவ அம்மா எடுத்துச் சொல்லி  அப்பவே அவ காதலை  தடுத்திருக்கணும்னு நினைக்கறேன். அஸ்வினியும் பொழைச்சிருப்பா, அழகேசனும் தப்பிச்சிருப்பான்.

அஸ்வினியோட பதினேழு வயசுக் காதல் கேக்கறதுக்கு இனிக்கலாம்.  ஆனா படிக்கற பொண்கள் இந்த வயசுல காதல்ல விழுந்தா அனேகமா தடம் புரண்டுதான் போவா.  கல்யாணம்னு வரும்போதும், இருபத்து ரண்டு வயசுக்கு முன்னால யாரும் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா நல்லதும்பேன். ஏன்னா, அந்த வயசு வரைக்கும் கல்வி, மன வளர்ச்சி, ரண்டையுமே கல்யாண பந்தம் பொறுப்புன்னு அடைபடாம சுதந்திரமா அனுபவிக்கறதுதான் விசேஷம்.  இதையும் விவரம் புரிஞ்ச அம்மா அப்பா குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னா நன்னா இருக்கும்.  ஆனா  புரியறது - நாட்டுல சட்டம் ஒழுங்கு, வீட்டுல பொருளாதாரம் இதெல்லாம் ஒரு சாதாரணப்பட்ட பொண்ணுக்கு சாதகமா இருந்தாதான் அப்படி வயசு வரம்பு பாக்க முடியும்.   

பாவம் அஸ்வினி. அப்பாவிப் பொண்ணு அல்பாயுசுல இப்படி சாக வேண்டாம். அவளைத் தீத்துக் கட்டிட்டு தானும் தற்கொலை பண்ணிக்கப் பாத்தானே மட சாம்பிராணி அழகேசன், அவனும் தன் தலைலயே நெருப்பை அள்ளிப் போட்டுக்க வேண்டாம். ஒரு தினுசுல அந்த மடையனும் பாவம்தான்.  அது மத்தவாளுக்கு தெரியாட்டாலும், அவன் அம்மா இருந்தா அவளுக்குத் தெரியும்னு நினைச்சுப்பேன். "இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ணிட்டு நீயும் நாசமா போய் நிக்கறையே என் அசட்டுப் பிள்ளை, இது என்னடா காதல்?"னு அழுதிருப்பாளோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



Sunday, 18 February 2018

Komban the Bull, Tells You Something When Dying


A five-year old 'jallikattu' bull, called Komban, was in the news a week ago. 

Jallikattu is termed a sporting event in which numerous young men surround and go after a fleeing bull, as they jostle among themselves to do one thing - to be the sole man to grab and hold on to the bull's hump with both his arms till the animal crosses the finishing line, a distance of about 50 feet. At the event, unwilling bulls are pushed into the open ground through a barricaded narrow passage. One bull is out at a time, so it may either run away from the arms and clutches of tamers to reach the finishing line and be counted a winner, or be subdued by one tamer before that line when that man is declared a winner.  Then comes out another bull to meet a similar harrowing time. And then another, and then another, till all the bulls gathered for jallikattu suffer out their day.

When Komban the Bull was let into the jallikattu arena at Thennalur, Pudukottai district, tamers had assembled outside the bull’s gate through which the animal must emerge. They were eyeing the bull and readying to grab its hump soonest as the creature came out. Tamers had nearly blocked all space for a comfortable passage-out for the bull at the gate line. It had to fiercely butt through the tamers swarming at the gate. It frantically lunged forward at the gate line, but rammed a cut trunk of a coconut tree planted like a post outside the gate.  Komban instantly collapsed to the ground, feebly struggled for life and died in a few seconds.  The hit was so massive. 

       Let’s not imagine Komban could not sight a high post in front of it, the one which has the girth of an elephant’s leg. The animal was somewhat blinded and disoriented in fright and so it violently hit a huge obstacle. It was like a tormented human running like hell, dashing on a wall and ending his life. Since poor Komban had no voting right and no group-leaders to speak out for it, the horrible death of Komban did not trigger any politically sponsored protest or mourning in Tamil Nadu. The beleaguered bull was owned by a politician, Tamil Nadu's health minister C. Vijaya Baskar.

If you have a heart, you would know that jallikattu is not a sport, as sport is understood. It is sheer trauma for the poor bull forced into the event in which it desperately looks to disappear from the scene. That is not a sport for the harassed bulls. Not really one for the tamers also - 66 of them were injured, and 33 rushed to hospitals from the jallikattu that saw Komban last. 

A citizen cornered by corrupt government officials for bribes will be keen to run away from his plight if he can, and can’t imagine he plays a sport with those blackguards. But the fleecing officials may relish such engagement with the citizen as a sport. Now fix who’s who in a jallikattu.  

The ultimate power of a bull against a human was seen, like before, during the four weeks prior to Komban's final outing. A bull that had crossed the finishing line at a jallikattu held at Palamedu, Madurai district, was still not out of tension and discomfort.  In that state it gored a spectator, a 19-year old boy, waiting at the collection point for bulls that had finished their run, and the poor boy did not survive. At two jallikattu events held in Tiruchi district, the bulls in the arena landed fatal kicks on the chest of two tamers, one of them a teen, who were challenging the animals. These are also tragic ends, resulting from our vanity, ignorance and unconcern for the gentle and majestic bull. 

Komban is the latest to tell us that our society remains insensitive, not just to the dangers ignorant bull tamers take on themselves but also to the trauma and risks inflicted on innocent bulls. 
  
We know that a man is no match for a muscled bull in physical prowess. Though stronger, the animal does not harm strangers who do not tease or disturb it. Though weaker, the bull-tamer is foolish in going at it. He is lucky the bull seldom takes on its pursuing men, unlike a lion or tiger. Those wild animals will also avoid contact with humans and slink away, but if a man closely obstructs or chases them they will maul him. This is where the gentle bull differs. With a robust neck and a sturdy pair of horns it can severely bruise and displace the flesh and bones of the onrushing tamer, but still it wants to slip out of his reach and be left alone rather than hurt him. It gores and maims or kills a man when many men totally hinder its escape and heighten its agony.

When Komban lost its life in a jallikattu, its owner Vijaya Baskar said he had cared for the bull "as if it were a member of our family". That was not much of a humanitarian sentiment as it seemed. He probably felt like a corporate which advertised itself on an expensive race car that blew up on a racing track. But Komban would have viewed Vijaya Baskar as a member of its family, hoping he would not send it towards danger and death. Who was kind and gentle to the other?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018