சேவாலயா ஒரு தொண்டு
நிறுவனம். சென்னை அதன் தலைமையிடம். தனது சேவைகளில் ஒன்றாக, சேவாலயா முதியோர் இல்லங்கள்
நடத்துகிறது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்ட,
ஆதரவும் வசதியும் அற்ற, முதியோர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம்,
கூடவே வாழ்வின் அடிப்படைக் கண்ணியம், ஆகியவற்றை அளித்து வருகிறது சேவாலயா.
சேவாலயாவின் மகத்தான
பணியை நினைத்து, அங்கிருக்கும் முதியோர்களின் மனம் இந்தப் பாடல் வரிகளை எண்ணிப் பார்க்கலாம். |
சேவாலயா ..... சேவாலயா
..... எமக்கெலாம் .....
தாயாகினாய் ..... நீ தாயாகினாய் .....
|
யாருக்கும் வேண்டவில்லை யாரும் மதித்ததில்லை காலம் கட்டி இழுத்து – எம்மைச் சேர்த்து விட்டது இங்கு வாழ்வில்
புது கண்ணியம் – இன்று காணும் மனிதர்கள் நாம் |
சேவாலயா ..... சேவாலயா
..... எமக்கெலாம் .....
தாயாகினாய் ..... நீ தாயாகினாய் .....
|
01.06.2025
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
No comments:
Post a Comment