Thursday 21 December 2023

ஒன்றிய அரசென்று கொட்டு முரசே!

  

    -- ஆர். வி. ஆர்



தேசிய சிந்தனையில் ஒன்றாத கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.   ஒரு விஷயம் அதற்கு உதாரணம்.

 

நமது அரசியல் சட்டத்தில், “India, that is Bharat, shall be a Union of States” என்று இருக்கிறது. சட்டத்திலும் நடைமுறையிலும் இதன் பொருள் விரிவானது.

 

‘மத்திய அரசு’ என்று அனைவரும் அழைத்து வருவதை ‘ஒன்றிய அரசு’ என்று குயுக்தியாகச் சொல்கிறது திமுக - அரசியல் சட்டத்தில் ‘Union’ என்று இருப்பதைப் பிடித்துக் கொண்டு.பாத்துக்க! நான் வேற மாதிரி. நான் இல்லாம நீ இல்லை!” என்று மத்திய அரசிடம் மறைமுகமாக, ஒரு சண்டைக்கார சினிமா ஹீரோ மாதிரி, சவால் விடும் தொனி இதில் தெரிகிறது. அதே சமயம், அரசியல் சட்டம் இந்தியாவை ‘பாரதம்’ என்று தெளிவாகக் குறிப்பிடும் அந்தச் சொல்லை உச்சரிக்கவே திமுக கூச்சப் படுகிறது. காரணம்: ‘பாரதம்’ என்ற சொல்லில் தேசியம் இருக்கிறது!

 

சரி, தற்போதய மத்திய அரசு ‘ஒன்றிய அரசு’தான் என்று நாமும் இப்படிப் பார்க்கலாம். 


 


நன்றென்று கொட்டு முரசே! – தேச

நலம் காக்கும் மோடி அரசாம்.

உலகம் வியக்கும் தலைவர் – அவர்

வாக்கில் செயலில் வித்தகர்.

 


நாட்டினர் மனதிலொன்றி – இந்த

நானிலத்தின் மேன்மையில் ஒன்றி

சனாதன தர்மத்தில் ஒன்றி – நல்

ஆட்சியில் ஒன்றியவர் மோடி.

 


அன்னாரின் பண்புகளெல்லாம் – அவர்

அரசிலும் ஒன்றி விட்டதே.

‘ஒன்றிய அரசு’ என்றால் – அது

பல்வகைப் பொருத்தமன்றோ!

 


வாழ்கவென்று கொட்டு முரசே!

வளர் மோடி அரசைப் போற்றி.

ஒன்றிய அரசு இதுவென்று

ஓங்கி உரக்கக் கொட்டு முரசே!

 


Author: R. Veera Raghavan, Advocate, Chennai


No comments:

Post a Comment