|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "துணை முதல்வர் உதயநிதியின் பணிகளைப் பார்த்து பெருமையாகவும் கர்வமாகவும்
உள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே, என்ன
அர்த்தம்?
|
|
|
2. கேள்வி: சமஸ்கிருத
இலக்கணத்தின் தந்தை எனப்படும் பாணினி பிறந்த கிராமம் இப்போதைய பாகிஸ்தானில்
இருக்கிறது. அந்த நாட்டின் லாகூர் பல்கலைக் கழகம் சமஸ்கிருதத்தை இப்போது ஒரு
பாடமாகச் சேர்க்கிறது, பகவத் கீதை, மஹாபாரதக் கதைகளும் அங்கு பயிற்றுவிக்கத் திட்டம் உண்டு என்று செய்திகள்
வருகிறதே?
திமுக இப்படியும் நினைக்கலாம்: தமிழ் இலக்கணம் பிறந்த தமிழ்நாட்டில் தமிழ்
ஒழுங்காகப் பயிற்றுவிக்கப் படாமல் மக்கள் மத்தியில் பொலிவை இழக்கிறது. சமஸ்கிருத
இலக்கணத்தின் தந்தை பிறந்த பகுதியில் எதற்கு அந்த மொழி கற்பிக்கப் படவேண்டும்? தமிழ்நாடு போலச்
சிறக்க பாகிஸ்தான் நாட்டுக்கு விருப்பமில்லையா? |
|
|
3. கேள்வி: திருவனந்தபுரம்
மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளைப் பின்னுக்குத்
தள்ளி பாஜக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது. பிற நான்கு மாநகராட்சிகளில்
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், ஒரு மாநகராட்சியில்
மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த முடிவுகள்
சொல்லும் செய்தி என்ன?
45 ஆண்டுகளாக
மார்க்சிஸ்ட் கூட்டணியின் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை, இந்த முறை பாஜக கூட்டணி பறித்ததற்குக் காரணம் மக்கள் ஆதரவா, 'ஓட்டுத் திருட்டா'? அதே மார்க்சிஸ்ட்
கூட்டணி 25 ஆண்டுகளாக வைத்திருந்த கொல்லம்
மாநகராட்சியையும், 10 ஆண்டுகளாக வைத்திருந்த திருச்சூர்
மாநகராட்சியையும், இப்போது காங்கிரஸ் தலைமையிலான இன்னொரு
கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஜெயித்தால் மட்டும் அதற்குக்
காரணம் மக்கள் ஆதரவு என்பாரா ராகுல்? ராகுல் காந்தியிடம்
வழக்கமான பதில் இருக்கும். அசட்டுச் சிரிப்பு. |
|
|
4. கேள்வி: திருநெல்வேலியில்
உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய ஒன்பதாம் வகுப்பு
மாணவியர் ஆறு பேர் சஸ்பென்ட் செய்யப் பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலை?
இருந்தாலும், பள்ளி மாணவர்களின் இந்தச் செயலை நமது
திராவிட மாடல் அரசு இவ்வாறு விளக்கலாம்: "தமிழகத்தில்
நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. அதோடு, பள்ளி மாணவர்கள் இன்னொரு இந்திய மொழி கற்க வேண்டிய புதிய கல்விக்
கொள்கையை ஒன்றிய அரசு தமிழகம் மீது திணிக்கிறது. இதனால் நமது பள்ளி மாணவர்கள்
மனதளவில் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழக முதல்வர் வேதனையுடன்
கவனித்து, அதைப் பிரதமருக்கு எழுதப் போகும் அடுத்த
கடிதத்தில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பார்." |
|
|
5. கேள்வி: மனிதனுக்குக்
கை இரண்டு, கால் இரண்டு, கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத்
துவாரங்கள் இரண்டு என்று வைத்த ஆண்டவன், ஏன் ஒரு வாய்
மட்டும் வைத்தான்?
|
|
|
பகுதி 26 // 16.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment