Monday 11 September 2017

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: அனிதாவுக்கு அப்புறம். பேச்சும் காரியமும் நீட்டா இருக்கணும்


கஷ்டமாத்தான் இருக்கு. டாக்டர் ஆக ஆசைப்பட்ட பொண்ணு, மெடிகல் சீட் கிடைக்கலைன்னு தூக்கு போட்டுண்டா யார் மனசுதான் சஞ்சலப் படாது? பாவம் அனிதா. 17 வயசுல மேலோகம் போய்ச் சேந்திருக்க வேண்டாம்.  

பாக்கறேளே,  'நீட்' (NEET) விவகாரம் தமிழ்நாட்டுல அமக்களப் படறது. மெடிகல் காலேஜ் சேர தகுதி அடையறதுக்கு இந்தியா முழுக்க 'நீட்'டுனு ஒரு பரீட்சை வைக்கறாளே, அதுல அனிதா குறைச்சலா மார்க் வாங்கிட்டா. அதுனால இந்த வருஷம் அவளுக்கு மெடிகல் காலேஜ்ல அட்மிஷன் கிடைக்காதுன்னு ஆயிடுத்து. அதைத் தாங்க முடியாம அசட்டுப் பொண்ணு உயிரை விட்டுடுத்து. தமிழ் நாட்டுக்கு 'நீட்' பரீட்சையே வேண்டாம்னு மறியல், ஆர்பாட்டம், போராட்டம் பண்ற அரசியல்வாதிகளுக்கு அனிதா இப்ப தெய்வமாயிட்டா. ஏன்னு கேக்கறேளா? தெய்வம்தான நம்மளை வாழவச்சு வளப்படுத்தணும்?

"அனிதா சுயமா விரும்பி தற்கொலை பண்ணிக்கலை. அந்தப் பொண்ணோட இறப்பை சட்டப்படி தீர விசாரிக்கணும்"னு      சொல்றவாளும் இருக்கா. அதெல்லாம் சட்டம் பாத்துக்கட்டும். அனிதா மறைவைக் காரணம் சொல்லி நீட் எதிர்ப்புக் குரல் கொடுக்கறவா முக்கியமா பேசறத மட்டும் பாக்கலாம்.

"தமிழ் நாட்டுக்கு நீட் வேண்டாம்.  அனிதாவோட தற்கொலைக்கு நீதி கேக்கறோம்"னு அரசியல் தலைவர்கள்  அதகளம் பண்றா. சினிமாத் துறைல இருக்கறவாளும் அதே ரீதில அபிப்பிராயம் சொல்றா. நீட் பரீட்சையை எதிர்க்கற ஒரு சினிமா பிரபலஸ்தர் "அனிதா என் மகள்"னு உருகிப் பேசிருக்கார்.  ’அனிதா என் கொள்ளுப் பேத்தி மாதிரி’ன்னு நானும் வாஞ்சையா சொல்லிப்பேன்.

அனிதா தற்கொலை பண்ணிக்காம சமத்தா உயிரோட இருக்கான்னு வச்சுக்கலாம். அப்ப எத்தனை பேருக்கு அவளைப் பத்தி தெரிஞ்சிருக்கும்? அவ போட்டோவை எத்தனை பேர் பாத்திருப்போம்?  மறைஞ்ச பிறகு அவளுக்குக் கிடைச்ச பிரபல்யமும் புகழ்ச்சியும் அவ உயிரோட வாழ்ந்து மறுமுயற்சில முன்னுக்கு வந்திருந்தாலும் துளியும் கிடைக்காது. ஏன்னு தெரிஞ்சதா?  மேலோக அனிதா மாதிரி பூலோக அனிதா அரசியல்வாதிகளுக்கும் பிரபலஸ்தர்களுக்கும் பிரயோஜனம் இல்லை. அதான் காரணம். "என்னது?  மனுஷ உயிர்னா சும்மாவா? ஒரு சூழ்நிலைல பாதிக்கப்பட்டு ஒரு சின்னப் பொண்ணு உயிரையே குடுத்திருக்கு. இதைப் பத்தி பெரிசாப் பேசாம இருக்க முடியுமா? அப்படிப் பேசறதுதான மனிதாபிமானம்?"னு பலர் எதிர்வாதம் பண்ணுவா. அதுக்கு நாம பதில் சொல்லணும். சொல்லிப் பாக்கறேன்.

ஒரு அப்பாவியோட உயிர் முக்கியம்னுதான் இந்த ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடக்கறதுன்னா, சம்பத்தப் பட்டவா இதுக்கு பதில் சொல்லணும். ஜல்லிக்கட்டு வேணும்னு பலபேர் போராடி நடத்தினாளே, அந்தப் போட்டிகள்ள எத்தனை அப்பாவி இளைஞர்கள் மாடு முட்டியே எமலோகம் போனா? எத்தனை பேர் மாட்டுக் கொம்பாலயே வாழ்நாள் பூரா மறக்க முடியாத காயமும் ஊனமும் வாங்கிண்டா? அவா பேர்லாம் இந்த மனிதாபிமானிகளுக்குத் தெரியுமா? ஜல்லிக்கட்டுல உயிர் போனவாளுக்கு யாராவது இரங்கல் கூட்டமாவது  நடத்தினாளா?  இருக்காது. ஏன்னா, அந்த அப்பாவிகள் இறப்புல அரசியல் ஆதாயம் கிடைக்காது. அதை வச்சு மாநில அரசையோ மத்திய அரசையோ எதிர்க்க வழி இல்லை.  வேற சுயலாபமும் கிடைக்காது. அனிதா விஷயம் வேற. ஆவியான அனிதாவை வச்சு ரண்டு அரசாங்கத்தை எதிர்க்கலாம். போராடற அரசியல்வாதிகளுக்கு குறுக்கு வழில பலன் கிடைக்கலாம். பிரபலஸ்தர்களும் அப்பாவி மக்கள் ஆதரவை கூட்டிக்கலாம்.  இதான உண்மை?

”தமிழ் நாட்டு மாநில பாட திட்டத்துல படிச்சுட்டு நீட் எழுதினா அதிக மார்க் வாங்க முடியலை. ஏழை மாணவர்கள் பணம் குடுத்து நீட் பரீட்சைக்காக தனி டியூஷன் எடுத்துக்க முடியாது. அனிதா மரணம் இதையும் வெளிச்சம் போட்டுக் காட்டறது. அதான் அனிதா பேரைச் சொல்லி போராட்டம்” அப்படின்னும் பரவலா பேச்சு வரது.  இந்த மாதிரி பேக்குத்தனமா பப்ளிக்கா எப்படித்தான் இவாளால பேச முடியறதோ!

பாருங்கோ, நீட் தேர்வோட தரம் மூணு விதமாத்தான் இருக்கணும். ஒண்ணு தமிழ் நாட்டு பாடத்திட்ட தரத்துக்கு கீழ இருக்கணும், இல்லை இணையா இருக்கணும், இல்லாட்டி அதைவிட உசத்தியா இருக்கணும். அது கீழாவோ இணையாவோ இருந்தா நம்ம மாணவர்களுக்கு நீட் தேர்வு பிரச்சனை இல்லை. ஈசியா எழுதிட்டுப் போறா. நீட் தேர்வோட தரம் நம்ம பாட திட்டத்தை விட உசத்தியா இருந்தா, நம்மளும் மாநில பாட திட்டத்தை தரம் உயர்த்தினா போச்சு. அதைத்தான் மத்த மாநிலங்களும் பண்ணிருப்பா.  தமிழ் நாடு கொஞ்சம் தூங்கிடுத்து. இப்ப முழிச்சுக்கப் போறா. அவ்வளவுதான். இது சிம்பிளான விஷயம்தான? வளவளன்னு பேச இதுல என்ன இருக்கு?  பேச்சும் காரியமும் ’நீட்டா’ இருக்கணும், அதாவது நேர்ப் பேச்சா, ஒழுங்கான செயலா இருக்கணும். பொது வாழ்க்கைல ஜாஸ்தியாவே இருக்கணும். நீட் தேர்வு எதிர்ப்புல அதைக் காணோம்.

நுழைவுத் தேர்வுல தரம் அதிகமா இருந்தாத்தான் கெட்டிக்கார குழந்தைகள் மட்டும் அந்தத் தேர்வுல பாஸ் பண்ணி மெடிகல் காலேஜ்ல  சேருவா. அப்பத்தான் நாட்டுக்கும்  திறமையான டாக்டர்கள் கிடைப்பா. ஆயிரம் பேருக்கு வைத்தியம் பாக்கற டாக்டர், விஷயம் தெரிஞ்சவனா இருக்கணும். அப்படி இருந்தாத்தான் வியாதிக்காராளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆயிரம் நோயாளிகளோட நலன் முக்கியமா, தகுதி குறைஞ்ச ஒரு மாணவனோ மாணவியோ டாக்டர் ஆகி எல்லார்க்கும் சுமாரா வைத்தியம் பாக்கறது பரவால்லயா? எது பொது நலன்?    

பிரத்யட்சமா ஒரு ப்ரூஃபும் சொல்லட்டா? மருத்துவ சேர்க்கைல அதிக தரம் பாக்கறதுனால தான், அமெரிக்கா இங்கிலாண்ட் மாதிரி நாடுகள்ள கெட்டிக்கார டாக்டர்களா  இருக்கா. வேணும்னா சோனியா காந்தியையும் மு.க. ஸ்டாலினையும்  கேளுங்கோ. மருத்துவ பரிசோதனை, ட்ரீட்மெண்ட் அப்படின்னு இந்தியாவ விட்டு அந்த ரண்டு நாட்டுக்கும் பறக்கற அவாளுக்கு நன்னா தெரியும்.

டாக்டருக்குப் படிக்க அனிதாக்கு தகுதியும் திறமையும் கிடையாதுன்னு நான் சொல்லலை. பன்னண்டாம் கிளாஸ் பரீட்சைல 1,200க்கு 1,176 மார்க் எடுத்த அவளுக்கு அந்த தகுதி இருக்கும்னுதான் நான் நினைக்கறேன். ஆனா நீட் தேர்வை எழுதி பாஸ் பண்றதுக்கு அவளை தமிழ் நாட்டு பாடத் திட்டம் சரியா தயார் படுத்தலை. தமிழக அமைச்சர்களும், “நீட் தேர்வுலேர்ந்து இந்த வருஷத்துக்கு தமிழ் நாட்டுக்கு விலக்கு கிடைக்கலாம், கிடைக்கப் போறது, கிடைச்சுடும்”னு பேசிப் பேசி  மாணவர்களோட தயார் நிலையை கலைச்சு விட்டிருக்கா. இது ரண்டுதான் அவ நீட் பரீட்சைல மார்க் வாங்காததுக்கு சிறிசும் பெரிசுமான காரணம். 

”எல்லாம் சரி, அனிதா நீட்ல பெயில் ஆனப்போ நீங்க அவளோட பாட்டியா இருந்தா என்ன சொல்லி அவளைத் தேத்தி இருப்பேள்”னு என்னை யாரும் கேக்கலாம்.  நான் அவளை அணைச்சுண்டு சொல்லிருப்பேன்;  ”அனிதா கண்ணு, அழாத. பிளஸ் டூல 1,176 மார்க் வாங்கிருக்கையே அதுவே உன்னை கெட்டிக்காரின்னு சொல்லும். இப்ப என்ன ஆச்சு? 22 வயசுல நீ டாக்டர் ஆகப் போறதில்ல, அவ்வளவுதான்.  உனக்கு  அந்த படிப்புதான் வேணும்னா, அடுத்த வருஷ நீட் பரீட்சைல நீ இன்னும் நன்னா தயார் பண்ணிண்டு எழுதற கெட்டிக்காரத்தனம் உனக்கு இருக்கு. சென்னைல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டின்னு ஒரு பெண் இருந்தாளே, அவா 21 வயசுல மெடிகல் காலேஜ் சேர்ந்து 26 வயசுலதான் டாக்டர் படிப்பை முடிச்சா. பெரிய பேரும் வாங்கினா.  அவாளை விட நீ இன்னும் சின்ன வயசுலயே டாக்டர் ஆகலாம். அடுத்த வருஷம் நன்னா நீட் எழுத தயார் பண்ணிக்கோம்மா. யார் கூப்பிட்டாலும் கோர்ட் கேஸ்னு அலைஞ்சு மனசை அலட்டிக்காத”.  பேத்தியை நேசிக்கற எல்லா பாட்டியும் அதான சொல்லுவா?
  
* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

9 comments:

  1. பாட்டி நீங்க என்னவோ ரொம்பச் சரியாத்தான் சொல்லி யிருக்கேள். வெறும் வாய மெல்லரவாளுக்கு அவல் கெடக்கிறமாதிரி அந்தக்காலத்துல் சொல்லுவா. நம்ம எதிர்கட்சி காராளுக்கு அநிதா பகவான் கொடுத்த வரப்பிரசாதம். விட்டுடுவாளா? பாவம் அந்தக் கொழந்ததான் இவ்வளவு கோழையா இருந்திருக்க வேண்டாம்; 1176 மார்க்கு வாங்கினாளே ஒழிய, மனதைரியத்தை வளர்த்துக்கல்லியே. என்னவோ போங்கோ பாட்டி எனக்கு வரவர தமிழ்நாட்டு அரசியலே பிடிக்கல்ல. என்ன பண்றது, வேற எங்க போறது. பகவாந்தான் நம்ம தமிழ்நாட்டக் காப்பாத்தணும்னு பிரார்த்தன பண்ணிக்கிறேன். நீங்களும் பண்ணிக்கோங்கோ.

    ReplyDelete
  2. Yes these views are also of the views of the general public. The corrupt political parties in TN want to survive at the cost of students' lives. Instead of enhancing the educational standard and motivating the students to compete at the national and international levels, it is unfortunate they are spoiling their lives. They want students not to study but to campaign and vote for them. People and the students community have the awareness to ignore such protests.

    ReplyDelete
  3. அனிதாவிற்கு மட்டுமல்ல.
    அனைவருக்குமான ஆலோசனை.
    பா.சு.
    திருப்பூர்

    ReplyDelete
  4. ambujam paattiyin alasal appaattamaana Unmai jambuathan

    ReplyDelete
  5. More than enough details have come out in the media about the current year NEET selection. That is enough to show about the merits of NEET.

    ReplyDelete
  6. Incisive, especially the statement on psychological beggary!

    ReplyDelete