Monday 26 December 2016

ராகுல் காந்தியின் எச்சரிக்கைப் பாடல்: பம்-பம்-பம்! பூகம்பம்!


        ”பாராளுமன்றத்தில் என்னைப் பேசவிடுவதில்லை.  பிரதம மந்திரி மோடியைப் பற்றிய விவரங்களை நான் அங்கு அவிழ்த்துவிட்டால் பூகம்பமே வெடிக்கும்! கபர்தார்!”  என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார் ராகுல் காந்தி.  எப்படியோ அவரும் தன் வாயைக் கட்டி பாராளுமன்ற வளாகத்தைக் காத்ததற்காக ஜனநாயம் அவரை வாழ்த்தட்டும்.

        ராகுல் காந்தியின் இந்தப் பேச்சில் பல விஷயங்கள் தோன்றுகின்றன.  முதலில், எதை யாரிடம் எப்படிப் பேசுவது என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. 6 மாதக் குழந்தையிடம் பேசும் பெற்றோர்கள் தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வித விதமான சப்தங்கள் எழுப்புவார்கள்.  மற்ற பெரியவர்கள், ஐந்து வயதுக் குழந்தையிடம் அன்பை அதிகம் காட்டிப் பேசுவது, பதிநான்கு-பதினைந்து வயதுக்கு மேற்பட்ட இளம் பருவத்தினரிடம் ஆதரவு காட்டி அக்கறையோடு அவர்கள் நிலைக்கு வந்து பேசுவது, தங்களைவிட வயதில் இன்னும் பெரியவர்களிடம் மரியாதை காட்டிப் பேசுவது என்பது பொருத்தமாக இருக்கும். 

   ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதி மீது ஒரு குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டை மக்களின் முன் வைத்துப் பேச முனைந்தால், அதை உறுதியாகவும் தெளிவாகவும் மட்டும் சொல்லி விட்டுவிடுவது நல்லது. அதனால் குற்றம் சொல்பவர்மீது மானநஷ்ட வழக்கு ஏதும் வந்தால் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அவர் தகுந்த ஆதாரங்களுடன் தன்னை முன்கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.  இது தவிர, தான் வெளியிடும் குற்றச்சாட்டை ஒருவர் எப்படி டாம்பீகமாகச் சொன்னாலும், இடி, மின்னல், சூராவளி, பூகம்பத்தை வரவழைத்துப் பேசினாலும் அதிகப் பலன் ஏதும் இருக்காது.  இது ஏதோ மோடிக்கு ஆதரவாகச் சொல்லப் படுவதில்லை. 

     இந்தியாவில் ஒரு அரசியல்வாதி மற்ற அரசியல்வாதி மீது எப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை வைத்தாலும் அது மக்களிடம் எடுபடுவதில்லை.  ஏனென்றால் மக்களின் நினைப்பு பொதுவாக இப்படித்தான் இருக்கும்; ‘அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள். அனைவரும் அவர்களின் சகல சௌபாக்கியத்தை மட்டும் வளர்த்துக் கொள்பவர்கள் – ஏதோ போகிற போக்கில் நமது ஓட்டிற்காக நமக்கும் ஒன்றிரண்டு செய்வார்கள். இதில் என்ன இவர் அவரைப் பற்றிப் பழி பேசுவது, அவர் இவரைப் பற்றிக் குற்றம் சொல்வது?’  

      ஒரு பிரபல  அரசியல்வாதியின் மீது  கோர்ட்டில் லஞ்ச  ஊழல் வழக்கு நடந்து அவர் தண்டனை பெற்றாலும் மக்கள் உடனே அடுத்த தேர்தலில் எதிர்க் கட்சிக்குத் தங்கள் ஓட்டைத் திருப்பிவிடுவதில்லை.  ‘ஏதோ, எதிர்க் கட்சியின் பிரபல அரசியல்வாதி மீது வழக்கு வரவில்லை – அவர் முந்திக்கொண்டு இவர்மீது வழக்கைப் போட்டுவிட்டார் - அல்லது தனக்கு எதிரான ஆதாரம் எளிதாகச் சிக்கிவிடாமல் ஊழல் செய்திருக்கிறார் – எது என்னவோ, கோர்ட் தண்டனை பெறவில்லை என்பதால் எதிர்க் கட்சி அரசியல்வாதி சுத்தமானவர் என்று ஆகாது’ என்றெல்லாம் மக்களின் மனதில் நிழலாடும்.   பல மணி நேரம் நீட்டி முழக்கிச் சிந்தித்து மக்கள் இந்த நினைப்பை அடைவதில்லை. மின்னல் ஒளி நேரத்தில் அவர்களுக்கு இந்த எண்ணம் விலாவாரியாக இல்லாவிட்டாலும் மங்கலாகத் தோன்றிவிடும் என்று சொல்லலாம். இது பழக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பலருக்கும் அடிமனதில் அபிப்பிராயங்கள் ஏற்படுவது மாதிரித்தான்.

      அதே  ரீதியில்  இன்னொரு  விஷயம்.   ஒரு  அரசியல்  தலைவர் எதிர்க்கட்சி அரசியல் தலைவர் மீது லஞ்ச ஊழல் வழக்குகள் போட்டு அவை தள்ளுபடி ஆனாலும், ‘இவர் பொய் வழக்குகள் போட்டவர், இனிமேல் இவருக்கும் இவர் கட்சிக்கும் ஓட்டுப் போடக் கூடாது’ என்றும் மக்கள் முடிவு செய்வதில்லை. இதற்கெல்லாம் அப்படியும் இப்படியுமாக நிரூபணம் வேண்டுமா?  அகில இந்தியாவிலும் ஊழல் வழக்குகள் போட்ட பிரபல அரசியல்வாதிகளையும் அவற்றை எதிர்கொண்ட பிரபல அரசியல்வாதிகளையும்   நினைத்துப் பாருங்கள், அது போதும்.

     ஒரு  ஒப்பீட்டையும்   நீங்கள் கவனிக்கலாம்.  அமெரிக்காவில் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் ஆளானவர் என்ற ஒரு தலைவரின் அரசியல் வாழ்க்கை அதோடு முடிவுக்கு வரும். ஏனென்றால் அந்த நடத்தை அங்கு அபூர்வமானது, விதிவிலக்கானது. உதாரணம், வாடர்கேட் ஊழல் ஆதாரபூர்வமாக வெளிப்பட்டு அதில் சிக்கிய பின் ஜனாதிபதி பதவியிலிருந்து நிக்சன் ராஜினமா செய்தது.  அது அவர் இரண்டாம் முறை ஜனாதிபதியாக இருந்தபோது நிகழ்ந்த ராஜினமா. அமெரிக்காவில் மூன்றாவது முறையாக ஒருவரே ஜனாதிபதி பதிவிக்குப் போட்டியிட முடியாது என்றாலும், ஊழலால் சரிந்த மக்கள் செல்வாக்கை அவர் மீட்கமுடியாது. இந்தியாவில் அப்படி இல்லை.  இதற்கும் முன் உதாரணம் உண்டு.

   ஜனநாயகத்தில்  வாடர்கேட்  ஊழலைவிட  மக்களையும்  பிற கட்சித் தலைவர்களையும் கடுமையாகப் பாதித்தது, நமது நாட்டில் இந்திரா காந்தி பிரகடனம் செய்த அவசர நிலை.  அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி இதுபோன்ற காரியத்தைச் செய்து பின்னர் தேர்தலிலும் ஜெயிப்பார் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் இந்தியாவில் அவசர நிலைக் கொடுமைகளுக்காக இந்திரா காந்தி தோற்கடிக்கப் பட்டாலும் மீண்டும் அவரது கட்சி தேர்தலில் ஜெயிக்குமாறு மக்கள் அவர் தலைமைக்கு வாக்களித்து அவர் பிரதம மந்திரி ஆனார்.  ஆகவே வெறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒரு இந்திய அரசியல் பிரபலத்தைப் பெரிதாக ஒன்றும் அசைப்பதில்லை.

    சரி, இதனால் பூகம்பப்  பயம்  காட்டிய ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? இந்திய அரசியல் நிலையில் வெறும் ஊழல் குற்றச் சாட்டுகளை எதிர் அணியினர் மீது சுமத்துவது ஒரு அரசியல்வாதிக்கு ஏற்றத்தையும் மக்கள் செல்வாக்கையும் தராது. இது அனைவருக்கும் பொருந்தும் – ராகுல் காந்திக்கும் மோடிக்கும் சேர்த்து.  ஈர்ப்பு சக்தி (charisma) கொண்டு மக்கள் செல்வாக்குப் பெறுவது என்பது ஒன்று.  அது ராகுல் காந்திக்கு இல்லை.  அது இல்லாமல், இப்போதைய அரசியல் வெளியிலும் ஆட்சியிலும் பெருவாரியான மக்களின் ஆதரவை சிறுகச் சிறுக சேகரித்து வெற்றிகள் காண்பிக்க ஒரே வழிதான் உண்டு.  அதை அவர் பின்பற்ற யோசிக்கலாம். 

      ஒரு தலைவர் ஆட்சியில் இருந்தால், பல்துறை வல்லுனர்களுடன் கைகோர்த்து, மக்கள் சேவையில் முழுமூச்சுடன் இறங்கி, அதற்கான திட்டங்களை செயல்படுத்தி, ’பொருளாதார முன்னேற்றம் எற்படுகிறது, அது நம்மையும் வந்து அடைகிறது’ என்பதை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும்.  அதுதான் மக்களின் நிலைத்த நம்பிக்கையையும் ஆதரவையும் கொண்டுவரும். அது இல்லாமல் வெறும் இலவசங்கள் மட்டும் கொடுத்தால் மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அரசுப் பணத்திலிருந்து இலவசங்கள் அளிப்பதை எளிதாக எந்தக் கட்சி அரசியல்வாதியும் செய்யலாம்.   ’வேறு வழியில்லை.  இது நம் விதி. இது எப்போதும் வரலாம், எப்போதும் போகலாம். இது நாமே சம்பாதிப்பது, நம் காலிலேயே நிற்பது, அதோடு சேர்ந்த கௌரவமான வாழ்க்கை போல ஆகாது’ என்று பல தரப்பு இளைஞர்களும் உணர ஆரம்பித்துவிட்டனர்.

     ஆட்சி   செய்யும்   அரசியல்   தலைவர்,   நீடித்து   நிற்கும் நிலையான முன்னேற்றத்தை மக்களின் வாழ்வில் காட்ட முனையவில்லை என்றால், எதிர்கட்சியில் இருக்கும் தலைவர் தன்னால் அவ்வாறு செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்து அவர்களின் ஆதரவை மெள்ள மெள்ள சேகரித்து அந்த அடிப்படையில் ஆட்சிக்கு வந்து அந்த நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதுதான் ஒரு அரசியல்வாதிக்கு நீண்டகால வெற்றியையும் செல்வாக்கையும் கொடுக்கும் என்கிற நிலை வந்துவிட்டது. இதை ராகுல் காந்தி உணரவேண்டும். பிறகு, இந்த வழியில் செல்வதற்கான தகுதி தனக்கு இருக்கிறதா என்பதையும் உணர்ந்து அதை மேம்படுத்திக் கொள்வது பற்றியும் அவர் யோசிப்பது அவசியம்.

     மேலே சொன்ன வழியைப் பின்பற்றி  சில மாநிலங்களிலாவது காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பது அல்லது கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி முயற்சிக்கலாம்.  இவ்வாறு காங்கிரஸ் எழும்புவது அந்தக் கட்சிக்கும் நாட்டுக்கும் அவசியம். அதற்கு ராகுல் காந்தி அடித்தளம் அமைக்க முடிந்தால், பின்னர் அவரே  “தம்-தம்-தம்! வசந்தம்!” என்று குதூகலமாகப் பாடலாம்.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

Thursday 22 December 2016

Demonetisation: Modi or Manmohan Singh – Who is Credible?


       Did you read  Manmohan Singh’s  newspaper article  on the recent demonetisation of 500 and 1,000 rupee notes?  If not, please flip through The Hindu of 9th Dec. and have a look or view it at http://www.thehindu.com/opinion/lead/Making-of-a-mammoth-tragedy/article16779252.ece .  The government’s initiative is important, and so is the writer who was India’s prime minister for ten years before Narendra Modi assumed that post.

            Manmohan Singh quotes Modi on the primary reasons for demonetisation, viz., one was to check “enemies from across the border …. using fake currency notes” and the other was “to break the grip of corruption and black money”.   He agrees saying, “Both these intentions are honourable and deserve to be supported whole-heartedly” and adds, “Counterfeit currency and black money are as grave a threat to India as terrorism and social division. They deserve to be extinguished using all the firepower at our disposal”.  So far so good.

            The former prime minister faults Modi on an assumed underlying premise behind demonetisation, viz., Modi’s “false notion”, as he put it, that “all cash is black money and all black money is in cash”.  Anyone who is 18 would not believe that all cash is black money.  Did Manmohan Singh really think that Modi held a false notion that “all cash is black money”?  No, the former governor of Reserve Bank of India could not have honestly believed what he wrote.  If one imagines that “all cash” is black money, it means he thinks Reserve Bank of India routinely prints and issues black money!  

             Manmohan Singh could not also have believed, as he wrote, that Modi held a “false notion” that “all black money is in cash”.   Anyone who is a little older than 18 will not have that notion, and Manmohan Singh cannot be naive to think that Modi hoped all black money to be in cash.  Not just Modi, his peon and cook too should know that blackmoneywallahs gain nothing by keeping their entire illegal cash incomes in not-to-be-used bundles of paper currency.  They would enjoy enough of that income by buying gold, land, buildings or other assets and by splurging.  Some have also been caught keeping their black money in bank fixed deposits.  So Manmohan Singh was wrong in imputing these false notions to Modi.  But more than that, the former prime minister has damned himself severely.  Here is how.

            Manmohan Singh writes  further: “Black money is a menace to our society that we need to eliminate. …… This is wealth that has been accumulated over years by those with unaccounted sources of income.  Unlike the poor, holders of black money have access to various forms of wealth such as land, gold, foreign exchange, etc. There have been various attempts by many governments in the past decades to recover this illicit wealth through actions by the Income Tax department, Enforcement Directorate and schemes such as Voluntary Disclosure.”  And he adds: “Evidence from these past attempts has shown that a large majority of this unaccounted wealth is not stored in the form of cash”.   What an unconscious confession!

           Without saying it, but clearly implying it, Manmohan Singh admits that it is mostly during past Congress or Congress-led regimes at the Centre that black money in India was “accumulated over years”.   He admits too, indirectly, that attempts by those governments to unearth black money in the country and book offenders yielded no good results. What follows? When his party ruled the central government, people could freely generate and acquire black money, coolly convert it into other forms of assets and merrily keep that wealth, and they would not be traced and booked at any of those stages.  This showcases the sheer inefficiency, unwillingness, and possibly more, of the ruling governments of those times in battling black money. 

        We know that the 2G spectrum scandal at the central ministerial level, storming around minister A. Raja, heaping a huge revenue loss on the government and involving massive kickbacks – God knows how much it was, and how much of it was black money - was enacted when Manmohan Singh was prime minister.  We know too that his minister for communications and IT, Kapil Sibal, certified that the scam caused “zero loss” for the government.  Time magazine knew more.  In 2011 it gave that scandal its pride of place in its all-time list of “Top 10 Abuses of Power”, and put it second in the list behind the Watergate scandal.

            Manmohan Singh implies this too, though he feels shy of saying it explicitly.  He would like us to believe that it is impossible to curtail the never-ending generation and growth of black money in the country, that no action such as demonetisation can be effective against that menace and that all any government can do is lament it like what he does.  He takes that stance by implication, so he can portray all the past Congress or Congress-led coalition governments at the Centre as doing their best to contain black money - and hope that no one may accuse those governments of inaction.  A futile hope.

        Many advanced nations do not  permit  black money to be continuously generated and spread in their economies, like India does.   Those countries do not witness so much of free-wheeling corruption.  Their top government officers who have to watch over and report or act against corruption are themselves not corrupt, and that checks corruption down the line. More important, ministers who run governments in those countries are largely clean and so they inspire officers on integrity at work.  A few exceptions can always be tackled.

          If a ministry is not perceived  to be clean in its dealings with businesses, many government officers will take the cue and benefit themselves financially in illegal ways.  That ministry will have no mind or energy to take serious and imaginative actions against governmental corruption and its byproducts like black money.  Officers of such a government cannot also check or go after black money.  Modi has given the impression that he is honest and determined, and so long as that impression stays many government officers would feel inspired to implement his drive against black money.  Reports coming in every day since demonetisation that unaccounted old currency notes, new currency notes, gold and other assets worth in crores are being seized from every nook and corner of the country are a testimony to Modi’s moral leadership in India’s fight against black money.  

        After 2014 elections, the prime minister and his ministers changed, while officers of the central government remained. How come the same officers now uncover hidden black money and suspicious wealth in large chunks through their raids and inspections across the country, while they did just a little of that under decades of previous governments, mostly Congress-propped or Congress-led?  The reason is, they derived no inspiration from those governments to go on a mission mode and act boldly and honestly in searches and seizures.  

           Economists and other experts have expressed varying degrees of approval or disapproval on Modi’s demonetisation and allied measures for their worth in producing results.  So, for the layman theses conflicting opinions cancel out themselves and he has to go by what he sees around and senses. India’s common people seem to see the difference between years of previous central regimes and Modi’s government now scrapping high value notes and acting against black money.  That is why, while queuing up before banks and ATM’s to withdraw small amounts of cash in a regulated post-demonetisation period, and putting up with other hardships, they have backed the party headed by Modi hugely in civic polls in three States and in Chandigarh, all held after demonetisation was announced.   This is also an answer to a good part of other comments of Manmohan Singh in his article. 

        Sure, swift legal action against the corrupt and the blackmoneywallahs is a warning to them, and others wanting to emulate them.  It will hold them in perennial fear that they could be caught anytime, shamed and brought to justice, and will keep most of them largely contained. That is how it works in advanced countries, and not because angels live there. So the present demonetisation and its follow-up actions will have a good preventive effect on corruption and black-money holding, and that is a huge national benefit.  That will last as long as we have a central government that shows a clean image and acts tough on corruption and black money.  Manmohan Singh has not also acknowledged this national benefit.

       Wikipedia  introduces  Manmohan Singh as  an “Indian economist and politician”.   Viewing him as an “economist-turned ordinary politician” would be closer to reality.  Manmohan Singh will know it.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

Thursday 15 December 2016

ஜெயலலிதாவும் அவர் செல்வாக்கும்


          இம்மாதம் ஐந்தாம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். இந்திய அரசியல் வானில்  ஒரு ஒளிரும் நட்சத்திரம் மறைந்தது.

      இம்மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கு முறை அ.தி.மு.க-வை வெல்ல வைத்தவர். கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களைத் தொடர்ச்சியாக வென்று அரசு அமைத்தவர்.  சென்ற 2016 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி ஏதும் வைக்காமல் அ.தி.மு.க தனித்து – அதாவது ஜெயலலிதா தனி ஒருவராக – களம் இறங்கி தமிழக ஆட்சியைக் கைப்பற்றி  சாதனை புரிந்தவர்.

      தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் எப்படி இவ்வளவு அமோக மக்கள் செல்வாக்குப் பெற முடிந்தது? அதுவும் அரசியல் வித்தகரான தி.மு.க-வின் கருணாநிதியை எதிரியாக வைத்துக் கொண்டு?

          எம்.ஜி.ஆரே அ.தி.மு.க-வினுள்  ஜெயலலிதாவைப் பிராதனமாக முன் நிறுத்தி, கட்சிக்குள் அவருக்குப் பெரும் ஏற்றத்தைத் தந்தார்.  எம்.ஜி.ஆர் மறைந்தபின், ஜெயலலிதா அக்கட்சிக்குள் சில தந்திரசாலிகளை வென்று, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியையும் போராடி வீழ்த்தி அ.தி.மு.க-வின் தலைமையைக் கைப்பற்றினார்.  இவை அனைவரும் அறிந்தவை.

      அரசியலில் காலூன்ற, நீடித்து நிற்க, நெடிதான உயரங்களை எட்ட, புத்தி கூர்மையும் உறுதி கொண்ட நெஞ்சும் போர்க்குணமும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஜெயலலிதா ஒரு சமீபத்திய உதாரணம்.  இந்தத் திறன்கள் அனைத்தும் ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கருணாநிதிக்கும் குறைவில்லாமல் இருகின்றன. அதோடு நாவன்மை, எழுத்தாற்றல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றில் கருணாநிதி மேம்பட்டவர்தான். இருந்தாலும் தமிழ்நாட்டில் அவரை விடவும் ஜெயலலிதா அதிக மக்கள் செல்வாக்குப் பெற்றவராக விளங்கினார்.  இந்த நிலையை மாநிலத்தின் சென்ற இரண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளும், 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க-விற்குக் கிடைத்த வெற்றியும் (39 தொகுதிகளில் 37 வெற்றி) பறை சாற்றின.  ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணங்களை விடுத்து, அவரது செல்வாக்கின் வளர்ச்சியை மூன்று காரணங்களில் இப்படிப் பார்க்கலாம்.

      எம்.ஜி.ஆரின் அபரிதமான மக்கள் செல்வாக்கைக் கூடிய வரை பார்சல் செய்துவைத்துக் கொண்டவர் ஜெயலலிதா என்று சொல்லலாம்.  எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்தவர் அவர்.   அவைகளில் பெரும்பாலும் அவர் எம்.ஜி.ஆரை அடையக் காத்திருக்கும் கதாநாயகியாகவும், தங்கமான எம்.ஜி.ஆர் அவருடன் ஒன்று சேரும் கதாநாயகனாகவும் தோன்றினார்கள். வெகுஜனப் பெண்களில் மிகப் பலர் – குறிப்பாக, பாமரப் பெண்கள் - பரிசுத்தமான கதாபாத்திரமான எம்.ஜி.ஆரிடம் மனம் ஒன்றினார்கள்.  சாதாரணப் பெண்களிடம் இது இயற்கை.  சினிமாத் திரையில் எம்.ஜி.ஆரோடு வில்லனாக மோதிய நம்பியார் மீது சாதாரண மக்கள் வெறுப்புக் கொண்டது எப்படி இயற்கையோ, அதே மாதிரித்தான் இதுவும்.  அந்த எம்.ஜி.ஆரே சினிமாக் காட்சிகளில் ஜெயலலிதாவோடு இணைகிறார் என்றால் அந்தப் பெண் ரசிகர்கள் பலர் ஜெயலலிதாவோடு தங்களை ஒன்றுபடுத்திப் பார்ப்பதும் இயற்கைதான்.

      ஓரு டெலிவிஷன் பேட்டியில் ஜெயலலிதாவிடம் “நீங்கள் எம்.ஜி.ஆரை விரும்பினீர்களா?” என்று கேட்டபோது அவர் சிரித்தவாறே “யார்தான் எம்.ஜி.ஆரை விரும்பமாட்டார்கள்? அவர் மக்களை ஈர்க்கும் சக்தி உடைய (’கரிஸ்மாடிக்’) நபர்” என்று பொதுவாகச் சொன்னார். அது, எம்.ஜி.ஆர் மீது  மக்கள், குறிப்பாகப் பெண்கள், சினிமாவின் தாக்கத்தால் லயித்திருந்தார்கள் என்பதை உணர்த்தியதுமாகும். நம்பியாரை வெறுத்து, எம்.ஜி.ஆரைப் போற்றிய அவரது எண்ணற்ற ஆண் ரசிகர்களும், திரையில் அவர் பலமுறை இணைந்த ஜெயலலிதாவிடம் ஈர்ப்புக் கொண்டிருப்பார்கள். பிந்தைய நாட்களில் எம்.ஜி.ஆரே தனது அரசியல் கட்சியில் ஜெயலலிதாவைச் சேரவைத்து முன் நிறுத்தி ஆதரித்ததால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகியையும் தாண்டி ஜெயலலிதாவையே சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அங்கீகரித்தார்கள்.  

      ஜெயலலிதாவைப் போல் விசேஷப் பின்னணி கொண்ட எவரும் போட்டிக்கு வராததால் இந்திரா காந்திக்குப் பின் அவரது மகன் ராஜீவ் காந்தியும், ராஜீவின் மரணத்திற்குப் பின் அவர் மனைவி சோனியா காந்தியும் அரசியலுக்குப் புதிது என்றாலும் சுலாபமாகத் தலையெடுத்தார்கள்.  ஜானகிக்கு அது முடியாமல் போனது. சினிமாவின் விளைவால் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்த ஜெயலலிதாவுடன் அவரது புத்திசாலித்தனம், நெஞ்சுறுதி, போர்க்குணம் ஆகியவையும் கைகோர்த்து நின்றதால்,  கருணாநிதியால் அவற்றை முழுவதும் வெல்லும் அளவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

          இரண்டாவது காரணம். நிகருக்கு நிகராக புத்திசாலித்தனம், மன உறுதி  மற்றும் போர்க்குணம் கொண்ட இரு அரசியல் எதிரிகளில் ஒருவர் பெண், ஒருவர் ஆண் என்று வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் சித்தாந்தம், அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றில் அவர்களுக்குள் வேறுபாடு இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.   அப்போது பெண் வாக்காளர்களிடையே பெண் தலைவருக்குச் சற்றேனும் அதிகமான ஆதரவு கிடைக்கும் – குறிப்பாக இந்தியாவைப் போன்ற வளரும் ஜனநாயகத்தில். பாதிக்குப் பாதியாவது பெண் வாக்காளர்கள் இருக்கும்போது, ஐம்பது சதவிகித வாக்குகளில் பெண் தலைவர் அதிகம் பெற வாய்ப்பிருக்கிறது.  இதுபற்றி இன்னும் சொல்லலாம்.

      பொதுவாக ஒரு சமூகத்தில் ஆண்கள் பெண்களுக்கு சம அளவில் மரியாதை - அதாவது மனதளவிலான சமத்துவ மரியாதை - காண்பிக்காமல் இருந்தால், பெண்களுக்கு உள்ளளவில் ஆண்கள் மீதே மெலிதான மன வருத்தம் இருக்கும்.  சுதந்திரமான, ஆக்ரோஷமான பெண்கள் இதை வெளிப்படுத்தலாம். வெளிப்படுத்தாத பெண்களுக்கும் இந்த உணர்வு இருக்கும். இது ஆணாதிக்கத்தின் மறுபக்கம். ரகசிய வாக்கெடுப்பின் போதாவது கணிசமான பெண் வாக்காளர்கள், இரண்டு தகுந்த ஆண் மற்றும் பெண் தலைவர்களில் பெண் தலைவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பார்கள். அந்தப் பெண் தலைவர் வாக்களிக்கச் சொல்வது அவர் கட்சியின் பிற ஆண் வேட்பாளர்களுக்கு என்றாலும், கடைசியில் ஆட்சியை வெல்லப் போவது ஒரு தகுதியான பெண் தலைவர் என்பதால் அவரது கட்சிக்கு நிறையப் பெண் வாக்காளர்களிடம் அதிக ஆதரவு கிடைக்கும்.  அதே சமயம், ஆண் வாக்காளர்கள் இந்த மாதிரியான பாகுபாட்டை ஓட்டில் காட்டுவதில்லை.

      தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆண்கள் பெண்களை சமமாகக் கருதினாலும் இல்லையென்றாலும், அரசியல் தலைவர்களுக்கான ஆதரவை ’ஆண் தலைவர்கள் - பெண் தலைவர்கள்’ என்ற அடிப்படையில் எக்காரணத்தாலும் பிரித்து அளிப்பதில்லை. இந்திரா காந்தி அரசியலில் ஓங்கி இருந்தபோது பல ஆண்கள் தன் சுற்றத்துப் பெண்களை ஒருபடி கீழ் என்று நினைத்தாலும், பெண் தலைவரான இந்திரா காந்தியை ’ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து ஆதரித்தார்கள் என்பது பலருக்கு நினைவிருக்கும்.  அந்த மனப்பாங்கு ஆண்களிடையே இன்றும் தொடர்கிறது. ஆகையால் ஆண் வாக்காளர்களின் ஓட்டுக்கள் நிகருக்கு நிகர் தகுதி நிரம்பிய ஒரு பெண் அரசியல் தலைவருக்கு வராமல் போவதில்லை. இதனாலும் ஜெயலலிதா பலன் கண்டார்.

      மூன்றாவது காரணம். மக்களிடையே மத உணர்வுகள் மேலோங்கிய தேசம் இந்தியா. 2011 மக்கள் தொகைக் கணக்குப்படி, நமது நாட்டில் சுமார் 80% இந்துக்கள், 14% முஸ்ளிம்கள், 6% மற்ற மதத்தினர் வசிக்கிறார்கள்.  கருணாநிதி இந்துக்களை மட்டம் தட்டினார். மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை மதித்தார், போற்றினார்.  தமிழ்நாட்டின் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கருணாநிதி இந்துக்களை அவமதிக்கவேண்டும் என்று விரும்பவில்லை, அதனால் மகிழவும் மாட்டார்கள். ஆனாலும், தான் அப்படிச் செய்வது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பாளர் என்று உணரப்பட்டு தன் கட்சிக்கு அவர்களின் ஆதரவு கொத்தாகக் கிடைக்கும் என்று கருணாநிதி நம்பியதாகவே தோற்றம் தெரிந்தது.

      மக்கள் தொகையில் 80% சதவிகிதத்தினரின் மத நம்பிக்கையை அங்கீகரிக்காதது, இகழ்வது பெருவாரியான இந்துக்களுக்கு மனக்கசப்பைத் தரும் என்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியதுதான்.  பொறுமைசாலிகளான இந்துக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஜெயலலிதா தன்னை ஒரு இந்து என்று வெளிப்படுத்துவதில் வெட்கப் படவில்லை. பிற மதத்தினரையும் அரவணைத்துச் சென்றார். ஆக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிடமிருந்து அவருக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைத்தது.  அதே சமயத்தில், கணிசமான இந்துக்களும் கருணாநிதியின் பாரபட்ச மதப் பார்வையை எதிர்த்து ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என்று நினைத்தால் ஆச்சரியம் இல்லை.  சென்ற தமிழக சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினே, “எங்கள் கட்சியின் 90% தொண்டர்கள் இந்துக்கள். என் மனைவியே மாநிலத்தின் பல கோவில்களுக்குச் சென்றவர். நம்பிக்கை உள்ளவர்களின் குறுக்கே நாங்கள் நிற்பதில்லை” என்று பேசியது ‘ஓட்டிழப்பை நிறுத்தவேண்டும்’ என்ற நினைப்பால்தான்.  பெறும்பான்மை மதத்தினராக இருந்தும் மத நிந்தனையை மௌனமாக ஏற்கவேண்டாம் என்கிற எண்ணம் சமீப காலமாக நாடெங்கும் சற்று அதிகமான இந்துக்களிடம் எழும்புகிறது. அரசியல் விமரிசகர்கள் பலர் இந்த எண்ணத்தையும் மனதில் வைத்திருந்து கருணாநிதியைவிட ஜெயலலிதாவை அதிகம் வரவேற்றிருப்பார்கள். ஆக ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு கூடியதற்கு கருணாநிதியின் இந்து மதம் பற்றிய நிலைப்பாடும் ஒரு காரணம். 

      இந்த மூன்று காரணங்களும் சிறிதும் பெரிதுமாக ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு மலையென வளர உதவின. இவற்றுக்கு அடிப்படையாக அவரின் மேற்சொன்ன தனிமனிதச் சிறப்புகள் பேருதவியாக இருந்தன – அவை இல்லாதிருந்தால் ஜெயலலிதா கருணாநிதியை எதிர்த்து அரசியலில் பெருவெற்றிகள் அடைந்திருக்க முடியாது.

      இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, சோனியா காந்தி ஆகியோருடன் ஜெயலலிதாவையும் ஒரு வகையில் சேர்த்துப் பார்க்கலாம்.  முன்னிருந்து அல்லது பின்னிருந்து ஆட்சி அமைத்த இந்தப் பெண் அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் பொதுவானது - வெளிப்படையான எதேச்சாதிகாரம். அதை அவரவர் பாணியில் வெளிப்படுத்தினாலும், அவர்களின் கீழுள்ள கட்சித் தலைவர்கள் தங்களின் நலன்களுக்காகத் தங்கள் தலைவிகள் மனம் குளிரும் அளவிற்கு வளைந்து கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள். அதிகமானவர்கள் சிறிதும் கூச்சப்படாமல் வளைந்தது ஜெயலலிதாவுக்கு என்றால் மிகையல்ல.

      மகத்தான வெற்றிகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சியில் நன்னெறிகளைக் கடைப்பிடித்து உதாரணம் காண்பித்தாரா? அவரும் சரி, கருணாநிதியும் சரி, இதை மற்றவர் வேண்டுமானால் செய்துகாட்டட்டும் என்று விட்டுவிட்டார்கள்.  இது வருத்தத்திற்கு உரியது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016


Wednesday 7 December 2016

நரேந்திர மோடி: ஆயிரத்தில் ஒருவன் (ஐநூறிலும் ஒருவன்)


            பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை பணத் தன்மை நீக்கம் (demonetisation) செய்வதாக பிரதம மந்திரி அறிவித்தது நாட்டுக்குப் பலன் தருமா இல்லையா? இது தொடர்ந்து விவாதிக்கப் படுகிறது.  

      இந்த நடவடிக்கையின் ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் சரி, ஒரு வகையில் ஒன்றுபடுகிறார்கள்.  அதாவது, இதன் ஒரு முக்கிய நோக்கமான ‘கறுப்புப் பண ஒழிப்பு’ என்பது தேசத்திற்கு அவசியமான நல்ல நோக்கம் என்பதில் எவரும் வேறுபடவில்லை. ’குறுகிய கால வலிகள் இருந்தாலும் பணத் தன்மை நீக்கம் நீண்டகால நன்மைகள் பல ஏற்படுத்தி அந்த நோக்கம் நிறைவேறச் செய்யும்’ என்று சிலரும் ’மக்களுக்குப் பரவலாக சிரமங்கள் ஏற்படுவதுதான் மிஞ்சுமே தவிர அந்த நோக்கம் நிறைவேறாது’ என்று சிலரும் வாதம் செய்கிறார்கள்.  இதற்கு சரியான பதிலைக் காலம்தான் கடைசியில் காண்பிக்க முடியும். இப்போது நாம் இது தொடர்பான வேறு ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கலாம்.

     லஞ்ச ஊழல் மூலமாக கருப்புப்பணம் கணிசமாக உருவாகிறது என்பது எல்லோரும் அறிந்தது.  அந்தப் பணத்தில் பெரும் பங்கு அரசாங்கத்தில் சம்பத்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் லஞ்ச வருமானம் என்பதும் தெரிந்தது. அரசாங்கத்தில் முறைகேடுகள் வியாபித்திருக்கும்போது, தனியார் துறையில் இருப்பவர்கள் சிலரும் ‘பெரியண்ணன் தயக்கம் இல்லாமல் செய்வதை நாமும் பயமில்லாமல் செய்யலாமே’ என்று குளிர்விட்டு தங்களின் அளவிற்கு   லஞ்ச வருமானம் பெறுகிறார்கள், கருப்புப் பணம் சேர்க்கிறார்கள்.   

     ’முறைகேடுகள்   மூலமாகப்  பெற்றதை   நாம்  கருப்புப்  பணமாக வைத்திருந்தாலும் சரி, தங்கம், ரியல் எஸ்டேட் என்று மாற்றிக் கொண்டாலும் சரி, பிடிபடமாட்டோம்’ என்ற மகா தைரியம் லஞ்ச ஊழல்வாதிகளுக்கு இருக்கிறது.  அந்த தைரியத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார் அல்லது எது? நடவடிக்கை எடுக்கவேண்டிய நமது அரசாங்கங்களும் – அதாவது அரசாளும் அரசியல்வாதிகளும் - அவர்களின் மனமறிந்த பாராமுகமும்தான்.  ஆகையால் லஞ்ச ஊழல் தழைக்கிறது.  கருப்புப்பணம் கொழிக்கிறது.  வரிகளை ஏய்த்து கருப்புப் பண பொருளாதாரம் நாட்டுக்குக் கேடு செய்கிறது.

         பொது ஊழியராக இருந்துகொண்டு லஞ்சம் வாங்குவதும் வருமானத்திற்கு மேல் பணமோ சொத்தோ வைத்திருப்பதும் தண்டனைக்கு உரிய குற்றங்கள் என்று ஊழல் தடுப்பு சட்டம் சொல்கிறது.  ஆனால் இந்த சட்டத்தைப் போல் அனாயாசமாக அதிகமாக மீறப்படும் சட்டம் வேறு இருக்காது.

        ஏமாற்றுதல், திருட்டு, அடிதடி, மற்றும் கொலை போன்ற தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகின்றன, பின் நீதிமன்ற வழக்குகளாக விசாரிக்கப் படுகின்றன.  ஆனால் லஞ்சம் வாங்குவதும், வருமானத்திற்கு மேலான பணம் மற்றும் சொத்து வைத்திருப்பதும் – அதுவும் அரசு அல்லது பொதுத்துறையில் பதவி வகிப்பவர்கள் செய்வது - அதே அளவிற்குப் பதிவாகி நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திப்பதில்லை.  காரணத்தை விளக்க வேண்டுமா? சரி, அதையும் பார்க்கலாம்.

          அரசாங்கப் பொறுப்பில் உள்ள ஒரு அரசியல்வாதி லஞ்சத்தில் திளைக்கிறார் என்றால், அவருக்கு அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தைப் பற்றி வாய் திறக்க தைரியம் இருக்காது.  தினமும் இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பிடிக்கும் ஒரு தந்தை ஒன்றிரண்டு சிகரெட் ஊதும் தன் விடலைப் பையனிடம் என்ன சொல்லிக் கண்டிக்க முடியும்? அது மட்டுமல்ல. அமைச்சரே கைநீட்டி வாங்குவதைக் காட்டிலும் இணக்கமான அதிகாரிகளை லஞ்சம் பெற அனுமதித்து, அதில் கப்பம் வாங்கிக்கொள்வது சுலபமானது, பல்முனை வருமானம் தரக்கூடியது, சற்றுப் பாதுகாப்பானது என்பதால் அந்த வழியைப் பலரும் பின்பற்றுவதுண்டு.  பின் யார் யாரைக் காட்டிக் கொடுக்கமுடியும்? இதனால்தான் அரசாங்க லஞ்சம், அதில் தொடரும் பணச் சேர்ப்பு, சொத்துக் குவிப்பு ஆகியவை பெரும்பாலும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதில்லை. 

           ஆட்சிக்குத் திரும்பிய ஒரு கட்சி, பழைய ஆட்சியின் தலைவர் மீது லஞ்ச உழல் வழக்குப் போட்டு, அது நிலுவையில் இருக்கும்போதே வழக்குப் போட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பிற லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கி, ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்போ - எத்தனை பாம்புகளோ - பாம்பாட்டியும் உண்டோ’ என்ற சந்தேகத்தைப் பலரிடமும் விதைத்தது வேறு கதை. ஆனால் அமைச்சர்களும் மற்ற பொது ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதோ கருப்புப் பணம் வைத்திருப்பதோ அனேகமாக வழக்கிற்குக் கூட வருவதில்லை என்பது உண்மை. அதற்கு ஒரு அடையாளமும் உண்டு.

      எந்த ஒரு அரசியல் தலைவரும் எதிர்க் கட்சியில் இருக்கும்போது ஆளும் கட்சியைக் குறிப்பிட்டு “இந்த ஆட்சியில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து விட்டது” என்று விமரிசனம் செய்வது வழக்கமானது. ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் நம் தேசத்திலோ தன் மாநிலத்திலோ ”லஞ்சம் மிகுந்துவிட்டது, கருப்புப் பணமும் பெருகிவிட்டது, அவற்றைக் கட்டுப்படுத்த நான் தீவிர நடவடிக்கை எடுப்பேன்” என்று பேசுவதுண்டா?  ஒரு பாசாங்குக்காக அப்படிப் பேசினால், ஆந்த ஆட்சியில் லஞ்சத்தினால் பாதிக்கப் படும் மக்கள் சிரிப்பை உதிர்ப்பார்கள். பிறகு அடுத்த தேர்தலின்போது கோபத்தைக் காட்டுவார்கள். ஆகவே, பொதுவாகச் சொன்னால், ஆட்சி செய்பவர்கள் அவர்களின் ஆட்சியின்போது லஞ்சம், கருப்புப் பணத்தைப் பற்றி எல்லாம் பேசாமல், ’ஏதோ அதிகாரிகள் மட்டத்தில்தான் லஞ்சம் இருக்கிறது. அதுவும் ஆளும் அரசியல் தலைவர்களுக்குத் தெரியாமல் நடக்கிறது’ என சாதாரண மக்களை நம்பவைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று திட்டமிட்டு மௌனமாகச் செயல்படுகிறார்கள். 

      இந்தச் சூழ்நிலையில் ஒரு பிரதம மந்திரியே “நாட்டில் லஞ்சமும் கருப்புப் பணமும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் நான் நடவடிக்கை எடுத்துவருகிறேன். இது தவறா?” என்று மக்களைப் பார்த்து தைரியமாகப் பேசுவார் என்பது கற்பனை செய்யமுடியாத விஷயம். நரேந்திர மோடி அதைச் செய்திருக்கிறார். தன் கையை சுத்தமாக வைத்திருந்து, தன் சக அமைச்சர்களும் அவ்வாறே இருப்பது வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்று அவர்களுக்கும் உணர்த்தி, தன் ஆட்சியில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்மீது உறுதியான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் ஒரு அரசியல் தலைவர்தான் இவ்வாறு பகிரங்கமாகப் பேசமுடியும்.  மத்தியிலும் மாநிலத்திலும் பல வருடங்கள் ஆட்சி செய்த வேறு பல அரசியல் தலைவர்கள் இவ்வாறு பகிரங்கமாகப் பேசியதில்லை, அதற்கேற்ற தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், அதை  மேலும் விளக்க வேண்டுமா?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016