Friday 6 March 2015

வருவதெல்லாம் வாங்கிக்கோ! (கேஜ்ரிவால் சுவாமிகள் அருளிய போதனை)

[5.2.2015 தேதியன்று - அதாவது சமீபத்திய டெல்லி சட்டசபைத் தேர்தல்கள் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பாக - எழுதப்பட்டது]


டெல்லி சட்டசபைத் தேர்தலில் ம் த்மி கட்சி மெஜாரிடி பலத்தில் ஜெயிக்க ரவிந்த் கேஜ்ரிவால் சைப்பட்டது வர் ஜனநாயக உரிமை. முடிவு எப்படி அமைந்தாலும் தேர்தல் பிரசாரத்தின் போது ‘எதிர்க் கட்சிகள் லஞ்சப்பணம் கொடுத்தால் தாராளமாகப் பெற்றுக்கொண்டு உங்கள் பொன்னான  வாக்குகளை  எங்கள்  கட்சி  வேட்பாளர்களுக்கே ளியுங்கள்’ என்று மக்களிடம் வர் பேசியது க்கிரமம்.  நமது பெருவாரியான ஜனங்கள் சாதாரணப்பட்டவர்கள். பணத்தேவை திகம் உள்ளவர்கள்.   வர்களில் நிறையப்பேர் நல்லவர்களாக இருக்க விரும்புபவர்கள்.  காசு வாங்கிக்கொண்டு ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் குற்ற உணர்ச்சி கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

     அரசியல் தலைவர் ஒருவர் – ‘ஊழல் ஒழிக’ என்று குரல் எழுப்பி தர்ணா செய்கிறவர் – ‘ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வாக்காளர்களிடம் சிபாரிசு செய்தால் தவறு செய்ய வரும் மக்களின் குற்ற உணர்ச்சியையும் துடைத்து எடுக்கிறார் என்றல்லவா கிறது? குறைந்த வருமானம் உள்ள மக்கள் ஓட்டுக்கு என்று கொடுக்கப்பட்ட பணத்தை வாங்கினால் தைச் செலவழிப்பார்கள் – எரித்துப் பொசுக்க மாட்டார்கள். பிறகு எந்தத் தேர்தலிலும் வேட்பாளர்களிடமிருந்து பணம் தானாக வராவிட்டாலும் தாங்களாகவே எதிர்பார்ப்பார்கள். இது வழக்கம் கிப்போய் கெட்ட பணத்தை மற்ற திசைகளிலும் தேடுவார்கள். கேஜ்ரிவாலின் உருக்கமான வேண்டுகோள் ஏற்கப்பட்டு சிறிதளவு பலன் கொடுத்திருந்தாலும் டெல்லியைப் பொறுத்தவரை வர்தான் வாக்காளர்களைக் கெடுத்ததில் முதல்வராக இருப்பார். 

      'தவறு செய்யும் கட்சிகளிடம் பணம் வாங்குங்கள் - அதுவும் அவர்களாகக் கொடுத்தால். பின் வர்களுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டைப் போடுங்கள் என்றுதானே சொன்னேன்?‘ என்று கேஜ்ரிவால் கேட்டால் து பொய் நியாயம். முதலாவது ‘வர்களாகக் கொடுத்தால்’ என்று கண்டிஷன் போட்டுச் சொல்வது உண்மையில் பொடி போட்டுப் பேசுவதுதான். தில் சாரமில்லை.  வர் பேச்சின் மீது சட்ட நடவடிக்கைகள் பின்னர் வந்தால் வரைக் காத்துக் கொள்ள ந்தக் கண்டிஷன் ஓர் உபாயமாக இருக்கலாம். வ்வளவுதான். 

கேஜ்ரிவாலின் கட்சி பிறப்பதற்கு முன்பாகவே பல பகுதிகளில் மக்கள் ஓட்டுக்கு என்று விநியோகித்த பணத்தை வாங்கி இருக்கிறார்கள். னாலும் ஓர் ரசியல் தலைவர் ’யார்  ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்காதீர்கள்’ என்றுதான் பொதுமக்களிடம் பேசவேண்டுமே  தவிர  ‘வர்களிடம் வாங்குங்கள்.  எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று ல்ல.  வாக்காளர்கள் கெடுவது இருக்கட்டும்.  பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதிகளை உருவாக்கிவிட்டு வர்கள் இந்தியாவில் மட்டும்தான் தங்களின் ஏவலின்படி நாசவேலைகளைக் காட்டுவார்கள் என்று நினைத்தது போல் இருக்கிறது இவர் பேச்சு.   வ்வாறு வளர்க்கப்பட்டவர்களும் வர்களின் தைரியத்தில் எழுந்தவர்களும் பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பி ந்நாட்டிலேயே டக்கமுடியாமல் திவிரவாதம் புரிகிறார்கள்.  தே ரீதியில் – தாவது பஸ்மாசுரன் கதை போல - டெல்லி மக்களும் ம் த்மி கட்சி வேட்பாளர்களிடமே வரும் காலத்தில் பணம் எதிர்பார்க்கலாம் என்றும் கேஜ்ரிவால் எண்ணிப் பார்க்கவேண்டும். 

தேர்தல் ணையத்தின் உத்திரவும் தன் சட்டத்தன்மையும் ஒரு புறம் இருக்கட்டும். ஊழலுக்கு எதிராகப் போராட வரும் வர் மக்களைப் பாவம் செய்யத் தூண்டக் கூடாது.  தானும் செய்யக் கூடாது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

No comments:

Post a Comment